Wednesday, March 5, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (68)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

 நாள் - 68



இரண்டு கிரைம்கள்...!  எல்லாமே மதுவால்.......!!

மதுவால் நடக்கும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

இளம் தலைமுறையினர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி, குற்றச்செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருகிறது.

நாளிதழ்களை, வார இதழ்களை பிரித்தால், மதுவின் தீமையால் ஏற்படும் கிரைம்கள் குறித்து செய்திகள் அவற்றில் கட்டாயம் இடம் பிடிக்கின்றன.

சென்னையில் அண்மையில்  இரண்டு கிரைம் சம்பவங்கள் நடந்தன.

இவை, இரண்டும் மது அருந்திய போதையில் செய்யப்பட்ட குற்றச் செயல்கள்...

வாருங்கள்....அந்த சம்பவங்களை பார்ப்போம்...

முதலாவது சம்பவம்....!

மது குடிப்பதை கண்டித்த மனைவி எரித்து கொலை...!.கணவன் கைது...!!

சென்னை குன்றத்தூர் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். பெயிண்டிங் தொழில் செய்யும் இவரது மனைவியின் பெயர் தாரா. தாரா கோவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.

சந்தோஷுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் இரவில் மது அருந்திவிட்டு, மனைவியுடன் தகராறு செய்வாராம் சந்தோஷ்.


இதேபோன்று, கடந்த 2.3.2014 அன்று இரவும் சந்தோஷ் மது குடித்துவிட்டு வர, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தாரா கணவரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், சமையல் அறையில் இருந்து மண்ணெண்ணெய்யை தாரா மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார்.

தீயில் கருகிய தாராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தாரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இரண்டாவது சம்பவம்.....!

நண்பனை தீ வைத்து கொல்ல முயன்றவர் கைது...!

நெய்வேலியை அடுத்த மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், செல்வக்குமார். இருவரும் நண்பர்கள்.


மதுப்பழக்கம் கொண்ட இவர்கள், கடந்த 2.3.2014 அன்று இரவு, நெய்வேலி நேரு சிலை அருகே அமர்ந்து ஒன்றாக மது அருந்தினார்கள்.

போதை தலைக்கு ஏறியதும், போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வக்குமார், பைக்கிற்கு பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மணிகண்டன் மீது ஊற்றி தீ வைத்தார்.

தகவல் அறிந்த போலீசார், உயிருக்குப் போராடிய மணிகண்டனை மீண்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

படித்தீர்களாக நண்பர்களே...இரண்டு சம்பவங்களும், குற்றங்களும் மதுவால், மதுவின் போதையால் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட போதை நமக்கு (சாரி) மக்களுக்கு தேவையா...அமைதியான வாழ்க்கையை இழந்து, சிறையில் வாட வேண்டுமா....


குற்றச்செயல்களுக்கு ஆணிவேராக இருக்கும் மதுவை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் அல்லவா...

மதுப்பழக்கம் உள்ளவர்கள், தங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் அல்லவா....

நிச்சயம் நல்லது நடக்கும்...நம்புவோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: