Tuesday, October 13, 2015

புண்ணியவானுக்கு நன்றி...!

வாய்ப்பு கொடுக்காத அந்த புண்ணியவானுக்கு நன்றி...!


உலக புகழ் பெற்று விளங்கும் சன் டி.வி.யில் விஷூவல் எடிட்டராக கலக்கி கொண்டு இருப்பவர் சகோதரர் கதீர் சரவணன்.

செல்பேசியில் நேற்று தொடர்பு கொண்ட அவரிடம் அவரது படத்தொகுப்பு திறமையை பாராட்டி புகழ்ந்து தள்ளினேன்.

ஆதித்யா டி.வி.யில் வரும் ஒரு காமெடி கலக்கல் நிகழ்ச்சிக்கு கதீர் சரவணன்தான் எடிட்டர்.

டைட்டில் கார்ட்டில் அவர் பெயர் பார்த்த போது மனம் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தது.

செல்பேசியில் பேசியபோது சரவணனுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தேன்.

அத்துடன் அவருடன் இணைந்து பணியாற்றிய தொலைக்காட்சியில் எடிட்டராக பணிபுரிய சரவணனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் வேதனையுடன் தெரிவித்தேன்.

அதற்கு சரவணன் சொன்ன பதில் என்ன தெரியுமா.

எல்லாம் நல்லதுக்குதான் சார்.

அங்கு எனக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் இப்போது என்னால் இதுபோல் சாதித்து இருக்க முடியாது.

உண்மைதான் சரவணன்.

உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த அந்த புண்ணியவானுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

எஸ்.ஏ.அப்துல்அஜீஸ் 

பத்திரிகையாளர்.

No comments: