Thursday, October 31, 2013

ஊடகங்களில் உலாவும் நாதாரிகள்.....!  உஷார்.....!!


என்னது.....

தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது...?

நீங்கள் கேள்வி எழுப்பலாம்....

தமிழக ஊடகங்களில் (ஒருசில) அண்மை காலமாக நடைபெறும் சில நிகழ்வுகள்....

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்....

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்....

பிறகு நீங்களே தீர்மானித்து விடுங்கள்....

நான் சொல்வது உண்மையா, இல்லையா என்பதை....

நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்த நேரம் அது...

அந்த நிறுவனத்தில் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை...

எனவே, வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர முயற்சி செய்துக் கொண்டிருந்தேன்...

பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன்...

இப்படிப்பட்ட நேரத்தில்தான், நல்ல நிறுவனம் ஒன்றில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, எனக்கு அறிமுகமான நண்பர் (அவரை அப்படி அழைக்கக்கூடாது) ஒருவர் என்னிடம் அடிக்கடி செல்பேசியில் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசுவார்.

அந்த நிறுவனம் குறித்து தப்பு தப்பாக விவரங்களை கூறுவார்....


அங்கு பணிபுரியும் ஊழியர்களின் திறமைகள் குறித்து குறைத்து மதிப்பிட்டு நிலைமை சரியில்லை என்பார்.

நீங்கள் வேறு ஒரு நல்ல நிறுவனத்திற்கு முயற்சி செய்யுங்கள் என தினமும் ஆலோசனைகள் தருவார்....

நானும் அந்த நபர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்ததால், என்னுடைய நலனை கருத்தில் கொண்டு சொல்கிறார் என்று நம்பினேன்.

இந்த நிலையில்தான், நான் மேற்குறிப்பிட்டபடி, அந்த நிறுவனத்தில் இருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது...

நானும், சென்றுதான் பார்ப்போமே என்று நினைத்து அங்கு சென்றேன்...

அந்த தொலைக்காட்சியில்,  அப்போது தலைமை செய்தி ஆசிரியராக இருந்த நல்ல மனிதரை சந்தித்து பேசினேன்...

அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி பணியில் சேரும்படி அறிவுறுத்தினார்...

நானும், சேர்ந்துவிடலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பினேன்...

திருவல்லிகேணியில் இருந்த என்னுடைய அறைக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த நண்பரின் செல்பேசி என்னை அழைத்தது...

எதிர்முனையில் பேசி அந்த நபர், சார் என்ன சொன்னார்கள்....அந்த சம்பளத்திற்கு நீங்கள் ஓ.கே. சொல்லாதீர்கள்...அதிக சம்பளம் கேளுங்கள்...இங்கு நிலைமை சரியில்லை...

இப்படி சொன்னபோது, உண்மைதான் என நானும் நினைத்தேன்...அந்த நபரின் ஆலோசனையை ஏற்று, அந்த நிறுவனத்தில் சேரவில்லை...

பிறகு, நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சம்பள பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

மூன்று, நான்கு மாதங்கள் என சம்பளம் கொடுக்கப்படவில்லை...

மீண்டும், முதலில் சென்று வந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் முயற்சி செய்யலாம் என நினைத்து, மற்றொரு நண்பர் மூலம் முயற்சி செய்தேன்.



அவரும், தலைமை செய்தி ஆசிரியரிடம் பேசி என்னை போக சொன்னார்...

நானும் சென்று வந்தேன்.... நான் வந்து சென்ற விஷயம் கேள்விப்பட்டதும், அந்த நபர், மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, சார் நீங்கள் இங்கே வரவே வேண்டாம் சார். என்றார். சன்னுக்கு, கலைஞருக்கு முயற்சி செய்யுங்கள் என்றார்..

அப்போதுதான், அந்த நபர், நான் அங்கு வருவதை சிறிதும் விரும்பவில்லை என்பது என்னுடைய அறிவுக்கு எட்டியது...

என்ன கோல்மால் செய்தாரோ, எனக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நல்ல வாய்ப்பு....கைநிறைய சம்பளம்...சிறப்பான இடத்தில் அமர வேண்டிய நிலை...

இதை அனைத்தையும் அந்த நண்பர் கெடுத்துவிட்டார்...

அப்போது எனக்கு,  "கூடா நட்பு கேடாய் முடியும்.."  என்ற பழமொழிதான் ஞாபத்திற்கு வந்தது.

இப்போது சொல்லுங்கள் இவரை நான் எப்படி அழைப்பது.....

இதேபோன்று, ஊடகத்துறையில் பணிபுரியும் சிலர், தவறான வழிகளில் பலரை மிரட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட சிலர், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுதும் கடிதங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன...

இப்படிப்பட்டவர்களை எப்படி அழைப்பது...

ஒருசில தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணிந்து வரும் உடை, இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவ்ற்றிற்கு வேட்டு வைக்கும் வகையில் இருநது வருகிறது...

இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்துவதில்லை...அதனால், அங்கு ஒழுக்க சீர்கேடுகள் அரங்கேற்றப்படுகின்றன....

ஒருசிலர், பெண் ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை....

இதேபோன்று,  அடிக்கடி, ஒவ்வொரு நிறுவனத்திற்கு தாவும் சிலர், அங்கு யாரையும் வாழ விடாமல் மற்றவர்களையும் வெளியேற்றிவிட்ட ஆனந்தம் கொள்கிறார்கள்...இரண்டு மாதம், மூன்று மாதம் என பணிபுரிந்து விட்டு, காசு பார்த்து விட்டு, பெரிய ஜாம்பவான்கள் போன்று வேஷமிடுகிறார்கள்...இது அண்மை காலமாக ஊடகத்துறையில் நடக்கும் கூத்துகள்...


இவையெல்லாம், ஊடகத்துறையில் மட்டுமல்ல,  எல்லா துறைகளிலும் நடக்கிறது எனலாம்...

ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறை, மேற்குறிப்பிட்டவர்களால், சமூகத்தில் தற்போது மதிப்பு குறைந்து வருகிறது...

பத்திரிகை துறை குறித்து முகநூலில் அன்பர் ஒருவர், எழுதும்போது, பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகளால், அவர்கள் மீது இருந்த மதிப்பு, மரியாதை குறைந்து விட்டது என குறிப்பிட்டார்...

உண்மைதான்...

சமூகத்தில் பத்திரிகையாளர்களை மதிக்கும் போக்கு குறைந்து வருகிறது...

எல்லாவற்றிற்கும் காரணம் தலைப்பில் நான் குறிப்பிட்ட நபர்களால்தான்....

சரி, ஊடகத்துறையில் நல்ல பண்பாளர்கள் இல்லையா.... என நீங்கள் கேட்கலாம்....

நிறைய பேர் இருக்கிறார்கள்...அந்த நல்ல பண்பாளர்கள்..அமைதியாக பணிபுரிந்து பத்திரிகை துறைக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்...

ஊடகத்துறையில் நான் சந்தித்த சில நல்ல பண்பாளர்கள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்....


ஏஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================================

No comments: