People will forget
what you said.
People will forget
what you did.
But people will never forget
how you made them feel.
People will forget
what you said.
People will forget
what you did.
But people will never forget
how you made them feel.
வாழ்க்கையில்
ஆசையை சுமக்காமல்
அன்பை சுமந்து செல்லுங்கள்.
வாழ்வில் என்றென்றும்
மகிழ்ச்சி மழை
பெய்துக் கொண்டே
இருக்கும்.
” ரமழானில் நேர மேலாண்மை“
புனித ரமழான் மாதம், ஏக இறைவனின் அருளை வாரி வழங்கும் அற்புதமான நன்மைகளின் மாதமாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் ரமழானின் நன்மைகளை அறுவடை செய்வதற்குப் பதிலாக, தேவையற்ற செயல்களில் மும்முரமாக உள்ளனர். புனித ரமழான் காலத்தில் நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு ஆன்மீக பலன்களை பெற நாம் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் மட்டுமே, ரமழானின் முழுமையான நன்மைகள் கிடைத்து உள்ளம் தூய்மை நிலையை அடையும்.
மொபைல் போன்களில் வீணாகும் நேரம் :
நம் சமூகத்தில், ஒவ்வொருவரின் கையிலும் இன்று, ஒரு செல்போன் உள்ளது. சிறு குழந்தைகள் கூட மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் பயனற்ற வீடியோக்களைப் பார்ப்பது, வாட்ஸ்அப்பில் பிஸியாக இருப்பது, தொலைபேசியிலோ அல்லது செய்திகளிலோ வேறொருவரைப் பற்றி கிசுகிசுப்பது. மொபைல் போன்களின் இந்த அதிகப்படியான பயன்பாடு வழிபாட்டிற்கான நமது நேரத்தை வீணாக்குகிறது. எனவே, ரமழான் மாதத்தில் மொபைல் போன்களின் குறைந்த பயன்பாட்டை உறுதி செய்யுங்கள். தேவையற்ற அறிவிப்புகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லத்தரசிகள் மொபைல் போன்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், மேலும் வீட்டில் உள்ள அனைவரும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் இதைச் செய்ய அறிவுறுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுங்கள். வழிபாட்டிற்காக அதிக நேரம் செலவிட உங்கள் மொபைல் போனை முக்கியமான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். .
தொலைக்காட்சியில் இருந்து விலகி இருத்தல் :
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இன்று, ஒரு தொலைக்காட்சி பெட்டி உள்ளது, மேலும் சில பெண்கள் தொலைக்காட்சியில் நாடகங்களைப் பார்த்துக்கொண்டே வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். குழந்தைகள் தொலைக்காட்சியில் கார்ட்டூன்களையும் பார்க்கிறார்கள். இந்தச் செயல்பாடு நிறைய நேரத்தை வீணடிக்கிறது. அதை அகற்றவும். சிறிது நேரம் ‘தொலைக்காட்சியை அணைத்து விடுங்கள்.
====================
"ரமழானின் விலைமதிப்பற்ற நேரங்களை இழக்கும் செயலைகளைத் தவிர்க்க முயற்சி செய்து, முடிந்தவரை அதிக நேரத்தை வழிபாட்டில் செலவிடுங்கள். புனித ரமழான் மாதத்தின் ஒவ்வொரு கணமும் விலைமதிப்பற்றது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அதை வீணாக்க விடாதீர்கள்"
====================
ரமழான் மாதத்தில், குழந்தைகள் நோன்பு இருந்துகொண்டே லுடோ கேம்ஸ், கேரம் போர்டு, பேட்மிண்டன், சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகளை விளையாடி தங்கள் நேரத்தை எளிதாகக் கழிக்கிறார்கள். நோன்பு நோற்பதற்கும் வழிபடுவதற்கும் பதிலாக, இந்த எல்லா விளையாட்டுகளிலும் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த தேவையற்ற செயலில் தங்கள் குழந்தைகள் நேரத்தை வீணடிக்க விடாமல், ரமழானின் விலைமதிப்பற்ற நேரங்களிலிருந்து பயனடைய அவர்களை ஊக்குவிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும்.
சஹரில் அதிகப்படியான தயாரிப்பு :
சில பெண்கள் நள்ளிரவில் இருந்து சஹரை தயாரிக்கத் தொடங்குகிறார்கள். அனைவரும் தஹஜ்ஜுத் தொழுகையை மறந்துவிடுகிறார்கள். பெண்கள் எளிய உணவை சமைத்து பரிமாற வேண்டும். உங்கள் பெரும்பாலான நேரத்தை சஹரில் செலவிட வேண்டாம். ஆனால் சஹரில் தஹஜ்ஜுத் மற்றும் பிரார்த்தனைக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நவாஃபில் படிக்கவும், ஓதவும், வழிபாட்டில் ஈடுபடவும்.
தேவையற்ற ஆடம்பரமான இப்தார் :
நமது பெண்களில் பெரும்பாலோர் ரமழானில் முடிந்தவரை பலவகையான உணவுகளை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளனர். இன்று நாம் இதைச் செய்ய வேண்டும், நாளை அதைச் செய்ய வேண்டும். பல்வேறு வகையான உணவுகளைச் செய்வதால், நாம் திருக்குர்ஆன் ஓதுவதையும் வழிபடுவதையும் இழக்கிறோம். எளிய உணவு நம் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் எளிய உணவு நம் பணத்தையும் பாதுகாக்கிறது. மேலும் அது வீணான செலவினங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. எனவே அதிக உணவுகளை சமைக்காதீர்கள். சமையலறையிலிருந்து வெளியே வந்து வணங்குங்கள். எளிய உணவு நம்மை ஆரோக்கியமாகவும், பொருத்தமாகவும், விழிப்புடனும் வைத்திருக்கிறது. நீங்கள் ஒரு இப்தார் விருந்தை ஏற்பாடு செய்தாலும், எளிய உணவுகளை விரும்புங்கள். பழங்கள் மற்றும் பழச்சாறுகளால் மேஜையை அலங்கரிக்கவும்.
அதிகமாக தூங்குவதை தவிர்க்க வேண்டும் :
மிகக் குறைவாகவும் அதிகமாகவும் தூங்குவது, இரண்டும் ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் ரமழானில், நமது அதிகபட்சமாக 6 முதல் 8 மணி நேரம் தூங்கி முடிந்தவரை வழிபடுவதாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் அதிகமாக தூங்குவது வழிபாட்டிற்காக நமது விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குகிறது. சிலர் நோன்பு நோற்கும்போது பாதியை முழுவதுமாகவோ அல்லது அதற்கு மேலோ தூக்கத்தில் செலவிடுகிறார்கள். இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சந்தைகளில் அதிக நேரத்தைச் செலவிடும் பெண்கள் ஷாப்பிங் செய்கிறார்கள். பல சந்தைகளில் சுற்றித் திரிந்து ஷாப்பிங் செய்கிறார்கள். இதனால் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகிறார்கள். பெரும்பாலும் இப்தாரின் போது, பெண்கள் சந்தைகளில் ஷாப்பிங் செய்து சாலைகளில் நோன்பு திறப்பதைக் காணலாம். ரமழான் வருவதற்கு முன்பே பெண்கள் தங்கள் ஷாப்பிங் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். சமையலறைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் ஈத் தொடர்பான அனைத்து பொருட்களையும் முன்கூட்டியே வாங்கினால் நோன்பின் போது சந்தைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.
மேற்கூறிய செயல்பாடுகள் ரமழானின் விலைமதிப்பற்ற நேரங்களை நமக்கு இழக்கச் செய்கின்றன. அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்து, முடிந்தவரை அதிக நேரத்தை வழிபாட்டில் செலவிடுங்கள். மேலும் புனித ரமழான் மாதத்தின் ஒவ்வொரு கணமும் விலைமதிப்பற்றது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அதை வீணாக்க விடாதீர்கள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்தளவுக்கு வெறுப்பு உங்களுக்கு ?
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
உலகிலேயே மிகவும் அழகான ஒரு நாடு என்று அழைக்கப்படும் இந்திய நாடு, அதன் மதச்சார்பின்மை கொள்கை காரணமாக, உலக மக்களிடையே மிகவும் மதிக்கப்படும் நாடாக இருந்து வருகிறது. 140 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புள்ளிவிவரப்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இந்தியாவில் உள்ளன. அந்த சமுகங்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகைகள் அனைத்தும் வெவ்வேறாக இருந்து வருகின்றன.
எனினும் இந்திய மக்கள் அனைவரும் நாட்டை நேசிக்கும் மக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகள் வேறுபாட்டால், நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு தங்களது பங்களிப்பை அவர்கள் வழங்கி வருகிறார்கள். இப்படி அழகான மிகபெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவில், தற்போது ஒரு புதிய பிரச்சினை உருவாகியுள்ளது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூறி, ஒருசிலர் பிரச்சினையை உருவாக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு குழப்பதை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் மீது மிகப்பெரிள அளவுக்கு வெறுப்பை பரப்பி வருகிறார்கள்.
பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் வெறுப்பு :
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், வெறுப்பு போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரம் தடுத்து நிறுத்தப்படவில்லை. முஸ்லிம்களை தாக்கும் பாசிச சிந்தனை கொண்டவர்கள், நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
அண்மையில் உத்தரகாண்டில், கோவிலுக்கு அருகில் உள்ள காலியான இடத்தில் தொழுகை நடத்தியதற்காக முதியவர் ஒருவர் தாக்கப்பட்டார். முதியவர் ஒருவர் தொழுகை நடத்தும் போது, அவரைத் தாக்கி, வார்த்தைகளால் திட்டி, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்திய வீடியோ, வெளியாகி பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 24, 2026 அன்று உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் தொகுதியின் ஜகத்பூர் கிராமத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட ஷாஹித், ரேஷாம் பாரியில் வசிக்கிறார். பாதிக்கப்பட்ட ஷாஹித், அதரியா கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு காலியான நிலத்தில் ஜுஹர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடைய அரவிந்த் சர்மாவால் தாக்கப்பட்டார்.
"ஒரு பிராமணரின் நிலத்தில் தொழுகை நடத்த உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" என்று கேட்டு அந்த நபர் முஸ்லிம் முதியவரை தாக்கியுள்ளார். முஸ்லிம் பெரியவர், ரமளான் நேரம் என்பதால், பள்ளிவாசல் அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்ததால், அட்டாரியா கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள காலியான வயலான அட்டாரியா மேளா மைதானத்தில் தொழுகை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது தொழுகைக்குப் பிறகு மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டியிருந்தது. ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட அரவிந்தின் முன்னாள் மனைவி சரிதா சக்சேனா என்ற பெண், சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம் நபர் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார். சர்மா ஒரு கொலைக் குற்றவாளி என்றும், தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக முன்னாள் எம்.பி.யின் வெறுப்பு செயல் :
இதேபோன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் போர்வை விநியோகம் செய்த பாஜக முன்னாள் எம்.பி., சுக்பீர் சிங் ஜானாபுரியா,போர்வை வாங்கியவர்களின் பெயரைக் கேட்டு முஸ்லிம்கள் என்று தெரிந்ததும் கொடுத்த போர்வைகளை பிடுங்கி வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் போங்க் சவாய் மாதோபூர் தொகுதி பாஜக முன்னாள் எம்.பி சுக்பீர் சிங் ஜானாபுரியா அண்மையில் ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளை விநியோகம் செய்தார். அப்பொழுது போர்வை வாங்க வரிசையில் நின்ற பெண்களிடம் அவரது உதவியாளர்கள் பெயர் விபரங்களை கேட்டனர். சுஹரா ஜோராக்கான், ராஷியா, சுபைதா என முஸ்லிம் பெயர்களை பெண்கள் கூறியதை கேட்ட முன்னாள் எம்.பி உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும், பிரதமர் மோடியை அவமதிக்கும் முஸ்லிம்களுக்கு போர்வை பெற தகுதி இல்லை தனது செயலுக்கு அந்த பாஜக முன்னாள் எம்.பி நியாயம் கற்பித்தார்.மேலும் இது அரசு திட்டம் அல்ல என்றும் தனது சொந்த செயலில் செய்யும் உதவி என்பதால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தான் மட்டுமே தீர்மானிப்பேன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார். மணி நேர கணக்கில் வரிசையில் நின்ற முதியவர்களை மதத்தின் பெயரால் அவமானப்படுத்திய பாஜக முன்னாள் எம்.பிக்கு எதிராக அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?என்று கேள்வி எழுப்பினர். மேலும் முன்னாள் எம்.பி.யின் இந்த பாராபட்சமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போர்வையை பெற்ற இந்து சமூகத்தை சேர்ந்த சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை அவரிடமே திரும்ப ஒப்படைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில், முஸ்லிம்களின் மீதான வெறுப்பு போக்கு தற்போது வேகம் எடுத்துள்ளது என்றே கூறலாம். உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் உள்ள 200 ஆண்டுகளுக்கும் மேலான பள்ளிவாசலில் தொழுகை நடத்த தற்போது நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் மஸ்ஜித்தை மூடி சீல் வைத்துவிட்டது. இதனால், லக்னோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் மஸ்ஜித்திற்கு வெளியே தொழுகை நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி தொழுகை நடத்திய முஸ்லிம் மாணவர்களுக்கு ஆதரவாக இந்து மாணவர்கள் பாதுகாப்பு அரண் போன்று நின்று பாதுகாப்பு வழங்கிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுமட்டுமல்லாமல், முஸ்லிம் முதியவர்களை அடித்து தாக்குவதும், ரயிலில் பயணம் செய்யும் முஸ்லிம் பயணிகளின் மத்தியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பி அவர்களை சிறுமைப்பட வைப்பது., பள்ளி மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் வந்தே மாதரம் என்ற பாடலை முஸ்லிம் மாணவிகளின் மத்தியில் பாடி, வெறுப்பு ஏற்படுத்துவது‘ போன்ற போக்குகள் தற்போது வட மாநிலங்களில் வழக்கமாக மாறிவிட்டன.
வேடிக்கை பார்க்கும் மோடி அரசு :
இப்படி பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் சம்பவங்கள், வெறுப்பு வன்முறைகள் ஆகியவற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கண்டும் காணாமல் அமைதியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வெறுப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
நாட்டின் வளர்ச்சியில் உண்மையாக அக்கறை கொண்டு செயல்படும் இந்திய முஸ்லிம்கள் மீது ஏன் இந்தளவுக்கு வெறுப்பு பாசிச அமைப்புகளுக்கு இருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், நாட்டில் முஸ்லிம்கள் அமைதியாக வாழக் கூடாது என்ற நோக்கமே அவர்களிடம் இருக்கிறது என்பது உறுதியாக தெரிய வருகிறது. மதசார்பற்ற ஒரு நாட்டில், மதசார்பின்மையை உறுதியாக அரசியலமைப்பு சட்டம் எடுத்து கூறியபோதும், அதற்கு மாறாக பாசிச அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை விதைத்து அறுவடை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன்மூலம், உலக அளவில் இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய அளவுக்கு அவப்பெயர் வந்துக் கொண்டு இருக்கிறது என்பதை அவர்கள் ஏனோ மறுந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களும் கொஞ்சமும் கவலைக் கொள்ளாமல், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாகும். அமைதியான, அழகான கலாச்சாரம் கொண்ட இந்திய நாடு, தற்போது நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் தனது அழகை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.
===========================
Palestinian women, including widows,
are running a charitable initiative in Gaza
to bake bread and distribute it free of charge
to displaced families in schools, shelters,
and tents.
உள்ளது எதுவோ
அது இறைவன்
கொடுத்தது என
மகிழ்ச்சியாக இருப்போம்.
இல்லாதது எதுவோ
அது இனி இறைவன்
கொடுக்கப் போவது
என்று உறுதியான
நம்பிக்கையோடு இருப்போம்.
திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம்...!
Preserved from 300 years ago,
this Qur’an reveals how deeply faith
and beauty were valued by those
who dedicated their lives to writing it.
" ரமழானில் துடிக்கும் இதயமாக மாறியுள்ள ஜித்தாவின் பலாத் தளம் "
சவூதி அரேபியாவின் பாரம்பரிய மற்றும் வரலாற்று தளமான ஜித்தாவில் உள்ள பலாத் தற்போது துடிக்கும் இதயமாக மாறியுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான வரலாற்று புகழ்பெற்ற ஜித்தா பலாத், மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக வரலாற்றுப் பகுதியில் பலாத்தின் வரலாற்று மதிப்பு மற்றும் உணர்ச்சி முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், ரமழானின் முதல் வாரத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பலாத் தளத்திற்கு வருகை தந்துள்ளனர். பார்வையாளர்கள் பாப் மக்கா, மக்கா வாயில் முதல் பண்டைய சந்துகளின் ஆழம் வரை நீண்டு செல்லும் ஒரு துடிப்பான மனித சங்கலியை உருவாக்கினர்.
பாரம்பரிய சமூக வாழ்க்கை :
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பெஞ்ச்மார்க் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நிகழ்வுகளின் வளமான நாட்காட்டியால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டுள்ளதால் பார்வையாளர்களின் வருகை இந்தளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் பலாத் தளத்தில் சதுரங்கள் மற்றும் பாதைகளை துடிப்பான இடங்களாக மாற்றி அழகாக காட்சி அளிக்கிறது. ரமழான் ஸ்டால்களில் விற்பனையாளர்களின் சத்தங்கள் மற்றும் பாரம்பரிய கைவினைகளின் காட்சிகளுக்கு மத்தியில், பார்வையாளர்கள் காலப்போக்கில் ஒரு பயணத்தில் தங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள், சமகால தொடுதலுடன் பாரம்பரிய சமூக வாழ்க்கையின் விவரங்களைத் தூண்டினர்.
ரமழான் இரவுகளில் பலாத் :
புனித ரமழான் இரவுகளில் பலாத் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும். இந்தப் பகுதி பாரம்பரியம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் வளமான கலவையை வழங்குகிறது. இது குடியிருப்பாளர்களையும் ஆன்மீக சூழலைத் தேடும் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது. மேலும் ஹிஜாசி அடையாளத்தை பிரதிபலிக்கிறது. தாராவீஹ் தொழுகைக்குப் பிறகு, குறுகிய சந்துகள் விளக்குகள் மற்றும் பாரம்பரிய விளக்குகளால் ஒளிரும் துடிப்பான பாதைகளாக மாறும். விளக்குகள் பவளக் கல் கட்டிடங்கள் மற்றும் ரவாஷீன் எனப்படும் சிக்கலான செதுக்கப்பட்ட மர ஜன்னல்களை எடுத்துக்காட்டுகின்றன. சில ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தையவையாகும்.
=====================
"புனித ரமழான் இரவுகளில் பலாத் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும். இந்தப் பகுதி பாரம்பரியம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் வளமான கலவையை வழங்குகிறது. இது குடியிருப்பாளர்களையும் ஆன்மீக சூழலைத் தேடும் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது"
=====================
வரலாற்று அருங்காட்சியகங்கள் மற்றும் வீடுகளும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. பவளக் கல் மற்றும் மர லேட்டிஸ் வேலைப்பாடுகளின் தனித்துவமான கட்டடக்கலை கலவையை ஆராய ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இருவரும் அதிக அளவில் வருகை தந்தனர். டிஜிட்டல் வழிகாட்டுதல் மற்றும் ஸ்மார்ட் கூட்ட மேலாண்மை ஆகியவை பார்வையாளர்களின் பெரும் ஓட்டத்தை மீறி சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்தன.
பராம்பரிய சந்தைகள் :
பலாத் தளத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் பாரம்பரிய சந்தைகளையும் ஆராய்கின்றனர். அவற்றில் சூக் அல் அலவி மற்றும் சூக் கபில் ஆகியவை அடங்கும். அவை மசாலாப் பொருட்கள், ஓரியண்டல் வாசனை திரவியங்கள், ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களை வழங்குகின்றன. மேலும் பலாத் தளம் அதன் வரலாற்று சதுக்கங்களில் கலாச்சார மற்றும் கலை நிகழ்வுகளை நடத்துகிறது. பாரம்பரிய கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் அனுபவத்தை மேலும் வளப்படுத்துகின்றன. அரவணைப்பு மற்றும் சமூக தொடர்புகளால் குறிக்கப்பட்ட சூழ்நிலையில் சவூதியின் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய உணவுகள் மற்றும் ரமலான் பானங்களை அவை வழங்குகின்றன. ரமழான் இரவுகளில், பலாத் வரலாறு மற்றும் நவீனத்துவத்தின் சந்திப்பு இடமாக மாறி நிற்கிறது. இது சவூதி ராஜ்ஜியத்தின் கலாச்சார வரைபடத்தில் ஜித்தாவின் இடத்தை வலுப்படுத்தும் அதேவேளையில் அதன் அடையாளத்தையும் பாதுகாக்கிறது.
இதுஒருபுறம் இருக்க, ரமழானில் நோன்பாளிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கா சவூதி அரேபியாவின் வர்த்தக அமைச்சகம் முதல் வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு சுற்றுப்பயணங்களை நடத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள், குறிப்பாக புனித மாதத்தில் அதிக தேவை உள்ளவை ஆகியவற்றின் கிடைக்கும் தன்மையை கண்காணிப்பதே இந்த ஆய்விந்ன நோக்கமாகும். நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் விலைகளைக் கையாளும் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்கும் அடிப்படை பொருட்கள் மற்றும் ரமழான் தொடர்பான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், ரமழான் முழுவதும் அதன் களக் குழுக்களுக்கு விரிவான ஆய்வுத் திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
You will be the most successful
person in your life
if you follow all the
advices that you give
to others.
உங்களுடைய
முதல் வெற்றி எது தெரியுமா..?
உங்களை நீங்கள் ரசிப்பது.
உங்களை நீங்கள்மதிப்பது.
உங்கள் மீது
நீங்கள் நம்பிக்கை கொள்வது...!
எனது
" உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி "
நூலை மீண்டும் மீண்டும்
வாசித்து மகிழ்ந்த
இனிய தருணம்...!
" புனித ரமளானின் உணர்வைக் கொண்டாடும் திரியா சந்தை "
ரமளான் மாதம் வந்துவிட்டலேயே, உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏக இறைவனின் கட்டளையை ஏற்று நோன்பு வைக்கும் முஸ்லிம்கள், அவனது கட்டளைப்படியே ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்தும் ஆனந்தம் அடைகிறார்கள். மேலும் ஜகாத் என்ற ஏழை வரியை வழங்கி தங்களுடைய செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய அருமையான வாய்ப்பை ரமளான் மாதம் வழங்குவதால், இஸ்லாமியர்களின் குடும்பங்களில் எப்போதும் மகிழ்ச்சி குடிப் புகுந்து தழைத்தோங்குகிறது.
அதுமட்டுமல்லாமல், ரமளான் மாதத்தில் இஸ்லாமிய சிறுவர் சிறுமிகள் மற்றும் பெண்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் கூறலாம். காரணம், அந்த மாதத்தில் தாராளமாக செலவு செய்து, தங்களுக்கு தேவையான, விருப்பமான பொருட்களை, ஆடைகளை, நகைகளை அவர்கள் வாங்குகிறார்கள். இதனால், முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள சந்தைகள் களைகட்டிவிடுகின்றன. இந்த சந்தைகள் மூலம் மிகப்பெரிய அளவுக்கு வணிகம் அடைபெறுவதால், பொருளாதார வளர்ச்சியும் அந்த நாடுகளில் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.
திரியா ரமளான் சந்தை :
இத்தகைய அருமையான சூழ்நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள திரியா பினாலே அறக்கட்டளையின் ஜாக்ஸ் (JAX) ரமளான் சந்தை ரியாத்தில் வியாழக்கிழமை (26.02.202) தொடங்கி மார்ச் 7 வரை நடைபெறகிறது. இந்தச் சந்தை உள்ளூர் உணவு வகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஒன்றிணைத்து, புனித ரமளான் மாதத்தின் உணர்வைக் கொண்டாடும் ஒரு சூழலில் அமைக்கப்பட்ட ஒரு உண்மையான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்.
முக்கிய சந்தைப் பாதையில் விற்பனையாளர் கியோஸ்க்குகள் மற்றும் உணவு மற்றும் பான அனுபவங்கள், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஓய்வெடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் இருக்கும். அத்துடன் பல்வேறு கியோஸ்க்குகள் ஜரீஷ், சலீக், லுகைமத், முத்தப்பாக் மற்றும் சம்பூசா உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் சமகால ரமளான் உணவுகளையும், பானங்கள், புதிய பழச்சாறுகள், இனிப்புகள் மற்றும் பேரீச்சம்பழங்களையும் இந்த சந்தையில் கிடைக்கும்
ரமளானின் உணர்வை கொண்டாடும் சந்தை :
10 நாட்கள் நடைபெறும் இந்த சந்தை, அனைத்து வயதினருக்கும் ஒரு ஊடாடும் கலாச்சார நிகழ்ச்சியையும் நடத்தும். இதில் கதை சொல்லும் அமர்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் மருதாணி கலைத்திறன் ஆகியவை இடம்பெறும். மேலும், சில்லறை கியோஸ்க்குகளில் ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பரிசுகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு இடம்பெறும்.
====================
" திரியா சந்தை உள்ளூர் உணவு வகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஒன்றிணைத்து, புனித ரமளான் மாதத்தின் உணர்வைக் கொண்டாடும் ஒரு சூழலில் அமைக்கப்பட்ட ஒரு உண்மையான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்"
====================
ஜாக்ஸ் ரமளான் சந்தை, ஜாக்ஸ் மாவட்டத்தின் பொது இடங்களை ஒரு ஸ்கேட் பூங்காவுடன் செயல்படுத்தும். அங்கு போட்டிகள், நிகழ்ச்சிகள் மற்றும் குழு பாடங்கள் நடைபெறும். அத்துடன் இளைஞர் கலாச்சாரத்தை சமகால கலையுடன் இணைக்கும் வடிவமைப்பு பட்டறைகள் மற்றும் ஊடாடும் அமர்வுகளும் நடைபெறும்.
பார்வையாளர்கள் "இடைவெளிகள் மற்றும் மாற்றங்களில்" என்ற தலைப்பில் 2026 ஆம் ஆண்டுக்கான திரியா சமகால கலை பின்னேலை அனுபவிக்கவும், சுற்றியுள்ள காட்சியகங்கள், கண்காட்சி இடங்கள் மற்றும் சவூதி அரேபியாவின் மிக முக்கியமான கலைஞர்களின் திறந்த ஸ்டுடியோக்களை ஆராயவும் இங்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஜாக்ஸ் ரமளான் சந்தை, அன்றாட வாழ்வில் படைப்பாற்றலைக் கொண்டுவரும் கலாச்சார ஈடுபாடு மற்றும் ஊடாடும் அனுபவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திறந்த, வாழும் சுற்றுப்புறமாக செயல்படுகிறது. இந்த சந்தை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும். ரமளான் காலத்தில் சவூதி அரேபியாவிற்கு செல்ல வாய்ப்பு கிட்டினால் இந்த ரமளானின் உணர்வை கொண்டாடும் திரியா சந்தைக்கு அவசியம் சென்று, ரமளானின் புதிய அனுபவத்தை அனுபவியுங்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தமிழ் மக்களுடைய இதயங்களில் இடம்பிடித்த நல்ல தலைவர் நல்லகண்ணு.....!
சிறந்த பண்புகளால் மக்களுடைய நினைவுகளில் என்றென்றும் நிலைத்து நிற்பார்....!!
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்...!!!
சென்னை, பிப்.26-தமிழகத்தின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுயை மறைவு நம் அனைவருக்கும் மிகப் பெரிய ஒரு துன்பத்தை கொடுத்திருக்கிறது. துக்கத்தைக் கொடுத்திருக்கிறது. நீண்ட காலம் வாழ்ந்தாலும், மக்களுடைய நினைவுகளில் என்றென்றும் நிலைத்து இருக்கும் தலைவராக அவர் இருந்திருக்கிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமது இரங்கலில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மரியாதை :
உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு 25.02.2026 புதன்கிழமையன்று காலமானார். சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணு உடலுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நல்லகண்ணுவின் குடும்பத்தினரையும் சந்திதித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பேராசிரியர் கே.எம்.கே. புகழாரம் :
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழகத்தின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுயை மறைவு நம் அனைவருக்கும் மிகப் பெரிய ஒரு துன்பத்தை கொடுத்திருக்கிறது. துக்கத்தைக் கொடுத்திருக்கிறது. நீண்ட காலம் வாழ்ந்தாலும், மக்களுடைய நினைவுகளில் என்றென்றும் நிலைத்து இருக்கும் தலைவராக அவர் இருந்திருக்கிறார்
அவரோடு பல்வேறு மாநாடுகளிலும் நிகழ்ச்சிகளிலும் நானும் கலந்துகொண்ட நினைவுகள் எல்லாம் என்க்கு வருகிறது. நல்லகண்ணு அய்யா அவர்கள், தமிழ் மக்களுடைய இதயங்களில் எப்போதும் இடம்பிடித்து இருக்கும் நல்லவராகவே திகழ்ந்திருக்கிறார்.
அவரை யாரும் குறைச் சொல்லி நான் கேட்டதில்லை. பயணங்கள் போகும் நேரங்களில் கூட, மாநாடுகளில் பங்கேற்கும் நேரங்களில் கூட, அந்த பெரிய மனிதரைப் பார்க்கும்போது, ஏதோ ஆன்மீகவாதிகளாக உள்ளவர்கள் எப்படி இறைப்பக்தியில் மூழ்வார்களோ, அப்படி அவரை பார்த்தவுடனே இதயங்கள் எல்லாம் பூரிக்கும் வகையில் தான் அவரது பேச்சும் இருந்தது.அவரது நடவடிக்கைகளும் இருந்தன. அவருடைய எல்லா நினைவுகளும் இருந்தன.
சிறந்த தமிழரை இழந்திருக்கிறோம் :
அப்படிப்பட்ட ஒரு நல்ல உயர்ந்த சிறந்த தகைசால் தமிழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது இழப்பால் வாடும் எனது அருமை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம். அவரை பின்பற்றி, அவர் எப்படி எல்லா மக்களுக்கும் நல்லவராக இருந்தாரோ, அப்படி நாம் அனைவரும் இருக்க முயல வேண்டும். அது தான் தமிழ்நாட்டின் பண்பு, அதுதான் பாரம்பரியம், பண்பாடு மற்றும் தமிழ் நெறியாகும். அவை தொடர்ந்து நீடிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிராத்திக்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளார் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
காட்சி ஊடகத்துறையில் சாதிக்க
என்ன செய்ய வேண்டும்...!
இளைஞர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்....!
Let us shed light on the incident from Rudrapur, Uttarakhand.
The victim has now given a statement to the media. The Muslim man said:
“I am a daily wage laborer and work nearby. It is the month of Ramadan. The mosque is a little far from here, and going there takes more time, which affects my work. Because of that, for the past three days I have been offering Zuhr prayer in that empty field. No one ever objected.
But yesterday, suddenly a man came. I had not even completed my prayer when he attacked me and brutally beat me during Namaz.”
Local residents have demanded that anyone who attempts to disrupt the unity and integrity of the country through such acts should be immediately arrested and sent to jail.
It is being reported that Arvind Sharma already has a case registered under Section 302 and has been sentenced to life imprisonment. He was allegedly out on parole and then attacked a laborer during prayer. It is also being questioned whether he had any concern about violating his parole conditions.
The matter has now been taken into cognizance by Uttarakhand Police.
So far, no major action has been announced, but assurances have been given.
According to a video statement by SP Crime/Traffic Jitendra Chaudhary, necessary legal action has been initiated and the investigation is ongoing. Authorities have stated that appropriate steps will be taken based on the findings of the inquiry.
நீங்கள் இங்கே
வாழ்வது உங்களது
வாழ்க்கைக்காக தானே தவிர,
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்வதற்காக அல்ல.
உங்கள் வாழ்க்கையை
மனநிம்மதியோடு வாழுங்கள்.
முகம்மது தீபக்வுடன்
எதிர்க்கட்சித் தலைவர்
ராகுல் காந்தி சந்திப்பு.
அழகிய நற்செயலுக்கு பாராட்டு.
" உலகின் கவனத்தை ஈர்த்த இரண்டு இப்தார் விருந்துகள் "
புனித ரமளான் மாதத்தில் ஏக இறைவனின் கட்டளையை ஏற்று நோன்பு வைக்கும் இஸ்லாமியர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பேரீச்சம்பழம் அல்லது தண்ணீர் அருந்தி நோன்பை முறைப்படி நிறைவு செய்கின்றனர். இந்த நோன்பு திறத்தலே இப்தார் என்று அழகாக அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பேச்சு வழக்கில் "நோன்பு துறப்பு" என்றும், சரியான பயன்பாடாக "நோன்பு திறப்பு" என்றும் இது அழைக்கப்படுகிறது.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துகொள்ளும் வகையில் பிரமாண்ட இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் சர்வ சமய மக்களை அழைத்து சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மூலம் நடத்தப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டும் இப்தார் நிகழ்ச்சிகள் ஆன்மீன ஈடுபாடுடன் களைகட்டியுள்ளன.
உலகம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும், இந்தாண்டு சவூதி அரேபியாவின் ஆன்மீக நகரங்களான மக்கா மற்றும் மதீனாவில் நடைபெற்ற இரண்டு இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பாதுகாப்புப் படையினருடன் இப்தார் விருந்து :
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் காண விரும்பும் இரண்டு நகரங்களில் ஒன்று மக்கா மாநகரமாகும். புனித காபா என்ற இறையில்லம் அமைந்துள்ள இந்த நகரம் எப்போதும் பாதுகாப்புடன் இருந்து வருகிறது. ஆன்மீன அமைதியை தேடிவரும் இஸ்லாமியர்களுக்கு மன நிம்மதியை தந்து வாழ்க்கையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இத்தகைய புனித நகருக்கு வரும், வழிபாட்டாளர்கள் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் பாதுகாப்புப் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த பணியாளர்களை சவூதி அரசு எப்போதும் கண்ணியத்துடன் நடத்தி வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித ரமளான் மாதம் தொடங்கியுள்ளதால், பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் நோன்புடன் தங்களது பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். இவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால் செவ்வாய்க்கிழமை (24.02.2026) அன்று மக்காவின் பிரமாண்ட மஸ்ஜித்தான மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்-பில் இப்தார் விருந்து கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், வழிபாட்டாளர்கள் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் பங்கேற்கும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இப்தார் விருந்தில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்-பில் வழிபாட்டாளர்களுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ள பல அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.
இப்தார் விருந்தின்போது, துணை அமீர், இரண்டு புனித மஸ்ஜித்துகளின் பாதுகாவலரின் ஆலோசகரும் மக்காவின் இளவரசர் காலித் அல்-ஃபைசலின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்புக்கு வருகை தருபவர்களுக்கு சேவை செய்வதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இளவரசர் சவுத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
=====================
"மக்கா, மதீனாவில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து, மனித சமுதாயத்திற்கு ஒரு அழகிய கருத்தை சொல்லி தந்திருக்கின்றன. ஏக இறைவன் முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் கிடையாது. நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வில் கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதேயாகும்"
=====================
சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு அர்ப்பணிப்புடன், வழிபாட்டாளர்களுக்கு சேவை செய்வதிலும், ஞானமான தலைமையின் அபிலாஷைகள் மற்றும் உத்தரவுகளை நிறைவேற்றுவதிலும் மிகுந்த முயற்சிகளைச் செய்து, அவர்களின் பணியைத் தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் பணியாளர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், கூட்டத்தை நிர்வகிக்கவும், வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்-பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விளக்கத்தையும் துணை அமீர் கேட்டறிந்தார். இப்தார் விருந்தில், பாதுகாப்புப் பணியாளர்களுடன் மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால் கலந்துகொண்ட அற்புதமான நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதீனாவில் உலகளாவிய இப்தார் விருந்து :
மக்காவில் இப்படி அருமையான இப்தார் விருந்து நடைபெற்ற நிலையில், மற்றொரு புனித நகரமான மதீனாவில் உலகளாவிய இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அண்மையில், அதன் மூன்றாவது "உலகம் முழுவதும் இப்தார்" என்ற நிகழ்வை, சவூதி இராச்சியத்தின் நிறுவன தின கொண்டாட்டங்களுடன் இணைந்து கொண்டாடியது. பல்கலைக்கழகத் தலைவர் சலே அலக்லா முன்னிலையில் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்தார் விருந்து நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இப்தார் மேஜையில் கூடி, பல்கலைக்கழகத்தின் கலாச்சார பன்முகத்தன்மையையும் அதன் சகவாழ்வு மற்றும் பரஸ்பர புரிதலின் மதிப்புகளையும் பிரதிபலித்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்கும் நாடுகளின் பாரம்பரிய ரமளான் உணவுகள் இடம்பெற்றன. இது மாணவர்கள் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஆராயவும், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வில் கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்கவும் அனுமதித்தது.
கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும், கல்வி அனுபவத்தை வளப்படுத்துவதற்கும், நாகரிக பாலங்களை கட்டியெழுப்புவதற்கான அதன் உலகளாவிய நோக்கத்தை வலுப்படுத்துவதற்கும், சவூதி இராச்சியத்தின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச மாணவர் ஆதரவுக்கான அர்ப்பணிப்புடன் இணைவதற்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
மக்கா மற்றும் மதீனா நகரங்களில் நடைபெற்ற இந்த இரண்டு இப்தார் விருந்து நிகழ்ச்சிகளும், உலக மக்களின் கவனத்தை ஈர்த்து, மனித சமுதாயத்திற்கு ஒரு அழகிய கருத்தை சொல்லி தந்திருக்கின்றன. ஏக இறைவன் முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் கிடையாது. நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வில் கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதை இந்த இப்தார் நிகழ்ச்சிகள் அமைந்தன என உறுதிப்பட கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத்துறையில் நுழைய விரும்பும் இளம் ஆர்வலர்களுக்கு சில யோசனைகள்.....!
Two nursing students, one Hindu, one Muslim, live together in the same hostel room.
One offers prayers according to her faith, and the other performs her namaz. Neither has any objection to the other. They live together with mutual respect and love.
This is the unity people talk about, but they rarely see.
அதிகபட்ச அன்பை
வெளிப்படுத்தினால்
இறுதியில் தொல்லை
என்ற பெயர் மட்டுமே மிச்சம்.
நடுத்தரமான அன்பே
மகிழ்ச்சியை அளிக்கும்.
மதத்தின்
பெயரால் அவமதிப்பு
முஸ்லிம்
பெண்ணுக்கு போர்வையை தர மறுத்த முன்னாள் பாஜக எம்.பி.,
போர்வையை திரும்ப ஒப்படைத்து ஒற்றுமையை வெளிப்படுத்திய ராஜஸ்தான் மக்கள்
ஜெய்ப்பூர், பிப்.24- ராஜஸ்தான் மாநிலத்தில் போர்வை விநியோகம் செய்த பாஜக முன்னாள் எம்.பி., சுக்பீர் சிங் ஜானாபுரியா,போர்வை வாங்கியவர்களின் பெயரைக் கேட்டு முஸ்லிம்கள் என்று தெரிந்ததும் கொடுத்த போர்வைகளை பிடுங்கி வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் போங்க் சவாய் மாதோபூர் தொகுதி பாஜக முன்னாள் எம்.பி சுக்பீர் சிங் ஜானாபுரியா அண்மையில் ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளை விநியோகம் செய்தார். அப்பொழுது போர்வை வாங்க வரிசையில் நின்ற பெண்களிடம் அவரது உதவியாளர்கள் பெயர் விபரங்களை கேட்டனர். சுஹரா ஜோராக்கான், ராஷியா, சுபைதா என முஸ்லிம் பெயர்களை பெண்கள் கூறியதை கேட்ட முன்னாள் எம்.பி உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முன்னாள் எம் பி யின் விளக்கம் :
பிரதமர் மோடியை அவமதிக்கும் முஸ்லிம்களுக்கு போர்வை பெற தகுதி இல்லை தனது செயலுக்கு அந்த பாஜக முன்னாள் எம்.பி நியாயம் கற்பித்தார்.மேலும் இது அரசு திட்டம் அல்ல என்றும் தனது சொந்த செயலில் செய்யும் உதவி என்பதால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தான் மட்டுமே தீர்மானிப்பேன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
மக்களின் போராட்டம் :
மணி நேர கணக்கில் வரிசையில் நின்ற முதியவர்களை மதத்தின் பெயரால் அவமானப்படுத்திய பாஜக முன்னாள் எம்.பிக்கு எதிராக அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?என்று கேள்வி எழுப்பினர். மேலும் முன்னாள் எம்.பி.யின் இந்த பாராபட்சமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போர்வையை பெற்ற இந்து சமூகத்தை சேர்ந்த சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை அவரிடமே திரும்ப ஒப்படைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இளைஞர் காங்கிரஸ் உதவி :
இதனிடையே பாஜகவினர் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக முன்னாள் எம்.பி. அவமரியாதை செய்த இஸ்லாமிய பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று போர்வையை வழங்கி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மனிதநேய உதவிகளில் கூட மதம் பார்க்கும் பாஜகவை மக்கள் புரிந்துகொண்டு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காணொளிகள் தற்போது நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பாஜக முன்னாள் எம்.பி.யின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
இழந்ததை விட்டு விடுங்கள்.
மிச்சம் என்ன இருக்கிறது
என்று பாருங்கள்.
அதிலிருந்து தொடருங்கள்.
இன்னும் இருக்கிறது வாழ்க்கை
என்பதை
மறந்து விடாதீர்கள்.
Members of the Rajasthan Youth Congress distributed blankets to Muslim women who had been denied aid by former BJP MP Sukhbir Singh Jaunpuria at a similar event, where Jaunpuria cited their religious background as the reason and had them removed from the gathering.
எதிர்க்கட்சித் தலைவர்
ராகுல் காந்தியுடன்
முகம்மது தீபக் சந்திப்பு.
நல்ல செயலுக்கு ஆதரவு...!
" திருச்சியில் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ள ரமளான் சஹர் உணவு வினியோகம் "
புனித ரமளான் மாத நோன்பு தொடங்கியது முதல், திருச்சியின் உணவு சூழல் முற்றிலும் மாறி அமைதியான, கூட்டு கவனிப்பு தாளத்தில் தற்போது நிலைபெற்றுள்ளது. நகரம் முழுவதும், அதிகமான உணவகங்கள் இப்போது சிறப்பு இப்தார் உணவுகள் மற்றும் விடியற்காலையில் சஹர் உணவு மெனுக்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் சில உணவகங்கள் வழக்கமான நோன்பைக் கடைப்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சந்தா அடிப்படையிலான உணவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒரு சில உணவகங்கள், அதிகாலையில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கு டேக்அவே மட்டும் சஹர் உணவுகளை வழங்குகின்றன. இத்தகைய அழகான சூழல், மாற்றம் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துவரும் சஹர் உணவு தேவைகள் :
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த முகமது மிஸ்பா, சஹர் உணவு தேவைகள் ஒரு காலத்தில் அரிதாகவே இருந்ததை நினைவு கூர்ந்து இப்படி கூறுகிறார். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காலையில் மிகக் குறைந்த அளவு மட்டுமே சஹர் உணவு தேவைகள் இருந்தன. இப்தார் மெனுக்கள் கூட மிதமானவை. ஆனால் தற்போது சஹர் உணவை தேர்வு செய்பவர்களின் நீண்ட பட்டியல் உள்ளது” என்று அவர் கூறினார். மத்திய கிழக்கு உணவு வகைகளான ஷவர்மா தட்டுகள், கிரில்டு கபாப்கள் மற்றும் மண்டி சாதம் போன்றவை ஹைதராபாத் மக்களின் விருப்பமான தம் பிரியாணி மற்றும் ஹலீம் போன்ற உணவுகளுடன் வசதியாக பரிமாறப்படுவது வழக்கம். நெய் சாதம் போன்ற உள்ளூர் உணவுகளும், குறிப்பாக குடும்பங்கள் மத்தியில், விரும்பி உண்ணப்படுகின்றன.
உள்ளூர் உணவு விடுதி வணிகத்தில் செல்வாக்கு மிக்க சுரேஷ்குமாரும், ரமளான் மெனுக்கள் இனி ஒரு சில உணவகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். சரியான உணவு வகைகளுடன் கூடிய இப்தார் மெனுக்களைத் திட்டமிடும் உணவகங்களில் தெளிவான அதிகரிப்பு உள்ளது. இதனால், இனி உணவருந்துவது மட்டுமல்ல, பல குடும்பங்கள் உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் விரும்புகின்றன. மேலும் 150 ரூபாய் முதல் இப்தார் பஃபே உள்ளது” என்று சுரேஷ்குமார் கூறியுள்ளார். மலிவு மற்றும் அணுகல் காரணமாக, ரமளான் சீசனில் தெரு உணவு கலாச்சாரமும் வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரமளான் உணவுகளுக்கான ஒரு வலுவான சந்தை :
பாலக்கரை மற்றும் சங்கிலியாண்டபுரம் போன்ற சுற்றுப்புறங்களில் இந்தப் போக்கு குறிப்பாகக் காணப்படுகிறது. அங்கு அரபு மொழி செல்வாக்கு மிக்க சிற்றுண்டிகள், வறுத்த கோழி, கிரில்டு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்கும் தற்காலிக கடைகள் மற்றும் உணவு வண்டிகள் நிலையான மாலை கூட்டத்தை ஈர்க்கின்றன. இப்தாருக்கு சற்று முன்பு மக்கள் கூட்டம் அதிகமாகி, குறுகிய தெருக்கள் முறைசாரா உணவு வழித்தடங்களாக மாறிவிட்டதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கே.எம்.எஸ். ஹக்கிம் பிரியாணியின் நிறுவனர் முகமது ஹக்கிம், ரமளான் உணவுகளுக்கு திருச்சி ஒரு வலுவான சந்தையாக உருவெடுத்துள்ளது என்றார். “குனாஃபா, பக்லாவா மற்றும் பாஸ்பூசா போன்ற அரபு இனிப்பு வகைகளுக்கு இப்போது திருச்சி மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. மொறுமொறுப்பான கோழி உணவுகள் மற்றும் அரபு தெரு உணவுகள் நன்றாக விற்பனையாகின்றன. மேலும் பிரியாணி தொடர்ந்து ஒரு நிலையானதாகவே உள்ளது" என்று முகமது ஹக்கிம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
=====================
"சஹர் உணவு சமையல் செய்வதற்கு இடம் கொடுத்த காதரின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஸ்வரி, இந்த முடிவு இயல்பாகவே வந்தது என்கிறார். அவர்கள் உணவுக்காக ஏங்கும் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அந்த முயற்சியை ஆதரிக்க விரும்பினோம். இதேபோன்று, மற்ற அண்டை வீட்டாரும் ரமளான் சஹர் உணவு சமையலுக்கு உதவுகிறார்கள்"
=====================
ஹைதராபாத் பாணி கோழி மற்றும் மட்டன் ஹலீம் இந்த ரமளான் பருவத்தில் குறிப்பாக வலுவான தேவையைக் காண்கிறது. “ நாள் முழுவதும் நோன்பு வைத்து பிறகு மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதிக எண்ணெய் மற்றும் மொறுமொறுப்பான உணவு சிறந்ததாக இருக்காது. மேலும் ஆரோக்கியமான விருப்பங்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் உணவகங்ளகக்கு ஆலோசனை தருகிறார். இப்தார் மெனுக்கள் பொதுவாக 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை இருக்கும். அடிப்படை உணவு விருப்பங்கள், பஃபே ஸ்ப்ரெட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பெட்டிகளை உள்ளடக்கியது. நகரத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் விலை உயர்ந்த விருப்பங்களும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அரபு ஆசிரியரின் அருமையான பணி :
வணிக சலசலப்புகளிலிருந்து விலகி, காஜாமலையில் விடியற்காலையில் அமைதியான தாராள மனப்பான்மை வெளிப்படுகிறது. ஜே.கே.நகரைச் சேர்ந்த மைதீன் அப்துல் காதர் என்ற அரபு ஆசிரியர், விவசாயம், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினமும் இலவச சஹர் உணவைத் தயாரிக்கிறார். இந்த புனித பணியில் அவரது இந்து அண்டை வீட்டார் அவருக்கு இடம் மற்றும் பிற உதவிகளை வழங்க உதவுகிறார்கள்.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் தொடங்கிய இந்த முயற்சி, ஏழாவது ஆண்டில் தடையின்றி உள்ளது. மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவுகள், இரவு முழுவதும் சமைக்கப்பட்டு, விடியற்காலையில் பேக் செய்யப்பட்டு, அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விநியோகிக்கப்படுகின்றன. இது முழுக்க முழுக்க நலம் விரும்பிகளின் நன்கொடைகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், நெய் சாதம், காய்கறி பிரியாணி, தக்காளி சாதம், சாதாரண பிரியாணி மற்றும் பருப்பு சாதம் உள்ளிட்ட ஆறு எளிய மெனுக்களில் ஒன்று தயாரிக்கப்பட்டு, துணை உணவுகளுடன் பரிமாறப்படுகிறது.
இந்து அண்டை வீட்டாரின் ஆதரவு :
“பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பல மாணவர்கள் சஹரைத் தவிர்த்து, இப்தார் மட்டுமே சாப்பிடுகிறார்கள்,” என்று கூறியுள்ள ஆசிரியர் மைதீன் அப்துல் காதர், இந்த அருமையான யோசனையை தனது தாயார் எம். பாத்திமா வழங்கியதாக அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். “தொற்றுநோய் காலத்தில் தொடங்கிய இந்த சேவை, தற்போது ஆண்டுதோறும் ஒரு நடைமுறையாகிவிட்டது” என்று அவர் மேலும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சமையல் செய்வதற்கு இடம் கொடுத்த காதரின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஸ்வரி, இந்த முடிவு இயல்பாகவே வந்தது என்றார். "அவர்கள் உணவுக்காக ஏங்கும் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அந்த முயற்சியை ஆதரிக்க விரும்பினோம்" என்று அவர் கூறி மகிழ்ச்சி அடைகிறார். இதேபோன்று, மற்ற அண்டை வீட்டாரும் ரமளான் சஹர் உணவு சமையலுக்கு உதவுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மதநல்லிண்க்கம் :
திருச்சியில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற ஒரு நல்ல சூழல் இருந்து வருகிறது. நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள் உதவி செய்வது, உணவு கிடைக்க ஏற்பாடு செய்வது, இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்வது, சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற கருத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறார்கள். வடமாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மேலோங்கியுள்ள இந்த சூழ்நிலையில், தமிழகம் எப்போதும் அமைதியான மாநிலமாக, மதநல்லிணக்கம் கொண்ட மாநிலமாக விளங்கி வருகிறது. இது உண்மையில் தமிழ்நாடு என்ற அருமையான மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும்.
குறிப்பு : தி இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வந்த 'Ramzan sahur in Tiruchy a blend of food and communal harmony" என்று கட்டுரையை அடிப்படையாக வைத்து இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்