Sunday, March 11, 2012

சொன்னது யார் ?

  • நோயாளியைப் பார்க்க ஒரு மைல் தூரம் செல். இரண்டு பேர்களுக்கு       இடையே சமாதானம் செய்ய இரண்டு மைல் தூரம் செல். ஒரு நண்பனைக் காண மூன்று மைல் தூரம் செல்.
                                                  
                                                                                   -    அரேபியப் பழமொழி




  • நண்பனிடம் கடந்த காலத்தைப் பற்றிப் பேசாதீர்கள். உறவினர்களிடம் வசதி பற்றியும், வருமானம் பற்றியும் பேசாதீர்கள். உங்களைவிட வசதியாக இருப்பவர்களிடம் உங்கள் எதிர்காலம் குறித்து பேசாதீர்கள்.
                                                                                - கிரேக்கப் பழமொழி


  • நல்ல நண்பர்கள் உங்களுக்கு வேண்டுமா ?  முதலில் நீங்கள் நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.    
                                                                                            - எமர்ஸன்

  • எந்தத் துறையிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். அதற்குத் தேவை மூன்று விஷயங்கள் மட்டுமே. அவை, உழைப்பு., சலியாத உழைப்பு., மற்றும் கவனமாக உழைப்பு.
                                                                                       - வெப்ஸ்டர்

  • தர்மமானது, இறைவனின் கோபத்தை தணிக்கும்  கெட்ட மரணத்தில் இருந்தும் காப்பாற்றும்.
                                                                                       - நபிகள் நாயகம் (ஸல்)

  • கல்லாத பெண், ஒரு களர் நிலம். அங்கே, புல் விளையுமேயன்றி, நல்ல புதல்வர்கள் விளைவதில்லை.
                                                                                            - பாரதியார்

  • பெரிய மீன், சின்ன மீனைத் தின்னலாம். ஆனால், சின்ன மீன், அதற்கும் சின்ன மீனைத் தின்றால், குற்றம் செய்கிறாய் என்று பெரிய மீன் தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம்.
                                                                                               - புதுமைப்பித்தன்

  • நல்ல செயல்களைச் செய்ய நம்மைக் கண்டிப்பாகப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், பழக்கம், இயற்கையைவிடப் பத்து மடங்கு சக்தி வாய்ந்தது.
                                                                                                          - வெலிங்டன்
  • மக்கள் தங்களது துயரங்களைத் தாங்களே தேடிக் கொள்வதற்கு அளிக்கப்படும் வாய்ப்பே, தேர்தல்.
                                                                                    - கவிஞர் கண்ணதாசன்

 
சிறைச்சாலைகளின் கம்பிகளின்
வழியாக மண் தரையை
ஏன் பார்க்க வேண்டும் ?
வானத்தில் உள்ள
நட்சத்திரங்களைப்
பார்க்கலாம் அல்லவா ?
                           - பாரசிகக் கவிஞரின் வார்த்தைகள்
  • மதுக் கடைகளை மூடினால் அரசுக்கு வருமானம் குறையும். ஆனால், மக்களின் கையில் வருமானம் மிஞ்சும். அவர்கள் கையில் மிஞ்சம் வருமானம், துணி மணியாய், நிலபுலனாய் மாறும்.
                                                                                      - மருத்துவர் ராமதாஸ்
  • நெஞ்சில் உறுதி இல்லாதவர்கள்தான் அரசு வேலையை தேடுவர். உறுதி உள்ள இளைஞர்கள் தொழில் துவங்குவர்.
                                                                - மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்



தொகுப்பு -  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: