Tuesday, October 31, 2023

சென்னையில் போராட்டம்...!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்காகவும் சென்னையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்....!



சகிப்பு தன்மை.....!

சகிப்பு தன்மை குறைந்து போனால் வன்முறை கலாசாரம் பெருகி நாட்டின் வளர்ச்சி  முடங்கும்....!

ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கருத்து.....!!

டெல்லியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய ரகுராம் ராஜன், இந்தியாவில் தற்போது, எப்போதும் இல்லாத  அளவுக்கு சகிப்பு தன்மை குறைந்து வருகிறது என்றார்.

நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு, சமுதாயத்தின் சகிப்பு தன்மைதான் பெரிதும் கைகொடுக்கிறது என்றும் பல வகையில் தொழில், வர்த்தக உறவுகளை பெருக்குகிறது என்றும் அவர் கூறினார்.

ஆனால், சமீப காலமாக இந்தியாவில் அளவுக்கு அதிகமான அரசியல் குறுக்கீடுகளும், தன்னிச்சையான முடிவுகள் திணிக்கப்படுவதும், அதை மக்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் பரவி வருவதாகவும் ரகுராம் ராஜன் வேதனை தெரிவித்தார்.

இது மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது  என்பதுடன், நாட்டின் சமத்துவ நோக்கத்துக்கும் பாதிப்பாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

யாரையும் உடல் ரீதியாக காயப்படுத்துவது, வார்த்தைகளால் வருத்தம் ஏற்பட வைப்பது, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவர்கள் விரும்பாத விஷயங்களை கட்டாயப்படுத்துவது, பொதுவான கருத்துரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பது போன்றவை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தாது என்றார் அவர்.

இதுபோன்ற எந்த நெருக்கடிகளையும், எவருடைய கட்டளைகளையும் ஒருபோதும் இந்த சமுதாயத்தில் அனுமதிக்க கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

பாலியல் வன்முறை என்பது சமுதாயத்தில் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி அறவே ஒழித்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

ஆனால் அதற்காக தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்த நாம் அனுமதிக்க கூடாது. ஒரு கருத்தை திணிப்பதோ, அதை ஏற்க வைப்பதோ கூடாது; சமுதாயத்தில் பல்வேறு கருத்துகள் இருக்கலாம்.  அது தவறில்லை. அதற்காக, எதிர்க்கருத்து சொல்பவர்களை தடுக்கக் கூடாது; தடை போடுவதால் கருத்து சுதந்திரத்தைதான் பறிப்பதாக பொருள். எந்த விவாதத்தையும் தடை செய்வதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. 

இப்படி தடை போடுவதால் சகிப்பு தன்மைதான் குறைகிறது.  தடைபோடும் விஷயத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி சகிப்பு தன்மையைத்தான் குறைக்க வைக்கிறது. வீண் விவாதங்கள் கிளம்பி, விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்பட வழிவகுக்கிறது. எல்லாருக்கும் மதிப்பு, மரியாதை உண்டு. அதை அடுத்தவர் தந்தாக வேண்டும். இல்லாது போனால், அங்கு சச்சரவு ஏற்படுகிறது. தொழில், வர்த்தகத்தில் நாம் இன்னும்  வளர வேண்டும்;  அதற்கான நடவடிக்கைகள் பலன் அளிக்க வேண்டுமானால், இந்தியாவில் சகிப்பு தன்மை சார்ந்த சமுதாயம் மீண்டும் ஏற்பட வேண்டும். 

அதை நாமே மாற்ற கூடாது. கேள்வி கேட்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை தடுக்க கூடாது.   சவால்களை எதிர்கொள்ளும் சமுதாயம் வேண்டும்; அது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. காலம் காலமாக எதிரெதிர் விவாதங்கள் இருக்கத்தான் செய்தது. அப்போதும் சவாலான சமயங்கள் உண்டு. ஆனால் சகிப்பு தன்மை இருந்ததால் இந்தியாவில் சமத்துவம் காணப்பட்டது. எந்த பிரிவினரின் உணர்வுகளும் புண்படக்கூடாது;  அவர்களின் சவாலான கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும். உதாசீனப்படுத்த கூடாது. ஒரு நாடு முன்னேற இதுவும் முக்கியம். ஒரு  குறிப்பிட்ட பிரிவினரை ஒதுக்கி மட்டும் நாடு வளர்ந்து விடாது. 

‘ஹிட்லர் ஆட்சியில் ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின; எல்லா ஊழியர்களும் துல்லியமான நேரத்தில்  அலுவலகத்தில் பணி செய்தனர். 1975ல் இருந்து 77 வரை இந்தியாவில் கூட நெருக்கடி நிலையின் போது இப்படித்தான் எல்லாம் சரியாக இருந்தன. ஆனால், ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்ட அரசு தேவைதான்; அதே சமயம், சட்டமும், ஜனநாயகமும்  கைகோர்ப்பதாக  அமைய வேண்டும். அப்போதுதான் திடமான அரசால் வளர்ச்சியை காண முடியும்’ 

இவ்வாறு ரகுராம் ராஜன் தமது உரையில் குறிப்பிட்டார்.

காங்கிரசின் சடுகுடு....!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் துணிச்சலுடன் சடுகுடு விளையாடும் காங்கிரஸ்....!

இந்திய அரசியல் விளையாட்டில் செமி ஃபைனலாக கருத்தப்படும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில  சட்டப்பேரவைத் தேர்தல்கள், வரும் 7ஆம் தேதி தொடங்கி, 30ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்த தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி, படுவேகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறது. இதேபோன்று, பாஜகவும், எப்படியும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது வழக்கமான பணிகளில் இறங்கியுள்ளது. 

காங்கிரசின் துணிச்சல்:

மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டபேரவைகளுக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை தொடங்கி, இந்த ஐந்து மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் தனது வாக்குறுதிகளை அளித்து வருகிறது. கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த ஐந்து வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக் காட்டும் காங்கிரஸ், அதே பாணியில், ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து வருகிறது. 

அத்துடன், இந்த ஐந்து மாநில தேர்தலை காங்கிரஸ் கட்சி மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை ஒளியை காங்கிரஸ் ஏற்றி வருகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியின் அவலங்கள் மற்றும் மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தற்போது உள்ள அரசுகளால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறது. காங்கிசின் இந்த புதிய தேர்தல் அணுகுமுறை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பயமே வேண்டாம்:


ஐந்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவான நிலை உருவாகியுள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, தனது வழக்கமான தந்திர வேலைகளில் இறங்கியுள்ளது. ஒன்றிய அரசின் சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏவி, காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து அவர்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால், இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை என உறுதியாக கூறியுள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெய்லாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், எத்தகைய பிரச்சினைகள், நெருக்கடிகள் வந்தாலும் அதை சட்ட ரீதியாக கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதன்மூலம் பயம் என்ற வார்த்தையை கண்டு அச்சம் கொள்ளும் நிலையில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்துவிட்டதாகவே தெரிகிறது.

ராகுல் காந்தி அதிரடி:

இந்திய ஜனநாயக தேர்தலில் அரையிறுதிப் போட்டியாக கருத்தப்படும் இந்த ஐந்து மாநில தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கி முழக்கமாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இருந்து வருகிறார்கள். ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவது அரசியல் பார்வையாளர்களை மிகவும் வியப்பு அடையச் செய்துள்ளது. 

குறிப்பாக, ராகுல் காந்தி, தனது பிரச்சாரத்தின்போதும், செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், ஒன்றிய பாஜக அரசின் குறைபாடுகள், மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகியவை குறித்து தொடர்ந்து பேசி, குற்றம்சாட்டி வருகிறார். இதேபோன்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு, வேலையில்லா திண்டாட்டம், நசுங்கி வரும் தொழில் துறை உள்ளிட்ட விவகாரங்களை பேசும் ராகுல் காந்தி, அதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகளை அடக்க ஒன்றிய பாஜக அரசு, பல்வேறு நடவடிக்களை எடுத்து வருவதாகவும் கூறி வருகிறார். இதையெல்லாம் கண்டு, தானும், காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் சிறிதும் பயம் கொள்ள மாட்டார்கள் என மக்கள் மத்தியில் அவர் கூறும்போது, அங்கு எழுச்சி குரல்கள் எழுகின்றன. ராகுல் காந்தியின் இத்தகைய பிரச்சார உத்திகள், தேசிய அளவில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

பாஜக அதிர்ச்சி:

ஐந்து மாநில தேர்தல் பிரச்சார கூட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி அலை உருவாகி வரும் நிலையில், பாஜகவிற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அந்த கட்சி நடத்தும்  கூட்டங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த கூட்டங்களின் வீடியோகளையும், புகைப்படங்களையும் பார்க்கும்போது அதை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. பாஜகவின் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கூட, நாற்காலிகளில் உட்கார ஆட்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சேர்கள் காலியாக இருப்பதை சமூக வலைத்தளங்களில் வீடியோகள் மூலம் சிலர் பதிவு செய்து வருகிறார்கள். 

அத்துடன், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் படி, ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என முடிவுகள் வந்துள்ளன. இதனால் பாஜக மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் மத்தியில் கோஷ்டி பூசல் உருவாகி உள்ளதால், தேர்தலில் அது எதிரொலிக்கும் என்பதால் பாஜக மேலிடம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 5ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், அங்கு இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, பிரச்சாரம் செய்ய செல்லவே இல்லை. மணிப்பூரை ஒட்டியுள்ள மிசோரம் மாநிலத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா கூறியுள்ளதால், பாஜகவினர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காங்கிரசின் சடுகுடு:


இத்தகையை அரசியல் சூழ்நிலையில்தான், காங்கிரஸ் கட்சி மிகவும் துணிச்சலுடன் தனது சடுகுடு விளையாட்டை ஆடி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களின் இந்த துணிச்சலான விளையாட்டு, அக்கட்சியின் தொண்டர்களை மேலும் உற்சாகம் அடையச் செய்துள்ளது. தொடர் தோல்விகளால் சோர்ந்து கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு புதிய நம்பிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய நம்பிக்கையை ஊட்டி, பயம் இல்லாமல் துணிச்சலுடன் இறங்கி விளையாட வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த துணிச்சல் ஐந்து மாநில தேர்தல்களில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என கூறலாம். 

முஸ்லிம்களின் நிலை:

ஒன்றிய பாஜக ஆட்சியில் இந்திய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த காலங்களில் அரசியல் களத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத காரணத்தால், முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிந்து போனதால், அதன்மூலம், மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர். ஆனால், கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மாநில முஸ்லிம்கள் சரியான அரசியல் முடிவு எடுத்து ஒட்டுமொத்தமாக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார்கள். இதனால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறாமல், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே விழுந்தது. கர்நாடக முஸ்லிம்களின் இந்த சரியான அணுகுமுறையால், தற்போது அங்குள்ள முஸ்லிம்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களுக்கு காங்கிரஸ் அரசு வந்தபிறகு, தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோன்று, பல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. 

கர்நாடகா மாநில முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் , தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில முஸ்லிம்களையும் சற்று யோசிக்க செய்துள்ளது என்றே கூறலாம். எனவே, இந்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த ஐந்து மாநில முஸ்லிம்களும் சரியான அரசியல் முடிவு எடுத்து, தங்களது வாக்குகள் சிதறி விடாமல் இருக்க ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என உறுதியாக நம்பலாம். ஏக இறைவன் விரும்பினால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் ஒரு புதிய அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஒரு கதை....!

டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சொன்ன ஒரு பழைய கதை.....!

நீங்களும் கொஞ்சம் கேளுங்கள்...!!



ஆதரவு.....!

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்காக ஆதரவாகவும், சென்னையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.10.2023) நடந்த போராட்டம்....!



இஸ்லாமிய மருத்துவ உலகம்....!

 இஸ்லாமிய மருத்துவ உலகம்....!


பரந்து விரிந்த இந்த பூலோகத்தில் கிட்டதட்ட மொத்தம் 195 நாடுகள் இருந்து வருகின்றன. இவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் நாடுகளின் எண்ணிக்கை சுமார்  57 ஆக உள்ளது. இந்த முஸ்லிம் நாடுகளில் ஒருசில நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் மருத்துவக் கட்டமைப்புகள் மிகப்பெரிய அளவுக்கு போற்றும் வகையில் இல்லை என்றே கூறலாம். 

இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால், அங்குள்ள மக்கள் இந்தியாவிற்கு வந்து மருத்துவ சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, வங்கதேசத்தில் இருந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் அதுவும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் சிறந்த மருத்துவர்கள் அதிகளவில் இருந்து வருகிறார்கள் என்பதாகும். மிக குறைந்த செலவில், தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதால், பல நாடுகளில் இருந்து மருத்துவம் பார்ப்பதற்காகவே, இந்தியாவிற்கு அதிகளவு நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இந்திய மருத்துவர்கள் கனிவுடன் கூடிய சிகிச்சை அளித்து, அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை ஊட்டி, ஒளி ஏற்றி வருகின்றனர். 

மருத்துவப் பணி:

மருத்துவம் என்பது ஒரு தொழில் என கூற முடியாது. அப்படி கூறவும் கூடாது.  அது ஒரு மகத்தான மக்கள் சேவையாகும். மனித குலத்திற்கு சுயநலம் பார்க்காமல் மருத்துவச் சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை, நோயாளிகள் எப்போதும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு, அவர்களுக்காக ஏக இறைவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருப்பார்கள். 

ஆனால், தற்போதைய நவீன யுகத்தில், மருத்துவம் சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படிப்பில் சேரும் ஒரு மாணவர், பின்னர், அந்த பணத்தை திருப்பி எடுப்பதற்காக, தனது மருத்துவ அறிவை விற்பனை செய்கிறார்.  இதனால், மருத்துவர்கள் மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருகிறது எனலாம். அதேநேரத்தில், பணத்தை குறிக்கோளாக கொள்ளாமல், சேவையை மட்டும் அடிப்படையாக கொண்டு, பரந்துவிரிந்து தூய மனதுடன் மருத்துவச் சேவையை ஆற்றும் மருத்துவர்கள் உலகில் இருந்துகொண்டே இருக்கிறார்கள். இதனால் மருத்துவ உலகின் மீது இன்னும் மக்களுக்கு நம்பிக்கை குறையவில்லை என உறுதியாக கூறலாம். 

இஸ்லாமிய மருத்துவம்: 


இஸ்லாமிய மருத்துவ பாரம்பரியம், தற்போதைய நவீன மேற்கத்திய மருத்துவம் உட்பட எதிர்கால மருத்துவத்திற்கான அடித்தளத்தை அமைப்பதோடு, மனிதர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மருத்துவ பாரம்பரியம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இன்று மருத்துவ நடைமுறைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதோடு ஐரோப்பிய மருத்துவத்திற்கும் பங்களித்து வருகிறது. 

இஸ்லாமிய சமூகம் எந்த மருத்துவ அறிவைப் பெற்றது என்பது பற்றிய தகவல்களை மிகச் சில ஆதாரங்களே வழங்குகின்றன. ஈராக்கில் உள்ள குஃபாவைச் சேர்ந்த அப்துல்மாலிக் பென் அப்கர் அல்-கினானி என்ற மருத்துவர், உமர் இபின் அப்துல் அஜீஸின் நீதிமன்றத்தில் சேர்வதற்கு முன்பு அலெக்ஸாண்டிரியாவின் மருத்துவப் பள்ளியில் பணிபுரிந்ததாகக் கருதப்படுகிறது . உமர் மருத்துவப் பள்ளியை அலெக்ஸாண்டிரியாவிலிருந்து அந்தியோக்கியாவுக்கு மாற்றினார் . 

ஆரம்பகால இஸ்லாமிய மருத்துவம் முக்கியமாக அலெக்ஸாண்டிரியா அகாடமியில் இருந்து கிரேக்க மூலங்களிலிருந்து நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது. அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தற்போது புரிந்து கொள்ளப்படுகிறது; பாரசீக மருத்துவ பாரம்பரியத்தின் செல்வாக்கு மெட்டீரியா மெடிகாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது, இருப்பினும் பாரசீக மருத்துவர்கள் கிரேக்க மூலங்களையும் நன்கு அறிந்திருந்தனர். 

மருத்துவத்திற்கான அணுகுமுறை:

இடைக்கால இஸ்லாமிய உலகில் மருத்துவம் பெரும்பாலும் தோட்டக்கலையுடன் நேரடியாக தொடர்புடையது. பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் தொடர்புடையவை. இருப்பினும் அவை நவீன மருத்துவம் கூறுவதை விட வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.  நகைச்சுவைக் கோட்பாட்டின் பயன்பாடு மருத்துவத்தின் பெரும்பகுதியாகும். இது நோயாளிகளுக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை வடிவமைக்கிறது. இந்த வகையான மருந்து பெரும்பாலும் முழுமையானது. இத்தகைய மருத்துவ முறைகளை முஸ்லிம் மருத்துவ உலகம் கடைப்பிடித்து நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து வந்தது. 

மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் :

இஸ்லாமிய பொற்காலத்தின் சிறந்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அதிகாரம் பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தின் கலை மற்றும் அறிவியலை பாதித்துள்ளது. மருத்துவ நெறிமுறைகள் பற்றிய அவர்களின் கருத்துக்கள் இன்றும் விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, உலகின் இஸ்லாமிய பகுதிகளில். மருத்துவர்களின் நடத்தை மற்றும் மருத்துவர்-நோயாளி உறவு பற்றிய அவர்களின் கருத்துக்கள் இன்றைய மருத்துவர்களுக்கு சாத்தியமான முன்மாதிரிகளாக விவாதிக்கப்படுகின்றன.

இமாம் அலி இபின் மூசா அல்-ரிடா, அலி இபின் சாஹ்ல் ரப்பான் அல்-தபரி , முஹம்மது பின் சயீத் அல்-தமிமி, அலி இபின் அல்-அப்பாஸ் அல்-மஜூசி, முஹம்மது இபின் ஜகாரியா அல்-ராஸி போன்ற இஸ்லாமிய மருத்துவர்கள் மருத்துவ உலகத்திற்கு ஆற்றிய சேவையை இன்னும் மறக்க முடியாது. பல நோய்களுக்கு இஸ்லாமிய மருத்துவர்கள் அளித்த இயற்கையான சிகிச்சை முறைகள், பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் குணப்படுத்தி நோயாளிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றி அமைத்தது. எனவே, இஸ்லாமிய மருத்துவ உலகம் மீது மேற்கிந்திய நாட்டு மக்களுக்கு எப்போதும் ஓர் நம்பிக்கை இருந்தே வருகிறது. 

இயற்கை மருத்துவம்:


உலகம் முழுவதும் மருத்துவ உலகில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் கூட, இயற்கை மருத்துவம் மீது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை இருந்து வருகிறது. உணவே மருந்து என்ற கோட்பாடு, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை”  என பொன்மொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நாவல் பழம், பேரீச்சம் பழம்,  மாதுளை ஆகியவை கூட, இயற்கை மருத்துவத்தில் மிக முக்கியவையாக இருந்து வருகின்றன. 

“ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.

இதேபோன்று, பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். 

வாய்வுத் தொல்லையால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

பேரிக்காய், கருஞ்சீரகம், கோதுமை, உப்பு, இறைச்சி, முட்டை, தேன், பால், தண்ணீர், . பூண்டு, அத்திப்பழம், முள்ளங்கி, மாதுளம்பழம், சுரைக்காய், இஞ்சி, சுக்கு என இயற்கை உணவுக்கு இஸ்லாமிய மருத்துவ உலகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

யுனானி மருத்துவம்:

கிரேக்க நாட்டில் இருந்தும் பின்னர் அரேபியாவில் இருந்தும், இந்தியாவிற்குள் வந்ததாக கூறப்படும் யுனானி மருத்துவம், தற்போது இந்திய மக்களின் ஒரு மருத்துவமாகவே மாறிவிட்டது. தீராத நோய்களுக்கு, யுனானி மருத்துவத்தில் நல்ல பலன் கிடைப்பதை அறிந்து பலர் அனுபவத்தில் நன்கு உணர்ந்து பயன் அடைந்துள்ளனர். இதேபோன்று, சித்தா, ஆயுர்வேதா ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளும், மருத்துவ உலகில் பிரபலமான மருத்துவ முறைகளாக இருந்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்து செலவில் பயன் அளித்து வருகின்றன. 

இந்திய முஸ்லிம்களின் மருத்துவ சேவை:

இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மருத்துவத்துறையில் முஸ்லிம்கள் நுழைந்து நல்ல சேவை ஆற்றி வருகிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம்கள் சார்பில் சிறந்த கட்டமைப்புகளுடன் கூடிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், முஸ்லிம் சமுதாயத்தைவிட பிற சமுதாய மக்கள் தான் அதிகம் பயன் அடைந்து வருகிறார்கள். அதற்கு காரணம், மருத்துவத்தை ஒரு சேவையாக இஸ்லாமிய சமுதாயம் கருதுவதுதான். 

தமிழகத்தில் ஒருசில ஊர்களில் மட்டுமே, இஸ்லாமியர்களால், மருத்துவமனை நடத்தப்பட்டு வருகின்றன. அவை சிறிய மருத்துவமனையாக மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சமுதாயத்தில் அக்கறை கொண்ட பலர் தொடர்ந்து முயற்சிகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். 

ஸாலிஹீன் மருத்துவமனை:

இத்தகைய சூழ்நிலையில், அறம் சார்ந்த கொள்கை முடிவுடன் 111 நல்லுள்ளம் கொண்ட அறங்காவலர்கள் ஒருங்கிணைந்து ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையை தொடங்கி, அந்த அறக்கட்டளையின் மூலம், தமிழகத்தின் வேப்பூர்-சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மருத்துவக் கல்லுரியை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் நவம்பர் 4ஆம் தேதி ஸாலிஹீன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுகிறது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் சார்பில் மருத்துவக் கல்லூரி இல்லை என்ற ஏக்கம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என கூறலாம். ஸாலிஹீன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல மருத்துவச் சேவையை நிச்சயம் வழங்கும் என உறுதியாக நம்பலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, October 30, 2023

உஷார்.....!

ஊடகங்களில் உலாவும் நாதாரிகள்.....!  உஷார்.....!!

என்னது.....

தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது...?

நீங்கள் கேள்வி எழுப்பலாம்....

தமிழக ஊடகங்களில் (ஒருசில) அண்மை காலமாக நடைபெறும் சில நிகழ்வுகள்....

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்....

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்....

பிறகு நீங்களே தீர்மானித்து விடுங்கள்....

நான் சொல்வது உண்மையா, இல்லையா என்பதை.... 

நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்த நேரம் அது...

அந்த நிறுவனத்தில் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை...

எனவே, வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர முயற்சி செய்துக் கொண்டிருந்தேன்...

பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன்...

இப்படிப்பட்ட நேரத்தில்தான், நல்ல நிறுவனம் ஒன்றில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, எனக்கு அறிமுகமான நண்பர் (அவரை அப்படி அழைக்கக்கூடாது) ஒருவர் என்னிடம் அடிக்கடி செல்பேசியில் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசுவார்.

அந்த நிறுவனம் குறித்து தப்பு தப்பாக விவரங்களை கூறுவார்....

அங்கு பணிபுரியும் ஊழியர்களின் திறமைகள் குறித்து குறைத்து மதிப்பிட்டு நிலைமை சரியில்லை என்பார். 

நீங்கள் வேறு ஒரு நல்ல நிறுவனத்திற்கு முயற்சி செய்யுங்கள் என தினமும் ஆலோசனைகள் தருவார்....

நானும் அந்த நபர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்ததால், என்னுடைய நலனை கருத்தில் கொண்டு சொல்கிறார் என்று நம்பினேன்.

இந்த நிலையில்தான், நான் மேற்குறிப்பிட்டபடி, அந்த நிறுவனத்தில் இருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது...

நானும், சென்றுதான் பார்ப்போமே என்று நினைத்து அங்கு சென்றேன்...

அந்த தொலைக்காட்சியில்,  அப்போது தலைமை செய்தி ஆசிரியராக இருந்த நல்ல மனிதரை சந்தித்து பேசினேன்...

அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி பணியில் சேரும்படி அறிவுறுத்தினார்...

நானும், சேர்ந்துவிடலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பினேன்...

திருவல்லிகேணியில் இருந்த என்னுடைய அறைக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த நண்பரின் செல்பேசி என்னை அழைத்தது...

எதிர்முனையில் பேசி அந்த நபர், சார் என்ன சொன்னார்கள்....அந்த சம்பளத்திற்கு நீங்கள் ஓ.கே. சொல்லாதீர்கள்...அதிக சம்பளம் கேளுங்கள்...இங்கு நிலைமை சரியில்லை...

இப்படி சொன்னபோது, உண்மைதான் என நானும் நினைத்தேன்...அந்த நபரின் ஆலோசனையை ஏற்று, அந்த நிறுவனத்தில் சேரவில்லை...

பிறகு, நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சம்பள பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

மூன்று, நான்கு மாதங்கள் என சம்பளம் கொடுக்கப்படவில்லை... 

மீண்டும், முதலில் சென்று வந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் முயற்சி செய்யலாம் என நினைத்து, மற்றொரு நண்பர் மூலம் முயற்சி செய்தேன். 

அவரும், தலைமை செய்தி ஆசிரியரிடம் பேசி என்னை போக சொன்னார்...

நானும் சென்று வந்தேன்.... நான் வந்து சென்ற விஷயம் கேள்விப்பட்டதும், அந்த நபர், மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, சார் நீங்கள் இங்கே வரவே வேண்டாம் சார். என்றார். சன்னுக்கு, கலைஞருக்கு முயற்சி செய்யுங்கள் என்றார்..

அப்போதுதான், அந்த நபர், நான் அங்கு வருவதை சிறிதும் விரும்பவில்லை என்பது என்னுடைய அறிவுக்கு எட்டியது...

என்ன கோல்மால் செய்தாரோ, எனக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

நல்ல வாய்ப்பு....கைநிறைய சம்பளம்...சிறப்பான இடத்தில் அமர வேண்டிய நிலை...

இதை அனைத்தையும் அந்த நண்பர் கெடுத்துவிட்டார்...

அப்போது எனக்கு,  "கூடா நட்பு கேடாய் முடியும்.."  என்ற பழமொழிதான் ஞாபத்திற்கு வந்தது. 

இப்போது சொல்லுங்கள் இவரை நான் எப்படி அழைப்பது.....

இதேபோன்று, ஊடகத்துறையில் பணிபுரியும் சிலர், தவறான வழிகளில் பலரை மிரட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. 

பாதிக்கப்பட்ட சிலர், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுதும் கடிதங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன...

இப்படிப்பட்டவர்களை எப்படி அழைப்பது...

ஒருசில தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணிந்து வரும் உடை, இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவ்ற்றிற்கு வேட்டு வைக்கும் வகையில் இருநது வருகிறது...

இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்துவதில்லை...அதனால், அங்கு ஒழுக்க சீர்கேடுகள் அரங்கேற்றப்படுகின்றன....

ஒருசிலர், பெண் ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை....

இதேபோன்று,  அடிக்கடி, ஒவ்வொரு நிறுவனத்திற்கு தாவும் சிலர், அங்கு யாரையும் வாழ விடாமல் மற்றவர்களையும் வெளியேற்றிவிட்ட ஆனந்தம் கொள்கிறார்கள்...இரண்டு மாதம், மூன்று மாதம் என பணிபுரிந்து விட்டு, காசு பார்த்து விட்டு, பெரிய ஜாம்பவான்கள் போன்று வேஷமிடுகிறார்கள்...இது அண்மை காலமாக ஊடகத்துறையில் நடக்கும் கூத்துகள்...

இவையெல்லாம், ஊடகத்துறையில் மட்டுமல்ல,  எல்லா துறைகளிலும் நடக்கிறது எனலாம்...

ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறை, மேற்குறிப்பிட்டவர்களால், சமூகத்தில் தற்போது மதிப்பு குறைந்து வருகிறது...

பத்திரிகை துறை குறித்து முகநூலில் அன்பர் ஒருவர், எழுதும்போது, பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகளால், அவர்கள் மீது இருந்த மதிப்பு, மரியாதை குறைந்து விட்டது என குறிப்பிட்டார்...

உண்மைதான்... 

சமூகத்தில் பத்திரிகையாளர்களை மதிக்கும் போக்கு குறைந்து வருகிறது...

எல்லாவற்றிற்கும் காரணம் தலைப்பில் நான் குறிப்பிட்ட நபர்களால்தான்....

சரி, ஊடகத்துறையில் நல்ல பண்பாளர்கள் இல்லையா.... என நீங்கள் கேட்கலாம்....

நிறைய பேர் இருக்கிறார்கள்...அந்த நல்ல பண்பாளர்கள்..அமைதியாக பணிபுரிந்து பத்திரிகை துறைக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் யார்....?

யார் நீங்கள்.....!

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.

நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.

அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, *ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!

உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!

தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!

நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும். 

ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!

உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!

- வாட்ஸ் அப்பில் படித்தது....!

சிந்தனைகள்....!

Don't trust anyone, life is full of fake people.

=======================

முயற்சியை எவன் ஒருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவனது திறமை அவனிடம் இருந்து போய்விடுகிறது.

=========================

Winners never quit and quitters never win.

======================

தோல்வி உங்களை தூரத்தினால்,நீங்கள் வெற்றியை நோக்கி ஓடுங்கள்.

======================

 Risk is better than regret.

====================

Huge success starts by simple ideas.

=====================

 Your past doesn't make you. But if you are a learner, your past does prepare you.

=====================

 Never see what has been done, only see what remains to be done.

===================

 செய்ய நினைப்பதை இன்றே செய்யத் தொடங்குங்கள். ஏனென்றால், இன்று உங்களுடைய யோசனை நாளை வேறு ஒருவருக்கு சொந்தமாக நேரிடலாம்.

===================

The happiness of your life depends upon the quality of your thoughts.

========================

 " Friend.....

  is not history

  to forget,

  No maths

  to calculate,

  Not a language

  to learn,

  its only the

  chemistry

  that react

  between

  two Hearts...."

=================

"Relationships

 never die

 naturally.

 They are 

 always 

 murdered,

 either by ego,

 or

 lack of communications..."

=================

 Happiness is the only thing that multiplies when you share it.

================

 The best is yet to come, be patient.

===================

 உழைப்பு உண்மையாக இருந்தால், உயர்வு தானே தேடி வரும்.

===================

 Stay strong every Strom will eventually pass.

======================

பாலஸ்தீனம்....!

பாலஸ்தீன மக்களுக்காக சென்னையில் மாபெரும் போராட்டம்....!



சும்மா....!

மனமே கொஞ்சம் ரிலாக்ஸ்.....!




தயங்கி....தயங்கி.....!

தயக்கம் ஏன்...?

தயங்கி தயங்கி ஒதுங்கினால் நிச்சயம் நீங்கள் ஓரம் கட்டப்படுவீர்கள்.

காலத்திற்கு ஏற்ப வேஷம் போட மறுத்தால் உங்களால் ஒரு அடி கூட முன்னேற முடியாது.

எதுவுமே தெரியவில்லை என்றாலும் எல்லாமே என் கை விரல் நுனியில் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் வாழ்க்கையில் உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கவே கிடைக்காது.

கூச்ச சுபாவம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தோல்விதான்.

பொய் பித்தலாட்டம் இவையெல்லாம் தற்கால முன்னேற்றத்திற்கு அவசியம்.

கை தூக்கி விடுபவர்களை கொஞ்சமும் தயங்காமல் கல் மனதுடன் வீழ்த்தும் குணம் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் நீங்கள் ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியாது.

சமீபத்திய நாட்டு நடப்புகள் மூலம் கிடைத்த படிப்பினை இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

தொழுகை.....!

தொழுகையின் முக்கியத்துவம் குறித்து மவுலானாவின் அற்புதமான உரை....!



ராகுல் காந்தி உறுதி....!

சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதி....!



Sunday, October 29, 2023

வாழ்க்கையில் சாதிக்கலாம்….!

 

மன மற்றும் உடல் ஆரோக்கியத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்….!


மனிதனுடைய வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றி, தோல்விக்கும் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் முக்கியமாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் சாதித்து வெற்றிகளை குவித்த சாதனையாளர்களின் பட்டியலை எடுத்து ஆராய்ந்தால், கடினமான உழைப்புக்கு மத்தியிலும், அவர்கள் மனம் மற்றும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டு, நாள்தோறும் பணியாற்றியதை அறிந்துகொள்ளலாம். வெற்றிக்கு கடின உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு நொடியும் மனம் அமைதியாக இருக்க வேண்டும். அத்துடன், உடலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட வெற்றி இலக்கை நோக்கி நாம் சரியாக பயணிக்க முடியும். இல்லையெனில், வெற்றிக்கனி எளிதாக கிடைக்காமல் போகும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தேர்வுகளை எழுதும்போது, எப்போதும் ஒருவித பதற்றத்துடன் இருப்பதால், அவர்களின் மனம் சரியான திசையில் செல்லாமல், தேர்வு எழுதுவதில் குளறுபடி செய்துவிடுகிறது. இதனால், நல்ல திறமையான மாணவர்கள் கூட, சில நேரங்களில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சினைக்கு சரியான முறையில் அணுகி தீர்வு காண்டால், நிச்சயம் சாதிக்கலாம். அதுதொடர்பான சில குறிப்புகளை இப்போது நாம் காணலாம்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்:

தேர்வு நாட்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பொதுவானது. இருப்பினும், இதிலிருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மன உளைச்சல் இருந்தால் சிறப்பாக செயல்பட முடியாது. தேர்வை சரியாக எழுத முடியாது.  கல்வியாண்டு அல்லது தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகத் தொடங்கும் மாணவர்கள், மன அழுத்தத்தால் ஒருவித சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான எளிதான வழி என்னவென்றால், எதிர்கால முன்னேற்றத்திற்கான தயாரிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நீர்ச்சத்து அவசியம்:


மாணவர்கள் குறித்த பொதுவான புகார்  என்னவென்றால், அவர்கள் சரியான அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை என்பதாகும். ஆரோக்கியமான வாழ்விற்கு ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாக இருந்து வருகிறது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் மன மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி மூளைக்கு சக்தி அளிக்கும் செல்களும் பலவீனமடையத் தொடங்குவதால், மாணவர்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நீர்ச்சத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மாணவர்கள் மட்டுமல்ல, சாதிக்க நினைக்கும் அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை அவசியம்:

தேர்வு நேரங்களில் மாணவர்கள் ஒருபோதும் பீதி அடையக் கூடாது. தேர்வு அறையில் அமர்ந்து கொண்டு கேள்வித்தாளை பார்த்ததும் அதில் வந்துள்ள கேள்வியை கண்டு பயம் கொண்டு, பீதி அடைய வேண்டாம். நீங்கள் நன்றாகத் தயார் செய்திருந்தால் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. நீங்கள் எளிதாகத் தீர்க்கக்கூடிய கேள்வியாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறைந்தப்பட்சம் பல முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து நீங்கள் நன்றாக மதிப்பெண் பெறலாம் என்பதில் உறுதியாக இருங்கள். பெரும்பாலான மாணவர்கள் கேள்வித்தாளைப் பற்றி நினைத்தாலே பதற்றமடைகிறார்கள். அந்த பதற்றத்தை கைவிட்டு, தன்னம்பிக்கையுடன் எதையும் அணுக முயற்சி செய்யுங்கள்.

ஆற்றலின் சரியான பயன்பாடு:


தேர்வு நாட்களில் தங்களின் ஆற்றலை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரிவதில்லை. வீரர்கள் களத்தில் இருக்கவும், விடாமுயற்சியுடன் செயல்படவும், சோர்வடையாமல் இருக்கவும் ஆற்றலைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். கடினமான விடைகளைப் படிக்கும் போது, ​​மாணவர்கள், ஒருநாளின் எந்தப் பகுதியில் அதிக ஆற்றலுடன் உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்து தங்கள் ஆற்றலை ஒதுக்க வேண்டும்.

படிப்புக்கு முந்தைய உணவுமுறை:

தேர்வு நாட்களில் பசி எடுக்கும் போது எதையும் சாப்பிடுவது நல்லதல்ல. படிப்பதற்கு முன், நீங்கள் சோம்பலை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடக்கூடாது. தேர்வு நாட்களில் துரித உணவு, குளிர் பானங்கள், அதிகப்படியான இனிப்புகள், வெளி உணவுகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். படிப்பதற்கு முன் சில பழங்களை சாப்பிடுங்கள் அல்லது பழச்சாறு குடிக்கவும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் காலையைத் தொடங்குங்கள், நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

கற்பித்தலின்  நுட்பங்கள்:


ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு கற்றல் நுட்பம் உள்ளது. வகுப்பில் முதலிடம் பெறுபவர் முயற்சிக்கும் படிப்பு நுட்பம், மற்ற மாணவர்களுக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. சில மாணவர்கள் இரவில் வெகுநேரம் விழித்திருந்து நன்றாகப் படிக்கிறார்கள், பலர் அதிகாலையில் படிப்பதை எளிதாக்குகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் தனது சொந்த பலம் மற்றும் திறன்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், எனவே உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் நுட்பத்தைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். .

நேரத்தின் சரியான பயன்பாடு:

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நாட்களில், நேரம் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். காலை முதல் இரவு வரை மிகவும் சரியான முறையில் நேரத்தை பயன்படுத்த வேண்டும். எந்த நேரத்தில் என்ன செய்வீர்கள், கடினமான கேள்விகளுக்கு எவ்வளவு நேரம் கொடுப்பீர்கள் மற்றும் எளிதான கேள்விகளுக்கு எவ்வளவு நேரம் கொடுப்பீர்கள் என்பதில் மாணவர்கள் கவனம் செலுத்து வேண்டும். அத்துடன் எப்போது சாப்பிடுவீர்கள், எப்போது ஓய்வெடுப்பீர்கள்? பொழுதுபோக்கிற்காக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படும் ஆகியவற்றிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கொஞ்சம் விலகி இருங்கள்:

தேர்வு நாட்களில் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்ற அனைத்து தொல்லைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.. இந்த விஷயங்களை சில நேரம் தூய ஆய்வுக்கு பயன்படுத்தினால் பரவாயில்லை, இல்லையெனில் அவை மனதை சிதறடிக்கும், குறிப்பாக சமூக ஊடகங்களால் தேர்வில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாது.  தேர்வின் முதல் 15 நாட்களுக்கு ஸ்மார்ட்போனிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த வழியில் நீங்கள் சரியான நேர அட்டவணையை உருவாக்கி செயல்பட்டால், உங்களுக்கு மன சோர்வு ஏற்படாது.

நேர்மறை எண்ணங்கள்:

தேர்வு நாட்களில் மாணவர்களின் மனம் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் இடமாக மாறுகிறது என்பது  நிபுணர்களின் கருத்தாக இருந்து வருகிறது.  இருப்பினும், மாணவர்களின் மனதை எவ்வாறு நேர்மறை எண்ணங்களால் நிரப்புவது என்பது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு எதிர்மறையான எண்ணங்களையும் தவிர்த்து மனதில் நேர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். தேர்வுக்கு நன்றாக தயார் செய்கிறீர்கள் என்று நினைத்தால், நம்பிக்கையுடன், தேர்வை எதிர்கொள்ள முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்:


படிக்கும் முறை மிகவும் எளிமையானது மற்றும் முக்கியமானது. படிப்பை முடித்த பிறகு நீங்களே உங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஐந்து அத்தியாயங்கள் வரவிருந்தால், பாடத்தின் பின்பகுதியில் வினாக்களைக் குறிக்கவும், பின்னர் பதில்களை எழுதவும். நீங்கள் எத்தனை சரியான பதில்களை எழுதியுள்ளீர்கள், எத்தனை தவறான பதில்களை எழுதியுள்ளீர்கள் என்பதை சரிபார்க்கவும். இந்த வழியில் நீங்கள் படித்தால், உங்கள் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும், மேலும் உங்கள் எழுத்து திறனின் வேகமும் அதிகரிக்கும்.

மனதில் கொள்ள வேண்டியவை:

நாம் ஆரம்பத்தில் சொன்னப்படி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானல், மனமும், உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன ஆரோக்கியமாக இருந்தால், உடலும் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். நம்முடைய இலட்சியங்களை, நம்முடைய இலக்குகளை எட்ட வேண்டுமானால், அதற்கு தகுந்த உழைப்பு மட்டும் போதாது. உழைப்புடன் கூடிய மன மற்றும் உடல் ஆரோக்கியம் எப்போதும் தேவை.இதில் சிறப்பு கவனம் செலுத்தினால், நிச்சயம் வாழ்க்கையில் நாம் உயரங்களை தொட முடியும்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

திறமை....!

 வலிமையுடன் கூடிய துணிச்சலான திறமையின் சாதனை இது....!



லைக்....லைக்.....!

லைக்...லைக்....லைக்...லைக்கோ லைக்....!

நான் காசி தியேட்டரில் நயன்தாரா திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

லைக்.

நான் தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்தேன்.

லைக்.

திருவல்லிக்கேணியில் லேசான தூறல்.

லைக்.

நான் அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறேன்.

லைக்.

நான் ஓட்டலில் மசால் வடை சாப்பிட்டேன்.

லைக்.

ஹி.....ஹி....!

அதற்கும் ஒரு லைக்

இப்படி முகநூலில் சிலர்  குப்பையாக  கிறுக்குத்தனமாக எதை எழுதினாலும் லைக் போட ஒரு கூட்டம் கியூ கட்டி நிற்கிறது.

இதன்மூலம் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

நாட்டில் நிறைய பேர் இன்னும் வேலை வெட்டி இல்லாமல் என்ன செய்வதே என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

முகநூல் பலரால் இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

அதன் முக்கியத்துவம் பலருக்கு இன்னும் விளங்கவில்லை.

இது மட்டும் உறுதி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

சமூக ஊடகங்களின் சக்தி.....!

சமூக ஊடகங்களின் சக்தியும் வலிமையும்....!

அறிவியல் வளர்ச்சியால், உலகில் மிக வேகமான மாற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனித வாழ்க்கையை மிக எளிமையானதாக மாற்றிவிட்டன. அதேநேரத்தில், மனித வாழ்க்கை ஒரு எந்திரமயமான வாழ்க்கையாக மெல்ல மெல்ல மாறிவிட்டது.  வேகமான உலகில், மனிதனுக்கு நிம்மதி கிடைக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றே பதில் வருகிறது. 

ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கையை வாழ விரும்பும் மனிதன், தன்னுடைய பழக்க வழக்கங்களால், இன்று மகிழ்ச்சியை இழந்து தவிக்கிறான். பணம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தும் சிலருக்கு வாழ்க்கையில் உ்ணமையான ஆனந்தம் கிடைப்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம், அவனது மனமே என்று உறுதியாக கூறலாம். ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய மனதை, அலைபாயும் மனமாக மாற்றி அமைத்துக் கொண்டதே, இதற்கு முக்கிய காரணமாகும். 

வாசிப்பு பழக்கம்:


விஞ்ஞான மாற்றங்களால், மக்கள் மத்தியில் கணினி, செல்பேசி போன்ற புதிய கண்டுபிடிப்புகள் நுழைந்தபிறகு, அவனது வாழ்க்கையை இன்று மிகவும் மாறிவிட்டது. வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், நல்ல நல்ல புத்தகங்களை தேடி தேடி வாசித்த மக்கள் இன்று, கணினி, செல்பேசிக்கு அடிமையாக கிடக்கிறார்கள். நாள்தோறும், 24 மணி நேரமும், செல்பேசியை பிடித்துக் கொண்டே அலைகிறார்கள். இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. 

ஒருசில அறிவுஜீவிகள் மட்டுமே, நல்ல நூல்களை தேடிச் செல்கிறார்கள். ஒரு காலத்தில் நூலகங்களில் அலைமோதிய கூட்டம், இப்போது இல்லை என்றே கூறலாம். மிகப்பெரிய நூலகங்களில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், அதை தூசித் தட்டி வாசிக்க ஆட்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 

மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டதால், பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நூல் விற்பனை நிலையங்கள் தற்போது மூடப்பட்டு விட்டன. இதேபோன்று, நாளிதழ், வார இதழ் உள்ளிட்ட அனைத்து வகையான இதழ்களின் விற்பனையும் கிடுகிடுவென சரிந்துவிட்டது. இதனால், இளம் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சிந்திக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. 

சமூக ஊடகங்களின் சக்தி:


உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் புத்தங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து நாளிதழ்களின் நிறுவனங்கள் கூட, சமூக ஊடகங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன. உலகில் நடக்கும் அனைத்து வகையான சம்பவங்களின் தகவல்கள், ஒருசில நொடிகளில் டுவிட்டர், வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஊடகங்களில் கிடைத்து விடுகின்றன. இதனால், தகவல்களை பெற நாளிதழ், வார இதழ் ஆகியவைகளுக்காக பல மணி நேரம், பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய சூழல் தற்போது மக்களுக்கு இல்லை. 

அதேநேரத்தில், சமூக ஊடகங்களில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் உண்மை என கூற முடியாது நிலை இருந்து வருகிறது. அதன் காரணமாக சிலர், பொய்யான தகவல்களை பரப்பி மக்களை குழப்பி வருவதும் அதிகரித்துள்ளது. 

சத்யபால் மாலிக் கருத்து:

அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிகை டெல்லியில் சந்தித்து, கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பேசிய சத்யபால் மாலிக், சமூக ஊடகங்களின் சக்தி குறித்து பல வியப்பு அளிக்கும் கருத்துகளை தெரிவித்தார்.  தற்போது தொலைக்காட்சிகளை பார்ப்பதும், அங்கு ஒளிபரப்பாகும் செய்திகளை, நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவை காண்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது என கூறிய மாலிக், சமூக ஊடகங்களின் பக்கம் மக்களின் பார்வை தற்போது திரும்பி விட்டதாக தெரிவித்தார். 

எனவே, பாசிச அமைப்புகள் மக்களை குழப்ப போலியான கணக்குகளை தொடங்கி தங்களது திட்டங்களை அரங்கேற்றி வருவதாக அவர் கூறினார். இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் சத்யபால் மாலிக் அறிவுறுத்தினார். 

அரசியல் மாற்றம்:


தற்போது நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில், மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அது சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே நிகழும் என்றும் சத்யபால் மாலிக் உறுதிப்பட கூறியுள்ளார். நாட்டு மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வர சமூக ஊடகங்கள் காரணமாக இருந்து வருவதாகவும், மிக விரைவில் தகவல்கள் மக்களுக்கு கிடைத்து விடுவதால், மிகவும் வலிமையாக இருக்கும் அனைத்து வகையான சமூக ஊடகங்களையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள சிறிதும் தயங்கக் கூடாது என்றும் முன்னாள் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

சத்யபால் மாலிகின் இந்த கருத்து ஒப்புக் கொண்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியும் சமூக ஊடகங்களின் மீது தனது பார்வையை செலுத்து தொடங்கியுள்ளதாக கூறினார். அதேநேரத்தில் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நசுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 

இஸ்லாமிய சமுதாயம்:


உலகம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், முஸ்லிம் சமுதாயம் இன்னும் நீண்ட உறக்கத்தில் இருந்து வருகிறது. சமூக ஊடகங்களின் பக்கம் தன்னுடைய கவனத்தை சரியான முறையில் திருப்பி முஸ்லிம் சமுதாயம் அணுகவில்லை. இஸ்லாமிய நெறிமுறைகள், வாழ்க்கை நெறிகள், இஸ்லாமிய சகோதரத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் அனைத்துப் பிரிவு மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் கொண்டு சேர்க்கவில்லை. சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தவில்லை. 

இதனால், இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் தப்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு, ஒருசில இஸ்லாமிய ஊடக தோழர்கள் மட்டுமே, பதிலடி கொடுத்து, விளக்கம் அளித்து வருகின்றனர். பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். 

தற்போதைய சூழ்நிலையில் சமூக ஊடகங்களின் சக்தியும் வலிமையும் இஸ்லாமிய சமுதாயம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றுவதுடன், உலகத்தின் பக்கமும் தங்களது பார்வைகளை திருப்ப வேண்டும். இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்களையும் வதந்திகளையும் முறியக்க வேண்டும். அதற்காக, சமூக ஊடகங்களை மிகவும் சரியான முறையில், பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களின் மூலம் மக்கள் மத்தியில் அன்பையும், அமைதியையும் ஏற்படுத்த வேண்டும். 

இஸ்லாம் குறித்தும், அதன் வாழ்க்கை நெறி குறித்தும் மேற்கிந்திய நாடுகளின் மக்கள் மத்தியில் நிலவி வரும் போலியான கற்பனைகளையும், பொய்யான தகவல்களையும் முறியடிக்க சமூக ஊடகங்களை இஸ்லாமிய இளைஞர்கள் சரியாக பயன்படுத்தி, அதன்மூலம், இஸ்லாம் குறித்து உண்மையான படத்தை அனைத்துத் தரப்பு மக்களிடம சேர்க்க வேண்டும். கடைசியாக, மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்., தற்போதைய சூழ்நிலையில், சமூக ஊடகங்களின் சக்தி மிகவும் வலிமையானது என்பதை மட்டும் எப்போதும் மறந்துவிடாதீர்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Saturday, October 28, 2023

சாதிவாரிக் கணக்கெடுப்பு.....!

சாதிவாரிக் கணக்கெடுப்பும்....ராகுல் காந்தியும்....!

நாட்டின் மக்கள் தொகை 120 கோடியை தாண்டியுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் பின் தங்கியே இருந்து வருகிறார்கள். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்கள்,  நல்ல கல்வி, நல்ல தொழில், நல்ல வருவாய் கிடைக்காமல், வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மக்கள் தொகையில் மிகவும் குறைந்த அளவுக்கு மட்டுமே உள்ள ஒருசிலர், நாட்டின் அனைத்து உயர் பதவிகளிலும் இருந்து வருகிறார்கள். அத்துடன் மிகப்பெரிய தொழில்களையும் நிர்வாகித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு இதுவரை காணப்படவில்லை. இதற்கான காரணங்கள் ஆராயப்படவில்லை. அப்படி ஆராயப்பட்டாலும் அதற்கான நல்ல தீர்வு காணப்படவில்லை. முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 

சாதிவாரிக் கணக்கெடுப்பு:

இத்தகையை சூழ்நிலையில் தான், பீகார் மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அதன் தகவல்களை அண்மையில் வெளியிட்டது. பீகார் அரசு வெளியிட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில், பல நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. அங்கு வாழும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்களின் உண்மை நிலவரங்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகார் அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன என்றே கூறலாம். 

ராகுல் காந்தி குற்றச்சாட்டு:


இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது தொடர்ந்து வலியுறத்தி வருகிறார். தாம் செல்லும் இடங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர்களின் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், நாட்டில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனைத்து உயர் பதவிகளில் இருந்து வருவது ஏன் என அவர் கேள்வி எழுப்பி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்கள் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். 

எனவே, தற்போது நாட்டில் நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம் என்றும், அதன்மூலம் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நீதி கிடைக்கும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். அத்துடன், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஐந்து மாநில தேர்தல்கள்:


இத்தகையை பரப்பரப்பான சூழ்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி வரும் 30ஆம் தேதிக்குள் நிறைவு பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் என உறுதி அளித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு, ஐந்து மாநில மக்களை சற்று யோசிக்க செய்துள்ளது. 

குறிப்பாக, தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் அடிக்கடி எடுத்து கூறி வருகிறார்.  நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், சம உரிமைகள் பெற வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கு இனியும் அநீதி இழைக்கக் கூடாது என்றும் அவர் பேசி வருகிறார். இது பேச்சு அளவில் மட்டுமல்லாமல், செயல் அளவிலும் இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் என்றும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கும் என்றும்  ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். 

இதுவரை எந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையாமல், பின்தங்கி இருந்துவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்கள், சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை தற்போது உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஐந்து மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முஸ்லிம்களுக்கும் பயன்:


நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களின் நிலவரம், அவர்களின் வாழ்க்கைத்தரம், வறுமை, வேலையின்மை, கல்வி பெற முடியாத நிலை உள்ளிட்ட அனைத்து உண்மையான தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். இதன்மூலம், முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவையான பணிகளை செய்ய அரசுகளை வலியுறுத்த முடியும். இதன் காரணமாக தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 


தற்போது நாட்டில் வாழும் முஸ்லிம்கள், பிற சமூகங்களை விட மிகவும் வசதியாக வாழ்ந்து வருவதாக ஒரு பொய்யான பிரச்சாரம் பாசிச அமைப்புகளால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியே இருந்து வருகிறார்கள். நன்கு படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே உள்ளது. நீதித்துறையிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம். 

விழிப்புணர்வு அவசியம்:


சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம் சமூகம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது என அலட்சியத்துடன் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. கணக்கெடுப்பின்போது, கவுரவம் பார்க்காமல், உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும். எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நிலைமை மாற சமூகமும் தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம் மட்டுமே, இந்திய முஸ்லிம்களின் நிலைமை படிப்படியாக மாறும். அத்தகைய மாற்றதை காண வேண்டுமானால், முஸ்லீம் சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டியது மிகவும் அவசியம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


அழகோ.....அழகு.....!

 அழகை ரசித்து மகிழுங்கள்.....!



Women in Islam....!

Women have the highest status in Islam

Former Chief Election Commissioner of India....!

At a function on the 96th foundation day of Jamia Milia Islamia.

Speaking in the backdrop of the ongoing debate about Triple Talaq, Quraishi said: "Muslim women have the highest status in Islam and no other religion has such concept of equality."

Giving examples of property rights of women in Islam and right to education he said: "There is a perception that women are suppressed. The government must think that the laws are sacred within a community as they are seen with liberal interpretations now."

"We all (Muslims) should also unite together and not give anyone a chance to interfere with our religious laws," Quraishi said.

Speaking at a function on the 96th foundation day of Jamia Milia Islamia, Vice Chancellor Talat Ahmad said there is a need to focus on education of minority communities in the country, especially the Muslims, for them to progress in society.

"The community will progress only when everyone receives education."

"Given the circumstances, we do not have to let any community remain backward in any aspect," he added.

University Grants Commission (UGC) Chairman Ved Prakash said the country needs to place its education system right. "We need to sit together and interpret in terms of curricular and ensure diversity there in," Prakash said.

The function was held to inaugurate a "Talimi Mela" (educational fair) in the campus.

Various other programmes, including Art and photography exhibitions, lectures by academicians, film screenings and cultural shows were also held at the campus in the ongoing three-day celebrations.

மூச்சு பயிற்சி.....!

ஏக இறைவன் மனிதனுக்கு வழங்கிய ஏராளமான அருட்கொடைகளில் ஒன்று மூச்சு. இதை நாம் சரியாக பயன்படுத்தினால் நன்மைகள் ஏராளமாக கிடைக்கும்.



Friday, October 27, 2023

என்னத்த சொல்ல....!

மாட்டிறைச்சி அரசியல்...!

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு.

விண்ணைத்தாண்டி நிற்கும் பருப்பு வகைகளின் விலைகள்.

தலைநகர் டெல்லியில் மட்டும் பெண்களுக்கு எதிராக நடந்த 15265 குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ளன.

பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாள்தோறும் குற்றங்கள் நடந்து வருகின்றன.

அத்துடன் 

வேலையில்லா திண்டாட்டம்.

விலைவாசி உயர்வு.

கருப்பு பண விவகாரம்.

அனைத்து துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழல்.

இப்படி பல பிரச்சினைகள் கியூ கட்டி நிற்கும் போது ஒரு முட்டாள் கும்பல் மாட்டிறைச்சி விவகாரத்தை வேண்டும் என்றே கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றன.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ எதையும் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கிறது 

எல்லாமே மாட்டிறைச்சி அரசியல்தான் காரணம்.

விளங்குமா நாடு.

ரயில் பயணங்களில்....!

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு பயணம்....!



பாலஸ்தீன ஆதரவு பேரணி....!

திருச்சியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடந்த மாபெரும் பேரணி....!



ஆனந்தம்.....!

வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.



துஆ.....!

பாலஸ்தீன மக்களுக்காக ஏக இறைவனிடம் உருக்கமான பிரார்த்தனை....!



Thursday, October 26, 2023

அரை வேக்காடுகள்....!

ஊடக முதலாளிகளை ஏமாற்றும் அரை வேக்காடுகள்......

அவுட்புட் எடிட்டர்(Output Editor)......அப்படியன்னா என்ன...?

அன்கட் பைட் (uncut Byte).....அது என்ன ?

மாலாலாவை தெரியுமா....அது யாரு?

இந்த கேள்விகள் எல்லாம் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு நேர்முக தேர்வுக்கு சென்றவரிடம் கேட்டகப்பட்டவை...

நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு நிச்சயம்  பதில் தெரியவில்லை...

வேலை கிடைக்கப் போவதில்லை என்று உறுதியாக நம்பினார் அந்த நபர்..

ஆனால் என்ன ஆச்சரியம்.....40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் உடனே பணியில் சேரும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

வாய்ப்பு அளிக்கப்பட்டது.  நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை...

ஆனால், செய்திப்பிரிவில் தலைமை பொறுப்பில் இருந்தவருக்கு இப்படிப்பட்ட ஆட்கள்தான் தேவைப்பட்டது.

காரணம்....

அவரது பதவிக்கு யாரும் போட்டியாக வந்துவிடக் கூடாது... திறமைசாலிகளை, அனுபவசாலிகளை பணிக்கு எடுத்துவிட்டால், தன்னுடைய, திறமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும்,  வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் அந்த நபருக்கு...

எனவே,

சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள்....

உண்மை உழைப்பாளிகள்....

செய்தியை பல்வேறு கோணங்களில் அளிக்கும் திறமை பெற்றவர்கள்...

மற்ற தொலைக்காட்சிகளில் வருவதற்கு முன்பே, முதலில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் செய்தி வந்துவிட வேண்டும் என துடிப்பவர்கள்...

மற்றும், 

விஷயம் தெரிந்தவர்களை பக்கத்தில் அவர் சேர்த்துக் கொள்வதே இல்லை...

செய்தி எழுத தெரியவில்லை என்றாலும் பராவயில்லை...

தனக்கு அடங்கி நடந்து செல்பவர்களை உடனே பணியில் சேர்த்து கொள்வதுதான் அந்த தலைமை செய்தி ஆசிரியர் வழக்கமாக கொண்டிருக்கிறார்...

மேலே கூறிய வார்த்தைகள் கற்பனையாக நீங்கள் நினைக்கலாம்...அப்படியும் இருக்கலாம்....இருக்காமல் போகலாம்...(கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அல்லவா)

ஆனால், தற்போது விஷுவல் மீடியாவில் இந்த போக்குதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது...

ஊடக முதலாளிகளை ஒரு கும்பல், தவறான வழியில் அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது...

பணத்தை பற்றி கவலைப்படாமல், தொலைக்காட்சி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசையில், ஊடக முதலாளிகள் ஆர்வம் செலுத்தும்போது, அவர்களின் ஆசையை உன்னிப்பாக கவனிக்கும் சிலர், தங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டதாக நினைத்து உடனே காரியத்தில் இறங்கி விடுகின்றனர். 

ஊடக முதலாளிகளின் பணத்தை எப்படி வீண் வழியில் செலவழிக்க முடியுமா...அப்படி  செய்கிறார்கள்....செய்தி வழங்குகிறோம் என்ற பெயரில் பணத்தை பிடுங்கி  செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்...

விமானத்தில் பறப்பது.....நட்சத்திர விடுதிகளில் அறைகளை போட்டு தங்குவது....அனைத்து வசதிகளையும் அனுபவிப்பது.....பல லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, உல்லாச வாழ்க்கை அனுபவிப்பது....

ஒரு வரியில் செய்தியை சொல்லிவிட்டு, அலுவலகத்தில் நேரத்தை வீணாக செலவழிப்பது இதுதான், தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருசிலரின் வாடிக்கையாக தற்போது இருக்கிறது.... 

அதுவும் ஒருசில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான் இந்த போக்கு  இருந்து வருகிறது....

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான், இந்த அரை வேக்காடுகளின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது...

இதற்கு எப்போது விடிவு கிடைக்குமோ......நிச்சயம் யாருக்கும் தெரியாது....

ஆனால்.... 

இயற்கை மேல் நம்பிக்கை கொள்பவர்களுக்கு,  நிச்சயம் காலம் ஒருநாள் மாறும் என்பது தெரியும்....

ஊடக முதலாளிகள் விழித்துக் கொள்ளும்போது, அரை வேக்காடுகளின் வேடம் வெளிச்சத்திற்கு வரும்...

அப்போது, ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவார்கள்....

காலம் அப்படிதான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது....

உண்மை உழைப்பாளிகளே...

பொறுமையை கடைப்பிடியுங்கள்....

பொறுமையாளர்கள் நிச்சயம் வெற்றியை பெற்றிருக்கிறார்கள்....

வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்....

விரைவில், அரை வேக்காடுகளின் அட்டகாசங்கள், ஒருநாள் நிச்சயம் அடங்கிவிடும்...

இதற்கு, அண்மை கால நிகழ்வுகளே சாட்சிகளாக உள்ளன...