Sunday, September 11, 2016

தியாகம்.....!

தியாகம்.....!


ஏக இறைக் கொள்கை என்ற உன்னத தத்துவத்திற்கு ஒரு மனிதன் எப்படி செயல்பட்டு தியாகம் செய்ய வேண்டும்...?

தன் பகுத்தறிவை எப்படி பயன்படுத்தி சிந்திக்க வேண்டும்....?

அதற்காக வாழ்க்கையில் எப்படிப்பட்ட துன்பங்கள், துயரங்களை துணிச்சலுடன் சந்திக்க வேண்டும்..?

இப்படி, பல கேள்விகளுக்கு

நபி இப்ராஹீம் (அலை)

நபி இஸ்மாயில் (அலை)

ஆகிய இருவரும் தங்களது வாழ்க்கையின் மூலம் நமக்கு அழகிய பாடம் சொல்லி தருகிறார்கள்.

இந்த நபிமார்கள் செய்த பல தியாகங்களின் மூலம்தான், இன்று உலகில் மனித இனம் ஒரளவுக்காவது அமைதியாக வாழ்கிறது.

பல இக்கட்டான நேரங்களில் தியாகங்களை செய்து, துன்பங்களில் இருந்து விடுபடுகிறது.

இந்த தியாகங்களை நினைவுப்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள மனித இனம், சவுதி அரேபியாவின் மெக்காவில் ஒன்று கூடி, நிறைவேற்றும் ஒரு கடமைதான் ஹஜ்.

ஹஜ் ஒரு உலக சகோதரத்துவ மாநாடு என்று கூட கூறலாம்.


பல இனம், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட மனித இனம், ஏக இறைக் கொள்கையை உறுதியாக ஏற்று, அதன்படி வாழ்ந்து, ஏக இறைவன் முன்பு மனிதன் ஒரே இனம்தான் என்பதை உலகிற்கு சொல்லும் ஒரு புனித பயணம்தான் ஹஜ் பயணம்.

அத்துடன், உலகம் முழுவதும் இருந்து மெக்காவில் லட்சக்கணக்கில் குவியும் மக்கள், உலக அமைதிக்காக மனம் உருகி துஆ (பிராத்தனை) செய்யும்போது, அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதனால், உலகில் அமைதி தவழ வாய்ப்பு கிடைக்கிறது.

இப்படி தியாகங்கள் பல செய்து, ஹஜ் கடமை நிறைவேற்றி, அதன் ஒருபகுதியாக கொண்டாடும் திருநாள்தான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள்.

இந்த தியாகத் திருநாளில் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்...!

ஈத் முபாரக்....!

S.A.Abdul Azeez
Journalist

நேரமில்லை....!

நேரமில்லை....!


ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பு...

ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பு...

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பு...

இப்படி,

உலக அளவில் நடக்கும் சர்வதேச மாநாடுகளில் நம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அத்துடன்,

உலக தீவிரவாதம்,

உலக பொருளாதாரம்,

உலக நதிநீர் பிரச்சினை

உலக சுற்றுச்சூழல் குறித்த கவலை...

என


பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாடுகளில் கம்பீரமாக உரையாற்றி நல்ல ஆலோசனைகளை தரும் பிரதமர் மோடி, உலகம் எப்படி வேகமாக முன்னேற வேண்டும் என்றும் பல்வேறு திட்டங்களை முன்வைக்கிறார்.

மேலும்,

அமெரிக்க அதிபர் ஒபாமா,

சீன அதிபர், ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், இலங்கை அதிபர், வங்கதேச பிரதமர் என பல நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசும்  பிரதமர் மோடி, அந்நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கிறார்.


ஆலோசனை செய்கிறார்.

ஆனால்,

இந்தியாவில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க மட்டும் மோடிக்கு ஆர்வமில்லை.

காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அவர் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.


விரும்பவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தாம் தலையிட முடியாது என்கிறார்.

முல்லைப் பெரியாறு, பாலாறு என பல்வேறு நதிநீர் பிரச்சினைகளும் லைன் கட்டி நிற்கின்றன.

அதற்கு எந்த தீர்வையும் மோடி இதுவரை காணவில்லை.

ஆலோசனைகளை வழங்கவில்லை.

திட்டங்களை அறிவிக்கவில்லை.


இப்படி, நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வு காணப்படவில்லை.

ஆனால்,

உலக அளவில் இருந்து வரும் பிரச்சினைகளுக்கு மட்டும் மோடி, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ஆலோசனைகளை வழங்குகிறார்.

சர்வதேச பிரதமராக இருக்கும் ஒருவர் எப்படி, இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் கேட்பது  என் காதில் விழுகிறது.

என்ன செய்வது, நேரமில்லாத காரணத்தால்தான், இந்திய பிரச்சினைகளுக்கு மட்டும், பிரதமர் மோடியால் தீர்வு காண முடியவில்லை.

நேரமில்லாத பிரதமரை நாடு முதல்முறையாக பெற்று இருக்கிறது.

வாழ்க இந்திய ஜனநாயகம்...!

S.A.Abdul Azeez
Journalist.

Saturday, September 10, 2016

ஒழிச்சா போதும்....!

ஒழிச்சா போதும்....!



பாரா லிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை புரிந்ததை தமிழகமே கொண்டாடி வருகிறது.

அதேநேரத்தில்,

தங்கம் வெல்லும் வரை தங்கவேலு மாரியப்பன்கள் ஏன் நம் கண்களிலேயே படுவதில்லை என முகநூல் நண்பர் Parthiban kumar வினா எழுப்பியுள்ளார்.

இது சரியான, நியாயமான கேள்வி.

இதற்கு ஒரே பதில்...

கிரிக்கெட் விளையாட்டை ஒழிச்சா போதும், இந்தியாவில் பிற விளையாட்டுகள் மக்களின் பார்வைக்கு உடனே வந்துவிடும்.

மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் கிரிக்கெட்டிற்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் கொடுத்து வருதால், பேட்மின்டன், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும் நம் இளைஞர்களின் கவனம் செல்வதில்லை.

ஆர்வம் செலுத்துவதில்லை.

மத்திய, மாநில அரசுகளும் பிற விளையாட்டுகளை ஊக்குவிக்க போதிய முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

இதுவரை எடுப்பதாக தெரியவில்லை.

எனவே,

கிரிக்கெட் ஒழிக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டை பிரபலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு  தடை விதித்து, பிற விளையாட்டுகளை பிரபலப்படுத்த திட்டங்களை திட்ட வேண்டும்.

அப்படி ஒரு திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் செயல்படுத்தினால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா பதக்க மழையில் நனையும்.

இது உறுதி.

ஆனால்,

மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என்பது சந்தேகமே..

ஏனெனில், அனைவரும் கிரிக்கெட்டின் பின்னால் ஓடுவதையை வழக்கமாக கொண்டு பைத்தியமாக இருப்பதால், பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

கிரிக்கெட்டை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது மூலம் மட்டுமே, Parthiban Kumar எழுப்பிய கேள்விக்கு தக்க பதில் கிடைக்கும்.

பிற விளையாட்டு வீரர்கள் நம் கண்களில் படுவார்கள்.

சாதனை மகுடத்தில் ஏறுவார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

Friday, September 9, 2016

யார் தீவிரவாதி......!

யார் தீவிரவாதி......!


In the history of the World, who has KILLED maximum INNOCENT HUMAN BEINGS ?

HITLER.... Do you know who he was ?

He was a Christian, but media will never call Christians terrorists.

JOSEPH STALIN...... called as Uncle Joe,

He has killed 20 million human beings including 14.5 million were starved to death.

Was he a Muslim ?

MAO TSE TSUNG (China)..... He has killed 14 to 20 million human beings.

Was he a Muslim ?

BENITO MUSSOLINI (Italy)..... He has killed 400 thousand human beings.

Was he a Muslim ?


ASHOKA..... In Kalinga Battle, He has killed 100 thousand human beings.

Was he a Muslim ?

Embargo put by GEORGE BUSH in IRAQ, 1/2 million children has been killed in Iraq alone.

Imagine these people are never called terrorists by the media.

Was he a Muslim ?

Today the majority of the non-muslims are afraid by hearing the words JIHAD.

JIHAD is an Arabic word. which comes from root Arabic Word JAHADA, Which means TO STRIVE or TO STRUGGLE against evil and for justice.
It does not mean killing innocents.


The difference is we stand against evil. not with evil.

Is ISLAM really the Problem ?

The First World War 17 million dead...(caused by non-muslim).

The Second World War, 50-55 million dead....(caused by non-muslim).

Nagasaki atomic bombs 2,00,000 dead...(caused by non-muslim).

The War in Vietnam, over 5 million dead....(caused by non-muslim).

The War in Bosnia, Kosova, over 5,00,000 dead...(caused by non-muslim).

The War in Iraq (so far) 1, 20, 00,000 deaths....(caused by non-muslim).


Afghanistan, Iraq, Palestine, Burma (monks) etc ongoing....(caused by non-muslim).

In Cambodia 1975-1979, almost 3 million deaths...(caused by non-muslim).

MUSLIMS ARE NOT TERRORISTS AND TERRORISTS ARE NOT MUSLIMS.

AND ABOVE ALL NEITHER OF THE WEAPONS OF MASS DESTRUCTION AS WELL AS ANY ASSAULT WEAPONS ARE INVENTED BY MUSLIMS.

AND ABOVE ALL EVEN THE ARMS GIVEN AND SUPPLIED TO THE SO CALLED MUSLIM TERRORIST ARE NOT BY ANY ISLAMIC INSTITUTE.
TALIBAN AS WELL AS ISIS IS ALL CREATION OF WEST.

NOW TELL, WHO IS REAL TERRORIST ?


உலகை அச்சுறுத்தும், அச்சுறுத்தி கொண்டிருக்கும் உண்மையான தீவிரவாதிகள் யார்.....?

பதில் சொல்லுங்கள் தோழர்களே....

Wednesday, September 7, 2016

என்னத்த சொல்ல.....!

என்னத்த சொல்ல.....!


காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு.

இந்த உத்தரவைத் தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.

இந்த தண்ணீர் திறப்பிற்கு எதிராக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

அதிலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை குறி வைத்து, கர்நாடக மக்களில் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்ததை, கர்நாடக மக்கள் குறை கூறுவது எப்படி நியாயம் என சொல்லலாம்...


ஒரு மாநில மக்கள் தண்ணீருக்காக ஏங்கி தவிக்கும் நிலையில், பக்கத்து மாநிலம் சிறிது தண்ணீர் கூட தர மறுப்பது எப்படி சரி என சொல்லலாம்.

மனித நேய அடிப்படையில் கூட கர்நாடக மக்களின் போராட்டம் நியாயமானதாக தெரியவில்லை.

வாழு, வாழ விடு என்ற தத்துவத்தை கூட கர்நாடக மக்கள் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்பது அவர்களின் தொடர் போராட்டங்கள் மூலம் தெரிகிறது.


தண்ணீர் விஷயத்தில், தமிழர்கள் மீது மிகப் பெரிய அளவுக்கு வெறுப்புணர்ச்சி கர்நாடக மக்களில் சிலருக்கு இருந்து வருவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த போக்கு நீண்ட நாட்களுக்கு  நீடிப்பது சரியல்ல.

ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள், இப்படி தண்ணீருக்காக அடித்துக் கொண்டு வெறுப்புகளை வளர்த்துகொள்வது வரும் காலத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


காவிரியில் தண்ணீர் திறப்பிற்காக கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டங்களை என்னவென்று சொல்வது...

வேதனைதான் அளிக்கிறது....

S.A.Abdul Azeez
Journalist 

ஏடிஎம் ஆபத்து.....!

ஏடிஎம் ஆபத்து.....!



கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தேன்.

அதில் ஆயிரம் ரூபாய் தாள் ஒன்று கிழிந்து இருந்தது.

எனவே, அருகில் இருந்து ஸ்டேட் வங்கிக்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்தித்து, சார்உங்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்தபோது, ஒரு தாள் கிழிந்து இருந்தது.

தயவு செய்து மாற்றி தாருங்கள் என்றேன்.

அந்த அலுவலர் என்னை மேலும் கீழும் ஆச்சரியமாக பார்த்தார்.

நீங்கள் பணம் எடுத்ததாக கூறும் ஏடிஎம் எந்திரம் கடந்த சில நாட்களாகவே இயங்கவில்லை.

எப்படி அந்த எந்திரத்தில் இருந்து உங்களால் பணம் எடுக்க முடியும் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

சார், நான் பணம் எடுத்ததற்கான ஆதாரம் இதே அந்த ஏடிஎம் எந்திரத்தில் இருந்து எனக்கு வந்த ரசீதைப் பாருங்கள் என கூறி, அந்த ரசீதை அலுவலரிடம் காண்பித்தேன்.

அதை வாங்கிப் பார்த்த அவர், எப்படி பணம் எடுக்க முடியும் என்ற  ஒரே கேள்வியை திரும்ப திரும்ப என்னிடம் கேட்டுகொண்டே இருந்தார்.

கிழிந்த நோட்டை வேண்டுமானால் மாற்றி தாருகிறேன். ஆனால், நீங்கள் அந்த மையத்தில் பணம் எடுத்ததாக மட்டும் பொய் கூறாதீர்கள் என்றார்.

அய்யா, நான் ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளன். அப்படி பொய் சொல்லி உங்களிடம் கிழிந்த நோட்டை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறி என்னுடைய ஐ.டி. கார்டை அவரிடம் காண்பித்தேன்.

அப்போதும், அவர் நம்ப தயாராக இல்லை.

அந்த ஏடிஎம் எந்திரம் பழுது என்றே சொல்லிகொண்டே இருந்தார்.

பிறகு, கிழிந்த நோட்டை மாற்றி கொடுத்தார்.

இது எனக்கு நேர்ந்த அனுபவம்.

இதேபோன்ற ஒரு அனுபவம் என் நண்பர் ஒருவருக்கும் ஏற்பட்டது.


ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப்.வில் பணியும்  அந்த நண்பர் உயரதிகாரியும் கூட.

அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தபோது, நான்கு ஆயிரம் ரூபாய் தாள்கள் போலி தாள்களாக வந்துவிழுந்தது.

வணிக நிறுவனத்திற்கு சென்றபோதுதான், இந்த விவரம் அவருக்கு தெரிந்தது.

உடனே, வங்கிக்கு சென்று பணத்தை மாற்றி தரும்படி கேட்டிருக்கிறார் நண்பர்.

அந்த அதிகாரி பணத்தாள்களை வாங்கி, நான்கிலும் பேனாவில் கோடு போட்டு, நண்பரிடமே திருப்பி தந்திருக்கிறார்.

பணத்தாள்களை மாற்றி தரும்படி கேட்டால் இப்படி, கோடு போட்டு மீண்டும் அதை என்னிடமே தருகிறீர்களே என நண்பர் கேள்வி எழுப்ப, உண்மையில் உங்களை போலீசில் பிடித்து தந்திருக்க வேண்டும்.

ஆனால், நான் அப்படி செய்யவில்லை. பிழைத்து போங்கள் என அந்த வங்கி அதிகாரி கூற, நண்பருக்கு கோபம் வந்தது.

உடனே, போலீசை இப்போதே கூப்பிடுங்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

போலீஸ் வரும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன் என கூற, அந்த வங்கி அதிகாரிக்கு உதறல் ஏற்பட்டுவிட்டது.

மத்திய பாதுகாப்பு படையில் உயரதிகாரியாக இருக்கும் என்னிடமே, இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றால், சாதாராண மக்களிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய, பிறகு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து நான்கு ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றி தந்து இருக்கிறார்கள்.

இந்த அனுபவத்தை நண்பர் சொன்னபோது,  அதிர்ச்சியும், சிரிப்பும் ஏற்பட்டது.

ஏடிஎம் மையங்களில் எப்படி போலி பணத்தாள்கள் வைக்கப்படுகின்றன.

அதை எடுக்கும் மக்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைகிறார்கள்.

மாற்றி தரும்படி வங்கி அதிகாரிகளை அணுகும்போது, அவர்களே சந்தேகத்திற்கு உள்ளாகி வேதனைகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்   என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு வங்கி நிர்வாகங்கள் எப்படி தீர்வு காணுமோ என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

அப்படி, தீர்வு காண வங்கி நிர்வாகிகள் எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற ஆபத்துகள் தொடரவே செய்யும்.

பொதுமக்கள் பாதிப்பு அடைவது தொடர்கதையாகும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Sunday, September 4, 2016

அநியாயம்.....! அக்கிரமம்....!!

ஐய்யய்யோ...! அநியாயம்.....!!அக்கிரமம்....!!! கேட்பதற்கு யாருமே இல்லையா....!


பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியில் (Vijaya Bank) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எனக்கு ஒவ்வொரு வாரமும் என்னுடைய செல்பேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வருவது வழக்கம்.

அதில், என்னுடைய வங்கி கணக்கு இருப்பு குறித்த விவரங்கள் இருக்கும்.

அதேபோன்று, இந்த வாரமும் (04.09.2016) என்னுடைய செல்பேசிக்கு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதைப் பார்த்ததும் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம்,

For every txn at Vijaya Bank ATM, we donate 50ps for a social cause. You Transact, we  Donate. Vijaya Bank.

என்ற தகவல் எனக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இனி நான் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுக்கும்போது, என்னுடைய அனுமதி இல்லாமலேயே விஜயா வங்கி, என்னுடைய கணக்கில் இருந்து 50 காசுகளை எடுத்துக் கொள்ளும். அதாவது பிடுங்கிகொள்ளும்.

அந்த 50 காசுகள் சமூக நலப்பணிக்காக அனுப்பி வைக்கப்படும் என விஜயா வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் பொதுத்துறை வங்கி எப்படி அவர்களின் பணத்தில் இருந்து 50 காசுகளை எடுக்கலாம்.

அதை சமூகப் பணிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

விஜயா வங்கியில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி பேர் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுத்தால், சுமார் 50 லட்சம் ரூபாய் வரை விஜயா வங்கி தானாகவே எடுத்துக் கொள்ளும்.

இப்படி, ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணத்தை பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி, ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும், தங்களுடைய வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமலேயே 50 காசுகளை பிடித்தம் செய்து வந்தால், நாடு முழுவதும் ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு சுலபமாக வருமானம் கிடைக்கும்.

அந்த வருமானம் மத்திய அரசுக்கு செல்லும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிஜேபி தலைமையிலான மத்திய அரசு, பொது மக்களின் பணத்தை எப்படி,  சுருண்டுகிறது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணமாக இருக்கிறது.

மக்களை வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வைத்து அதை மிகப் பெருமையாக கூறிக் கொள்ளும், பிஜேபி அரசு, அதன்மூலம், எளிதாக பணத்தை சுருண்டும் வழியை ஏற்படுத்தி இருப்பது தெள்ள தெளிவாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை கேட்க யாருமே இல்லையா....?

இதுதான் என்னைப் போன்ற வங்கி வாடிக்கையாளர்களின் கேள்வி.

S.A.Abdul Azeez
Journalist