Monday, April 29, 2024

கேள்வி...!

 என்னோட வெளிநாட்டு பயணங்களையும் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க தெரிந்த மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை விட்டு ஓடிய பிரஜ்வல் ரேவண்ணாவை தடுக்க முடியலையா ??

—பிரியங்கா காந்தி கேள்வி:



சைவ, அசைவ உணவு....!

 "சைவ, அசைவ உணவு" - சில முக்கிய தகவல்கள்....!

மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் வாழ்க்கை முறையும் தற்போது வெகுவாக மாறிவிட்டது. வாழ்க்கை முறை மாறிவிட்டதால், இப்போது ஆரோக்கியமான உணவுமுறையே, மக்களிடம் பெரிதும் விரும்பப்படுகிறது. இஸ்லாமிய பெண்கள் வெவ்வேறு உணவு வகை திட்டங்களை முயற்சி செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் "சைவ உணவுமுறை". அதன் போக்கு தற்போது முஸ்லிம் குடும்பங்களில் அதிகரித்துள்ளது. ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் இந்தப் போக்கு எவ்வளவு சரியானது என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

எந்தவொரு உணவுத் திட்டத்தையும் பின்பற்றுவதற்கு முன், அதைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான், அந்த உணவுத் திட்டத்தின்மூலம் எந்தளவுக்கு பலன் கிடைக்கிறது? உடலுக்கு எப்படிப்பட்ட சக்தி கிடைக்கிறது? போன்ற விவரங்கள் நமக்கு கிடைக்கும். 

ஆரோக்கியத்தில் கவனம்:

கொரோனா பேரிடர் காலத்திலும்,  அதற்கு பிறகும், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தில், பெண்கள் அதிக உணர்திறன் கொண்டவர்களாக மாறிவிட்டனர். இப்போது, ஆரோக்கியமான உணவுமுறையே மக்களிடம் அதிகம் விரும்பப்படுகிறது. எனவேதான் பெண்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வெவ்வேறு உணவு திட்டங்களை முயற்சி செய்கிறார்கள். 

ஆரோக்கியமான உணவு, உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிமும் இருந்து வருகிறது. அதன் காரணமாக, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவு வகைகளை தேடி தேடி வாங்கி சாப்பிடும் பழக்கம், மக்களிடம் அதிகரித்து வருகிறது. 

ஆரோக்கியமான உணவுகள் குறித்து மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள், அதுதொடர்பாக வரும் விளம்பரங்கள் மக்களிடையே நல்ல, பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. பொதுவாக சைவ உணவு, அசைவ உணவு என இருவகை உணவு முறை பழக்கமும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்து வருகிறது. 

சைவ உணவு முறை:

உலக முழுவதும் உள்ள பெண்கள், வெவ்வேறு வகையான உணவு திட்டங்களை முயற்சி செய்யும்போது, "சைவ உணவுமுறை" திட்டத்தையும் தங்களது கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.  அதன் போக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் தற்போது அதிகரித்துள்ளது.

"சைவ உணவுகள்" என்பது இறைச்சி மற்றும் பால் பொருட்களை விலக்கும் உணவுகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள மக்கள், இந்த உணவு முறையை தற்போது பின்பற்றுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்த உணவுமுறைத் திட்டத்தை பல பிரபலங்கள் பின்பற்றுகிறார்கள் என்பதாகும். 

சைவ உணவு திட்டத்தைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்க வாய்ப்பளிப்பது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது என்று கருத்து பொதுவாக இருந்து வருகிறது. சைவ உணவை ஊக்குவிப்பவர்கள் மேற்கண்ட இந்த கருத்தை கூறி வருகிறார்கள்.  

இந்த உணவு, அனைத்து வகையான இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களைத் தவிர்த்து, முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகையாகும். சைவ உணவு, பல வகைகளில் இருந்து வருகிறது. 

இந்த உணவில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உலர் பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றுடன், மீன் மற்றும் இறைச்சி இல்லாத சமைத்த உணவு வகைகளை, பல்வேறு மசாலாப் பொருட்களை சேர்த்து, சமைத்து மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். 

சைவ உணவின் முக்கிய அம்சங்கள்:

சைவ உணவில், 80 சதவீதம், கலோரிகள் கார்போஹைட்ரேட் (பழங்கள்) மற்றும் 10 சதவீதம் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து வருகின்றன. இதன் பொருள், இந்த உணவில் பெரும்பாலும் பழங்கள் உள்ளன.  இதில் கொழுப்பு குறைவாக உள்ளது என்பதாகும். 

சைவ உணவில், மாவுச்சத்துள்ள உணவுகள் சேர்க்கப்பட்டு, பழங்களுக்குப் பதிலாக வேகவைத்த உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர, குறைந்த கொழுப்பு, அதிக மாப்பொருள் (ஸ்டார்ச் உணவு) உணவு வகைகள் உள்ளன. 

சைவ உணவை நீங்கள் உண்ணும்போது,  அந்த உணவுகள் அனைத்தும் 48 டிகிரி செல்சியஸில், அதாவது குறைந்த வெப்பத்தில் சமைக்கப்பட வேண்டும். மீதமுள்ள பழங்கள் மற்றும் பல காய்கறிகள் பச்சையாக சாப்பிட வேண்டும். சில வகையான சைவ உணவு வகைகளை, மாலை நான்கு மணிக்குள் சாப்பிட வேண்டும் என உணவு வகை மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். 

சைவ உணவு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, உடல் எடை இழப்பு அல்லது குறைப்பு என கூறலாம். சைவ உணவு உண்ணும் பெண்கள், அந்த உணவை எடுத்துக் கொள்ளாத பெண்களை விட, குறைவான உடல் எடையுடன் இருப்பார்கள். ஒரு ஆராய்ச்சியின்படி, சைவ உணவைப் பின்பற்றும் பெண்களின் இரத்த சர்க்கரை, கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.  

இதன்மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை இலகுவாக உணர்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையை அனுபவிக்கவும், ஆரோக்கியமான செயல்களில் பங்கேற்கவும் அவர்களின் கவனம் செல்கிறது. 

சைவ உணவுமுறை இதய நோய் அபாயத்தை 75 சதவீதம் வரை குறைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயமும் சைவ உணவால் 42 சதவீதம் குறைக்கப்படுகிறது.

சைவ உணவின் தீமைகள்:

சைவ உணவின் பலவீனமான அம்சம் என்னவென்றால், இறைச்சியை சாப்பிடாமல் இருப்பது சில சந்தர்ப்பங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இறைச்சி உடலுக்கு புரதத்தை வழங்குகிறது. சைவ உணவு பழக்கம் கொண்ட ஒருவர், இறைச்சி சாப்பிடுவதில்லை, மீன் சாப்பிடுவதில்லை. ஒருவர் மீன் சாப்பிடவில்லை என்றால், உடல் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது.

சைவ உணவு உண்பவர்கள் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், அயோடின் குறைபாடு, தைராய்டு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், அயோடின் பற்றாக்குறையால், எலும்புகளும் பலவீனமடைகின்றன. இந்தக் காரணங்களுக்காக, எந்தப் போக்கையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் முன் அதன் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வது அவசியம். 

அனைத்து வகை உணவுகள் அவசியம்:

ஒருவர் நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அவருக்கு அனைத்து வைட்டமின்களும் தேவைப்படுகிறது. எனவே உணவில் அனைத்து வகையான உணவு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

சைவம், அசைவம், எந்த வகை உணவாக இருந்தாலும், அதன்மூலம், நமது உடலுக்கு கிடைக்கும் சக்தி என்ன? பலன்கள் என்ன? நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமா? போன்ற கேள்விகளை கேட்டு, அதன்படி, நாம் உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஏக இறைவன் மனிதர்களுக்கு கொடுத்துள்ள அனுமதிக்கப்பட்ட, அனைத்து உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு, சிறப்பான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். சைவ, அசைவ உணவு குறித்து வீண் சர்ச்சைகளை எழுப்பி, நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்கக் கூடாது. உணவே மருந்து என்ற கொள்கையை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், இதுபோன்ற வீண் சர்ச்சைகள் நம்மிடம் ஏற்படாது. ஆரோக்கியமான உணவே, ஆரோக்கியமான வாழ்க்கை என்ற சிந்தனை நமது உள்ளத்திலும் மனதிலும் இருந்தால், வாழ்க்கை எப்போதும் இனிக்கும் நல்ல வாழ்க்கையாக இருக்கும். எனவே நல்ல உணவை சாப்பிடுங்கள். எப்போதும் ஆரோக்கியமாக வாழுங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


கேள்வியோ....கேள்வி....!

Famous actress, Weavers and women rights activist Poonam Kaur speaks on Modi's friend Prajwal Revanna's scandal.

This must reach to every women in this country.



தாக்கு....!

Former PM H.D Deve Gowda’s grandson, Prajwal Revanna, who is the joint candidate of Narendra Modi’s BJP and JD(S) from Karnataka’s Hassan constituency, has been accused of sexual misconduct and thousands of videos show him molesting women from all age groups, and committing heinous crimes against them, and they are women from all age groups.

These women are domestic workers, and party workers, his MPs, and their lives have been destroyed by him. That’s the kind of man he is! These videos show how the lives of hundreds of women have been destroyed by him. One of the videos shows how a  63-year-old woman, old enough to be his mother or grandmother, is seen pleading to him - ‘Don’t do this to me. Don’t record this.’

Did Modi not know about these? He knew exactly what is happening.

- On Dec 13, 2023, Modi’s leader BJP Devaraj Gowda wrote to the PM, the BJP president, and the local BJP unit, talking about pendrives and Revanna’s sexual misconduct.

- In fact, in Jan 2024, Gowda did a press conference where he spoke about sexual misconduct and these thousands of videos.

- In February and March, when Amit Shah visited Mysuru to stitch the alliance with JD(S), he was informed by thousands of workers and leaders, including from Preetham Gowda to A.T Ramaswamy, who told him not to make Revanna a candidate in Karnataka as he is known to inflict sexual violence on women, inappropriately behaving with them on camera. 

- On April 14, the PM was seen sharing the stage with him. He just did not praise him but asked for votes in his favour. That is who the prime minister is!

Is this the first time the PM has stood with those who have been perpetrators of crimes against women, No. Will this be the last? Perhaps not.

It needs to be pointed out that the moment this was taken up by the Commission of Women in Karnataka, after following the due process an SIT was set up and the same day he absconded and ran way to Europe. We are looking into his extradition and ensure that he faces the might of Indian law.

: SupriyaShrinate ji



Sunday, April 28, 2024

குற்றச்சாட்டுகளும், உண்மை நிலையும்...!

ஒவ்வொரு பிரச்சாரத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு....!

மோடியின் குற்றச்சாட்டுகளும், உண்மை நிலையும்...!!

\

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டப் பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகும், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை சிறிதும் பொருட்படுத்தாமல், மதிக்காமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன? அதனால் மக்கள் அடைந்த பயன்கள் என்ன? என்பது குறித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு வார்த்தையும் பிரதமர் மோடி பேசி, மக்களிடம் வாக்குகளை கேட்பதில்லை. 

மாறாக, மந்திர்-மஸ்ஜித் போன்ற பிரச்சினைகள் மீண்டும் எழுப்பி, மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்களை  பேசி, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அவர் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறார். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி சுமத்தும் குற்றச்சாட்டுகளும், அதன் உண்மைத்தன்மை குறித்தும், Scroll.in (சுருள்) என்ற ஊடகம் சரிபார்த்து, மோடியின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது. முஸ்லிம்கள் மீது மோடி சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி செய்யும் விமர்சனங்கள் என்ன?  போன்ற பல்வேறு கேள்விக்கு சரிபார்த்தல் என்ற புதிய வகை முயற்சியில், உண்மைத்தன்மையை நாட்டின் முன்  Scroll.in ஊடகம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அந்த தகவல்களில் சிலவற்றை இந்த கட்டுரையில் நாம் மணிச்சுடர் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

மோடியின் குற்றச்சாட்டுகள்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பெரும்பான்மை இந்து மக்களின் சொத்துக்களைப் பறித்து, ஊடுருவல்காரர்களான முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என குற்றம்சாட்டினார். மேலும் முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் சுமத்தி, வெறுப்பு பேச்சை கக்கினார். மேலும், இந்து பெண்களின் நகைகளை பறித்து அவர்களின் தாலியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 23ஆம் தேதி நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் மோடி விஷத்தைக் கக்சினார். 

மோடியின் குற்றச்சாட்டுகள் உண்மையா, அதன் உண்மைத் தன்மை என்ன? என உண்மைச் சரிபார்ப்பு செய்தபோது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து-முஸ்லிம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை என்பது தெரியவருகிறது. அத்துடன், இந்து மக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிக்கையில் எந்தொரு வாக்குறுதி அளிக்கப்படவில்லை. தாலி குறித்தும் தேர்தல் அறிக்கையில் எந்த வார்த்தையும் இல்லை. 

இதேபோன்று, நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கே அனைத்திலும் முன்னுரிமையை முந்தைய காங்கிரஸ் அரசு அளித்தாக மோடி குற்றம் சுமத்தினார். இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும்போது, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நாட்டில் வாழும் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில், திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுத்தது. சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் வகையில் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகிறது. 

ஊடுருவலும் அதிக குழந்தைகளும்:

இந்திய முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும் அவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் மோடி குற்றம் சுமத்தி வெறுப்பு பேச்சை பேசினார். இதுகுறித்து ஆய்வு செய்தபோது, முஸ்லிம்கள் "ஊடுருவுபவர்கள்" என்று கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.   மோடி அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தரவு எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் பலமுறை கூறியுள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. 

இதேபோன்று, தனியார் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாகவும், இதுகுறித்து  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அப்படி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. மாறாக, நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்கள் குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதன்மூலம் அனைத்து மக்களின் உரிமைகளும் முறையாக வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. தனியார் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை பங்கீடு செய்யப்படும் என ஒருபோதும் காங்கிரஸ் அறிக்கையில் உறுதி அளிக்கப்படவில்லை. 

இதேபோன்று, கிராம மக்களின் நிலங்கள்,  சொத்துக்களை பறிக்கவும், அவர்களின் சேமிப்பு பணத்தை பறிமுதல் செய்யவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக மோடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், அதுபோன்ற எந்த திட்டமும் காங்கிரஸ் அறிக்கையில் இல்லை. 

மத ரீதியாக இடஒதுக்கீடு:

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மத ரீதியாக இடஒதுக்கீடு கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டினார். நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும், இதன்மூலம், காங்கிரஸ் மத ரீதியாக இடஒதுக்கீடு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். 

இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்தபோது, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது மத ரீதியான முறையில் இல்லை என்பதும், ஆர்.நாகன்னா கவுடா ஆணையம் அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எச்.டி.தேவ கவுடா அரசு, அனைத்து முஸ்லிம்களையும் ஓ.பி.சி. பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு 4 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதாகவும், ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோன்று, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் இதுபோன்று, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. 

அனைத்தும் பொய் பிரச்சாரம்:

முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் வரும் மே 7ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 12 மாநிலங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும், தொடர்ந்து பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் குறித்து வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. 

பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் முஸ்லிம்கள் மீதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது சுமத்தும் அனைத்து குற்றச்சாட்டுகளும், பொய் என்பது, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யும்போது உறுதியாக தெரியவருகிறது. 

18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடையும் என தற்போதைய தரவுகள் மூலம் தெரியவருகிறது. அதன் காரணமாக பதற்றம் அடைந்துள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், வேறு வழி தெரியாமல், முஸ்லிம்கள் குறித்து வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய பொய் பிரச்சாரங்களை நாட்டு மக்கள் தற்போது காது கொடுத்துக் கேட்க தயாராக இல்லை. மோடி அரசின் பத்து ஆண்டு கால தோல்வி குறித்து, தென்மாநில மக்களிடம் மட்டுமல்ல, வட மாநில மக்களிடமும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. 

எனவே, பா.ஜ.க. தலைவர்களின் இந்த பொய் பிரச்சாரங்கள், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு எந்தவித பலனையும் தராது. 18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்பதை நாடும், நாட்டு மக்களும் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

கேள்வி....!

 பா.ஜ.க.வினருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி....!



மணிச்சுடர் ஒரு மணிமகுடம்...!

 

ஊடகத்துறையில் மணிச்சுடர் ஒரு மணிமகுடம்...!

நாற்பது ஆண்டுகளில் திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கி சாதனை...!

-  எஸ்..அப்துல் அஜீஸ்  -

தமிழ் நாளிதழ்களில், தனக்கு என தனி பாணி அமைத்துக் கொண்டு, அதில் உறுதியாக இருந்து, கடந்த 39 ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்த 'மணிச்சுடர் நாளிதழ்' இன்று நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்தியாவிலேயே இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஒரே தமிழ் நாளிதழ் 'மணிச்சுடா' என்றால் அது மிகையாகாது. உர்தூ, ஆங்கில நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழ் தினசரி என வந்தால், அது 'மணிச்சுடர்' மட்டுமே என உறுதியாக கூறலாம்.

மணிச்சுடரின் எழுத்து நடை, பாணி அனைத்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பரபரப்பு செய்திகள், சினிமா செய்திகள், கொலை, கொள்ளை செய்திகள், வெறுப்பு செய்திகள் போன்ற செய்திகளுக்கு மணிச்சுடரில் சிறிதும் இடமில்லை.

இஸ்லாமியர்களை மட்டுமல்ல, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களையும் அரவணைத்துக் கொண்டு பயணம் செய்யும் பாணியை மணிச்சுடர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எனவே, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள், இளைஞர்கள் சாதனை செய்யும்போது, அதுகுறித்த விரிவான செய்திகள், கட்டுரைகள், பாராட்டு தகவல்கள் மணிச்சுடரில் கட்டாயம் இடம்பெறுகின்றன.

மணிச்சுடர் வாசிக்கும்போது, மனம் அமைதியாக இருக்கும். நல்ல நாளிதழ் படித்த திருப்தி வாசர்களுக்கு கிடைக்கும். எனவே. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் மணிச்சுடர் வாசிப்பதை தங்களது பழக்கமாகவும், வழக்கமாகவும் கொண்டு இருக்கிறார்கள்.

நானும் மணிச்சுடரும்:

மணிச்சுடர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, எனக்கும் மணிச்சுடருக்கும் இடையே ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. அதனுடனான பாசம் இன்றும் தொடர்கிறது.  சென்னை பீட்டர்ஸ் சாலையில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலத்தில், முதல் முறையாக மணிச்சுடர் நாளிதழ் ஆசிரியரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்த, மறைந்த சிராஜுல் மில்லத் .கா..அப்துஸ் ஸமது அவர்களை நான் சந்தித்போது, வேலூர் மாவட்ட முகவராகவும் நிருபராகவும் என்னை நியமித்து, சிறப்பாக செய்யுங்கள் என அவர் வாழ்த்தியது இன்னும் என் மனக் கண் முன் வந்து செல்கிறது.

பின்னர், டெல்லியில் சந்திப்பு, மீண்டும், வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலத்தில் உதவி ஆசிரியராக பணி என மணிச்சுடர் என்னை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தது. வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில்தான், தற்போதைய மணிச்சுடர் ஆசிரியரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை நான் முதல்முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

பேராசிரியர் அவர்கள், எந்தவித பந்தாவும் இல்லாமல், மணிச்சுடர் அலுவலத்தில் இருந்த அனைத்து உதவி ஆசிரியர்களிடமும் பழகிய விதம், அவர் காட்டிய அன்பு, அனைவரின் நலனில் அவர் கொண்ட அக்கறை, உற்சாகப்படுத்தி, வேலை வாங்கிய பாணி மறக்க முடியாது. தற்போதும் அதேபோன்று, பேராசிரியர் அவர்கள், மணிச்சுடர் அலுவலக ஊழியர்களின் நலனில் அக்கறையுடன் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

பல்வேறு காரணங்கள், மற்றும் நெருக்கடிகளால் மணிச்சுடரில் இருந்து விலகி, சன் தொலைக்காட்சியில் சேர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டபோது, பேராசிரியர் அவர்கள் என்னை வாழ்த்தி, அழகிய எழுதுகோல் (பேனா) ஒன்றை வழங்கி, சிறப்பாக முன்னேறுங்கள் என கூறியது இன்னும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.

இப்படி, பல்வேறு தொலைக்காட்சிகளின் ஊடகத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, தற்போது மீண்டும் மணிச்சுடரில் சிறப்புச் செய்தியாளராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் ஒரு உண்மை மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. மணிச்சுடருக்கும் எனக்கும் உள்ள அழகிய தொடர்பு, எப்போதும் நீடிக்கும் என்பதுதான் அதுவாகும்.

திறமையான ஊடகவியலாளர்கள்:

நாற்பதாவது ஆண்டில் பயணிக்கும் மணிச்சுடர், கடந்த 39 ஆண்டுகளில் மிகவும் திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கும் சன் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, டி.டி.தமிழ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டபோது, அதன் செய்திப்பிரிவில் சேர்ந்து மிகவும் சிறப்பாக பணிபுரிந்து, மணிச்சுடரின் பெருமையை நிலைநாட்டினர்.

குறிப்பாக, வில்லியம்ஸ், டாயல், ராமதாஸ், பெரியசாமி, மேலைப்பாளையம் ரசூல் கான், ஜலால், மீரா மொகிதீன், கண்ணன், காயல் மகபூப் போன்றவர்களை ஊடகத்துறையில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை செய்ய அடித்தளம் அமைத்து தந்தது மணிச்சுடர் என்றே கூறலாம்.

எனவேதான், ஊடகத்துறை குறித்த பேச்சு வரும்போது, "மணிச்சுடரில் இருந்து பயிற்சி பெற்று சென்ற அனைவரும், தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் நன்கு கோலோச்சி சாதனை புரிந்து வருகிறார்கள்" என பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் அடிக்கடி  மிகவும் பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைவார்கள்.

என்னை பொறுத்தவரை பேராசிரியர் அவர்களின் வார்த்தைகள் உண்மை என்றே கூற வேண்டும். மணிச்சுடரில் நான் சேர்ந்தபோது, சிராஜுல் மில்லத் மட்டுமல்ல, பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் கூட, நல்ல ஆலோசனைக் கூறி, என்னை உற்சாகப்படுத்தினார்கள். அதன் காரணமாக, பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் என்னால் மிகவும் சிறப்பாக பணியாற்றி, ஓரளவுக்கு நல்ல பெயர் எடுக்க முடிந்தது. எனவே, தமிழகத்தில் நல்ல திறமையான, மிகவும் அற்புதமான ஊடகவியலாளர்களை உருவாக்கி, மணிச்சுடர் மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்தது என மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.

மணிச்சுடர் ஒரு மணிமகுடம்...!

ஊடகத்துறையில் ஒரு மணிமகுடமாக திகழும் மணிச்சுடர் நாளிதழ், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இன்றும் சாதனை புரிந்துக் கொண்டே, தனது சமுதாயப் பணியை தொடர்கிறது. இஸ்லாமிய சிந்தனைகள், சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் அழகிய சமூக கட்டுரைகள், செய்திகள், அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்கள், உலக செய்திகள், குறிப்பாக பாலஸ்தீன் மக்களின் துயரங்கள், அவர்களுக்கு விடியல் கிடைக்க மக்கள் மத்தியில் பரப்புரை என பல அற்புதமான செய்திகள் மற்றும் தகவல்கள் அடங்கிய ஒரு பொக்கிஷமாக மணிச்சுடர் இருந்து வருகிறது.

சமுதாயத்திற்கு சேவை செய்த பெரியவர்கள், நல்லவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் குறித்து அடிக்கடி கட்டுரைகள், செய்திகளை மணிச்சுடர் பிரசுரம் செய்து வருகிறது இதேபோன்று,  கல்வியில் சாதனை புரியும் முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாமிய பெண்களை செய்யும் அழகிய சாதனைகள், அவர்களின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு, மற்ற முஸ்லிம் பெண்களும் ஆர்வம் கொள்ளும் வகையில் உற்சாகவும், ஊக்கமும் ஊட்டும் பணியை மணிச்சுடர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறது.

நூல் மதிப்புரை, அழகிய கவிதைகள், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும் தகவல்கள், இப்படி தொடர்ந்து வெளியிட்டு வரும் மணிச்சுடர், இனியும் தனது பணியை மிகவும் சிறப்பாக செய்யும் என ஏக இறைவன் மீது உறுதியாக நம்பிக்கை வைத்து, நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மணிச்சுடர் நாளிதழின் வளர்ச்சிக்கும், அந்த நாளிதழ் எந்தவித தடங்கலும் இல்லாமல், தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்க வேண்டும் என உறுதியான எண்ணத்துடன் பணிபுரிந்துவரும் நாளிதழின் வெளியிட்டாளர் மற்றும் இயக்குநர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கே..எம்.முஹம்மது அபூபக்கருக்கு, எமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேபோன்று, செய்தி ஆசிரியர் .கே.முஹம்மது காசீம்விளம்பர நிர்வாகி மற்றும் சமுதாயச் செய்திகளை ஒருங்கிணைத்து தரும் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.இப்ராகிம் மக்கி, தலைமை நிருபர் ஆர்..ஆர்.கண்ணன், செய்தி வடிப்பாளர்கள் ஆர்.பால் சார்லஸ், ரமேஷ், பிரமிளா, அலுவலக மேலாளர் எஸ்.முஹம்மது மொய்தீன், எஸ்.எச்.முஹம்மது அர்ஷத், .பி.முஹம்மது ஜலால், .கே.முஹம்மது ரபீ, புகைப்பட கலைஞர் மகபூர் ஷரீப், அச்சகப் பணி ஊழியர்கள் சி.சிவராஜ், ஜெ.நெல்சன், பீரிஸ், எஸ்.ஷரீப், மாணிக்கம், ராஜேஷ், சாந்தி உள்ளிட்ட அனைவரின் பணியையும் எப்போதும் மறக்க முடியாது. மணிச்சுடர் நாளிதழின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் பலரின் பெயர்கள் இந்த கட்டுரையில் இடம்பெறவில்லை. அதற்காக, அவர்கள், மணிச்சுடர் நாளிதழின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றவில்லை என அர்த்தம் இல்லை.

மணிச்சுடர் நாற்பதாவது ஆண்டில் தனது பயணத்தை தொடர்கிறது என்றால், அனைத்து தரப்பு மக்களின் அன்பும் ஒத்துழைப்பும், அவர்கள் வழங்கிய ஆதரவும்தான் முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம். மணிச்சுடர் நாளிதழ் இனியும் சிறப்பாக பயணிக்கும். தனது பணியின் மூலம் அனைத்துச் சமுதாய மக்களுக்கும், பயன் உள்ள நாளிதழாக இருக்கும். மணிச்சுடர் எப்போது ஒரு மணிமகுடம்தான்.

=========================