Saturday, August 27, 2016

விருது.....!

விருது.....! வாழ்த்துக்கள்.....!!


சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி வரும் ராஜ் தொலைக்காட்சிக்கு, தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஆந்திரா சமூக மற்றும் காலச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ராஜ் தொலைக்காட்சி தலைமைச் செய்தி ஆசிரியர் பொன்.மகேந்திரனுக்கு விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்ற எங்கள் தலைமைச் செய்தி ஆசிரியர் பொன்.மகேந்திரனுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு நாங்களும் பாராட்டுக்களை கூறி மகிழ்கிறோம்.

பொன்.மகேந்திரனின் சிறப்பான பணிகள் இனிவரும் நாட்களிலும் மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

S.A.Abdul Azeez
Journalist

No comments: