Tuesday, January 30, 2024

தேசிய மொழியாக இந்தி மாற வாய்ப்பே இல்லை….!


பல இனம், கலாச்சாரம் கொண்ட இந்தியாவின்

தேசிய மொழியாக இந்தி மாற வாய்ப்பே இல்லை….!

 

இந்தியாவில் நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், ஒரு நிஜமான உண்மை உங்கள் கண் முன் வந்து நிற்கும். அது, ஒவ்வொரு மைலுக்கும் இடையே தண்ணீரின் சுவை மட்டுமல்ல, பேசும் மொழியின் தன்மையும் மாறுப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்தி பெல்ட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் கூட, பிரஜ், காரி போலி, அவதி, போஜ்புரி, உர்தூ என பல்வேறு மொழிகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சட்டீஸ்கர், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாத வகையில் மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு இன மக்களிடையே கூட, மொழியின் தன்மை வேறுவேறு வகையில் இருந்து வருகிறது. பள்ளி வகுப்பறைகளில் பேசப்படும் மொழி, நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழி, மாறுப்பட்டே உள்ளது. நமது பழமொழிகள், நமது மொழி நடை, நமது மொழி எண்ணங்கள், நமது உணர்வுகள் இவை அனைத்தும் நாம் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறோம். அது, திரைப்படங்கள் மூலம் கற்ற மொழியாக இருக்கலாம். அல்லது ஒரு கவிதை மூலம் பெற்ற மொழி அறிவாக இருக்கலாம்.  இந்தக் குறியீடுகளுக்கு இடையில் நாம் சிரமமின்றி மாறிக் கொண்டே இருக்கிறோம். நமது வாக்கியங்கள், சாதாரணமாக பல மொழிகளைக் கலக்கிறது. இப்படி பல மொழிகளை கலந்துகொண்டு, பேசும் மக்களை இந்திய நாடு பெற்று இருக்கிறது.

நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 44 சதவீத மக்கள் இந்தி மொழி பேசும் மக்களாக இருந்து வருகிறார்கள். ஆனால், இந்தி மொழி, பேச்சு வழக்கில், 55 வகையில் பயன்படுத்தப்படும் மொழியாக உள்ளது. கடந்த 2011 ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 10 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தி மொழி 55 வகையில் பேச்சு வழக்கில் இருப்பதும், முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தி ஆதிக்கம்:

இந்தி மொழியை நவீன மேலாதிக்க மொழியாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும், பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. முதலில் உர்தூ மொழிக்கு எதிராகவும் பின்னர் ஆங்கிலத்திற்கு எதிராகவும், இந்தி மொழி பல்வேறு நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்துடன் வடமொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை இந்தி மொழிக்கு ஏற்பட்டது. காலனித்துவ இந்தியாவில் இந்திக்கான தேவை இரட்டை தூண்டுதல்களை கொண்டதாக இருந்தது. ஒன்று, ஆட்சி மொழியாகவும் மற்றொன்று, உயரடுக்கு மற்றும் கருத்தியல் நாட்டம் கொண்டதாகவும் இருந்தன. இந்தி மொழியை மேலாதிக்க மொழியாக மாற்றும் திட்டத்தின்படி, இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தி, உர்தூ இடையே பிரச்சினை:

அந்த வகையில் இந்தி மற்றும் உர்தூ மொழிகளுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி, மத ரீதியாகவும், சண்டைகளை உருவாக்க காலனித்துவ ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி மற்றும் உர்தூ மொழிகள் மத்தியில் பிரச்சினைகளை மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும் இந்து, முஸ்லிம்கள் மத்தியில் புதிய பிரச்சினைகளை உருவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த இரண்டு மொழிகளும் பல்வேறு நிலைகளில் கடுமையான மத பிளவுகளையும் ஏற்படுத்தின. பேச்சு நடையும் இலக்கணமும் இரண்டு மொழிகளிலும் ஒரே விதத்தில் இருந்தபோதும், எழுத்து நடையில் அவை மாறுபட்டு இருந்தன. இந்தி மொழி சமஸ்கிருதம் பாணியில் எழுதப்பட்டது. உர்தூ மொழி அரபு மற்றும் பாரசீக பாணியில் எழுதப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திவாலா, உர்தூவாலா என்ற பாணியில் பிளவுகளை ஏற்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பாரசீக மொழிக்கு மாற்றாக உர்தூ மொழியை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்ததுடன், நாகரி எழுத்தில் இந்தியை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இது மதன்மோகன் மால்வியா உள்ளிட்ட இந்து தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியை தொடக்கப்பள்ளி மற்றும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டில் இந்தி, உர்தூ ஆகிய இரண்டு மொழிகளையும் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தி, உர்தூ மொழிகளுக்கு இடையேயான பிரச்சினை இந்து, முஸ்லிம்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.

1910 மற்றும் 1930க்கு இடையே இந்தி மற்றும் உர்தூ மொழி குறித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் ஏற்பட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி அமைப்புகளை உருவாக்கி, தங்கள் மொழிகளை காக்கவும், வளர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். இரண்டு தரப்பிலும் பொதுவான உள்ளூர் வட்டார மொழி பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உர்தூ மொழி பேசுபவர்கள், அரபி மற்றும் பாரசீக மொழி அறிவு உளளவர்களையும், இந்தி மொழி பேசுபவர்கள், சமஸ்கிருதம் மொழி அறிவு கொண்டவர்களையும் தங்களுடையே, அறிவிப்பாளர்களாக நியமித்தனர்.

நவீன இந்தி மொழி, சித்தாந்தவாதிகள் மற்றும் இலக்கியவாதிகளால் உருவாக்கப்பட்டு 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டு, சமஸ்ருதத்தை நோக்கிச் சென்ற இந்தியை சுத்தமாக காய்ச்சி வடிக்கட்டிய இந்தி மொழியாக மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்சி மொழி பிரச்சினை:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, எந்த மொழியை ஆட்சி மொழியாக வைக்க வேண்டும் என்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்காக நடத்தப்பட்ட ஆலோசனைகள், விவாதங்கள், நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வர மேற்கொள்ளப்பட்டவிவாதங்களை விட கடுமையாக இருந்தன.

நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் மக்கள் பயன்படுத்தும் மொழி, இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும், அந்த மொழி எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் கடினமான இலக்கிய நடை கொண்ட மொழியாக அது இருக்கக் கூடாது என்றும் மகாத்மா காந்தி அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அத்துடன் இந்துஸ்தானி மொழியாக அதாவது, தூய்மையான இந்தியாகவும், உர்தூவாகவும் இல்லாமல், பாரசீகம் மற்றும் சமஸ்கிருதம் கலக்கப்படாத மொழியாக இந்துஸ்தானி மொழி இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்து இருந்தார். இந்த யோசனையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது. ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்துஸ்தானி நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட குழு, பரிந்துரை செய்தது.

இதற்கு மதவாத வலதுசாரி அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் இந்துஸ்தானி இருக்கக் கூடாது என்றும் அவர்கள் குரல்களை எழுப்பினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,, காங்கிரஸ் அமைத்த குழுவில் இருந்து மவுலானா அபுல் கலாம் ஆசாத் விலகினார். சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வலதுசாரி அமைப்புகள் உறுதியாக இருந்தன.

பல்வேறு நிலைகளை தாண்டி, கடந்த 1949ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாட்டின் ஆட்சி மொழியாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடு 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டது.

தமிழ் உட்பட 22 மொழிகள் இணைப்பு:

பின்னர் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இணைக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மொழி ரீதியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி பிரச்சினைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்டன. தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நாட்டின் தேசிய மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள முடியாது என திமுக தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை உறுதிப்பட கூறினார்.

இந்தி மொழியை ஆட்சி மொழியாக தேர்வு செய்தால், தென் மாநிலங்களின் வளர்ச்சி வீழ்ச்சி அடையும் என்றும், வட மாநிலங்களில் முன்னேற்றம் அதிகளவு இருக்கும் என்றும் தென்மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். நாட்டில் ஆட்சி மொழி குறித்து விவாதங்கள் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் கடந்த 1963ஆம் ஆண்டு, மக்களவையில் மொழி குறித்து விவாதம் ஏற்பட்டு, இந்தியுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள்:

இந்தி மொழி தென்மாநில மக்கள் மத்தியில் திணிக்கப்பட மாட்டாது என பண்டித ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, கடந்த 1964ஆம் ஆண்டு, இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனால், தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் காரணாக ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே, அந்த மொழி முழுமையான ஆட்சி மொழியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இந்தி மொழியின் வளர்ச்சிக்காக திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தி கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி, இந்தி மொழிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், பேச்சு வழக்கில் இந்தி பல்வேறு நிலையில் இருந்து வருகிறது. இந்தி திரைப்படங்களில், இந்தி, உர்தூ கலந்த மொழிதான் உரையாடல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் இந்தி மொழி கூட, தூய்மையான இலக்கிய நடை கொண்டு மொழியாக இருப்பது இல்லை. மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் பேச்சு வழக்கு மொழியே பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மொழி என்ற வாதம்:  

இந்தி மற்றும் உர்தூ மொழிகள், இந்த துணைக் கண்டத்தில் பிறந்த இரண்டு மொழிகள் என்றும், இந்த இரு மொழிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என்றும் பிரபல திரைப்பட பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் கருத்து கூறியுள்ளார். பஞ்சாபி மூன்று மொழிகளில் எழுதப்படுவதாக கூறியுள்ள அவர், இருந்தும் பஞ்சாபி மொழி உயிருடன் உள்ள மொழியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகமயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள், மொழி குறித்த விவாதங்களை புதிய கோணத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இணையதளத்தில் ஆங்கிலம் முதன்மை மொழியாக இருந்து வருகிறது. பிற மொழிகள் இரண்டாவது மொழியாக உள்ளன. இதேபோன்று, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கில மொழி கற்பிற்கும் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதை மிகவும் விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் ஆங்கில மொழியின் தேவை அதிகரித்து, வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதுதான்.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில் நம் அனைவரையும் பிணைக்க, இணைக்க ஒரே மொழி இருந்தால் மட்டும் போதும் என்ற தேவை நடைமுறையில் வழக்கற்றுப் போகிறது. அனைத்து மொழிகளிலும் தொடர்பு கொள்ளக் கூடிய செல்பேசிகள் நம்மிடம் இருக்கும்போது, ஒரே மொழி என்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

கடைசியாக, இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை. அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன. அதேசமயத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-             நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்.

-             தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, January 29, 2024

பின்தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள்....!

 

உயர்கல்வி சேர்க்கை - மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள்....!

 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை பறிக்க  பாஜக அரசு முயற்சித்து வரும் இந்த காலகட்டத்தில், உயர்கல்வி குறித்த சமீபத்திய அகில இந்திய கணக்கெடுப்பு ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு பட்டியல் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவது மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மாணவர்களை விட, உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது என்ற உண்மையை இந்த கணக்கெடுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள்:

கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ளதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் உயர்கல்வி பெற வேண்டும். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பல சிறப்பு திட்டங்களை சமுதாய நலன் கருதி முஸ்லிம் கல்வியாளர்கள் செய்து வருகிறார்கள். அதற்காக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, கல்வி குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை உயரவே இல்லை என்பதுதான் உண்மையாகும். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முஸ்லிம்களின் கல்வி பெறும் உரிமையை பறிக்க மறைமுகமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை யாரும் மறைக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் தான், தற்போது உயர்கல்வி குறித்து வெளியாகியுள்ள பட்டியலில், முஸ்லிம் மாணவர்கள், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை விட, மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2017-18 மற்றும் 2021-22 கல்வியாண்டுகளுக்கு இடையில்), உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 18 புள்ளி 1 சதவீதமாக பதிவாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், எஸ்.சி.பிரிவினருக்கான சேர்க்கை தேசிய சராசரியை விஞ்சி, 25 புள்ளி 43 சதவீதம் அளவுக்கு அதிக வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தியது. எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை 41 புள்ளி .6 சதவீதமாகவும், ஓபிசி மாணவர் சேர்க்கை 27 புள்ளி 3 சதவீதமாகவும்  உயர்ந்துள்ளது.

உயர்கல்வியில் முஸ்லிம்கள்:

எஸ்சி., எஸ்சி. ஓபிசி மாணவர்களின் எண்ணிக்கை உயர்கல்வியில் அதிகரித்து வரும் நிலையில், முஸ்லீம் சமூகத்திற்கான சேர்க்கை தரவு மிகவும் குறைந்துள்ளது. 2021-22 கல்வியாண்டில், முஸ்லீம் மாணவர் சேர்க்கை 21 லட்சத்து ஆயிரமாக  பதிவாகியுள்ளது, இது ஐந்தாண்டு காலத்தில் 14 புள்ளி 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, 2017-18ல் 18 லட்சத்து 4 ஆயிரத்தில் இருந்து 2020-21ல் 19 லட்சத்து 22 ஆயிரமாக  லட்சமாக உயர்ந்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி ாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முஸ்லீம் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் அதே அளவிலான முன்னேற்றத்தை எட்டவில்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

முஸ்லிம் மாணவிகள் நிலவரம்:


மற்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவிகளுடன் ஒப்பிடும்போது  முஸ்லிம் மாணவியர்களுக்கான சேர்க்கை புள்ளிவிவரங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியைக் காட்டுகின்றன. 2021-22ல், 2017-18ல் 8 புள்ளி 98 லட்சமாக இருந்த முஸ்லிம் மாணவிகளின் சேர்க்கை 10 புள்ளி 4 லட்சமாக இருந்தது. இது ஒரு அதிகரிப்பைக் குறிக்கும் அதேவேளையில், 14 புள்ளி 7 சதவீத வளர்ச்சி விகிதம் முஸ்லிம் பெண்களின் கல்விப் பங்கேற்பைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

பல்வேறு சமூகங்களுக்கிடையில் உள்ள சேர்க்கை வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வு, உயர் கல்வியை அணுகுவதில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இலக்கு முயற்சிகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சவால்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வது மிகவும் உள்ளடக்கிய மற்றும் சமமான உயர்கல்வி நிலப்பரப்புக்கு பங்களிக்கும். அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியைத் தொடரவும் பயன்பெறவும் சம வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்யும். கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து பற்றிய விவாதங்கள் மையக் கட்டத்தை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதும், முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய உயர்கல்விச் சூழலை வளர்ப்பதில் பணியாற்றுவதும் இன்றியமையாததாகும்.

- நன்றி: முஸ்லிம் மிரர் ஆங்கில இதழ்.

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

 

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள்...!

ராமர் கோவில் திறப்பு விழாவும்,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளும்...!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை கடந்த 1992ஆம் ஆண்டு இடித்துவிட்டு, அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முழுவதும் கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை, அவசர அவசரமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் திறந்து வைத்துள்ளன. இந்த கோவில் திறப்பு விழாவில் நான்கு சங்கராச்சரியார்கள் கலந்துகொள்ளவில்லை. சங்கராச்சாரியார்களின் முக்கியத்துவம் இந்து மத நம்பிக்கைகளின்படி, சங்கராச்சாரியார் மிக உயர்ந்த குருக்களாகக் கருதப்படுகிறார். இந்து மதத்தில், சங்கராச்சாரியார் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் பார்க்கப்படுகிறார். ஆதி சங்கராச்சாரியார் இந்து மதத்தின் தத்துவ விளக்கத்திற்காகவும் அறியப்பட்டவர். இத்தகைய சூழ்நிலையில், முழுவதும் கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் திறப்பு விழாவில், முக்கிய சங்கராச்சரியார்கள் கலந்துகொள்ளாதது, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு கொஞ்சம் மன வருத்தத்தை அளித்தது என்றே கூறலாம். 

இதேபோன்று, மிக உயர்ந்து பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், தனது வழக்கமான பாணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கோவில் திறப்பு விழாவில் தீவிரம் காட்டி, கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோவிலை திறந்து வைத்தன. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில், இந்திய முஸ்லிம்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, ஜனநாயக நெறிமுறைப்படி, தங்களுடைய பணிகளை வழக்கம் போல் செய்து வந்தனர். ஆனால், கோவில் திறப்பு விழாவை வைத்துக் கொண்டு, இந்துத்துவ அமைப்பினர் ஆடிய வெறியாட்டங்கள் நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை:

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட அதே நாளில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்துத்துவ அமைப்பினர், கோலாகல கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள தேவலாயங்களின் மேல் ஏறி, அங்கு காவிக் கொடியை பாசிச அமைப்புச் சேர்ந்தவர்கள் ஏற்றி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதேபோன்று, பல பகுதிகளில் முஸ்லிம்கள் மிரட்டி ஜெய் ஸ்ரீராம் என சொல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தினர். ஏக இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டவர்கள், அப்படி சொல்ல முடியாது என சொல்லியபோது, அவர்களை இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக தாக்கினர். பள்ளிவாசல்கள், தேவலாயங்களின் முன்பு கூடிய இந்துத்துவ அமைப்பினர், அங்கு பல மணி நேரம் நின்றுக் கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பி, மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தினர். 

மும்பையில் வன்முறை:

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள நாயா நகர், மீரா ரோட் ஆகிய பகுதிகளில் ராமர் கோவில் திறப்பு நாளில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள், பேரணி ஒன்றை நடத்தினர். இந்த பேரணி முஸ்லிம் பகுதிகளில் நுழைந்தபோது, பேரணியில் கலந்துகொண்டவர்கள், அங்குள்ள பள்ளிவாசல், முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள், வாகனங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அவர்களின் வன்முறைகளை தடுத்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மும்பையில் ஒருவித பதற்றம் ஏற்பட்டது. தெலங்கானா மாநிலத்திலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. 

சிறுபான்மையின மக்களின் பொறுமை:

ராமர் கோவில் திறப்பு நாளில், இந்திய முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமையை நாம் பாராட்டியே தீர வேண்டும். இதேபோன்று, கிறிஸ்துவ மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களும், அவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்த நேரத்தில், மிக அழகிய பொறுமையை கடைப்பிடித்தனர். தேவலாயங்களில் காவிக் கொடி ஏற்றப்பட்டததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அப்படி எதிர்ப்பை வெளிப்படுத்தினால், அதன்மூலம், வன்முறைகளை அரங்கேற்றலாம் என திட்டம் போட்ட, இந்துத்துவ அமைப்புகளின் திட்டங்களை நன்கு உணர்ந்துகொண்ட கிறிஸ்துவ மக்கள், பொறுமை மூலம் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்றே கூறலாம். 

இதேபோன்று, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் முஸ்லிம்கள், ராமர் கோவில் திறப்பு நாளில் கடைப்பிடித்த பொறுமை, நாட்டு மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கோவில் திறப்பு நாளில் மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாசிச அமைப்புகளின் திட்டங்கள் அனைத்தையும், தங்களுடைய பொறுமையின் மூலம் முஸ்லிம்கள் தவிடுபொடியாக்கினர். மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ரீதியாக இலாபம் பெறலாம் என நினைக்கும் பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள், முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமையை கண்டு, தங்கள் திட்டங்கள் தகர்த்தப்பட்டதை உணர்ந்து வேதனை அடைந்தன என்றே கூறலாம். ஒருசில இடங்களில், முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை காட்டத் தவறவில்லை. ஆனால், அது மிகப்பெரிய அளவுக்கு பாசிச அமைப்புகளின் திட்டங்களுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் ராமர் கோவில் திறப்பு நாளில், நாடு மிக அமைதியாக இருந்தது. வன்முறைகள் மிகப்பெரிய அளவுக்கு நடைபெறவில்லை. 

அமைதியை விரும்பும் மக்கள்:


நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அமைதியை விரும்புகிறார்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதில் உறுதியாக உள்ள மக்கள், நாட்டில் உள்ள மக்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்துவதை விரும்புகிறார்கள். சாதி, மதம், மொழி, இனம், ஆகியவற்றை கடந்து நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சியில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச அமைப்புகளை தவிர பெரும்பாலான இந்து சகோதரர்கள், நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களை அரவணைத்துக் கொண்டு, செல்லவே விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து கூறலாம். அண்மையில் தமிழகத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா ஒன்றில், இந்து, கிறிஸ்துவ குடும்பங்கள் சீர்வரிசையுடன் வந்து கலந்துகொண்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம். தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல், தற்போது வட மாநிலங்களிலும் இதுபோன்ற நல்ல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பாசிச அமைப்புகள், ஒற்றுமையை சீர்குலைக்க தொடர்ந்து தங்களது திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள். 

அந்த வகையில் ராமர் கோவில் திறப்பு விழா நாளில், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவுக்கு வன்முறைகளை நடத்தலாம் என்றும், அதன்மூலம் அரசியல் இலாபம் பெறலாம் என்றும் பாசிச அமைப்புகள் போட்ட திட்டங்கள் அனைத்தும், அமைதி விரும்பும் மக்களால், தகர்த்தப்பட்டு, தோல்வியில் முடிந்தன. பாபர் மசூதியை இழந்த முஸ்லிம்கள், அதன் வேதனையில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினைகள் மூலம் அவர்களின் அமைதியை பறிக்க பாசிச அமைப்புகள் திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் காசியில் உள்ள ஞானவாபி மசூதி தற்போது மீண்டும் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளது. அண்மையில் தொல்லியியல் துறை அளித்த அறிக்கையில் கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி நாட்டில் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி, முஸ்லிம்களின் அமைதி சீர்குலைக்க பாசிச அமைப்புகள் தொடர்ந்து திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள். 

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, சுதந்திரத்தின்போது இருந்த வழிபாட்டுத் தலம், மதத் தன்மையைக் கொண்டிருக்கும் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் கூறுகிறது. அந்தச் சட்டம், 'வழிபாட்டுத் தலங்களை மாற்றுவது தொடர்பான சச்சரவுகளைத் தடுப்பதற்கும்', 'சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கும்' நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை மிதித்துவிட்டு, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை வேண்டும் என்றே பறிக்க பாசிச அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டு நலனில் அக்கறை கொண்டு அனைத்து மக்களும், பாசிச அமைப்புகளின் திட்டங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன்மூலம் நாட்டில் அமைதியை நிலைநாட்ட உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நீதி கிடைக்குமா....?

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தால், நீதி கிடைக்குமா....?

மத்திய பாஜக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு எந்த முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படவில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை பெரும் சிரமங்களுக்கு இடையே சென்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி, ”அச்சே தின்” அதாவது நல்ல நாட்கள் மக்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எந்தவித தீர்வையும் இதுவரை காணவில்லை. வெறும் வெற்று முழக்கங்களை சொல்வதையே பாஜக தலைவர்கள் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நாட்டு மக்களின் கவனங்களை திசை திருப்ப, அடிக்கடி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதை பாஜக தனது பாணியாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது. 

மக்கள் மத்தியில் பிளவு: 

நாட்டில் குவிந்த கிடக்கும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கண்டு, முற்றுப்புள்ளி வைக்க பாஜக அரசு கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை. மாறாக, மக்கள் மத்தியில் காழ்ப்புணர்வுகளை உருவாக்கி, ஒருவித பிளவை ஏற்படுத்தும் செயல்களில் தான் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன்மூலம் தங்களுக்கு அரசியல் ரீதியாக இலாபம் கிடைக்கும் என பாஜக கருதுகிறது. அந்த கருத்து ஒரளவுக்கு உண்மையே என்று கூறலாம். வட மாநிலங்களில் மக்கள் மத்தியில் இன்னும் சரியான  புரிதல்கள் இல்லை என்பதால், அவர்கள் மத ரீதியாக தங்களை அடையாளம் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். இதனால் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களின் இந்த இயலாமையை தனது அரசியல் இலாபத்திற்காக பாஜக தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே வருகிறது. தனது பிரித்தாளும் பாணியை அந்த கட்சி இன்னும் கைவிடவில்லை. இந்த பிரித்தாளும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து, பல்வேறு மாநிலங்களில் பிரச்சினைகளை வேண்டும் என்றே இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். குறிப்பாக, அரியானா, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் பாஜகவின் செயல் திட்டத்தின் படி அரங்கேற்றப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே. 

மறுக்கப்படும் நீதி:

பாஜக ஆட்சியில், ஊடகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. உண்மையான செய்திகளை வெளியிட ஊடகங்கள் அச்சம் கொள்ளும் வகையில் மிரட்டி வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வந்தாலும், அவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. என பல்வேறு துறைகள் மூலம் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். நீதி, நேர்மை, நியாயம் என்ற சொற்களுக்கு பாஜக ஆட்சியில் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறையை அணுகவே தற்போது அஞ்சுகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தை தொடர்ந்து வன்முறை நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அங்கு அமைதியை நிலைநாட்ட, மத்திய பாஜக அரசு உறுதியாக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அவர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. சாதி, மதம், மொழி ரீதியாக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. 

இந்திய ஒற்றுமை நீதி பயணம்:

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த முறை  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள், திரைப்பட துறையைச் சேர்ந்த அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டு, ராகுல் காந்தியின் முயற்சியை பாராட்டி ஊக்குவித்தனர். 

அந்த வகையில், தற்போது ராகுல் காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி மணிப்பூரில் உள்ள தௌபாலில் இருந்து தொடங்கினார். இந்த பயணம், வடகிழக்கு மாநிலங்களான மேகலாயா, மிஜோரம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து, வரும் மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவு பெறுகிறது. மணிப்பூரில் தனது நீதி பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, அங்குள்ள மக்கள் மத்தியில் பேசும்போது, மணிப்பூர் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பாஜக அரசு, மிகப்பெரிய அநீதியை செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். 

ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறாமல், மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அத்துடன்,  சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள், தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள போராடிக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல பாஜக அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி, தனது பயணத்தின்போது குற்றம்சாட்டி வருகிறார். 

மக்களின் வரவேற்பு:

மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு, அம்மாநில மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அசாம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, அரசியல் நோக்கர்களை வியப்பு அடையச் செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜக கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இணைந்தபிறகு, மறுநாள் பீகாரில், இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி, நுழைந்தபோது, அவருக்கு மக்கள் அளித்த மிகப்பெரிய வரவேற்பு, பாஜக உள்ளிட்ட கட்சிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தாம் பயணம் மேற்கொள்ளும் அனைத்து மாநிலங்களிலும், மக்கள் மத்தியில் பேசும், ராகுல் காந்தி ஒன்றை மட்டும் தவறாமல் கூறி வருகிறார். அது, மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும். இந்திய மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். மத ரீதியாக மக்களை பிளக்கும் முயற்சிகளை மக்கள் நன்கு உணர்ந்துகொண்டு, பாஜகவின் செயல்திட்டங்களை உடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உயர் பதவிகளில், அனைத்து தரப்பு மக்களும் அமர்த்தப்பட வேண்டும். அதுதான் உண்மையான நீதியாக இருக்க முடியும். தற்போது, மத்திய பாஜக ஆட்சியில் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களே உயர் பதவிகளில் இருந்துகொண்டு இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அநீதி என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற வேண்டுமானால், அனைத்து தரப்பு மக்களுக்கும், நீதி கிடைக்க வேண்டும். அப்போதுதான், அது உண்மையான வல்லரசு நாடாக இருக்க முடியும். இப்படி, ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருவது, மக்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம். 

நீதி கிடைக்குமா?

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தால், நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த பயணம், வட மாநிலங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பாஜகவின் தோல்விகள், பாஜகவின் வெற்று முழக்கங்கள், பாஜகவின் பிரித்தாளும் போக்கு, நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், ராகுல் காந்தியின் பயணத்தின் மூலம், மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பாஜகவின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவுக்கு எடுப்படவில்லை. எனவே, வட மாநிலங்களை குறிவைத்தே பாஜக தனது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக ராமர் கோவில் விவகாரம் ஆகியவற்றை கையில் எடுத்து பாஜக, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.  இத்தகைய சூழ்நிலையில், பாஜகவின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம், நிச்சயம் நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக கூறலாம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், வட மாநிலங்களில் இந்த முறையை மிகப்பெரிய அளவுக்கு பயன் தராது என்றே கூறலாம். தென் மாநிலங்களைப் போன்று, வட மாநில மக்களும் தற்போது விழித்துக் கொண்டு, பாஜகவின் தோல்விகள் குறித்தும், வெற்று முழக்கங்கள் குறித்தும் கேள்விக்கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டு மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, January 28, 2024

இந்தியா கூட்டணிக்கு நன்மையே....!

நிதிஷ்குமார் விலகல், இந்தியா கூட்டணிக்கு நன்மையே....!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டிய முக்கியமானவர்களில் ஒருவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருந்தார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்தியவரும் அவர்தான். இதனை தொடர்ந்து நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டங்களிலும் நிதிஷ்குமார் கலந்துகொண்டார்.  எனினும், இந்தியா கூட்டணியை வலுவான அமைப்பாக மாற்ற தேவையான முக்கிய பணிகளில் அவர் ஆர்வம் காட்டவில்லை. கிட்டதட்ட ஒதுங்கியே இருந்து வந்தார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எதிர்மறையாகவே இருந்து வந்தன. எனவே, அவர் விரைவில் பாஜக அணியில் இணைந்து விடுவார் என்ற கருத்து ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தது. அது தற்போது உண்மையாகிவிட்டது. 

நிச்சயமற்ற தன்மை:

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருக்கும் நிதிஷ்குமாரிடம் எப்போதும் ஒருவித நிச்சயமற்ற தன்மை குணம் இருந்து வருகிறது. கொள்கையில் உறுதியுள்ளவராக அவர் எப்போதும் இருந்ததில்லை. நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாத அவர், தனது சொந்த மாநிலமான பீகாரின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவுக்கு பணிகளை ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எப்போதும் பதவியை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்ட நிதிஷ்குமார், அதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார் என்பதை அவருடைய செயல்பாடுகள் மூலம் அவரே அதனை பலமுறை நிரூபித்துள்ளார். அரசியல் என்பது மக்களின் நலனுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் என்பதை மறந்துவிட்டு சுயநலத்துடன் செயல்படும் நபர் தான் நிதிஷ்குமார் என உறுதியாக கூறலாம். இப்படிப்பட்ட தலைவர் தான் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பதை அறிந்து பீகார் மாநில மக்கள் மட்டுமல்லாமல், நாட்டு நலனில் அக்கறை உள்ள பலரும் வேதனை அடைந்துள்ளனர். 

பாஜகவின் சதி திட்டம்: 

இந்தியா கூட்டணியின் வலிமையை நன்கு உணர்ந்துகொண்ட பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அந்த கூட்டணியை சிதைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போதும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொள்கையில் பிடிப்பு இல்லாத நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டது. வழக்கமாகவே அவ்வவ்போது அணி மாறும் குணம் கொண்ட நிதிஷ்குமாரை வளைத்துபோட திட்டங்கள் திட்டப்பட்டன. பாஜக தீட்டிய திட்டத்தின்படி, நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 

எல்லாம் நன்மைக்கே:

நிதிஷ்குமார், மீண்டும் பாஜக அணியில் இணைந்தது, தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், நிதிஷ்குமார் குறித்து நன்கு அறிந்து இருக்கும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ஆயா ராம், காயா ராம் என்ற நிலைப்பாட்டில் நிதிஷ்குமார் எப்போதும் இருந்து வருவதாக விமர்சனம் செய்துள்ளனர். இதன்மூலம் இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமை கிடைக்கும் என்றும் எல்லாம் நன்மைக்கே என்றே தாங்கள் கருதுவதாகவும் கூறியுள்ளனர்.  பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஒருபடி மேல் சென்று, இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும், நிதிஷ்குமாரின் முடிவுக்கும் அவரது செயல்பாட்டிற்கும் பீகார் மக்கள் தகுந்த பாடத்தை வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார். 

அரசியல் நோக்கர்கள் கருத்து:

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது குறித்து கருத்து கூறியுள்ள பல அரசியல் நோக்கர்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, நிதிஷ்குமார் விலகியது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த பலம் என்று கூறியுள்ளனர். அடிக்கடி நிறம் மாறும் நிதிஷ்குமார் போன்ற அரசியல்வாதிகளை வைத்துகொண்டு, இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதால், அந்த கூட்டணிக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகப்பெரிய குழப்பமே இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் சேர்ந்து இருப்பது, இந்தியா கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறியுள்ளனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர்கள் சிலர் கூறியுள்ள கருத்தின்படி, நிதிஷ்குமார், தன்னுடைய தவறான முடிவால், தன்னுடைய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார் என்றே கூறலாம். அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி நிறம் மாறும் நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் மட்டுமல்லாமல், அவரை மிரட்டிய பாஜகவிற்கும் நாட்டு மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பது நிச்சயம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Wednesday, January 24, 2024

அழைப்பு...!

முஸ்லிம் பெண்கள் தீவிர அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, 

நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைப்பு...!

மகளிர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தமும் திட்டம்....!

மலப்புரம், ஜன25- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு அமைப்புகளில் மிக முக்கிய அமைப்பாக மகளிர் அணி இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா உட்பட நாடு முழுவதும் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களை இணைத்துகொண்டு, சேவை ஆற்றி வருகிறார்கள். இந்நிலையில், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக உள்ள மகளிர் அணியை மேலும் வலுப்படுத்த இ.யூ.முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கு அழைப்பு:

அந்த வகையில் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியில், அதிகளவு பெண்களை சேர்க்க தற்போது புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநிலம் மலப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாவட்ட துணைத் தலைவர் உம்மர் அரக்கல், பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள், அரசியலில் அதிகளவு ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக கூறினார். எனவே, பட்டப்படிப்பு முடித்த பெண்கள் அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, சமுதாயத்திற்கும் நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்கள், தங்களை ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள கட்சி அழைப்பு விடுப்பதாகவும் உம்மர் அரக்கல் வேண்டுகோள் விடுத்தார். 

புதிய செயல் திட்டம்:

பெண்களை அரசியலில் ஈடுபடுத்தி ஒரு புதிய நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த புதிய செயல் திட்டம் ஒன்றை செயல்படுத்த இ.யூ.முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு முஸ்லிம் குடும்பங்கள் மத்தியிலும், பொதுக்கூட்டங்கள் மூலமும், அரசியல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கூட்டங்களில், கட்சியின் சார்பில் தலைசிறந்த பேச்சாளர்கள், கலந்துகொண்டு, அரசியலின் முக்கியத்துவம் எடுத்துக் கூற இருக்கிறார்கள். 

மகளிர் அமைப்பு பணி:

இந்த புதிய செயல் திட்டத்தை அமல்படுத்த தற்போது உள்ள மகளிர் அணியை பயன்படுத்தி, ஒவ்வொரு வார்டுகளிலும் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள், முஸ்லிம் குடும்பங்களுக்கு சென்று, அந்த குடும்பங்களில் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் குறித்த விவரங்களை சேகரிப்பார்கள். அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் அரசியலின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவர்கள் என உம்மர் அரக்கல் கூறியுள்ளார். 

இதேபோன்று பேசிய மகளிர் அணியின் தேசிய பொதுச் செயலாளர் ரூபினா ரஷீத், பெண்களை அரசியலில் கொண்டு வர ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது இந்த முயற்சிகள் மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே கோழிக்கோடு மாவட்டத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

கட்சியின் முதுகெலும்பு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதுகெலும்பாக மகளிர் அணி இருந்து வருவதாகவும், பிற கட்சிகளை விட முஸ்லிம் லீகில் பெண்களின் அர்ப்பணிப்பு மிகச் சிறந்த முறையில் இருந்து வருவதாகவும் ரூபினா ரஷீத் தெரிவித்துள்ளார். இந்திய வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்கள் இருப்பதாகவும், எனவே பெண்கள் மத்தியில் அரசியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

10 ஆயிரம் குடும்ப கூட்டங்கள்:

அரசியல் குறித்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல புரிதலை ஏற்படுத்த கேரளா முழுவதும் 10 ஆயிரம் குடும்ப ஆலோசனை கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள முஸ்லிம் பெண்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினராக சேர்த்து, முஸ்லிம்கள் தற்போது சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்வது குறித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, தமிழகம் உட்பட நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்பட்டால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மிகப்பெரிய வலுவான அணியாக மாறும் என்பது உறுதி. அதன்மூலம் திறமையான முஸ்லிம் பெண்கள், அரசியலில் சாதித்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவை செய்ய முடியும். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, January 22, 2024

சும்மா....!

அழகிய, அற்புதமான  திறமையை கண்டு் வியப்பு அடையுங்கள்....!



உரை....!

அசாமில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குவஹாத்தியில் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரை:



உற்சாக வரவேற்பு....!

இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மேகாலயாவில் மக்கள் அளித்த உற்சாக வரவேற்பு....!



பேச்சு....!

பாபர் மசூதி - ராமர் பிறந்த இடம்....!

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேச்சு....!



பாபர் மசூதி...!

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி குறித்து உள்ளூர் பெரியவர் அளித்த பரபரப்பு பேட்டி..!



மத நல்லிணக்க பேரணி...!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்த நாளில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் மத நல்லிணக்க பேரணி நடைபெற்றது.



சமூகத்தின் அணுகுமுறை….!

 

வருத்தம் அளிக்கும்

இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறிமுறை. இஸ்லாமிய போதனைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகின்றன.  இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மற்றும் சமநிலை முறையை முன்வைத்துள்ளது. இஸ்லாத்தின் நோக்கம் வாழ்க்கையின் எந்தக் கோணத்திலும் அல்லது நேரத்திலும் மட்டுப்படுத்தப்படவில்லை. அது முழு மனித வாழ்க்கைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விலகிச் செல்லும் சமுதாயம்:

இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது உலகத்தையும் மறுமையையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், வேதனையான ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடித்து உன்னத வாழ்வு வாழ வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இஸ்லாமிய போதனைகளிலிருந்து விலகிச் செல்வது போல் தெரிகிறது. மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய சமூகத்தை தனது பிடியில் கொண்டு சென்றுள்ளது. சுயநலம், அற்பத்தனம், பழிவாங்குதல், பொய்கள் மற்றும் ஆபாசங்கள் ஆகியவை நம் சமூகத்தில் அனைத்து வகையான தீமைகளின் வீடாக மாறிவிட்டன.

வரதட்சணை எனும் தீமை:

பல்வேறு வகையான இந்தத் தீமைகளில் ஒன்றுதான் வரதட்சணை. வரதட்சணை எனும் தீமையால், ஏழ்மையின் காரணமாக பல பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.  வரதட்சணை என்ற சடங்கு நம் சமூகத்திற்கு ஒரு தீமையாகிவிட்டது என்றே கூறலாம். வரதட்சணை என்ற பெயரில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இந்த கொடுமையால் நூற்றுக்கணக்கான சிறுமிகள் ஏதோ ஒரு வகையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

வரதட்சணை கொடுக்காததால் மாமியார் கோபப்படுவார்கள். வரதட்சணை குறைவாகக் கொடுப்பதற்காக மகள்கள் வாழ்நாள் முழுவதும் கேலி செய்யப்படுவார்கள் என்ற நிலை முஸ்லிம் குடும்பங்களில் இருந்து வருகிறது. அதிக வரதட்சணை கொண்டு வரும் மருமகள்கள் மாமியார்களால் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். மற்ற மருமகள்களை விட அவர்கள் விரும்பப்படுகிறார்கள். இதனால் இஸ்லாமிய வீடுகளில் ஒற்றுமை, அமைதி சீர்குலைந்து தினமும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது.

கொடூர சம்பவங்கள்:

ஒவ்வொரு நாளும் நாளிதழ்களை படிக்கும்போது, வரதட்சணை குறைவாகக் கொண்டு வந்ததால், பெண்ணின் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக செய்திகளை காண முடிகிறது. நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்களை நாள்தோறும் காணலாம். பிற சமூகங்களில் வழக்கத்தில் உள்ள இந்த வரதட்சணை பிரச்சினையால், அப்பாவி பெண்கள் மரணங்களை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாளுக்கு நாள் இது போன்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்கள் நடந்து வருவதோடு, கொடூமைக்காரர்களின் இந்த இனப்படுகொலை தொடர் வலுவடைந்து வருகிறது.

இஸ்லாமிய பார்வையில் திருமணம்:

சமுதாயத்தில் வரதட்சணைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இதனால் திருமணம் மிகவும் கடினமாகி வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது. திருமணம் என்பது திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தூய உறவு முறையாக இருந்து வருகிறது. எனவே, நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர், திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும்அமைந்துள்ளது (புகாரி ஷரீஃப்).

இதேபோல், மற்றொரு இடத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  திருமணத்தின் முக்கியத்துவத்தையும் நல்லொழுக்கத்தையும் எடுத்துரைத்து, திருமணத்தை நம்பிக்கையின் பாதி என்று அழைத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போல், ஒரு நபர் திருமண உறவில் இணைந்தால், அவர் தனது நம்பிக்கையில் பாதியை நிறைவு செய்கிறார்.

ஏக இறைவன் தனது திருமறையில் இப்படி கூறுகிறான்: “மனிதர்களே, உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்(அஞ்சுங்கள்!). அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 4:1) இதன்மூலம் திருமணமத்தின் முக்கியத்துவம் மற்றும் அது எப்படி எளிமையாக அமைய வேண்டும் என்பது நமக்கு தெரிய வருகிறது.

பரிதாப நிலை:

நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்போது பணவீக்கம் உச்சத்தில் உள்ளது என்பதை ஒவ்வொரு மக்களின் வாழ்க்கையின் மூலம் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. வறுமை காரணமாக நடுத்தரப்பிரிவு வகுப்பினர் இரண்டு வேளை உணவுக்கே போராட வேண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலும், சகோதரிகள் மற்றும் மகள்கள் திருமணமாகாமல் வாழ்க்கையை வேதனையுடன் கடந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க போதுமான பணம் இல்லை என்பதே ஆகும்.

இதைத் தடுக்க, முஸ்லிம் சமூகத்தில் மதச் சூழலை உருவாக்கி, இஸ்லாமிய விதிகளின் முக்கியத்துவத்தை உள்ளத்திலும் மனதிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இறைநம்பிக்கையாளரின் மகிமையும் வெற்றியும் அவனது உலகம் செழிக்க மற்றும் மறுமையை நியாயமான, சிறந்த முறையில் அழகுபடுத்த ஏக இறைவன் வகுத்துள்ள எல்லைக்குள் வாழ்வதில் அடங்கியுள்ளது என்பதை முஸ்லிம்களின் இதயத்திலும் மனதிலும் நிலைநிறுத்த வேண்டும். திருமணம் என்பது மனித இனத்தின் பாதுகாப்பிற்காகவும் உயிர்வாழ்வதற்காகவும் மனிதனின் இயல்பான உணர்ச்சிகளை சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு தூய உறவு என்பதை மறந்துவிடக் கூடாது.

அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணை மார்க்கம் பார்த்து திருமணம் செய்ய உத்தரவிட்டார்கள், செல்வம், அழகு, குடும்பம் ஆகியவற்றைப் பார்த்து அல்ல. ஏனென்றால் செல்வம் மற்றும் அழகு பரம்பரை சோதனைக்கு வழிவகுக்கும், ஆனால் ஒரு பக்தியுள்ள பெண் எல்லா முனைகளிலும் கணவனுக்கு கீழ்ப்படிதலுடனும் விசுவாசத்துடனும் இருப்பாள். அதன்மூலம் ஒரு நல்ல சமூகம் உருவாகும்.

குரல் எழுப்ப வேண்டும்:

தற்போதைய நவீன நாகரிக உலகில், இப்போதெல்லாம் பல திருமணங்கள் தடல்புடலாக மிகப்பெரிய விழாவாக  நடக்கின்றன. எளிமையான திருமணம் நடப்பது மிகமிக குறைவாக இருந்து வருகிறது. திருமணம் எளிமையாக நடத்தப்படுவது ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே, இந்த பிரச்சினையில் சமுதாயம் விசேட கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. வரதட்சணைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும், உறவினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவரிடம் பேசி, வரதட்சணை வாங்குவதோ, கொடுப்பதோ தடை செய்ய வேண்டும். வரதட்சணை கொடுக்கப்படும் திருமணத்திற்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வரதட்சணை என்ற கொடூமையை சமூகத்தில் இருந்து களைய, ஒரு சிறிய அடியை ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். இதனால், தொடக்கத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால் படிப்படியாக உறவினர்கள் உட்பட எல்லோரும் உங்கள் கருத்தை புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை செய்ய வேண்டும்.

வரதட்சணையைத் தடுக்க, சமுதாயத்தில் மதச் சூழலை உருவாக்கி, இஸ்லாமிய விதிகளின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனதிலும் எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இறைநம்பிக்கையாளரின் மகிமையும் வெற்றியும் இறைவனால் நிறுவப்பட்ட வரம்புகளுக்குள் வாழ்வதிலும், அவனது உலகத்தையும் மறுமையை முறையான மற்றும் சிறந்த முறையில் அழகுபடுத்துவதிலும் உள்ளது என்பதை முஸ்லிம்கள் மத்தியில் உணர்த்த வேண்டும் என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இது அனைவரின் கடமையும், பொறுப்புமாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

-             நன்றி: இன்குலாப் உர்தூ நாளிதழ்

-             தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, January 21, 2024

அனுமதி மறுப்பு....!

அசாமில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோவிலுக்கு செல்ல மாநில அரசு அனுமதி மறுப்பு...!



கதை....!

ஒரு கதை - கவிஞர் வைரமுத்து பேச்சு....!




பயப்பட மாட்டோம்....!

காங்கிரஸ் யாருக்கும் பயப்படாது. அசாமில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் போது மல்லிகார்ஜுன கார்கே பேச்சு...!



வரலாறு....!

ராமன் அங்கு பிறந்தான் என்பதுக்கு சான்று இல்லை ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன் அங்கு மசூதி இருந்தது என்பதற்கு சான்று இருந்தது.



மீண்டும் அசாமில்....!

இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் அசாமில் தனது பயணத்தை தொடர்ந்தார்....!



புதிய டெக்னிக்...!

Chinese food truck turns into a full fledged restaurant within minutes.

சீனாவில் கனரக வாகனம் ரெஸ்டாரண்டாக மாறும் காட்சி:



Saturday, January 20, 2024

அழகான காட்சிகள்...!

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் 
2வது மாநில மாநர்ட்டில் அழகிய காட்சிகள்...!



 

எச்சரிக்கை...!

நீங்கள் நின்றுகொண்டு உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா...! 

புற்றுநோய் ஆபத்து எச்சரிக்கை...!!


உலகில் வாழும் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகிறார்கள். அதற்காக நல்ல சத்தான உணவுகளை தேடி தேடி வாங்கி தங்கள் உணவு முறைகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வு கிடைத்துவிடும் என பெரும்பாலோர் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் மனிதனுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க, சத்தான உணவுகள் மட்டும் போதாது. அத்துடன் ஆரோக்கியமான, நல்ல உணவுப் பழக்கங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான், நீண்ட நாள் வாழ்க்கிறோமோ இல்லையோ, குறைந்த அளவு, நோய் இல்லாமல் வாழ முடியும். 

மாறிவரும் உணவு முறைகள்:

தற்போது உலகம் முழுவதும் உணவு சாப்பிடும் முறைகளில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய நவீன உலகம் நின்றுகொண்டு, உணவுகளை சாப்பிடுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறது. திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் உணவுகள் நின்றுகொண்டு சாப்பிடும் வகையில் பறிமாறப்படுகிறது. இதற்காக நீண்ட வரிசையில் விருந்தாளிகள் நின்று உணவுகளை வாங்கிச் சென்று நீண்ட நேரம் நின்றுகொண்டே சாப்பிடுகிறார்கள். ஒருசிலர், நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்படும் மேஜைகளில் உணவுகளை வைத்துக் கொண்டு, பின்னர் நிதானமாக அமர்ந்து அவற்றை சாப்பிடுகிறார்கள். இப்படி, சாப்பிடுகிறவர்களை, அங்குள்ள சிலர், கேலியாக பார்ப்பதையும் நாம் காண முடிகிறது. 

இப்படி, மாறிவரும் உணவு பழக்கங்கள் மூலம் மிகப்பெரிய அளவுக்கு ஆபத்துக்கள் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அப்படி உணர்ந்துகொண்டால், நின்றுகொண்டு சாப்பிடுவதை, அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். நின்றுகொண்டு சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, நன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுடைய வாழ்க்கையை ஆரோக்கிய வாழ்வாக மாற்றிக் கொள்வார்கள். 

ஆரோக்கிய வாழ்விற்கு:

இந்தியர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், முன்பு மிகவும் ஆரோக்கியமாக வாழ காரணமாக அமைந்தது அவர்களின் உணவுமுறையும் உணவு பழக்கவழக்கங்களும் தான். இதனால் முந்தைய தலைமுறை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தது. பல ஆண்டுகள் எந்தவித நோய் இல்லாமல், நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள். எனவே நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால், நமது உணவுகளில் மட்டுமல்லாமல், உணவு உண்ணும் முறைகளிலும் சில நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த பழக்க வழக்கங்கள் மிகவும் அவசியம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:


ஆரோக்கியமாய் வாழ எத்தகையை உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உலகம் முழுவதும் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அண்மையில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, லக்னோவில் உள்ள கல்யாண் சிங் பல்நோக்கு புற்றுநோய் மருத்துவமனை ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நின்றுகொண்டு உணவுகளை சாப்பிடுவதால், குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், உள்ளிட்ட ஆபத்துக்கள் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், உணவுக்குழாயில் பல்வேறு புதிய வகை நோய்கள் உருவாகும் என்றும் ஆய்வு எச்சரிக்கை செய்துள்ளது. 

இது மட்டுமல்ல, உடலில் கட்டிகள் உருவாக வாய்ப்பு உண்டு என்றும், நின்றுகொண்டு சாப்பிடுவதால், அடிக்கடி உடல் பாதிப்பு ஏற்பட்டு, நோய்கள் வரும்  என்றும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

செரிமானக்கோளாறு:

லக்னோ புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர்களின் ஆய்வின்படி, நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது என்றும், இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்றும், இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நின்றுகொண்டு சாப்பிடும்போது, ஒருவர் அதிக நேரம் சாப்பிட நேரிடும் என்று கூறியுள்ள மருத்துவர்கள், எனவே, எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது ஆலோசனை கூறியுள்ளனர். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும்  பசி எடுக்க தொடங்கிவிடும். விரைவான செரிமானம்  ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

உட்கார்ந்து சாப்பிடுங்கள்:

எப்போதும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருக்கும் என்றும்,  அதிகமாக சாப்பிடுதல், தவறான நேரங்களில் பசி எடுத்தல் போன்ற பிரச்சினைகள் வராது என்றும் உட்கார்ந்து சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் தானாக மூளை வயிறுக்கு சிக்னல் அனுப்பிவிடும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடும்போது நரம்பு மண்டலம் சீராக இருப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைப்பதுடன் முழுமையாக செரிமானமடையும். எனவே உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது. அமர்ந்து சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படாது என்றும், உடலின் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செயல்பட வைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவது இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை வலுவாக்கி, முதுகு வலியை குறைக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதய ஆரோக்கியத்திற்கும் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதுதான் சிறந்த முறையாகும். 

இஸ்லாமிய முறை:

மனித வாழ்க்கை எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு, இஸ்லாமிய நெறிமுறைகளில் அழகான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக தான், நின்றுகொண்டு சாப்பிடுவது, நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து இருக்கிறார்கள். நின்று கொண்டு சாப்பிடுவதும் குடிப்பதும் மக்ரூஹ் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கங்களுக்கு சில ஹதீஸ்கள் கடுமையாக எச்சரிக்கின்றன. உட்கார்ந்த நிலையில் சாப்பிடுவதும் குடிப்பதும் இஸ்லாமிய வழக்கம் என்றும் நமக்கு அழகாக சொல்லப்பட்டுள்ளது. சாப்பிடும் பழக்க வழக்கங்கள் குறித்து நடத்தப்படும் பல்வேறு ஆய்வுகளை நாம் கவனத்தில் எடுத்துகொண்டு,நமது முன்னோர்கள் கடைப்பிடித்த நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து நிச்சயம் தப்பிக்கலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்