Wednesday, December 3, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (103)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"  நாள் - 103

தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது? 

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி......!

தமிழகத்தில் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளால், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் இளம் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வருகிறது.

இதனால், சமூகம் சீரழிந்து வருகிறது.

சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இளம் பெண்கள் விதவைகளாகும் நிலை உருவாகி வருகிறது.

குடும்பங்கள் வறுமையில் தவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் மதுதான்.

இந்நிலையில்,  2011ல் நிகழ்ந்த விபத்துக்கான இழப்பீடு குறித்து மணிவிழி மற்றும் பாலு என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த (03.12.2014) அன்று விசாரித்து உயர்நீதிமன்றம், மதுவால் அதிக விபத்துகள் ஏற்படுவதால் தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும், மோட்டார் வாகன மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த கேள்விக்கு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.

டஸ்மாக் கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம்  கிடைகிறது.

தமிழக அரசு, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து விரிவான பதிலை டிசம்பர் 12ம் தேதிக்குள்  தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.


டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்வி.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக மதுக்கடைகளை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசின் வழியில், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, பிறகு நிரந்தரமாக மது கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்.

இதுதான், பெண்களின் எதிர்பார்ப்பு....

சமூகத்தில் அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள்..விருப்பம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: