Tuesday, March 25, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (73)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள்- 73

தமிழகத்தில் தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் கடைதான் காரணம்.....!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு....!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு.

ஒவ்வொரு தேர்தலிலும் வைகோ எடுக்கும் முடிவு, அவருக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. வரலாறு அப்படிதான் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. .

இந்த முறை அவர் எடுத்த நிலைப்பாடு குறித்து வரும் மே 16ஆம் தேதி தெரிந்து விடும்.

ஆனால், மதுவுக்கு எதிராக அவர் செய்யும் பிரச்சாரம் உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தில் கூட, தமிழகத்தில் இருந்து மதுவை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், உயர்ந்த ஆசையில் வைகோ பேசியிருக்கிறார்.

தேர்தல் காலங்களில் மது ஆறாக ஓடும்போது, இவர், மதுவே கூடாது என்று பேசுவது ஆச்சரியம்.

ஆனால், மதுவை எப்படியும் ஒழித்துவிட வேண்டும் என்ற வைகோவின் ஆசையை நான் பாராட்டுகிறேன். அவரை வாழ்த்துகிறேன்.

இதே விருதுநகர் தொகுதியில் வைகோ பேசிய பேச்சு உங்கள் பார்வைக்கு...

தமிழகத்தில் தாய்மார்களின் கண்ணீருக்கும், இளைஞர்களின்  சீரழிவுக்கும் காரணம் டாஸ்மாக் கடைதான் என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ குற்றஞ்சாட்டினார்.

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் (25.03.2014) சூலைக்கரையில் பொதுமக்களிடம் தனக்கு ஆதரவு அளிக்கக் கோரி வைகோ பேசியதாவது: தமிழகத்தில் உள்ள தாய்மார்களின் கண்ணீருக்கு காரணம், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைதான் என குற்றஞ்சாட்டினார்.

இதனால், இளைஞர்களும் சீரழிந்து வருகிறார்கள் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன்.

இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் 1500 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டேன்.

அப்போது கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் வரவேற்றார்கள்.

இப்படி பேசி இருக்கிறார் வைகோ.

நல்ல பேச்சு....மதுவுக்கு எதிரான இந்த பேச்சை நான் வரவேற்கிறேன்.

என்னுடைய பதிவிலும் பதிவு செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

No comments: