Sunday, October 27, 2013

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான

அ.தி.மு.க. அரசு... 

இரண்டரை ஆண்டுகள் 

சாதனை என்ன ?



மக்களால் நான்.....மக்களுக்காக
நான்...

இது அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சொல்லும் வார்த்தைகள்....

மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.

பொதுவாக அவரை அம்மா என்று எல்லோரும் தற்போது அழைக்க ஆரம்பித்துள்ளதால், நானும் இந்த கட்டுரையில், அம்மா என்றே குறிப்பிட்டு எழுதுகிறேன்....

அம்மாவின் இரண்டரை கால ஆட்சி எப்படி இருக்கிறது...

தமிழகம் அமைதி பூங்காவனமாக திகழ்கிறது.....

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன....

குறிப்பாக, தொழிலாளர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ள அம்மா உணவகம் திட்டம், சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மாநகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



இந்த திட்டத்திற்கு ஏழை, எளிய, தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது...

ஒருநாள், தேனாப்பேட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்திருந்தேன்.

அப்போது, இரண்டு தொழிலாளர்கள் பேசிக் கொண்டது என்னுடைய காதில் விழுந்தது...

அம்மா உணவகம் திட்டம் குறித்து அவர்கள் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்...

ஆக, அம்மா உணவகம் திட்டம் ஏழை மக்களை சென்று சேர்ந்துள்ளது... குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளது தொழிலாளர் வர்க்கம்...



பல நேரங்களில் விரைவிலேயே உணவு வகைகள் அனைத்தும் விற்பனையாகி விடுவதால், பலருக்கு உணவு கிடைப்பது இல்லை என்ற புகார் இருந்தாலும், இந்த திட்டம் அதிமுக அரசின் சாதனை திட்டம் என்றே சொல்லாம்....

அடுத்து, பெண்களை கவரும் வகையில் கொண்டு வரப்பட்ட பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகள்....

காய்கறி விலைகள் விண்ணை தொட்டு வரும் நிலையில், மலிவு விலையில் தரமான காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆசை....




உடனே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டன.

தரமான காய்கறிகள், குறைந்த விலைக்கு கிடைப்பதால், பெண்கள், குறிப்பாக ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

அடுத்து, அம்மா மினரல் வாட்டர்....

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர்....தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அம்மா மினரல் வாட்டர்....






இந்த திட்டமும் ஏழை, எளிய மக்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது...நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது...

அடுத்து, காமதேனு கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம்.... ரேஷ்ன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் வெளிமார்க்கட்டுகளில் அரிசி விலை கூடுதலாக இருப்பதால், நடுத்தர மக்கள் குறைந்த விலையில் அரிசி வாங்க என்ன வழி...

 அம்மா புதிய திட்டத்தை அறிவித்தார்....

ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் அந்த திட்டம்...

இதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்...

அடுத்து, சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள மினி பேருந்து திட்டம்...

சாலைகளில், வீதிகளில் மினி பேருந்துகள் செல்வது சென்னைவாசிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது....

பல பத்திரிகைகளில் வரும் பொதுமக்களின் பேட்டிகள், தொலைக்காட்சிகளில் வரும் நேர்காணல்கள், மினி பேருந்துகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை படம் பிடித்து காட்டுகின்றன....

இதேபோன்று, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டமும் மக்களை சென்று அடைந்துள்ளது......



இதுபோன்று, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம், மக்களிடையே ஆட்சிக்கு வரவேற்பு கிடைத்து உள்ளதாகவே கூறலாம்...

மின் தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது....பல மாதங்கள் மின் வெட்டால் அவதிப்பட்ட பொதுமக்கள், இப்போது, வீடுகளில் மின்வெட்டு இல்லை என்பதால், அதிமுக அரசை பாராட்ட தொடங்கியுள்ளனர்...

காவிரி நதி நீர் விவகாரம்....

இலங்கை தமிழர் விவகாரம்....

மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்....

கச்சத்தீவு விவகாரம்...

இப்படி பல விவகாரங்களிலும், முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களின் அணுகுமுறைகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன....

விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில், சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை ஏற்று, தீர்வு கண்டது....

சிறுபான்மை மக்களின் நலன்களில் அக்கறை...

திரைப்படத்துறையினர் மீது அவர் கொண்டுள்ள பாசம்...

தமிழக காவல்துறையை உலகத்தரத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சி...



ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே, ஆதிக்கம் செலுத்தி வந்த திரைப்படத்துறை, தற்போது, அனைத்து தரப்பு கலைஞர்களின் கைகளில் தவழ்கிறது....

அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகுதான், புதிய தொலைக்காட்சி ஊடகங்கள் பிறந்தன..

தற்போது,.சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன...

தொழில் வளர்ச்சியில் கூட தமிழகம் முன்னேறி வருகிறது....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

அதிமுக ஆட்சியில் குறைகளே இல்லையா.....இந்த கேள்வி எல்லோருக்கும் எழும்...

ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன...மறுப்பதற்கு இல்லை...

ஆனால்....



ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் திட்டம், அம்மா மினரல் வாட்டர், மினி பேருந்து திட்டம்....குறைந்த விலையில் அரிசி விற்பனை...

இதுபோன்ற மக்களை கவரும் திட்டங்களால், அதிமுக அரசின் ஒருசில குறைகள் மக்களால் மறக்கப்பட்டுள்ளன...

இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவிற்கு நல்ல மகசூல் கிடைக்கப் போகிறது என்றே சொல்லலாம்....

காரணம்.... மக்களின் நாடி அறிந்து, பல திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன....

கோடிக்கணக்கில் நிதி செலவிட்டு பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி வரலாற்றில் இடம் பெற வேண்டும் என அதிமுக அரசு நினைக்கவில்லை என தெரிகிறது....

எனவேதான், அதில் அக்கறை செலுத்தாமல், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.....



அதனால்தான் கூறுகிறேன்...அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியை சூவைக்கும்...

மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்....

நரேந்தர மோடியின் பிரதமர் கனவுகள் எல்லாம் சிதைந்து போகும்....

இறைவன் விரும்பினால்......

நாட்டில் நல்லதே நடக்கும்.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: