Thursday, January 23, 2025

Press Meet.

 பீகாரில் குற்றங்கள் அதிகரிப்பு.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு.



Wednesday, January 22, 2025

தவறு....!

Car crashes through Pune apartment wall, falls from first-floor parking after driver reverses by mistake.



Tuesday, January 21, 2025

பேட்டி.....!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை  தர்காவில் ஆண்டாண்ட காலமாக  ஒற்றுமையோடு செய்துவந்த வழிபாட்டு முறைகளை தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை தமிழ்நாடு வக்பு வாரியம் எடுக்கும்.,.!

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி எம்.பி. பேட்டி....!

மதுரை, ஜன.22- மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளதால் இந்த மலை சிக்கந்தர் மலை என்று தான் காலாகாலமாக அழைக்கப்படுகிறது.  இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் மலை  மேல் உள்ள தர்காவில் ஆடு கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது. விழா நடத்துவது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (21.01.2025) திருப்பரங்குன்றம் சென்ற தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி, மலை மேல் உள்ள தர்காவிற்கு செல்லும் பாதையை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மலை மீது உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான தடை குறித்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரனிடம், உணவு எடுத்து செல்வதற்கான தடை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல் ஆய்வாளர் மாவட்ட நிர்வாகம் தான் தங்களுக்கு இந்த அறிவிப்பை கொடுத்துள்ளதாகவும் அதற்கு மேல் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். இந்த ஆய்வுக்குப் பிறகு, நவாஸ் கனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சிக்கந்தர் மலை தர்கா:

திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளது. இந்த தர்கா இருப்பதால், இந்த மலை சிக்கந்தர் மலை என்று தான் காலாகாலமாக அழைக்கப்படுகிறது. இந்த மலையில் உள்ள தர்காவிற்குப் பின்புறம் காசி விஸ்வநாதர் ஆலயமும் இருக்கிறது.  இந்த தர்காவிற்கு இஸ்லாமியர் மட்டுமல்ல, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சென்று வழிபட்டு வருகிறார்கள். அவர்களுடைய நேத்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆடு, கோழிகள் கொண்டு போய் அறுத்து உணவு சமைத்து  அந்த உணவை மற்றவர்களுக்கும் வழங்கி சாப்பிட்டு வருவது,  ஆண்டாண்டு காலமாக பழக்கத்தில் இருக்கிறது. நடைமுறையில் இருந்து வருகிறது.  தற்போது அங்கே செல்லக் கூடியவர்கள், உணவு மற்றும்  உணவுப் பொருள்கள், ஆடு, கோழிகளை எடுத்துக் கொண்டு சென்று, அங்கு பலியிடுவதற்கும்,  தற்காலிகமாக தடை விதிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

கட்டுப்பாடுகள் தேவையில்லை:

இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை, ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இது சம்பந்தமாக மதுரை மாவட்ட நிர்வாகத்தை, மாவட்ட ஆட்சியரிடமும், பேசி இருக்கிறோம். ஆண்டாண்டு காலமாக இங்கே எப்படி வழிமுறை பின்பற்றி வந்தார்களோ, ஒரு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இங்கே தர்காவும் இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயமும் இருக்கிறது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய இந்த நிலையில், இப்போது, காவல்துறை இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை இல்லை. எதற்காக இப்படியொரு கட்டுப்பாடுகளை விதித்து வரக்கூடியவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்த வேண்டும். 

முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்:

சிரமமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உடனடியாக பேசி, தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த விவகாரத்தில் ஆண்டு ஆண்டு காலமாக எப்படி, ஒற்றுமையோடு ஒரு வழிபாட்டு முறைகளை செய்து வருகிறார்களோ, அந்த முறை தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பாக எடுப்போம்.

வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள தர்கா:

இங்கே உள்ள தர்காவும், பள்ளியும் உள்ளது இந்த பள்ளியும் தர்காவும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த தர்காவின் பள்ளிவாசல்தான் இங்கு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இங்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இங்கு அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவர்கள். எனவே அனைவரும் ஒற்றுமையுடன் வழிபடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம். அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இங்கே இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து செய்வோம். இதுதொடர்பாக தொடக்க காலத்தில் இருந்தே, ஐக்கிய ஜமாத் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து இருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் மதநல்லிணத்துடன் வழிப்பாடு செய்ய ஒத்துழைத்து இருக்கிறார்கள். 

நல்ல முடிவு கிடைக்கும்:

எனவே நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். அதன்மூலம் அனைவரும் ஒற்றுமையுடன் வழிப்பாடு செய்ய வாய்ப்பு உருவாகும். மேலும் பேசிய அவர், ஏற்கனவே இந்த நடைமுறைகள் எல்லாம் இருந்ததா இல்லையா என்பதை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் விசாரிக்க முடியும். மலை மீது ஆடு, கோழி எடுத்த சென்று சமைத்து சாப்பிட்டார்களா என விசாரித்து நடைமுறையை அனுமதித்தால் போதும். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உடனடியாக தீர்வு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசை அணுகி இந்த நடைமுறையை பெற முடியும் என்று சொல்கிறோம். அதை வரக்கூடிய நாட்களில் அனுமதி பெறுவோம். இவ்வாறு நவாஸ் கனி, எம்.பி., தெரிவித்தார்.  

ஆய்வு மற்றும் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அவுதா காதர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஹபீப் முகமது ஷேக் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அத்துடன்,  முஸ்லிம் ஐக்கிய சுன்னத் ஜமாத் மதுரை நிர்வாகிகள் ஜமாத் தலைவர் லியாகத் அலி கான்,செயலாளர் காஜா மொகிதீன்,பொருளாளர் முஹம்மது பாரூக் ஆகியோரும் உடனிருந்தனர். 



============================

பயனுள்ள தகவல்....!

 வெளிநாட்டில வாழும் சகோதரர்களுக்கு....!



மோசடி.....!

 Online fraud. So, be careful.



Monday, January 20, 2025

கம்போடியாவில் இஸ்லாமிய மத சுதந்திரம்.....!

 "கம்போடியாவில் இஸ்லாமிய மத சுதந்திரம்"

கம்போடியாவில் இஸ்லாம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதமாகும். மேலும் அங்கு முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தை சாதாரணமாகவும் வெளிப்படையாகவும் பின்பற்றுகிறார்கள். அந்நாட்டில் உள்ள சாம் மற்றும் மலாய் சிறுபான்மையினரில், பெரும்பான்மையினரின் மதம் இஸ்லாமாகும். ஆர்வலர் போ தர்மாவின் கூற்றுப்படி, 1975ஆம் ஆண்டு வரை கம்போடியாவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் முஸ்லிம்கள் இருந்தனர். 2009 ஆம் ஆண்டில், பியூ ஆராய்ச்சி மையம் மக்கள்தொகையில் 1 புள்ளி 6 சதவீதம் அல்லது 2 லட்சத்து 36 ஆயிரம்பேர் முஸ்லிம்கள் என்று மதிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், வெளியுறவுத்துறை இஸ்லாமிய மக்கள்தொகையை 1 சதவீதத்துக்கும்,  குறைவாக மதிப்பிட்டது. மற்ற முஸ்லிம் சாம் மக்களைப் போலவே, கம்போடியாவில் உள்ளவர்களும் ஷாஃபி பிரிவைச் சேர்ந்த சுன்னி முஸ்லிம்கள் மற்றும் மாதுரிடி கோட்பாட்டைப் பின்பற்றுகிறார்கள். கம்போடியா அரசின் தரவுகள், கம்போடியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகள் இருப்பதாக பதிவு செய்துள்ளன.

கம்போடியாவில் இஸ்லாம்:

617-18ஆம் ஆண்டில் அபிசீனியாவிலிருந்து கடல் வழியாக இந்தோ-சீனாவிற்கு வந்த பல சஹாபாக்களின் பின்னணியில் கம்போடியாவில் இஸ்லாம் அடியெடுத்து வைத்தது என கூறப்படுகிறது. 1642 ஆம் ஆண்டில், மன்னர் முதலாம் ராமாதிபாடி கம்போடியாவின் அரியணையில் ஏறி இஸ்லாத்திற்கு மாறி, கம்போடியாவின் ஒரே முஸ்லிம் ஆட்சியாளரானார். ஒட்டுமொத்தமாக கெமர் முஸ்லிம்கள் என்ற சொல் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக சாம் மக்களுக்கு எதிரான பாகுபாடாகக் கருதப்படுகிறது. இது கம்பூச்சியா மக்கள் குடியரசின் சகாப்தத்தில் தொடங்கியது. அங்கு மதங்கள் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் பின்பற்ற அனுமதிக்கப்பட்டன. சாம்களும் அனைத்து கெமர் குடிமக்களைப் போலவே ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கிறார்கள். 

வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமையுடன். புனித இஸ்லாமிய மாதமான ரமழானில் ஆண்டுதோறும் இப்தார் கூட்டங்களை அரசாங்கம் நிதியுதவி செய்கிறது. 2018 ஆம் ஆண்டில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் கம்போடியாவை "முஸ்லிம் சகவாழ்வுக்கான கலங்கரை விளக்கம்" என்று அழைத்தார். 2016 ஆம் ஆண்டில், கம்போடிய இளைஞர் முஸ்லிம் கூட்டணியால், குறிப்பாக விளையாட்டுத் துறையில் முஸ்லிம் இளைஞர்களை உள்ளடக்குவதற்காக, CMYA FC என்ற பெயரில் அமெச்சூர் கால்பந்து கிளப் நிறுவப்பட்டது.

கம்போடிய முஸ்லிம்களின் மத சுதந்திரம்:

கம்போடிய முஸ்லிம்கள் முழு மத சுதந்திரத்தையும் ஒருங்கிணைப்பையும் அனுபவிக்கிறார்கள் .கம்போடியாவில் இஸ்லாமிய மத சுதந்திரம் நிலைநிறுத்தப்படுவதாகவும், கல்வி நிறுவனங்களின் அனைத்து மட்டங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் பாரம்பரிய இஸ்லாமிய ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவதாகவும் கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் கூறியுள்ளார். 

சோகா புனோம் பென் ஹோட்டலில் கடந்த மாதம்  பிராந்திய இஸ்லாமிய தவா கவுன்சில் ஆஃப் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் (RISEAP) இன் 20வது பொதுச் சபையின் தொடக்க விழா நடைபெற்றது.  இதில் கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “இஸ்லாத்தில் வழிபாட்டு சுதந்திரம் கம்போடிய அரசாங்கத்தால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. உண்மையில், கம்போடிய முஸ்லிம் மாணவர்கள் அனைத்து கல்வி மட்டங்களிலும் பாரம்பரிய இஸ்லாமிய ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள், பெண்கள் தலைக்கவசம் அணியவும், ஆண்கள் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தொப்பிகளை அணியவும் அனுமதிக்கப்படுகிறார்கள்”என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கூடுதலாக, விமான நிலையங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் குறிப்பாக, அமைதி அரண்மனையில் வழிபாட்டிற்கான வசதிகள் உள்ளன. அங்கு அமைச்சர்கள் குழு ஒரு பிரத்யேக பிரார்த்தனை அறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில், கம்போடியாவின் அமைதி, சமூக வளர்ச்சி மற்றும் சர்வதேச உறவுகள் வலுப்படுத்தப்பட்டதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கூட்டாளி நாடுகளின் ஆதரவுடன், தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களுடன் இஸ்லாமிய மதக் கல்வியைத் தொடர முஸ்லிம் குடிமக்கள் இப்போது அதிக வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சர்வதேச இஸ்லாமிய மாநாடு:

அதிகரித்து வரும் முஸ்லிம்கள் சமூகத்திற்கு பங்களிக்கவும், கம்போடியாவில் வணிகங்களை நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஒத்துழைக்கவும் முடிகிறது என்று பிரதமர் ஹன் மானெட் மேலும் கூறினார். இந்தாண்டு, இஸ்லாமிய உலக கூட்டணி புனோம் பென்னில் ஒரு சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் மற்ற நாடுகள் கம்போடியாவின் தேசிய மற்றும் மத நல்லிணக்க அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும், இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வில் பங்கேற்கவும் உதவும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

இந்த சாதனைகள் கம்போடிய சமூகம் அதன் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதை பிரதிபலிக்கின்றன என்று ஹன் மானெட் எடுத்துரைத்தார். முஸ்லிம் சமூகம் கம்போடிய சமூகத்தின் பொறுப்பான மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். கம்போடிய முஸ்லிம்கள் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் இணக்கமான மதங்களுக்கு இடையிலான உறவுகள் இல்லாமல் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரத்தை அடைய முடியாது என்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார். அரசியல் மற்றும் மத நடவடிக்கைகளில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் கெமர் முஸ்லிம் குடிமக்களின் அர்ப்பணிப்பையும் பிரதமர் ஹுன் மானெட் எடுத்துரைத்தார். 

ஹலால் பொருளாதாரம்:

இஸ்லாமிய நிதி மற்றும் ஹலால் பொருளாதாரம் போன்ற துறைகள் உட்பட, கம்போடியாவை உலகளாவிய இஸ்லாமிய பொருளாதாரத்திற்குத் திறப்பதில் கெமர் முஸ்லிம் குடிமக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை பிரதமர் அங்கீகரித்தார். 

கம்போடியாவின் தற்போதைய மக்கள் தொகையான  சுமார் 2 கோடியில் சுமார் 5 லட்சம் பேர் முஸ்லிம்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதி மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி வரும் கம்போடியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் கம்போடியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை  அதிகளவு உயரும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கம்போடியர்களை கவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கான இறுதிக்கட்ட ஆலோசனை....!

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின்  இறுதிக்கட்ட ஆலோசனை வரும் 24 மற்றும் 25 தேதி நடைபெறுகிறது..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டம்.....!!

புதுடெல்லி, ஜன.21- வக்பு திருத்த மசோதா 2024 குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதிச் சுற்று விவாதத்தில் இறங்கியுள்ளது. மேலும், சட்டத்தில் தங்கள் திருத்தங்களைச் சமர்ப்பிக்க உறுப்பினர்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மசோதாவின் 44 பிரிவுகளை ஆய்வு செய்ய வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வக்பு சட்டத் திருத்த மசோதா:

வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, அது தொடர்பான புதிய மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கல் செய்தது. அரசாங்கம் மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, ​​ஜே.டி.(யு) தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங் மக்களவையில் மசோதாவை ஆதரித்தார். வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும் என்றும், மஸ்ஜித்களின் நிர்வாகத்தில் தலையிடும் முயற்சி அல்ல என்றும் அவர் வாதிட்டார். தெலுங்கு தேசம் கட்சி இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், மசோதாவை மேலும் ஆய்வுக்காக ஒரு கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கடுமையாக வாதிட்டது.

மேலும், திமுக. இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதுகுறித்து விவாதிக்க பா.ஜ.க. எம்.பி., ஜக்தம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களை வேண்டும் என்றே கூட்டத்தில் சேர்க்கவில்லை. இந்த குழு பல கட்டங்களாக கூடி, வக்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விவாதித்தது. அப்போது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமயசர்பின்மை கொள்கைக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதேபோன்று, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து, கடிதங்கள் எழுதினர். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினார்கள். 

சென்னையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு வந்தபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இ.யூ.முஸ்லிம் லீக் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ் கனி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து அறிக்கை அளித்ததுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர். 

இறுதிக்கட்ட ஆலோசனை:

இத்தகையை சூழ்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் இறுதிக்கட்ட ஆலோசனை வரும் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக வரும் 22ஆம் தேதிக்குள், குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும், தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் திருத்தங்களைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் திங்கட்கிழமை அனுப்பப்பட்ட அறிக்கையில், வரும் புதன்கிழமைக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வக்பு  திருத்த மசோதாவின் கூட்டு நாடாளுமன்றக் குழு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த  பிரிவு வாரியாக விவாதம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மக்களவை செயலகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான களத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிக்கை தாக்கல்:

தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, சர்ச்சைக்குரிய மசோதா குறித்த இறுதி அறிக்கை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மசோதாவை விரைவில் முன்மொழிய அரசாங்கம் விரும்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ.க. அதன் அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் தொடர்பு கொண்டுள்ளது. 

இதனிடையே, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான ஜக்தம்பிகா பால், மசோதா குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியும் என்று நம்புவதாகக் கூறினார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக ஜே.பி.சி தொடர்ந்து கூடி, நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி ஆலோசித்து வருவதாக கூறிய அவர், உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்து அறிக்கையை வழங்குவோம் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். கடைசியாக குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது நீட்டிக்கப்பட்டது. எனவே இந்த அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜக்தம்பிகா பால் கூறினார். 

கடும் எதிர்ப்பு:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜேபிசிக்கு அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதா, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் நிர்வாகத்தில் டிஜிட்டல் மயமாக்கல், கடுமையான தணிக்கைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் உள்ளிட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஜே.பி.சி., 10 மாநிலங்களில் கூட்டங்களை நடத்தியது. மேலும் திங்கட்கிழமை மேற்கு வங்க மாநில வக்பு வாரிய உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய குழு, இன்று (செவ்வாய்க்கிழமை) லக்னோவில் ஆலோசனை நடத்துகிறது. ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று ஆலோசனை நடத்த வேண்டும் என்ற முடிவு தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை மற்றும் மசோதா சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்