Sunday, April 19, 2026

வாழ்த்துகள்....!

 வாழ்த்துகள்....!

வாழ்க்கையில் புதிய அத்தியாயம் என்ற புதிய பயணத்தை, திருமண வாழ்க்கையை இன்று தொடங்கியுள்ள தோழர் ஜெரால்ட் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். வாழ்க்கை இணையுடன் பல்லாண்டு, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துகள் தோழரே...

Happy married life. God bless you.



Life....!

Life is beautiful. 

One day one hour and 

one minute will not come again

 in your entire life. 

Avoid fights, angriness 

and speak lovely to every person.


வாழ்க்கையில்....!

 கவலை ஒருபோதும் நாளைய 

சோகத்தை தீர்த்து விடாது. ஆனால் 

அது இன்றைய மகிழ்ச்சியை 

பறித்துவிடும் என்பது தான் உண்மை. 

வாழ்க்கையில் சின்ன சின்ன 

விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை

 அனுபவித்து வாழ்வோம். 

காரணம், சில நேரங்களில் சின்ன

 விஷயங்களில் கூட 

அற்புதம் நிகழ வாய்ப்பு உண்டு.



Saturday, April 18, 2026

கண்ணீர்.....!

 கண்ணீர்.....!

கண்ணீரோ....கண்ணீர்....!!

நீலக் கண்ணீர்....!!!



Relations.....!

If we judge people, nobody is ours. 

If we understand people, everyone is ours. 

Develop the habit of understanding 

and we will experience peace and love 

in all relations.




அழகு....!

 அழகு....

அற்புதமான அழகு....

உள்ளதைக் கவரும் அழகு...



தமிழகம் முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி.

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி எதிரொலி:

 தமிழகம் முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி....! 

திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீசும் வெற்றி அலை....!! 

தமிழகத்தில் சமீபகாலமாக நிலவும் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலில் மக்கள் மத்தியில் பல்வேறு எழுச்சிகள் காணப்படுகின்றன. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, முக்கியமாக அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்களின் எழுச்சிமிகு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தொகுதி மறுவரையறை தொடர்பான ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக, அது தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் "சதி" என்று கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். திமுக தலைவரின் இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்பட்டு, ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாகத் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி :

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமிழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும், மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள், அதாவது 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், மசோதா தோல்வி அடைந்தது. இது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும். 

தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி :

நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்த செய்தியைக் கேட்டதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடைந்த மகிழ்ச்சி அளவே இல்லை என்று கூறலாம். பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவர் தம்முடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இந்த வெற்றி 100 ஆண்டுகள் ஆனாலும், வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் போரில், முதல்கட்டமாக தமிழ்நாடு தற்போது வெற்றி பெற்று இருக்கிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறும், தமிழ்நாட்டின் இரண்டாவது வெற்றியை மீண்டும் பதிவு செய்யும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன் நிற்காமல், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அது தோல்வி அடையச் செய்த காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும் என்றும் மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார். 

தமிழகம் முழுவதும் எழுச்சி :

இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், இந்த மக்கள் எழுச்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக மாறிவிட்டது என்றே கூறலாம். 

தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று திமுக கூட்டணித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வகைசெய்யும் மசோதா தோல்வி அடைந்ததால், அது திமுக அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிட்டது. தவெக,., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த மக்கள் கூட, தற்போது திமுக அணியின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருகிறார்கள். 

சரியான திசையில் திமுக அணி :

இத்தகைய அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ள மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்குப்பதிவு நாள் வரை இந்த எழுச்சி மக்கள் மத்தியில் இருக்கும் வகையில், சரியான திட்டமிடலுடன் திமுக அணி தங்களது பிரச்சாரங்கள் செய்துவருவதாகவே தெரிகிறது.  இதன்மூலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வரலாற்று வெற்றி கிடைக்கும் என உறுதியாக கூறலாம். 

இதுஒருபுறம் இருக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதர்ச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு இஸ்லாமியர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெள்ளி மேடையிலும் தேர்தல் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசங்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் அனைத்து இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக அணிக்கு கிடைக்கும் என்று உறுதிப்பட கூறலாம். இதேபோன்று, கிறிஸ்துவ பெருமக்கள் கூட, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவான நிலையை எடுத்து இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மையின மக்களின் ஒரே தேர்வாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இருந்து வருகிறது. 

எனவே, தற்போது தமிழ்நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி, தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வழிவகை செய்து, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற உறுதியுடன் போராடும் ஒரு நல்ல ஆட்சியை அமைக்க துணை நிற்கும் என்று உறுதியாக கூறலாம். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



Friday, April 17, 2026

தமிழ்நாடு முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முழக்கம்.....!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:

" ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் "

தமிழ்நாடு முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முழக்கம்.....!

தமிழக வாக்காளர்களை கவர்ந்த அரசியல் முழக்கம்....!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் வரும் 21ஆம் தேதி நிறைவுபெற்று, 23ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒரு முழக்கம் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த முழக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர்ந்திருக்கிறது. 

 "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்பது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவால் முன்வைக்கப்பட்ட முக்கிய முழக்கமாகும்.  2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இந்த முழக்கம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழக்கத்தை மையமாக வைத்து "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

"வெல்வோம் 200" அதாவது 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நோக்கி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்பதை இந்த முழக்கம் குறிக்கின்றது. ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுகவின் சார்பில் பல்வேறு மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முழக்கத்தின் கீழ், கல்வி, சமூக நீதி, மற்றும் மாநில உரிமைகள் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்து, "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பிரச்சாரத்தையும் திமுக முன்னெடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை வலியுறுத்தும் ஒரு முக்கிய அரசியல் முழக்கமாகும்.

தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கும் முழக்கம் : 

"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற இந்த முழக்கத்தின் முக்கிய அம்சங்களாக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மகளிர் நலன், மாணவ மாணவியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவை இருந்து வருகின்றன. 

சரி, "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரை நாம் நேரில் சந்தித்து கருத்துகளை சேகரித்தோம். அவர்களில் பெரும்பாலானவர்கள், தற்போதைய திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., தமிழ்ப்புதல்வன் உதவித் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்., மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500-இல் இருந்து 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்., நலவாரியங்கள் ஓய்வூதியம் ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்ற திமுகவின் அறிவிப்புகள் ஏழை, மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

இதேபோன்று, கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., புதுமைப்பெண் திட்டம் நிதியுதவி ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்., முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., நெல்கொள்முதல் 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் தமிழக வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். இதன் காரணமாக "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் தமிழ்நாடு முழுவதும் தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

வாக்காளர்களின் கருத்து :

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். அதற்காக, மக்கள் அதிகம் கூடும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தேநீர் விடுதிகள், ஓட்டல்கள் நடைபாதைகள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்போது, அங்கு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை காதுகொடுத்து கொஞ்சம் கேட்டோம்.  அப்போது அவர்களின் விருப்பமாக திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் தொடர வேண்டும் என்பதாக இருந்தது. 

* இந்த தேர்தலில் நிச்சயம் திமுக தான் ஜெயிக்கும்., 

* மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.

* நாங்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு தான் வாக்கு போடுவோம். 

* திமுக கூட்டணி தான் வலிமையான கூட்டணியாக உள்ளது.

* தமிழ்நாட்டின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது. 

* தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும். 

* அதிமுக தற்போது மறைந்த அம்மையார் ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவாக இல்லை. பாஜகவின் அடிமைக்கட்சியாக அதிமுக மாறிவிட்டது. 

* வடநாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை போன்று தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. 

* வட நாட்டில் பல கட்சிகளை ஒன்றும் இல்லாத கட்சிகளாக பாஜக மாற்றிவிட்டது. அதேபோன்ற ஒரு நிலைமைய அதிமுகவிற்கு நிச்சயம் வரும். 

* தமிழ்நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி நடைபெறுகிறது. அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 

* திமுக குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டின் நலன், தமிழர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாம் திமுகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும். 

இப்படி சாதாரண தொழிலாளி முதல் அனைத்துத் தரப்பு மக்களும் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுந்தது. 

ஒருசிலர் மட்டுமே, திமுக கூட்டணியை விமர்சனம் செய்தனர். பெரும்பாலானவர்கள், திமுக கூட்டணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று புகழாரம் சூட்டினார்கள். 

மக்களின் எண்ணங்கள் வாக்குகளாக மாறும் :

இதன்மூலம், தமிழக வாக்காளர்களில் பெரும்பாலானோர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்புகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரியவருகிறது.  தமிழக மக்களின் உள்ளங்களில் ஓங்கி ஒலிக்கும் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என்பது உறுதி. கடந்த பல தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலை மக்கள் மத்தியில் இருப்பதை காண முடிந்தது. ஆனால், 2026ஆம் நடக்கும் இந்த தேர்தலில் அப்படியொரு மனநிலை மக்கள் மத்தியில் இல்லை. 

அதுவே,  கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் மிகப்பெரிய பலமாகும். திமுக ஆட்சியின் சாதனையாகும். பல்வேறு சவால்களை சந்தித்து தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் திமுக, தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் சவால்களை முறியடித்து, மிகப்பெரிய வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று உறுதியாக கூறலாம். மே 4ஆம் தேதி அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள், திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும். அதன்மூலம்  தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலுக்கும் புதிய அரசியல் நெறிகளை உருவாக்கி அரசியல் ஆர்வலர்களை வியக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

வாக்கு....!

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட   தங்க சாலை பகுதியில்   துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர் பாபு , பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

 பகுதியில் இளைஞர்களுடன் அவர் கேரம் விளையாடி நூதன முறையில் வாக்குகளை சேகரித்தது குறிப்பிடத்தக்கது.



Thoughts....!

The happiness 

of your life 

depends upon 

the quality of 

your thoughts, 

so think happy 

and positive.




உறவுகள்....!

 பயணம் இன்றி 

வாழ்க்கையும் இல்லை. 

பணம் இன்றி 

உறவுகளும் இல்லை. 

உறவுகளுக்காக 

பணத்தை செலவழிப்பது 

ஒருவகையில் முதலீடாகும். 

முதலீடு செய்ய ஒருபோதும் 

தயங்காதீர்கள். அதன்மூலம்

உறவுகளை நல்ல முறையில்

பேணுங்கள்.



தோல்வி....!

 தோல்வியோ....தோல்வி....!

தென் மாநிலங்களுக்கு 

வெற்றியோ...வெற்றி...!



Thursday, April 16, 2026

தேர்தல் அறிக்கை...!

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை - ஒரு பார்வை.

இனிய திசைகள் ஏப்ரல் 2026 மாத இதழில் என்னுடைய சிறப்பு ரிப்போர்ட்....!



நம்பிக்கை....!

 திமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்...!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!

இனிய திசைகள் ஏப்ரல் 2026 மாத இதழில் என்னுடைய சிறப்பு ரிப்போர்ட்....!



Smile....!

Your smile is your logo. 

Your personality is your business card. 

And the way you make others 

feel is your trademark.




நேர்காணல்....!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -

 மணிச்சுடர் நாளிதழ் - 

சிறப்பு நேர்காணல்...!






திறமை....!

உங்களிடம் இருக்கும் 

சூப்பர் பவரை (திறமையை) 

நீங்கள் மட்டுமே அறிய முடியும். 

உங்களைத் தவிமற்றவர்கள் 

அதை அறிந்துகொள்ள முடியாது.

 உங்கள் திறமையை அறிந்து 

அதை வெளிப்படுத்தி 

வாழ்க்கையை வசப்படுத்தி 

வெற்றிபெற்று 

மகிழ்ச்சி அடையுங்கள்.



கொளத்தூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் திவிர பிரச்சாரம்....!

 தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

முதலமைச்சர் மு..ஸ்டாலின் போட்டியிடும்

கொளத்தூர் தொகுதியில் .யூ.முஸ்லிம் லீக் திவிர பிரச்சாரம்

வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிக்கும் முஸ்லிம் லீகர்கள்


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போது ராக்கெட் வேகத்தில் படுவேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கொளத்தூர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளின் நிலவரத்தை அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் ஓர் ஆர்வம் இருந்து வருகிறது. சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு..ஸ்டாலின் போட்டியிடுகிறார். மு..ஸ்டாலின் அவர்கள்  சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கடந்த 2011 முதல் தொடர்ந்து போட்டியிட்டு, தனது தொகுதியை ஒரு மாதிரித் தொகுதியாக மாற்றியுள்ளார்.  முதல்வர்  ஸ்டாலின் தமது தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்', நவீன சந்தை வளாகம், ரெட்டேரி ஏரிப் பூங்கா போன்ற பல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். கொளத்தூர் அலங்கார மீன் சந்தைக்காகப் பிரபலமானது மற்றும் இப்பகுதி 'சென்னையின் மீன் கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. முதலமைச்சரின் சாதனை தொடர்பாக 5 ஆண்டு சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பிரச்சாரம் செய்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன.

தற்போது தேர்தல் களத்தில் அனல் பறக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் .யூ.முஸ்லிம் லீக், தீவிர பிரச்சாரம் செய்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் .யூ.முஸ்லிம் லீகின் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில், தற்போது .யூ.முஸ்லிம் லீகின் தேர்தல் பணிகள் எப்படி உள்ளன என்பதை அறிய விரும்பினோம். எனவே, .யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்  .எச்.எம்.முஹம்மது இஸ்மாயில், சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோதர் ஷா ஆகியோரிடம் தேர்தல் பிரச்சாரப் பணிகள் குறித்து நேரில் கேட்டு தகவல்களை திரட்ட முடிவு செய்து இருவரிடமும் கூட்டாக மணிச்சுடர் நாளிதழுக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினோம். சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நடத்திய நேர்காணலின்போது இருவரும் கூட்டாக தெரிவித்த சுவையான தகவல்களின் முழு விவரத்தை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

6 தொகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பு :

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 6 தொகுதிகள் எங்களது இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பில் வருகிறது. அதன்படி, துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்., வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளில், நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறோம்.

எங்களது பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை நடைபெற்று வருகிறது. மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கும் எங்களது பிரச்சாரம் இரவு 10 மணி வரை நீடிக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்வதற்காக, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தனிக்குழுக்களை அமைத்துள்ளோம். அந்த தனிக்குழுக்கள் எங்கள் பொறுப்பில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்று நாள்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன், எங்களது இ.யூ.முஸ்லிம் லீக் குழுக்கள் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக பகுதி நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து நாங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் ஆகியவை விளக்கம் அளித்து வருகிறோம். மேலும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்றும், அதன்மூலம் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும் என்றும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

சென்னையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் மிகச் சிறந்த முறையில், ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன் காரணமாக எங்கள் பிரச்சாத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் :

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் நாள்தோறும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. எங்களது சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி மீண்டும் இந்த தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றால், தொகுதி மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

கொளத்தூர் தொகுதி முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசுவதை நாங்கள் காண முடிந்தது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகள் அனைத்தும், நிச்சயமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கே என்று எங்களிடம் கூறும்போது, உண்மையிலேயே கொளத்தூர் தொகுதியை மிகப்பெரிய அளவுக்கு மாற்றி, ஒரு நட்சத்திர தொகுதியாக தளபதி அவர்கள் உருவாக்கி இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து நாங்கள் வியப்பு அடைந்தோம். எனவே கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இந்த முறை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எங்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.

துறைமுகம் தொகுதியில் களப் பணி :

இதேபோன்று, அமைச்சர் பி.கே.சேகர் பாபு போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில், இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட தொண்டர்கள் நாள்தோறும் கடும் வெயிலுக்கு மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் தனிதனித் குழுக்களாக துறைமுகம் தொகுதி முழுவதும் வளம்வரும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அமைச்சர் சேகர் பாபு கலந்துகொள்ளும் வாக்குசேகரிக்கும் நிகழ்ச்சிகளின்போது, 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் லீகர்கள் பிறைக் கொடி ஏந்திக் கொண்டு கலந்துகொள்கிறார்கள்.  வேட்பாளர் சேகர் பாபு உடன்சென்று வாக்காளர்கள் மத்தியில் திமுக ஆட்சியின் சிறப்புகள் அதனால் ஏற்பட்ட பலன்கள், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து துறைமுகம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நாங்கள் எடுத்துக் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

துறைமுகம் தொகுதியில் உள்ள பிடாரியார் கோவில் தெரு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு 14.04.2026 அன்று பிரச்சாரம் செய்தபோது, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, சேகர் பாபுவிற்கு பொன்னாடை அணிவித்து பேராசிரியர் வாழ்த்து தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் தலைவர், பொதுச் செயலாளர் என்ற முறையில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம். மேலும், மாவட்ட துணைத் தலைவர் அக்பர் அலி சேட், முஸ்லிம் யூத் லீக் மாவட்டத் தலைவர் சுல்தான், துறைமுகம் பகுதி தலைவர் அப்துல் சுக்கூர், வடக்கு மாவட்ட எஸ்.டி.யூ. செயலாளர் ஏ.கே.முஹம்மது ரபி, பூவை காதர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அப்போது துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவிற்கு வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருவதை நாங்கள் நேரில் கண்டோம்.

துறைமுகம் தொகுதியில் நடத்தப்பட்ட வாகன பேரணியில் கூட இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்டம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,. கொளத்தூர், துறைமுகம் தொகுதிகளை போன்றே மற்ற 4 தொகுதிகளிலும் எங்களது பிரச்சாரம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட பிரதிநிதிகள் திரளாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக அரசின் 5 ஆண்டு கால பணிகள் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றிபெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேநேரத்தில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் மாற அதிக வாய்ப்பு உள்ளது.

த.வெ.க. ஒரு பிரச்சினையே இல்லை :

துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்., வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அந்த வேட்பாளர்கள் யாரும் வாக்காளர்களின் கவனத்தை பெறவில்லை. இதேபோன்று அதிமுக வேட்பாளர்கள் கூட, வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் இருந்து வருகிறார்கள். ஒருசில இளைஞர்கள், மற்றும் பெண்கள், த.வெ.க,.விற்கு ஆதரவான நிலையில் இருந்தாலும், திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் பயன் அடைந்த அனைத்து பெண்களும், திமுகவிற்கு தான் தங்கள் வாக்கு என்று உறுதியாக கூறி வருகிறார்கள். இதை நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது.

சென்னையை பொருத்தவரை, தற்போது போட்டியே, திமுகவிற்கும் த.வெ.க.விற்கும் இடையே தான் என்ற நிலை இருந்து வருகிறது. எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக தேர்தல் பணிமனையே திறக்கவே இல்லை. இதன்மூலம், அவர்களின் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். திமுகவின் தேர்தல் பணிகள் இந்த முறை ராக்கெட் வேகத்தில் இருப்பதால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை என்பதையும் இந்த முறையும் அது உண்மையாகும் என்பதையும் மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நல்ல ஒத்துழைப்பு :

சென்னையில் எங்கள் பொறுப்பில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் பிரச்சாரம் செய்யும்போது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. அத்துடன், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் குறைந்த நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவருடன் இணைந்து 6 தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட சார்பில் நாங்கள் இன்னும் படுவேகத்தில் பிரச்சாரம் செய்வோம்,. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.  

இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்  .எச்.எம்.முஹம்மது இஸ்மாயில், இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோதர் ஷா ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். அவர்களது எண்ணங்கள் நிறைவேற வாழத்திவிட்டு விடைப்பெற்றோம்.

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Results....!

If you focus on results, 

you will never change. 

If you focus on change, 

you will get results.



Wednesday, April 15, 2026

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகள் : ஓர் சிறப்பு ரிப்போர்ட்...!

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும்   திருவெறும்பூர்  சட்டமன்றத் தொகுதிகள் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் முஸ்லிம் லீகர்கள் தீவிர பிரச்சாரம்....! 

- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சியின் மண்ணின் மைந்தர்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ்  ஆகியோரின் வெற்றிக்காக இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் மூன்று தொகுதிகளில் வலம்வந்து, வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட குழுவினர் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி, இரவு 10 மணிக்கு நிறைவு செய்கிறார்கள்.  

கே.என்.நேருவுக்கு ஆதரவாக களப்பணி :

திருச்சி எப்போதும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக,  திமுக என்றாலே திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தான் என சொல்லும் அளவுக்கு அந்த தொகுதியை தம்முடைய சிறப்பான பணிகள் மூலம் திமுகவின் அஞ்சாநெஞ்சன் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வளம்படுத்தி சிறப்பாக வைத்துள்ளார். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பிரச்சினைகளை உடனுக்கு உடனே தீர்க்கும் கே.என்.நேரு, தொகுதி மக்கள் அனைவரிடமும் குடும்ப பாசத்துடன் பழகும் பண்பு, அனைத்துச் சமுதாய மக்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்து வருகிறது. அதன் காரணமாக, நேருவின் வெற்றி உறுதி என்றே கூற வேண்டும். 

இத்தகைய சூழ்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் லீகர்களும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணி எனும் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், காஜாமலை மெயின் ரோடு,  காளியம்மன் கோவில் தெரு, ஐய்யனார்கோவில் தெரு, அண்ணா நகர் ரோடு, லூர்துசாமி பிள்ளை காலனி 2வது தெரு, லூர்துசாமி பிள்ளை காலனி 1வது தெரு, முஸ்லிம் தெரு பள்ளிவாசல், ஈ.பி. காலனி மெயின் தெரு, கோகுலம் காலனி, இந்தியன் பேங்க் காலனி மெயின் ரோடு, இந்தியன் பேங்க் காலனி கோவில், சுந்தர் நகர், அம்மன் நகர் கோவில், எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கே.என்.நேருவுக்கு ஆதரவாக  தீவிரப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

அமைச்சர் கே.என்.நேருவுடன் இணைந்து வாக்குவேட்டையில் ஈடுபடும், இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்,  கே.என்.நேருவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது,  இஸ்லாமிய சொந்தங்கள் அளித்த அன்பின் ஆரவாரமும், உற்சாக வரவேற்பும் வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவை பெரிதும் அக மகிழ செய்தது.

திராவிட மாடல் அரசின் சாதனைகள் :

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பிரச்சாரத்தின்போது, திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் திமுக செய்யப் போகும் சாதனைகளை வாக்குறுதிகளாகவும் விளக்கிக் கூறியும் வீதி வீதியாகச் சென்று திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீகர்கள் வாக்கு சேகரித்தனர். இதேபோன்று திருச்சி மேற்கு தொகுதியில் நடக்கும் தெருமுனை பிரச்சாரத்தில் பங்கேற்கும் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியாக வெற்றி பெறுவார் என்றும், அதற்கு முக்கிய காரணம் தொகுதிக்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள், நிறைவேற்றியுள்ள திட்டங்களே ஆகும் என்றும் தெரிவித்தார்.  மேலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆதரவோடு தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். தமிழக மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அவர்கள் தந்து இருக்கிறார்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெல்லும் என்ற முழக்கம் ஒலித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

திருவெறும்பூர் தொகுதியில் பிரச்சாரம் :

இதேபோன்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதியிலும் இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்  தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி, மாணவ மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவத்திற்கு எடுக்கப்பட்டு செயல்திட்டங்கள் குறித்து, இ.யூ.முஸ்லிம் லீகினர், வாக்காளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இந்த பிரச்சாரம் தற்போது படுவேகம் எடுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருவதை காண முடிகிறது. 

திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு :

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மண்ணின் மைந்தர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு ஆதரவாக 15.04.2026 புதன்கிழமையன்று, இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்  தீவிர பிரச்சாரம் செய்தனர். ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, அண்ணா நகர், காந்தி நகர், பெரியார் தெரு,  அலிகான் குளம் ஆகிய பகுதிகளில் வேட்பாளருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தின்போது, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்ட பலன்கள் குறித்தும் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

திருச்சியின் மண்ணின் மைந்தர்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோருக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட குழுவினர் செய்த பிரச்சாரம் மூன்று தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை மட்டுமல்லாமல், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும்  பெரிதும் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்