Saturday, November 2, 2013

" ஊடக பண்பாளர்கள்........! "

ஊடகத்துறையில் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும், நபர்கள் நிறைய பேர் இருந்து வருவதாக ஏற்கனவே எழுதியிருந்தேன்.

உண்மை உழைப்பாளர்களின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல், பல ரூபங்களில் இறங்கி வேலை செய்பவர்கள் இங்கு அதிகம் உண்டு...

அலுவலகத்திற்கு வருவதே, மற்றவர்களின் பணிகள் குறித்து உளவு வேலை பார்த்து, அதை தலைமைச் செய்தி ஆசிரியரின் காதில் போடுவதை கலையாக கொண்டு செயல்படுபவர்கள் ஊடகத்துறையில் அதிகம்...

அதன்மூலம், சொற்ப லாபம் சிலருக்கு கிடைக்கிறது.... மேலும், வேலை செய்யாமலேயே ஊதியம் பெறவும் செய்கிறார்கள்....

இப்படி, ஊடகத்துறையின் புனிதத்தை சிலர் கெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல நல்ல உள்ளம் கொண்ட பண்பாளர்களும் ஊடகத்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்...

பல ஜாம்பவான்கள் ஊடகத்துறையை நேசிக்கிறார்கள்...அதன்மூலம், அமைதியாக பணிபுரிந்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்....பிடித்தார்கள்...

ஊடகத்துறையில் சாதனை படைத்த ஜாம்பவான்கள் ஏராளம் இருக்க, நான் சந்தித்த
எளிய பண்பாளர்கள், வெளிச்சத்திற்கு வராத நல்லவர்கள், ஒருசிலரை பற்றி இங்கு குறிப்பிடுகிறன்....

என்னை போன்று, ஊடகத்துறையில் இருக்கும் பலரும், இவர்களை போன்ற நல்ல பண்பாளர்களை தங்களது வாழ்க்கையில், அனுபவத்தில் சந்தித்து இருக்கலாம்...

நான் சந்தித்த பல நல்ல பண்பாளர்களில் ஒருசிலர் இதோ.....

சம்பந்தன் முரளி (கலைஞர் தொலைக்காட்சி)

 
ஹரிகிருஷ்ணன் (பாலிமர் தொலைக்காட்சி)


இளம்பரிதி (தந்தி தொலைக்காட்சி)


சிவக்குமார் (சன் நியூஸ் தொலைக்காட்சி)



சங்கரலிங்கம் (புதுயுகம் தொலைக்காட்சி)



சிராஜுல் ஹசன் (சமரசம் இதழ்)



செந்தில் ராஜ்குமார் சிவலிங்கம் (பத்திரிகையாளர்)



ஜெயக்குமார் (ராஜ் தொலைக்காட்சி)


மசூத் அகமது (பத்திரிகையாளர்)

விஜய் தேவ் (தினமலர் நாளிதழ்)

மேலே நான் குறிப்பிட்ட இவர்கள், மற்றவர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைபவர்கள்....

போட்டி, பொறாமை நிறைந்த ஊடகத்துறையில், எங்கே நமது நண்பர் வளர்ச்சி அடைந்து விடுவரோ என்று சிறிதும் மனதில் நினைக்காதவர்கள்....

திறமையை அறிந்து ஊக்குவிப்பவர்கள்....

பல நேரங்களில் எனக்கு ஆறுதல் கூறுபவர்கள்...

நிறைய எழுது தூண்டுபவர்கள்....

வீழ்ச்சியை சந்திக்கும்போது, ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள்.

இந்த பண்பாளர்களின் பண்புகள், குணங்கள், அவர்களின் சமூக அக்கறை ஆகியவை குறித்து தனித்தனியாக நிறைய எழுதலாம்..

ஆனால், அதனை சிறிதும் இவர்கள் விரும்பாததால், சுருக்கமாக மட்டுமே அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன். நல்ல பண்பாளர்கள் என்று....

இவர்கள் மட்டுமல்ல, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தாலும், தங்களுடைய சூழல் காரணமாக  அதனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிறைய நண்பர்களை நான் ஊடகத்துறையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

இவர்கள் மற்றவர்களின் வளர்ச்சியை நேசிப்பவர்கள்....பொறாமை கொள்ளாதவர்கள்...

குறிப்பாக,

மைக்கல் ஜார்ஜ் (சன் தொலைக்காட்சி)

ஸ்ரீதர் (சன் நியூஸ் தொலைக்காட்சி)

சுரேஷ்குமார் (சன் தொலைக்காட்சி)

மணிமாறன் (கலைஞர் தொலைக்காட்சி)

ரங்கபாஷ்யம் (பத்திரிகையாளர்)

சங்கரபாண்டியன் (கலைஞர் தொலைக்காட்சி)

பிரம்மா (தந்தி தொலைக்காட்சி)

மாரியப்பன் (மக்கள் தொலைக்காட்சி)

ஆனந்த்குமார் (மக்கள் தொலைக்காட்சி)

கார்த்திகேயன் ( ஜி செய்தி தொலைக்காட்சி)

மேலே நான் பட்டியலிட்டது ஒருசிலரை மட்டுமே....

நிறைய ஜாம்பவான்களையும் சந்தித்து இருக்கிறேன்....அவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை...

எளிமையானவர்கள் மட்டும் இங்கு இடம் பெற்றிருக்கிறார்கள்...

இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளுகிறது. அது மிகப் பெரியது....

இந்த பண்பாளர்கள் பல ஊடகங்களில் அமைதியாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்...

இவர்களின் பணிகள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமலேயே இருக்கிறது....

சில அரை வேக்காடுகள், ஒருசில ஊடகங்களில் புகுந்து அட்டகாசம் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த சம்பளம் வாங்கினாலும், மன திருப்தியுடன்
இவர்கள் பணிபுரிந்து கொண்டிருப்பது, பல நேரங்களில் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்...



இதுபோன்ற பண்பாளர்கள் இருப்பதால்தான், ஊடகத்துறையின் புனிதம் இன்னும் காப்பாற்றப்பட்டு வருகிறது...

சமூகத்தில் ஊடகத்துறை குறித்து நல்ல எண்ணம் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், இதுபோன்ற நல்ல பண்பாளர்கள் ஊடகத்துறையில் வலம் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது...

இவர்களை போன்ற நல்ல பண்பாளர்கள், நிச்சயம் ஊடகத்துறையை தூக்கி நிறுத்துவார்கள்...

உண்மைதானே நண்பர்களே....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
========================

No comments: