Tuesday, March 31, 2026

திமுக கூட்டணி தான் வெல்லும் - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!

 தமிழகத்தில் தேர்தல் பெருவிழா:


திமுகவிற்கு முஸ்லிம் சமுதாயம் எப்போதும் துணையாக இருக்கும்...!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெல்லும். 

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்....!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பு, தேநீர் விருந்து அளித்து, தேர்தல் வியூகம் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கூட்டணி தலைவர்கள் செல்வபெருந்தகை, கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், வைகோ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று,  தங்கள் கருத்துகளை கூறி, தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் நல்ல ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.  அந்த வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனும் தனது கருத்துகளையும், ஆலோசனைகளையும், முஸ்லிம் சமுதாயத்தின் நிலைப்பாடு குறித்தும் சிறிய உரை நிகழ்த்தினார். அதன் முழு விவரம் வருமாறு:

இந்தியாவிற்கே வழிகாட்டும் சிறந்த ஆட்சி :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு நல்ல ஆட்சியை, சிறந்த ஆட்சியை  தமிழகத்தில் தற்போது தந்துக் கொண்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு நல்ல ஆட்சியை வருங்காலத்திலும் நிச்சயமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தருவார். அப்படி ஒரு சிறந்த ஆட்சியை தருவதற்காக ஏக இறைவன் அவருக்கு அருள் புரிவான் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது. அதற்காக ஏக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். 

அருமையான கருத்து தெரிவித்த கூட்டணி தலைவர்கள் :

இங்கு ஒன்றை மட்டும்  சொல்லி நான் என்னுடைய உரையை  நிறைவு செய்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்துள்ள அருமை கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும், இங்கு உரையாற்றும்போது அருமையான கருத்துகளை, எண்ணங்களை தெரிவித்தார்கள். மேலும் பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.  அவற்றையெல்லாம் நாம் உள்மனதில் வாங்கிக் கொண்டு, அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அந்த பொறுப்பை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும். 

மீண்டும் உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற கூட்டணி தான் வெல்லும். இதை நாளைய வரலாறு நிச்சயம் சொல்லும். அதற்கு முக்கிய காரணம், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் அனைவரும் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள். திமுகவின் செயல்பாடுகள், பணிகள் மீது அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல நல்லத் திட்டங்கள் மூலம் பலன் அடைந்த மக்கள், மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விருப்பம் தான் திமுகவின் மிகப்பெரிய பலம். அதுதான் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய வலிமையாகும். 

திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்கள். தற்போது மிகச் சிறந்த ஆட்சி மூலம் எப்படி இந்தியாவிற்கே முன்மாதிரி ஆட்சியாக இருக்கிறதோ, அதேபோன்று, உலகத் தமிழ் செம்மொழி நடத்தப்பட்ட பிறகு, உலகம் முழுவதும் தமிழ் மொழி ஆட்சி செய்யும் என்பது உறுதி. அப்படிப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு தமிழர்களான நமக்கு கிடைக்கும். 

முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல திட்டங்கள் :

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி தான் மீண்டும் அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  நீங்கள் (திமுக) தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் அற்புதமான பல அறிவிப்புகளை, வாக்குறுதிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். 

குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி, நாங்கள் எதையெல்லாம் சொல்லி வந்தோமோ, அதையெல்லாம் திட்டங்களாக செய்து கொடுத்து இருக்கிறீர்கள். முஸ்லிம் சமுதாய மக்களின் எண்ணங்களை, ஆசைகளை பூர்த்தி செய்துள்ளீர்கள். இனி, வருங்காலத்திலும் செய்து கொடுப்பீர்கள் என்று உறுதி அளித்துள்ளீர்கள். அதற்காக நான் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நன்றியும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வந்துள்ள முஸ்லிம் சமுதாய தலைவர்கள் சார்பாகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கடமை எனக்கு உள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று தமிழக மக்களின் எண்ணங்களை, ஆசைகளை, பூர்த்தி செய்து, தமிழகத்தின் கவுரவத்தை நிச்சயம் காப்பற்றும். அதன்மூலம் தமிழ்நாடு எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Progress....!

Don't measure 

your progress 

using 

someone else's 

ruler.




வாழ்க்கை....!

 தேடாத போது 

கிடைப்பதும், 

தேடும் போது 

தொலைப்பதும் 

வாய்ப்புகள் மட்டுமல்ல, 

வாழ்க்கையும் தான்..!



வீழ்ந்தது அமெரிக்கா...!

 வீழ்ந்தது அமெரிக்கா...!

அமெரிக்கர்கள் இன்னும் சில மணிநேரங்களில் உறக்கத்திலிருந்து எழுந்து பார்க்கும்போது, தங்கள் நாட்டின் உலகளாவிய ஆதிக்கம் உண்மையாகவே முடிவுக்கு வந்திருப்பதைக் காண்பார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சரிவு இன்று நிகழ்ந்திருக்கிறது. 

வல்லரசு என்ற மகுடம் அமெரிக்காவின் தலையிலிருந்து நழுவி விழுந்த அந்தத் தருணத்தை உலகம் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளை மாளிகையிலிருந்து கசிந்த அந்த ஒரு செய்தி உலகத்தையே உலுக்கியுள்ளது. 

ஈரான் போரை முடிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீட்பது அவசியம் இல்லை என்றும் அதிபர் டிரம்ப் தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் அமெரிக்க ஆதிக்கம் சரிந்துவிட்ட இந்தச் செய்தியை முதலில் Wall Street Journal வெளியிட்டது, பின்னர் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் Caroline Levitt  மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் Marco Rubio ஆகியோரால் இது உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரு நாட்டின் ஆதிக்கம் ஒரே இரவில் இவ்வளவு அதிரடியாக மாறிய ஒரு வரலாற்றுப் பக்கத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை.

எந்தச் சொற்களாலும் இந்த நிகழ்வின் தீவிரத்தை மறைக்க முடியாது. 

ஒரு நாட்டையும் அதன் அரசாங்கத்தையும் அழிப்பதற்காக நீங்கள் போருக்குச் செல்கிறீர்கள், ஆனால் இறுதியில் உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதையை (ஜலசந்தி) உங்கள் எதிரியின் கட்டுப்பாட்டிலேயே விட்டுவிட்டு வெளியேறுகிறீர்கள் என்றால், உங்கள் அந்தஸ்து சிதைந்துவிட்டது என்றுதான் அர்த்தம்!

இது வெறும் ஒரு போர் நிறுத்தம் அல்ல, இது ஒரு சரணாகதி. 

உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையை எதிரியின் கட்டுப்பாட்டில் அப்படியே விட்டுவிட்டு வெளியேறுவது என்பது, அமெரிக்கா தனது உலகளாவிய அதிகாரத்தை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது என்பதன் அடையாளம்.

ஒரு தேசத்தின் பலம் அதன் ராணுவத்தில் இல்லை, அதன் 'செல்வாக்கில்' (Prestige) இருக்கிறது. 

ஒரு நாட்டை அழிக்கப் போருக்குச் சென்றுவிட்டு, இறுதியில் அந்த நாட்டின் மிக முக்கியமான மூலோபாயப் பகுதியைக் கூட மீட்க முடியாமல் திரும்புவது, அமெரிக்காவின் ராணுவ வலிமை ஒரு “மாயை”என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.

"ஒரு வல்லரசு ஒருபோதும் தனது எதிரியிடம் மண்டியிடாது. ஆனால் இன்று, உலகின் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தீர்மானிக்கும் நிலைக்கு அமெரிக்காவே தள்ளிவிட்டுள்ளது."

இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், அமெரிக்கா இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த பிராந்தியங்களில் இருந்த அதன் ராணுவத் தளங்கள் அனைத்தும் ஈரானால்  தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 

தளம் இருந்த இடத்தில் இன்று சாம்பல் மட்டுமே மிஞ்சியுள்ளது. தற்காத்துக்கொள்ளக் கூட இடமில்லாமல் ஒரு வல்லரசு நாடு வெளியேறுகிறது என்றால், அது அதன் "வீழ்ச்சியின் இறுதி அத்தியாயம்" ஆகும்.

வரலாற்றில் பேரரசுகள் வீழ்வதற்குப் பல தசாப்தங்கள் எடுக்கும். ரோமானியப் பேரரசு முதல் பிரிட்டிஷ் பேரரசு வரை அனைத்தும் மெதுவாகவே சரிந்தன. 

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முழுவதும் நிலைநாட்டப்பட்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று ஒரே நாளில் சிதைந்து போயுள்ளது.

அமெரிக்கா இனி உலகை வழிநடத்தும் ‘Super Power ' அல்ல. 

ஹார்முஸ் ஜலசந்தியின் அலைகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 

ஒரே நாளில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. 

அமெரிக்கப் பேரரசு உண்மையிலேயே முடிந்துவிட்டது!

நன்றி : Mukinthan Thurairajasingham

- எக்ஸ் வலைத்தளப் பதிவில் இருந்து...

நூல் வழங்கல்....!

என்னுடைய

 '' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

நூலை செய்தியாளர் 

அக்‍ஷயாவிற்கு வழங்கி

 வாழ்த்து கூறி மகிழ்ச்சி 

அடைந்த இனிமையான 

தருணம்....!



நூல்கள்....!

என்னுடைய

 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'

 மற்றும்

 ' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை, 

இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த முன்னோடிகள்

 வாணியம்பாடி எஸ்.டி.நிஸார் அகமது,

 குரோம் நசீர், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்

 ஆகியோரிடம் வழங்கி, வாழ்த்து பெற்று

 மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.

தோழர்கள் அமோக வரவேற்பு...!



தமிழக தேர்தல் பெருவிழா: எச்.அப்துல் பாசித் நம்பிக்கை....!

 தமிழக தேர்தல் பெருவிழா:

பெரும்பான்மை சமுதாய மக்களின் ஆதரவுடன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும்...!

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் நம்பிக்கை....!! 

புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில்  ஜனநாயகத் திருவிழா 2026 என்ற தலைப்பில்  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் மோதும் கட்சிகள் கணிக்கும் வாக்காளர்கள் என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தேசிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல் பாசித் கலந்துகொண்டார். விவாத நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். 

வாணியம்பாடி தொகுதி மக்களின் வாக்கு யாருக்கு :

விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், வாணியம்பாடி தொகுதியில்  பல்வேறு வசதிகள் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் வாணியம்பாடி உள்ளிட்ட எந்த தொகுதியிலும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்.  அதற்கு பதில் அளித்த அப்துல் பாசித், செந்தில் குமார் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து கூறினார்கள். நான் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவன். அப்போது எனக்கு பெரும் ஆதரவாக இருந்தவர் செந்தில்குமார் அவர்களின் தந்தை கோபால் அவர்கள். அப்போது வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகரங்கள் வாணியம்பாடி நகரங்களில் மருத்துவமனைகளுக்கு தேவையான நிதியுதவி பெற்று தரப்பட்டது. தரைப்பாலம் மற்றும் மேம்பாலம் குறித்து பேசினார்கள். ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வாணியம்பாடி பகுதியில் உள்ள 55 கிராமங்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றால் தான் வரும். 

மத்திய அரசே காரணம் :

எனவே மேம்பாலம் தேவை என்பதை உணர்ந்து மத்தியில் பாமகவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு வேலு அவர்களை வாணியம்பாடிக்கு அழைத்து மனு கொடுத்ததுவுடன் பின்னர் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த இ.அஹமது அவர்களிடம் கோரிக்கை வைத்து 2012ஆம் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்கள். அன்றுமுதல் இன்று வரை அந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆனால் 2014ஆம் ஆண்டு முதல் ஒன்றியதில் அதிமுகவின் தோழமை கட்சி ஆட்சியில் உள்ளது. முக்கிய திட்டங்கள் குறித்து நிறைவேற்றும்போது கருத்து வேறுபாடுகளை மறந்து மக்கள் நலனில் முக்கியத்துவம் கொடுத்த செயல்பட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தாலும், சிலர் வேண்டும் என்றே வழக்குப்பதிவு செய்து தடை உத்தரவு வாங்குகிறார்கள். நீங்கள் நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும் நிலங்களை கையகப்படுத்தும் விவாகரத்தை எளிமையாக செய்ய முடியாது. அதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால் எங்களை பொருத்தவைர மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக உள்ளது. ஒருசில குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் உள்ளன. ஜனநாயகத்தில் சட்டம் ஒரு பக்கமும், மரபு ஒரு பக்கமும் இருக்கும். நீர்தேக்கம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இறுதி வடிவம் பெற்றுவிட்டன. வாணியம்பாடி மக்களின் குடிநீர் தேவை யூர்த்தி செய்ய ஆலங்காயம் பகுதியில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தனியார் கல்விச் சங்கங்கள் ஆர்வம் :

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் குறைவாக இருக்க முக்கிய காரணம்,திருப்பத்தூரில் கிறித்துவ அமைப்பு சார்பில் கல்லூரி உள்ளது வாணிணியம்பாடியில் இஸ்லாமிய கல்விச் சங்கம், இந்து கல்விச் சங்கம் உள்ளது. இதேபோன்று ஆம்பூரில் இந்து கல்விச் சங்கம், முஸ்லிம் கல்விச் சங்கம், கிறிஸ்துவ கல்விச் சங்கம் உள்ளன. 1836 ஆம் ஆண்டில் இருந்தே வாணியம்பாடியில் இந்து, முஸ்லிம் கல்விச் சங்கள் இணைந்து பள்ளிக்கூடம் நடத்திய வரலாறு உள்ளது. நாங்கள் அரசின் தயவை எதிர்த்துபார்த்து கல்வி பணிகளை செய்யவில்லை. நாங்கள் மேடையில் நாங்கள் காரச்சாரமாக பேசிக் கொள்வோம். ஆனால் மேடையை விட்டு கீழே இறங்கியதும் தோழமை உணர்வுடன் கைகோர்த்துச் செல்வோம். 

வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்மூலம் கிராமப்பகுதிகளில் தண்ணீர் பிரசசினைக்கு தீர்வு காணப்பட்டது. ஒருசில கிராமங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது பகுதிகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் நன்கு படித்துவிட்டு, ஐ.டி. நிறுவனங்களில் சேர்நது விட்டார்கள். விவசாயம் செய்ய விரும்பவில்லை. அதுதான் கரும்பு சாகுபடி குறைவுக்கு முக்கிய காரணமாகும். ஆனால் விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உண்டு நமக்கும் உண்டு. எனவே தான், விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. 

கிராமப்புறங்களில் 22 நீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 48 நாட்கள் தண்ணீர் பிரச்சினை வரும். இது புதிது அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக உள்ளது. எனவே தான் காவேரி குடிநீர் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது. வாணியம்பாடி பகுதியில் தொழில் நிறுவனங்கள் தொடங்க மக்கள் ஆர்வம் இல்லாதற்கு காரணம் மத்திய அரசு சரியான சலுகைகளை வழங்குவதில்லை. தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் நலிந்துவிட்டன. இந்த பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். புதிய சிப்காட் அதாவது தொழில் பேட்டை உருவாக்க மத்திய மானியம் தருவதில்லை. 

திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் :

சட்டம் ஒழுங்கு பிரச்சினை சரியில்லை என்பது வீண் குற்றச்சாட்டாகும். திமுக அரசு கடுமையாக நடவடிக்கைகள் மூலம் குற்றங்களை தடுத்து வருகிறது.  கஞ்சா என்பது சமூகத்தில் உள்ள ஒரு தீமை, அதை ஒழிக்க சமூகத்தில் ஒரு விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் இணைந்து செயல்பட்டால் தான் தீமைகளை ஒழிக்க முடியும். 

திமுக அணி வாணியம்பாடி உட்பட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். எங்களை பொருத்தவரை கொள்கை தான் முக்கியம். இந்து முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நின்றபோது கூட, வாணியம்பாடி மக்கள் கொள்கையின் அடிப்பைடையில் அவர்களை தோல்வி அடையச் செய்தார்கள். சாதி, மதம் ஆகியவற்றை நாங்கள் பார்ப்பது இல்லை. அதிமுகவைச் சேர்ந்த அண்ணன் வடிவேலை நாங்கள் ஆதரவு அளித்து ஜெயித்து வைத்தோம். நாங்கள் இந்த முறை பெரும்பான்மை சமுதாயத்தின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். மதத்தை வைத்து ஜெயிக்க மாட்டோம். மனதை கவர்ந்து ஜெயிப்போம். இறைவனை வணங்கி வாழ்வோம். எளியோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடன் இணைங்கி வாழ்வோம். இதுதான் எங்கள் கொள்கை. இந்த கொள்கை மூலம் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். 

இவ்வாறு எச்.அப்துல் பாசித் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, March 30, 2026

கடிதம்....!

 தேர்தல் களம் தொடர்பான 

எனது கட்டுரைக்கு வாசகரின் 

பாராட்டுக் கடிதம்...!



எச்சரிக்கை....!

இணையதள திருடர்கள்

எச்சரிக்கை....!



Lie...!

Even the 

smallest lie 

can break the 

biggest trust.




உரை....!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

அளித்த தேநீர் விருந்தில் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 

தலைவர் செல்வபெருந்தகை உரை...!



Speech...!

தேநீர் விருந்தில் உரை...!

மதச்சார்பற்ற கூட்டணியில் மாபெரும் கூட்டணி அமைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நடைபெறும் தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டணி புதிதாக அமைக்க அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல.

தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் , உள்ளாட்சி அமைப்பு தேர்தல் மாபெரும் கூட்டணி அமைத்து, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டு காலம் தொடர் இருக்கக் கூடிய மதச்சார்பற்ற கூட்டணி அமைந்திருக்கிறது. 

இது உள்ளபடியே பாராட்டிற்குரியது மகிழ்ச்சிக்குரியது. 

அப்படிப்பட்ட மதச்சார்பற்ற கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது.

எப்படி களம் காண இருக்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து கலந்து பேசி முடிவு எட்டியவுடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

எல்லாவற்றையும் கடந்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். ஏற்கனவே இருந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம். 

என்னுடைய அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.



தாக்கல்....!

கொளத்தூர் 

தொகுதியில் 

திமுக தலைவர் 

மு.க.ஸ்டாலின் 

மனு தாக்கல்...!



மனு....!

 கொளத்தூர் தொகுதியில்

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

மனு தாக்கல்...!



மனு...!

 மனு தாக்கல்...!

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.



Sunday, March 29, 2026

Train...!

 Train 

your mind 

to see 

the good 

in every 

situation.




எவரையும்....!

 எவரையும் திருத்த நினைக்காதீர்கள். 

மீறி அதற்காக முயற்சி செய்தால்

 தோற்றுவிடுவீர்கள். 

காலம் அவர்களை திருத்திவிடும். 

இல்லையேல், நிச்சயம் காலம் 

அவர்களுக்கு உணர்த்திவிடும்.



ஞாபகம் வருதே...!

ஞாபகம் வருதே....

ஞாபகம் வருதே....

ஞாபகம் வருதே...

மலரும் நினைவுகள்...



Saturday, March 28, 2026

மகிழ்ச்சி...!

 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் 

தேர்தலில், இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், வாணியம்பாடி வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகியோருக்கு நான் எழுதிய 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும் 'இந்திய முஸ்லிம்கள்-பாகம் 1' ஆகிய நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்...!

தேர்தல் களம் காணும் இரண்டு வைரங்கள்....!

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் :

களம் காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இரண்டு வைரங்கள்....! 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் கோடைக் காலம் தொடங்குவதற்கு  முன்பாகவே படுவேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அந்த வெயிலுக்கு நிகராக தற்போதே அரசியல் களம் சூடுபிடித்து விறுவிறுப்பு அடைந்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின்  பட்டியலை வெளியிட்டுள்ளன. 

அதன்படி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில், அதாவது தங்களது சின்னமான ஏணிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்களின் நேர்காணலுக்குப் பிறகு இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

முன்னணி தலைவர்களின் தியாகம் :

இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்கள் தேர்வில் ஒரு சிறப்பு அம்சம் என்னெவென்றால், இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. தலைவர் பேராசிரியர், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாரும் தேர்தலில் போட்டியிடாமல், புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். உண்மையிலேயே இதுஒரு மிகப்பெரிய தியாகம் என்றே கூற வேண்டும்.  பிற இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், தலைவர், பொதுச் செயலாளர் என மூத்த தலைவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில், சமுதாய நோக்கம் மட்டுமே கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  இதுபோன்ற ஒரு நிலை பிற இயக்கங்களில் நாம் காண முடியவில்லை. இதன்மூலம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் இயங்கும் இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம், எப்போதும் சமுதாயம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் சுய விருப்பங்களை ஒதுக்கிவிட்டு, ஆசைகளை புறந்தள்ளிவிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில தியாகங்களை நாம் செய்துதான் ஆக வேண்டும். அப்போது தான், சமுதாயத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணி தலைவர்களின் தியாகங்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த தலைவர்களின் நினைத்து நாம் பெருமை அடைய வேண்டும். 

ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான் :

இதுஒருபுறம் இருக்க, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களும் உண்மையிலேயே இரண்டு வைரங்கள் என்றே கூற வேண்டும். 

அந்த வகையில், பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை. 1968ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் முகமது யாசின் (ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்), தாயார் பெயர் ஜெகபர்நிஷா.  

இவரது துணைவியார் பெயர் ஷமிம் நிஷா, ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற 10வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் (1986 - 1989) பி.எஸ்சி பட்டம் பெற்றவர். கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார்.  சிறு வயது முதலே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலே பணியாற்றி வருபவர். 

மேலும், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராக கல்வி சேவையாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் உரையாடும் ஆற்றல் பெற்றவர். தஞ்சை மாவட்டம், ஆடுதுறை முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தொடர்ந்து 15 ஆண்டுகள் செயலாளராக சேவையாற்றியவர். திருவிடைமருதூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 30 மஹல்லா ஜமாஅத்தினுடைய கூட்டமைப்பிற்கு தலைவராக சேவையாற்றி வருகிறார்.

                                            ====================

"2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டியவர்கள். அதற்கு முழு தகுதிப் பெற்றவர்கள்.தமிழகச் சட்டப்பேரவையில் சமுதாயத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகிய இரண்டு பேரும் முறையே பாபநாசம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்"

                                                ====================

அத்துடன், உளுந்தூர்பேட்டை அருகே உருவாகி வரும் ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக பொறுப்பேற்று சேவையாற்றி வருகிறார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார். சவூதி அரேபியா, அமீரகம், குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.

கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டினை வரவேற்பு குழு தலைவராக பொறுப்பேற்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையோடு தமிழகமே வியக்கத்தக்க வகையில் சிறப்பாக நடத்தி காட்டினார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டவர்.

எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் :

இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் எப்படி இ.யூ.முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டு, சமுதாய நோக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறாரோ, அதேபோன்று, எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கும், பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்து, இ.யூ.முஸ்லிம் லீகிற்காக தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு, தொடர்ந்து இயக்கத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். 

இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் உறுப்பினர், மாநில பொதுக்குழு உறுப்பினர் என இயக்கத்தில் பல பொறுப்புகளில் உள்ள சையத் பாரூக், வாணிம்பாடி, நகராட்சியின் முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வென்றவர் ஆவார். வாணியம்பாடியில் உள்ள எஸ்.எஸ்.பி.குரூப் தொழில் நிறுவனங்களின் சேர்மனாக இருக்கும்  சையத் பாரூக், பல்வேறு சமுதாயப் பணிகளிலும் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். 

பாரம்பரியமான வாணிம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கனவே 2016 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார்.  தற்போது இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக தேர்தலில் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.  வரும் தேர்தலில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் நிச்சயம் வெற்றிபெற்று வாணியம்பாடியில் புதிய வரலாறு படைப்பார். அதன்மூலம் வாணியம்பாடி தொகுதி குறித்து இருந்த தவறான எண்ணங்களை, சிந்தனைகளை அவர் நிச்சயம் வீழ்த்துவார். 

இரண்டு வைரங்களின் வெற்றி உறுதி :

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டியவர்கள். அதற்கு முழு தகுதிப் பெற்றவர்கள். இரண்டு வேட்பாளர்கள் குறித்து நாம் மேலே குறிப்பிட்ட தகவல்கள் மூலம், இரண்டு பேரும் உண்மையிலே வைரங்கள் என்றே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். அப்படி தான் நாம் கூற வேண்டும். தமிழகச் சட்டப்பேரவையில் சமுதாயத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகிய இரண்டு பேரும் முறையே பாபநாசம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். 

இந்த இரண்டு பேரின் வெற்றி என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றியாக சமுதாயம் கருதக் கூடாது. சமுதாயத்தின் வெற்றியாக கருதி, அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஏக இறைவனிடம் நாள்தோறும் துஆ கேட்க வேண்டும். ஏக இறைவன் விரும்பிவிட்டால், இரண்டு பேரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இன்ஷா அல்லாஹ், நிச்சயம் ஏக இறைவன், ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகியோருக்கும் வெற்றிக் கனியை கண்டிப்பாக வழங்குவான் என்று உறுதியாக நம்புவோம். அந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இருவரின் வெற்றிக்காக கடுமையான உழைப்பை நல்க முன்வருவோம். அப்படி நாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டு செயல்பட்டால், கடுமையாக உழைத்தால், தேர்தல் களத்தில் நடக்கும் சதிகளை முறியடித்தால், இந்த இரண்டு வைரங்களின் வெற்றி உறுதி என்று இப்போதே அடித்துக் கூறலாம். இன்ஷா அல்லாஹ், தமிழக சட்டப்பேரவையில் நிச்சயம் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் குரல் இனி நிச்சயம் ஒலிக்கும். அதன்மூலம் சமுதாயத்திற்கு புதிய விடியல் பிறக்கும். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Tomorrow...!

We always work

 for a better tomorrow. 

But when tomorrow comes, 

instead of enjoying it, 

we again think of a 

better tomorrow. 

Let's have a better day.




சிந்தனை....!

ஆசைகளை வளர்த்துக் 

கொள்ளுங்கள். தவறில்லை. 

ஆசைகளுடன் திறமைகளையும் 

வளர்த்துக் கொண்டால் 

வாழ்க்கை இனிமையாக ஜொலிக்கும். 

மேலும் உங்களை நீங்களே சரி 

செய்துகொள்ள முயலுங்கள். 

அதைவிட சிறந்த மாற்றம் 

வேறொன்றும் இல்லை.



பாராட்டு....!

என்னுடைய 

மதீனாவில் உயர்ந்த 

வாழ்க்கைத் தரம் கட்டுரைக்கு 

வாசகரின் பாராட்டு கடிதம்....!



கட்டுரை....!

முதுகுளத்தூர். காம் 

இணையதள ரமழான் சிறப்பு மலரில், 

நான் எழுதிய 

"புனித ரமழானில் நடைபெறும் 

பன்முக கலாச்சார சந்தை" 

கட்டுரை வெளிடப்பட்டுள்ளது.



Friday, March 27, 2026

நூல்கள்....!

எனது 

' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

மற்றும்

 'இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை, 

ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி,

வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் ஆகியோருக்கு வழங்கி,

அன்பையும் வாழ்த்தையும் பெற்ற இனிய தருணம்.

நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!



ஒரு விருந்தோம்பல் மூலம் உலக மக்களை வியக்க வைத்த மஸ்ஜிதுன் நபவி​....!

"ஒரு விருந்தோம்பல் மூலம் உலக மக்களை வியக்க வைத்த மஸ்ஜிதுன் நபவி​ "

புனித ரமழான் மாதம் விடைப்பெற்று சென்று விட்ட நிலையில் கூட, அந்த மாதத்தின் தாக்கம் இன்னும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  நோன்பு காலத்தில் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் முஸ்லிம்களை மிகச் சிறந்த மனிதர்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஓர் இறைக் கொள்கையில் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளைப்படி, முஸ்லிம்கள் ஈமானில் மிகமிக கொள்கை உறுதியுடன் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சாத்தான் மனதை குழப்பினாலும், ரமழான் மாதத்தில் கிடைத்த அற்புதமான ஆன்மீக நெறிமுறைகள், அனுபவங்கள் மூலம் சாத்தனை விரட்டிவிட்டு, புனித பாதையில் இஸ்லாமியர்கள் நடைபோட்டுக் கொண்டே  இருக்கிறார்கள். 

புனித ரமழான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து மஸ்ஜித்துகளிலும் இஃப்தார் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிரமாண்ட மஸ்ஜித்துகள் முதல் மிகமிக சிறிய மஸ்ஜித்துகள் வரை அனைத்திலும் நோன்பாளிகளுக்கு அழகிய முறையில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த இஃப்தார் விருந்தில் அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, இஃப்தார் விருந்தை உண்டு மகிழ்ச்சி அடையும் அற்புதமான சம்பவங்கள் ரமழான் முழுவதும் நடைபெறுவதை நாம் காணலாம். இஃப்தார் விருந்து அளிப்பது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பணக்காரர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் நினைக்கிறார்கள். அதன் காரணமாக  தங்கள் வசதிக்கு ஏற்ப, இஃப்தார் விருந்துகளை நடத்தி, ஆனந்தம் அடைகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் புனித மக்காவில் உள்ள மக்கா ஹரம் ஷரீபில் நடைபெறும்  இஃப்தார்  விருந்து நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதேபோன்று, சவூதி அரேபியாவின் மதினா நகரில் உள்ள மஸ்ஜித்துன் நபவியில் நடைபெறும் இஃப்தார் விருந்தோம்பல் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது என்றே கூறலாம். இந்த இரண்டு புனித மஸ்ஜித்துகளில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை இஸ்லாமியர்கள் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றே கருதுகிறார்கள். அதன் காரணமாக புனித ரமழானில் உம்ரா பயணம் மேற்கொள்வதை உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதன்படி உம்ரா பயணம் செய்கிறார்கள். 

சாதனை படைத்த இஃப்தார் விருந்து  :

இப்படி உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், ரமழான் காலத்தில் மக்கா, மதீனா நகரங்களுக்கு ஆர்வத்துடன் வருவதால், அந்த நகரங்கள் களைகட்டி, மிகப்பெரிய அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் உள்ள மஸ்ஜித்துன் நபவியில், இந்த ரமழானில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  மஸ்ஜித்துன் நபவியில் ரமழான் மாதம் முழுவதும் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு வினியோகிக்கம் செய்யப்பட்டு சாதனை நிகழ்த்த்தப்பட்டுள்ளது. 

                                                =======================

"புனித ரமழான் மாதத்தில் மதீனாவில் உள்ள மஸ்ஜித்துன் நபவியில், சுமார் ஒரு கோடி இஃப்தார் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மதீனா மாநகரம், ஏக இறைவனின் அன்பை பெற்று மேலும் ஒரு புனித நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது"

                                                =======================

மஸ்ஜித்துன் நபவி  மற்றும் அதன் முற்றங்களில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சேவை அமைப்பின் மூலம் இந்த உணவுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.  இது, ரமழான் மாதத்தில் யாத்ரீகர்கள் மீது காட்டப்படும் அக்கறையைப் பிரதிபலிக்கும் வகையில், இஃப்தார் உணவுகள் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின்படி பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.

மனிதாபிமான சேவை :

ஒற்றுமை மற்றும் மனிதாபிமான சேவையின் விழுமியங்களை மேம்படுத்துவதற்கும், யாத்ரீகர்கள் தங்கள் மார்க்கக் கடமைகளை ஒரு பாதுகாப்பான மற்றும் ஆன்மீகச் சூழலில் நிறைவேற்றுவதற்கு வழிவகுப்பதற்கும் இந்த இஃப்தார் விருந்தோபல் அற்புதமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என்றே கூற வேண்டும்.  இத்தகைய  முயற்சிகள் மதீனாவில் உள்ள பல்வேறு தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. மதீனாவில் உள்ள பொது ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, மொத்தம்  மொத்தம் 90 லட்சத்து 15 ஆயிரத்து 322 இஃப்தார் உணவுகளை விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதீனா மக்களிடையே இயற்கையிலேயே விருந்தோம்பல் பண்பு இருந்து வருவதால், அவர்கள், எப்போதும் மதீனாவிற்கு வரும் இஸ்லாமியர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பு செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த வகையில் புனித ரமழானில் மிகப்பெரிய அளவுக்கு இஃப்தார் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். 

இந்த இஃப்தார் விருந்தோம்பல் அனைத்தும்,  ஏக இறைவனின் அன்பை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செய்யப்படும் ஒரு அழகிய செயலாகும். அந்த வகையில், ரமழான் மாத்தில் நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித்தில் சுமார் ஒரு கோடி அளவுக்கு இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு அளிக்கப்பட்டு, மதீனா மாநகரம், ஏக இறைவனின் அன்பை பெற்று மேலும் ஒரு புனித நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Never....!

Never

 forget a person 

who came to you 

with a torch

 in the dark.




மன்னிப்பு...!

சண்டைக்குப் பின் 

மன்னிப்பு கேட்பவர்கள் 

எல்லோரும் தவறு 

செய்தவர்கள் அல்ல. 

நேசித்த உறவை 

இழக்க மனமில்லாமல் தான் 

மன்னிப்பு கேட்க 

விரும்புகிறார்கள்...!



நூல்கள்...!

 என்னுடைய 

'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' 

மற்றும் 

' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை, 

தோழர்களுக்கு வழங்கி 

மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.

தோழர்கள் அமோக வரவேற்பு...!



Thursday, March 26, 2026

தி இந்து ஆங்கில நாளிதழக்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தின் வருகையால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் எந்தப் பிளவும் ஏற்படாது...!

 இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே முஸ்லிம்களின் ஒரே பாரம்பரியமான இயக்கம்...!!

தி இந்து ஆங்கில நாளிதழக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணல்....!!! 

சென்னை, மார்ச்.27- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டிடுவதால், சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் எந்தப் பிளவும் ஏற்படாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக்கழகம் இன்னும் தேர்தலில் தனது வலிமையை நிரூபிக்கவில்லை என்றும் விஜய் சினிமா கவர்ச்சியை அடிப்படையாக கொண்டு, தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றும் எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் அவரால் மிகப்பெரிய அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த முடியாது  என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,  தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தியாளர் எஸ்.கணேசனுக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:

கேள்வி : திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து வீழ்த்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த தேர்தல் உங்களுடைய பார்வையில் எந்தளவுக்கு முக்கியத்துவமாக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் : ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் நடக்கும் அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானதாகவே நாங்கள் கருதுகிறோம். தற்போது நடக்கும் தேர்தலைப் பொருத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, மற்ற அணிகளை விட மிகவும் வலிமையாக இருப்பதாகவே நாங்கள் உறுதியாக நினைக்கிறோம். 

திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பலன் அடையும் வகையில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான பலன்களை பெற்றுள்ளார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு மனநிலை மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகம், திட்டங்கள் நிறைவேற்றம் ஆகியவற்றால், திமுக அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பு அலையும் வீசவில்லை. மாறாக ஆதரவான நிலைதான் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. 

கேள்வி : திமுக அரசு மீது ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறதே?

பதில் : சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் எழுப்பட்டு வருவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு சரியான உறுதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலைப் பொருத்தவரை, நாடு முழுவதும் இதுபோன்ற போக்கும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. 

கேள்வி : இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் திமுகவுடன் நீண்ட காலமாக நல்ல தொடர்புள்ள இயக்கம். கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் இயக்கம். அப்படி இருந்தும் உங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஐந்து தொகுதிகளை கேட்ட நிலையில், 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், உங்களுடைய இயக்கத் தொண்டர்கள் இதனை ஏற்றுக் கொண்டார்களா?

பதில் :  தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நாங்கள் திமுகவுடன் நல்ல உறவுகளை பேணி வருகிறோம்.  இதற்கு முக்கிய காரணம் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் அவர்கள் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார்கள்.  திருமூலரும் இதைத் தான் சொல்லி இருக்கிறார். திருக்குர்ஆன் கூட, ஓர் இறைக்கொள்கையை மிகவும் உறுதியாக சொல்லி உள்ளது. இதன் காரணமாக நாங்கள் உயர்ந்த கொள்கையுடன் கூடிய திமுகவுடன் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமாக உறவுகளை வைத்து அதை உறுதியாக பேணி வருகிறோம். 

தொகுதி ஒதுக்கீடு பொருத்தவரை, திமுகவில் முன்பு இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே கூட்டணி வைத்து இருந்தது. அதன் காரணமாக எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார்கள். தற்போது, முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்த பல கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. குறிப்பாக நான்கு ஐந்து கட்சிகள் இணைந்துள்ளன. முன்பு திமுக கூட்டணியில் நான்கு ஐந்து கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற்று இருக்கும். ஆனால் தற்போது 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. எனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஓதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், மற்ற கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும். தொகுதிகளை தானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். 

கேள்வி : திமுகவின் இந்த நிலைப்பாட்டால் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் அதிருப்தி அடைவார்கள் அல்லவா?

பதில் : அதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அதிருப்தி இருக்கும். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அதிருப்தியுடன் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சமுதாய மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி இருக்கிறோம். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

கேள்வி : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் இறங்கியுள்ளது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ?

பதில் :  தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தனது வலிமையை நிரூபிக்கவில்லை. நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. சினிமா கவர்ச்சியால், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். 

கேள்வி : ஆனால், நடிகர் விஜய் தனது கட்சியால், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பிளவுப்படும் என்ற சந்தேகம் இருந்து வருகிறதே?

பதில் : அதுபோன்ற ஒரு பிளவு நிச்சயம் ஏற்படாது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்ற கட்சிகளைப் போல ஒருசில முஸ்லிம்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயமே விஜய்க்கு ஆதரவாக இல்லை. இதன் காரணமாக திமுக தலைமையிலான அணிக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது. இந்திய முஸ்லிம்களின் ஒரே பாரம்பரியமான இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் வாக்குகள் நிச்சயம் விஜய் கட்சிக்கு கிடைக்காது. 

கேள்வி : திமுக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும்  அடிப்படையாக கொண்டு, தேர்தலை சந்தித்து வருவதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறதே. இதன்மூலம் மற்ற பிச்சினைகளை மறைக்க திமுக முயற்சி செய்வதாக கூறப்படுகிறதே?

பதில் : திமுக தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க பல காலமாக குரல் கொடுத்து வருகிறது. எனவே இதுபோன்ற விமர்சனங்கள் அனைத்தையும் புறம்தள்ளிவிட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழ் மொழிக்காக திமுக குரல் கொடுக்கவில்லை. தொடர்ந்து குரல் எழுப்பி போராடிக் கொண்டே இருக்கிறது. 

கேள்வி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?

பதில் : திருப்பரங்குன்றத்தில் தர்ஹா மற்றும் கோவில் இடையே நீண்ட காலமாக எந்தவித பிரச்சினையும் இல்லை. எங்களைப் பொருத்தவரை, தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

- நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 27.03.2026

- தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



Sit....!

Sit with people 

who

 protect your name

 in your absence.




சந்தோஷம்....!

 சந்தோஷம் என்பது 

பிரச்சினைகள் இல்லாத 

வாழ்க்கையை 

வாழ்வதில் இல்லை. 

எவ்வளவு பிரச்சினைகள் 

வந்தாலும் அதை 

சமாளித்து 

வாழ்வதில்தான் உள்ளது.



மகிழ்ச்சி...!

 என்னுடைய

 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'

 மற்றும் 

' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை,

 இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த முன்னோடிகள்

 வாணியம்பாடி எஸ்.டி.நிஸார் அகமது, 

நரி முஹம்மது நயீம் ஆகியோரிடம் வழங்கி,

 வாழ்த்து பெற்று மகிழ்ச்சி 

அடைந்த இனிமையான தருணம்.

தோழர்கள் அமோக வரவேற்பு...!







இனிய தருணம்...!

என்னுடைய

 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' 

மற்றும் 

' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை,

 என்னுடைய மூத்த சகோதரர் 

ஜனாப் காஜா மொய்தீன் அவர்களிடம்

 வழங்கி, வாழ்த்து பெற்று மகிழ்ச்சி 

அடைந்த இனிமையான தருணம்.

தோழர்கள் அமோக வரவேற்பு...!



Wednesday, March 25, 2026

மதீனாவில் வாழ்க்கைத் தரம்.....!

 

" மதீனாவில் உயர்ந்த வாழ்க்கைத் தரம் "

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், தங்களுடைய வாழ்நாளில் கண்டிப்பாக காண வேண்டும் என ஆசை கொள்ளும், கனவுக் காணும் நகரங்கள் இரண்டாகும். அதன்படி, ஒன்று மக்கா மற்றொன்று மதீனா ஆகியவை முக்கியமானவையாகும். இதன் காரணமாக இந்த புனித நகரங்களுங்களுக்கு வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புனித உம்ரா பயணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையுடனும், புனித ஹஜ் பயணத்தை தங்களது வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலுடனும் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு படையெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கா மற்றும் மதீனாவில் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது? மக்களின் வாழ்த்தைத் தரத்தை மேம்படுத்த சவூதி அரேபிய அரசு எடுத்துவரும் பணிகள் என்ன? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நகரமாக மதீனா இருந்து வருகிறது. அதற்காக தொடர்ந்து, சவூதி அரசு தொடர் முயற்சிகளையும் நடவடிக்கைகயும் எடுத்துக் கொண்டே இருக்கிறது.  

மதீனாவில் வாழ்க்கைத் தரம் :

மதீனாவில் உயர்த்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா பிராந்திய மேம்பாட்டு ஆணையம், இயக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பாதைகள் மற்றும் பொது இடங்களை உருவாக்குவதன் மூலம் புனித நகரத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. மதீனா குடியிருப்பாளர்களிடையே ஆரோக்கியமான, மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.

திட்டங்களில் நன்கு பராமரிக்கப்படும் பாதசாரி பாதைகள், பாதுகாப்பான மிதிவண்டி பாதைகள், பிரத்யேக மிதிவண்டி நிலையங்கள் மற்றும் வெறுங்காலுடன் நடந்து செல்லும் பகுதிகள் ஆகியவை அடங்கும்.

பொது சுகாதாரம் மேம்பாடு :

இந்த அம்சங்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தினசரி உடற்பயிற்சிக்கான பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன.  அத்துடன், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கும் அதிகாரசபையின் உத்தியின் ஒரு பகுதியாகும்.

                                                        ======================

"மதீனாவில் உள்ள கிப்லாத்தான் மஸ்ஜித் மற்றும் கலாச்சார மையத்திற்கு கடந்த ஆண்டில் மட்டும்  80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வந்துள்ளனர். இது நகர்ப்புற, கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாக நகரத்தின் வளர்ந்து வரும் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது"

                                                       ======================

சுற்றுலாவை மேம்படுத்துதல், பார்வையாளர் தங்குமிடங்களை நீட்டித்தல் மற்றும் வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றில் அதிகாரசபை கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகள் நகரங்களை நவீனமயமாக்குவதற்கான பரந்த நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த அணுகுமுறை பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான இயக்கம் விருப்பங்களை ஊக்குவிக்கிறது.

கிப்லாத்தான் மஸ்ஜித் :

இதுஒருபுறம் இருக்க மதீனாவில் உள்ள கிப்லாத்தான் மஸ்ஜித் மற்றும் கலாச்சார மையம், கடந்த 2025 ஆம் ஆண்டில் 80 லட்சத்துக்கும்  அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து ஈர்த்துள்ளது.  அதன்படி, மதீனாவில் உள்ள கிப்லாத்தான் மஸ்ஜித் மற்றும் கலாச்சார மையத்திற்கு கடந்த ஆண்டில் மட்டும்  80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வந்துள்ளனர். இது நகர்ப்புற, கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாக நகரத்தின் வளர்ந்து வரும் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது.

சவூதி விஷன் 2030 இன் கீழ் மதீனா பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையிலான வளர்ச்சி முயற்சிகளை வாக்குப்பதிவு பிரதிபலிக்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், கலாச்சார மையங்களின் ஈர்ப்பை மேம்படுத்துதல் மற்றும் பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சேவை செயல்திறனை அதிகரிப்பதே இந்த பணியின் நோக்கமாகும்.

பார்வையாளர் அனுபவத்தை வளப்படுத்த மதீனாவின் முக்கிய திட்டங்களில் இந்த மையம் ஒன்றாகும். இது நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்தியுள்ளது. அத்துடன், நவீன சேவைகளுடன் ஆன்மீக பரிமாணத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த அமைப்பை வழங்குகிறது. இது நகரத்தின் மத மற்றும் வரலாற்று நிலையை பிரதிபலிக்கிறது.

இவை அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும். அத்துடன், தேசிய வளர்ச்சி வரைபடத்தில் மதீனாவின் இடத்தை வலுப்படுத்தும் நிலையான நகர்ப்புற முயற்சிகள் மற்றும் திட்டங்களில் தொடர்ச்சியான பணிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முஸ்லிமும் தங்களது வாழ்நாளில் நிச்சயம் இந்த புனித நகரங்களை காண ஆசைக் கொள்ள வேண்டும். அதற்காக கனவு காண வேண்டும். ஏக இறைவனிடம் நாள்தோறும் துஆ கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். புனித மதீனா நகரின் வளர்ச்சியை கண்டு வியப்பு அடைய வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Solutions....!

A door is much smaller

 when compared to a house.

 A lock is much smaller

 when compared to a door.

 A key is the smallest of all,

 yet it can open the big house.

 Similarly thoughtful solutions 

can solve major problems.




நூல்கள்...!

 என்னுடைய

 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' 

மற்றும் 

' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை, 

சமூக ஆர்வலர் ஆடிட்டர்

 திரு.பொன்.தேவதாஸ் அவர்களிடம் 

வழங்கி மகிழ்ச்சி அடைந்த 

இனிமையான தருணம்.

தோழர்கள் அமோக வரவேற்பு...!



தைரியம்....!

 தைரியம் என்ற 

ஒற்றை மந்திரம் 

உள்ளத்தில் இருக்கும் வரை 

வாழ்க்கைப் பயணத்தில் 

பயமும் இல்லை. 

பாரமும் இல்லை...!



வரவேற்பு....!

 என்னுடைய

 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' 

மற்றும் 

' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை,  

சமுதாய உணர்வுள்ள தோழர்களுக்கு 

வழங்கி மகிழ்ச்சி அடைந்த 

இனிமையான தருணம்.

நூல்களுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...


Tuesday, March 24, 2026

Think.....!

Never think hard about the past. 

It brings tears. 

Don't think more about the future. 

It brings fears. 

Live this movement with a smile. 

It brings cheers.




Conditions.. !

 Iran's conditions....!

Reported Iranian ceasefire conditions — described as extremely serious:

•Hand over Benjamin Netanyahu to the International Criminal Court

•Withdrawal to pre–October 7 lines

•Cancel Trump’s Gaza plan

•Lift all sanctions and release frozen assets

•Recognize Iran’s nuclear rights

•Withdraw from Lebanon, Syria, and Yemen

•Remove all U.S. bases from Arab countries

•Donald Trump must issue a public apology to Ali Khamenei

•Compensate Iran for all sanctions imposed


They concluded: “This is not a great matter before God.”

நல்லது...!

கடவுள் இருக்கிறாரா இல்லையா 

என்பது சிலருக்கு சந்தேகமாக இருந்தாலும், 

கஷ்டம் வந்தவுடன் 

கடவுளே என்று தான் சொல்கிறது மனது. 

ஏக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறது.

 கஷ்டத்தை மனிதனிடம் சொல்வதை விட

 கடவுள் இருக்கிறார் என்று நம்பி அவரிடம்

 சொல்வதே சிறந்தது. அது தான் நல்லது.



நூல் அறிமுகம்...!

எனது 

' இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1' நூலை ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி ஆர்வத்துடன் படித்து மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்.

ஆற்காடு நவாப் குடும்பத்தினரிடம் எனது நூலை அறிமுகம் செய்துவைத்த வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.

நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!



நல்ல செயல்...!

 நல்ல கவுரவம்...!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மஸஜித்தில் கடந்த 40 ஆண்டுகளாக ரமழான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு சகோதர நேசத்துடன் அனைத்து வகைகளில் உதவிக்கரம் நீட்டி மகிழ்ச்சியோடு பணிவிடை செய்து அன்பை வெளிப்படுத்தி வரும் சிந்தி சமுதாய மக்களின் சூஃபிதார் இயக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அந்த வகையில் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அலி சாஹிப் அவர்கள் சூஃபிதார் இயக்கத் தோழர்கள் அசோக் குப்சாந்தினி (Ashok khubchandani of Sufidar Trust) ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி ( Md.Wasiuddin Dadni), இமாம் சாஹிப் (Imam Sahib of Walajah Masjid) ஆகியோர் உடனிருந்தனர்.



நன்றிகள் பல...!

துயரமான நேரத்தில் துணை நின்று 

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி..

என்னுடைய மூத்த சகோதரர் எஸ்.ஏ.அப்துல் கரீம் அவர்கள் 23.03.2026 அன்று காலமான செய்தியை அறிந்து, எனக்கு நேரிலும், செல்பேசி, வாட்ஸ் ஆப், முகநூல், எக்ஸ் வலைத்தளம், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆறுதல் கூறி, சகோதரரின் மறுமைக்காக பிரார்த்தனை மற்றும் துஆ செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

உங்களுடைய அன்பு, ஆறுதல் எனக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் நிச்சயமாக மன ரீதியாக நிம்மதியை தந்தது. மிக்க நன்றி.

Two things...!

Every goal 

requires two things. 

Discipline 

and 

consistency.




Monday, March 23, 2026

எதிரிகளை பந்தாடும் ஈரான்...!

 எதிரிகளை பந்தாடும் ஈரான்....!

ஈரானின் எதிரிகளை துவம்சம் செய்யப்போகும் Project Reaper.

 ஈரான் தற்போது 'புராஜெக்ட் ரீப்பர்' (Project Reaper) திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது, அதன் விளைவு என்ன என்பதை உலகம் விரைவில் உணரப்போகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த, யாரும் கவனிக்காத சில விஷயங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஈரான் தனது நிலத்தடி ஏவுகணை நகரத்தை (Missile City) வெளிப்படுத்தியுள்ளது.

ஏவுகணைகள், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்கள், ராக்கெட் அமைப்புகள் என அனைத்தும் ஒரு பிரம்மாண்டமான, மறைக்கப்பட்ட, மற்றும் சிதைக்கப்படாத நிலையில் காட்சியளிக்கின்றன.

அமெரிக்கா தனது வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்துள்ளது.

'புராஜெக்ட் ரீப்பர்' (Project Reaper) என்பது உண்மையில் என்ன:

 இது ஒரு இரு-கட்ட செயற்கைக்கோள் ஏவுதள ஏவுகணை அமைப்பு — செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்.

 இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டன்-அமெரிக்க தளமான டியேகோ கார்சியாவை (Diego Garcia) தாக்க ஈரான் இதைப் பயன்படுத்தியது.

முன்னாள் ஐடிஎஃப் (IDF) வான் பாதுகாப்புத் தளபதி, இது "ஒரே இரவில் ஈரானின் செயல்திறனை இருமடங்காக மாற்றியுள்ளது" என்று கூறியுள்ளார்.

நேற்று வரை எட்டாத தூரம், இன்று எட்டும் தூரத்தில் உள்ளது. வெறும் ஒரே இரவில்!

புதிய எல்லை: 4,000+ கிலோமீட்டர்கள் — பாரிஸ், ரோம், பெர்லின் ஆகிய நகரங்கள் இப்போது ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் உள்ளன.

 'ஃபத்தாஹ்' (Fattah) என்ற அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணை, இந்த ரீப்பர் திட்டத்தின் மேல் அமர்ந்து பயணிக்கிறது.

 இதை இடைமறிக்கவே முடியாது என்று ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) உரிமை கோருகிறது.

 இஸ்ரேலின் அயன் டோம் (Iron Dome), ஆரோ (Arrow), டேவிட்ஸ் ஸ்லிங் (David’s Sling) ஆகிய பாதுகாப்பு அமைப்புகள் காலியாகி வருகின்றன.

 2,00,000 டாலர் மதிப்பிலான ஏவுகணையைத் தடுக்க 30,00,000 டாலர் மதிப்பிலான தடுப்பு ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது — முதலில் யாருடைய இருப்பு தீர்ந்துபோகும்?

இதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?

கடந்த 24 மணிநேரத்தில் ஈரான் தொடர்ந்து 8 ஏவுகணை அலைகளைத் தொடுத்துள்ளது.

இது ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4-ன் (Operation True Promise 4) 73-வது அலையாகும்.

 73 அலைகள். எழுபத்து மூன்று!

 ஒவ்வொரு அலையும் இஸ்ரேலின் தடுப்பு ஏவுகணைகளை மிக வேகமாகத் தீர்க்கின்றன.

 கணக்கீடுகள் தலைகீழாகியுள்ளன, இது ஈரானுக்கும் தெரியும்.

 ரஷ்யா ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது (WSJ உறுதிப்படுத்தியுள்ளது).

 ஈரானில் உள்ள சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடைந்தன — ஆனால் புராஜெக்ட் ரீப்பருக்கு அவை தேவையில்லை.

அவர்கள் ஈரானை ஒரு "தோல்வியுற்ற வல்லரசு" என்று அழைத்தார்கள்.

'தி சன்' (The Sun) பத்திரிகை எழுதியது: "ஈரான் ஒரு தோல்வியுற்ற வல்லரசு. ஆனால் அது ஒரு வல்லரசுக்குரிய ஆயுதங்களை உருவாக்கியுள்ளது."

அவர்கள் சொன்னது தவறு இல்லை.

கேள்வி இப்போது ஈரான் போரிடுமா என்பது அல்ல.

கேள்வி இதுதான்: அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியும்?

ஏனென்றால், ஒரு தாக்குதலைத் தடுக்க 30,00,000 டாலர் செலவாகும் நிலையில், ஒரு நாளைக்கு 8 அலைகள் வீசப்பட்டால், நிதி மற்றும் இருப்பு தீர்ந்துவிடும்.

அவை தீரும்போது, புராஜெக்ட் ரீப்பர் ஏவுகணைகள் தயார் நிலையில் காத்திருக்கும்.

அதற்கேற்பத் தயாராக இருங்கள்.

- எக்ஸ் வலைத்தளப் பதிவில் இருந்து....