Wednesday, November 27, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...!

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  - நாள்: 1

அனைத்து தீமைகளின் ஆணி வேர் மது...

ஆனால், தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது...

இளம் தலைமுறை மெல்ல மெல்ல மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருகிறது...

ஏன், இளம் பெண்களில் சிலர் மதுவை விரும்பி அருந்துகின்றனர்...

இப்படி, ஒரு சமூகம் சீர் கெட்டு போய் கொண்டே இருக்கிறது...

மதுவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

ஆனால், அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை...

என் பங்கிற்கும் ஏதாவது செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை...

இனி வரும் நாட்களில் மதுவுக்கு எதிராக செய்திகள், கட்டுரைகள், நான் சந்தித்து அனுபவங்கள், மது பிரியர்களின் அட்டகாசங்கள், மது அருந்திவிட்டு வீதியில், சாலைகளில் கிடக்கும் மதுப்பிரியர்களின் புகைப்படங்கள்...

மதுவால் சீரழிந்த குடும்பங்கள்,

மது விற்பனையின் உச்சம் குறித்த தகவல்கள்...

இப்படி பல்வேறு தகவல்களை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசை...

என்னுடன் சேர்ந்து முகநூல் நண்பர்களும் மதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்...

தங்கள் அனுபவங்கள், மதுவுக்கு எதிராக தங்களிடம் இருக்கும் தகவல்கள், புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்...

சரி...

மதுவுக்கு எதிராக, முதல் படியாக தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு ஒருசில வரிகளில் ஒர் கடிதம்...

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு,

இறைவன் உங்கள் மீது சாந்தியும் சமாதானத்தையும் பொழிவானாக...

மதுவின் தீமைகள் குறித்து நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் தற்போது மது விற்பனை உச்சத்தை தொட்டு வருகிறது...

இளம் சமுதாயம் மதுப்பழகத்திற்கு மெல்ல மெல்ல அடிமையாகி வருகிறது...

குடும்பங்களில் குழப்பங்கள், அமைதி இழப்பு.... இப்படி பல பிரச்சினைகளுக்கு மது மூல காரணமாக இருந்து வருகிறது...

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது, மதுக் கடைகளை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை...

ஆனால், பிறகு வந்த ஆட்சியாளர்கள் ஏனோ மதுவை தாராளமயமாக்கி விட்டார்கள்...

அதன் காரணமாக, சமூகம் மெல்ல மெல்ல தனது வலிமையை இழந்து வருகிறது...


தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்க பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்க துணிச்சலான உங்களால் மட்டும்தான் முடியும் என்பது எல்லோரின் கருத்து... ஏன் எதிர்பார்ப்பும் கூட...

பெண்களின் கண்ணீரை துடைக்க நீங்கள் முன்வர வேண்டும்...

சமூகத்தில் இளம் தலைமுறையினர் வீறுகொண்டு நடைபோட, மதுவை ஒழிக்க நீங்கள் முன்வர வேண்டும்...

தமிழகம் அமைதி பூங்காவனமாக மாற மதுவை ஒழிக்க நீங்கள் முன்வர வேண்டும்...

மதுவால் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தவிர்க்க ,மதுவை ஒழிக்க நீங்கள் முன்வர வேண்டும்...

கடைசியாக,

அரசியல் லாபத்திற்காக கூட இந்த முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டு...

அதற்கு பெண்களின் வாக்குகள் அவசியம் தேவை...

மதுக்கடைகளை மூட உத்தரவு போடுங்கள்...வாக்குகள் உங்கள் கட்சிக்கு தானாக வந்து சேரும்...

மதுக்கடைகளை உடனே மூடுவது சாத்தியமில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்...

படிப்படியாக கூட மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கலாம்..

மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்...அவை இயங்கும் நேரத்தை குறைக்கலாம்...

இப்படி பல படிகள் மூலமாக நிச்சயம் மதுக்கடைகளை மூடலாம்... தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்கலாம்...

சமூகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள்...

வாழ்த்துக்கள்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=========================

No comments: