Tuesday, March 13, 2012

அச்சம் !



  • வேதனை வருமோ என அஞ்சும் மனிதன், தன்னுடைய  அச்சத்தால், வேதனையை ஏற்கனவே அனுபவிக்க தொடங்கி விடுகின்றான்.

                                                      -  மிஷேர் தெ மோன்த்தேன்


  • அச்சமில்லா உள்ளங்கள்தான், விரைவில் மணிமுடியை எட்ட முடியும்.
                                                       -  வில்லியம் ஷேக்ஸ்பியர்

  • குற்ற உணர்வையும், தீயச் செயல்களையும் அச்சம் சூழ்கிறது. அறவழி நடக்கும் இதயம், அச்சத்தை அறியாது.
                                                            - வில்லியம் ஹாவார்ட்


  • நோயைவிட அச்சம்தான், மனிதனை அதிகம்  கொல்லும். மிக விரைவில் மரணத்திற்கு அழைத்துச் செல்லும்.
                                                          -  ஜார்ஜ் ஹெர்பெர்ட்


  • ஏறுவதற்கு எனக்கு விருப்பம்தான். எனினும் இழறி வீழ்ந்து விடுவேனோ என்ற அச்சம் உண்டு.
                                                                  - தாமஸ் ஃபுல்லர்


  • அளவுக்கு மீறிய அச்சம், மனிதனை போராடவோ, ஓடவோ செய்யாது. கோழைத்தனமாய் வாழ்ந்து குலைநடுங்கிச் சாகத்தான் செய்யும்.
                                                               -  வில்லியம் ஷேக்ஸ்பியர்


  • ஒவ்வொரு நாளும் ஓர் அச்சத்தை வெளியேற்றாதவன், வாழ்க்கையின், படிப்பினையை உணராதவன்.
                                                                          -   எமர்ஸன்


அச்சம் குறித்து அறிஞர் பெருமக்களின் அருமையான கருத்துகள் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். படியுங்கள். பயன் பெறுங்கள்.
எஸ்.ஏ. அப்துல் அஜீஸ்

No comments: