Saturday, November 30, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (3)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " - நாள்: 3


மது அருந்தினால் கற்பனை சிறகடித்து பறக்குமா....? புதிய சிந்தனை உருவாகுமா...?

உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் என்ன சொல்கிறார்.... வாருங்கள் பார்க்கலாம்...

மது அருந்தினால் நல்ல கற்பனை பிறக்கும்...

கவிஞர்களின் சிந்தனையில் புதிய புதிய வார்த்தைகள் வந்து விழும்....

கலைத்துறையில் உள்ளவர்கள், குறிப்பாக கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினர் இடையே இந்த நம்பிக்கை இருந்து வருகிறது..

மது அருந்தினால் இசையமைப்பாளர்களுக்கு இசை ஞானம் கூடும்....

புதிய இசை பிறக்கும்...

என்ற மூட நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு...

ஏன்,  உலகம் முழுவதும் இசைத்துறையில் இருக்கும் கலைஞர்கள் பலர், இப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...

அதனால் மது பழக்கத்திற்கு ஆளாகி, உடலை கெடுத்து, வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்கிறார்கள்...

ஆனால், உலக புகழ் பெற்ற நம்மூர் இசையமைப்பாளர், ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  என்ன சொல்கிறார் தெரியுமா...


மதுவுக்கும் இசைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்...

மது அருந்தினால் கற்பனை பிறக்கும்...புதிய இசை உருவாகும் என்பது ஓர் மாயை என்கிறார் அவர்...

அது பலரின் குருட்டு நம்பிக்கை என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் வாதம்...

பல இசையமைப்பாளர்கள் இந்த குருட்டு நம்பிக்கையில் இன்னும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறும் ரஹ்மான், அதை தங்கள் தொழிலில் செயல்படுத்தியும் வருவதாக வேதனை தெரிவிக்கிறார்...

அவர்களை (மது பழக்கத்திற்கு அடிமையான இசையமைப்பாளர்களை) தாம் குறை கூற விரும்பவில்லை என கூறும் ரஹ்மான், அவர்களுக்கு என்ன பிரச்சினையோ என்றும் சொல்கிறார்...


இசை என்பது இறைவன் கொடுத்த வரம்....

இறைவன் மூலம் மனிதர்களின் கற்பனையில் பிறக்கும் ஓர் அற்புதம்...

அதன்மூலம் ஒருவரின் திறமை வெளிச்சத்திற்கு வருகிறது...

ஆனால், மதுவால் நல்ல இசையை உருவாக்கவே முடியாது என்றும் அடித்து சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்...

மதுவின் தீமைகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் நன்றாகவே அறிந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்,  மது பழக்கத்திற்கு ஆளாகாமல், நல்ல இசையை, உலகம் போற்றும் இசையை இன்னும் தந்துக் கொண்டிருக்கிறார்...


அதன்மூலம், உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்...

கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்...

மதுவினால் சில குடும்பங்கள் சீரழிந்து போனதை தாம் நேரில் பார்த்து வேதனை அடைந்ததாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்....

ஆக, மது மனிதனின் திறமையை அதிகரிக்க செய்யாது என்பது உறுதி...

ஒருவர் உலகம் போற்றும் வல்லவராக மாற வேண்டுமானால், நிச்சயம் மது பழக்கத்திற்கு அடிமையாக கூடாது..

இது ஏ.ஆர்.ரஹ்மான் தரும் செய்தி....


சில ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அவரது பேட்டியில் மதுவுக்கு எதிரான பல சுவையான தகவல்களை ரஹ்மான் கூறியிருந்தார்.

அந்த தகவல்கள்தான் நீங்கள் மேலே படித்தது...

அந்த பேட்டி தொடர்பான குறிப்பு கீழே உள்ளது...அதன்மூலம் அதை பார்த்து, கேட்டு உண்மையை அறிந்து கொள்ளலாம்.....

மது பழக்கத்திற்கு ஆளாகாமல் நல்ல வாழ்க்கையை வாழலாம்....

நிம்மதி பெறலாம்....மகிழ்ச்சி அடையலாம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

http://www.youtube.com/watch?v=7W3fCOIjl3E

No comments: