Saturday, August 27, 2016

ரூல்சே ஃபாலோ பண்ராங்க....!

அவங்க ரூல்சே ஃபாலோ பண்ராங்க....!



சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவுப் பகுதி அருகே இருக்கும் சித்தா, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு வழக்கம் போல சென்று இருந்தேன்.

வாரம் ஒருமுறை செவ்வாய்கிழமையன்று சர்க்கரை குறைபாட்டிற்காக தரும் சித்தா மருந்தை வாங்க நான் அங்கு செல்வது உண்டு.
என்னை போன்று ஏராளமானோர் வருவதால், கூட்டம் அலை மோதும்.

இதனால், நீண்ட வரிசையில் சில மணி நேரம் நின்று மருந்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்த வாரம் சென்றபோது, இஸ்லாமிய பெண்மணி ஒருவர், வயது கிட்டத்தட்ட 50க்கு மேல் இருக்கும் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்.

மருத்துவரை நெருங்கும் நேரத்தில் அவரை கவனித்த அந்த பெண் மருத்துவர், ஏங்க உங்களைதான் நான் நேரடியாக வந்து சீட்டை வாங்கி செல்லும்படி அல்லவா சொன்னேன்.

ஏன், நீங்க வரிசையில் நின்று வருகிறீர்கள் என அன்புடன் கடிந்துக் கொண்டார்.

ஏராளமானோர் வரிசையில் நிற்பதால், மனம் கேட்கவில்லை என்றார் அந்த பெண்மணி.

நான் எவ்வளவோ சொல்லியும் அவங்க ரூல்சே ஃபாலோ பண்ராங்க என்று அங்கு வந்திருந்த மற்றவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார் மருத்துவர்.

ரூல்சே ஃபாலோ பண்ணுவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான்.

அதில் தனி சுகம் உண்டு.

மற்றவர்கள் சில மணி நேரம் கால் வலியை தாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க, திடீரென வந்து மருந்தை வாங்கிச் செல்வது சரியான முறையும் இல்லை.

அதை, அந்த முஸ்லிம் பெண்மணி நன்கு புரிந்துக் கொண்டிருந்தார்.

ஆனால்தான், மருத்துவர் சொல்லியும் கூட கேட்காமல், நீண்ட வரிசையில் நின்று மருந்தை வாங்கிச் சென்றார். செல்கிறார்.

சட்டத்தையும், ரூல்சையும் மதிக்காத மனிதர்கள் மத்தியில், இப்படி, சில மனிதர்கள் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.

அதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடையவே செய்கிறது.

S.A.Abdul Azeez
Journalist

No comments: