Friday, July 25, 2025

முஸ்லிம் கட்சிகளின் அணுகுமுறை....!

 

"தமிழக அரசியலில், முஸ்லிம் கட்சிகளின் சரியான அணுகுமுறை" 

- ஜாவீத் -

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தங்களுடைய பிரச்சாரங்களை தற்போது தொடங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் களம் மெல்ல மெல்ல சூடுப் பிடிக்க தொடங்கியுள்ளது. மக்களின் மன நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை வாக்காளர்கள் எடைப்போட்டு பார்க்க தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகளும் தங்களுடைய செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளன. இதனால், தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து, மழை, குளிர் காலங்களிலும் வெப்பம் தகிப்பது போன்று சூடாக மாறியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசியலில் முஸ்லிம்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? முஸ்லிம்கள் கட்சிகள், இயக்கங்கள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளன? தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதிமுக, தன்னுடைய பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் வட மாநிலங்களைப் போன்ற ஒரு இந்துத்துவ நிலைப்பாட்டை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் இயக்கங்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் பிற முஸ்லிம் கட்சிகள், சரியான திசையில் பயணம் செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பினால், தற்போதைய நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டும், மாநிலத்தில் அமைதியான மதநல்லிணக்கம் எப்போதும் போன்ற தழைத்து நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, தங்களுடைய செயல்பட்டை அமைத்துக் கொண்டு, தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. சரியான திசையை நோக்கிப் பயணிக்கின்றன என்ற கூற வேண்டும்.  

வகுப்புவாத அட்டையை பயன்படுத்த மறுப்பு :

மதுரையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 22 அன்று, இந்து முன்னணி ‘முருக பக்தர்கள் மாநாடு நடத்தியபோது, அது இந்து மதத்தின் கொண்டாட்டமாக இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பழனியில் உலகளாவிய முருகன் மாநாட்டை திமுக அரசாங்கத்தால் ஏற்பாடு செய்தபோது, முருகனை கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு அரசியல் முயற்சியாகவும் அது கருத்தப்பட்டது. மதுரையில் வலதுசாரி நிகழ்வுக்கு பதினைந்து வாரங்களுக்குப் பிறகு, முஸ்லிம் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி  அதே இடத்தில் ஒரு பேரணியை நடத்தியபோது, சிலர் வகுப்புவாத பதற்றம் ஏற்படுமோ என்று அஞ்சினர். இருப்பினும், ஜூலை 6 அன்று நடந்த மனிதநேய மக்கள் கட்சி மேடையில் ஒரு வித்தியாசமான காட்சி தோன்றியது. கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், இந்து ஆன்மீகத் தலைவரும் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனருமான திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் கத்தோலிக்க பாதிரியார் மற்றும் சமூக ஆர்வலர் ரெவரெண்ட் ஜெகத் காஸ்பர் ராஜ் ஆகியோரை தனது பக்கத்தில் அமர்த்தி அழகிய அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 29 அன்று தூத்துக்குடியின் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதன் மண்டல மாநாட்டை நடத்தியது. இதன் கருப்பொருள் மீண்டும் மத நல்லிணக்கம் என்பதாக இருந்தது. இதன்மூலம் இரண்டு முக்கிய முஸ்லிம் கட்சிகளும் மத துருவமுனைப்பு விளையாட்டை விளையாட மறுப்பதாக மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மத ரீதியதாக செயல்படுவது தங்களின் அரசியல் எதிரிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்த இரண்டு இயக்கங்களும் எப்போதும் மத நல்லிணக்கத்தில் உறுதியாக இருந்து வருகின்றன. மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையுடன், மத நல்லிணக்கத்துடன் அமைதியாக வாழ வேண்டும் என்று உறுதியாக நினைத்து அதன்படி, தங்களுடைய பணிகளை செயலாற்றி வருகின்றன. இதன் காரணமாக தேர்தலில் வகுப்புவாத அட்டையை பயன்படுத்த இரண்டு இயக்கங்களும் மறுத்துவிட்டு, மத நல்லிணக்க ரீதியாக காரியங்களை ஆற்றி வருகின்றன.

சில சக்திகளின் சதி :

மதுரை, திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவில் வழிபாட்டு உரிமைகள் தொடர்பான சர்ச்சை எழுந்ததை அடுத்து முஸ்லிம் கட்சிகளின் கூட்டங்கள் நடந்தன. மனிதநேய மக்கள் கட்சி மாநாடு அரசாங்கம் தர்காவைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியது. "மதச்சார்பற்ற வாக்குகள் பிரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபூபக்கர் மிகவும் தெளிவாக கூறுவதை பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் ஒப்புக்கொள்கிறார். "சில சக்திகள் தமிழ்நாட்டில் ஒற்றுமையின்மையை உருவாக்க விரும்புகின்றன" என குற்றம்சாட்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா "ஆனால் மாநிலம் எப்போதும் ஒரு உள்ளடக்கிய சமூகமாக, வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான இடமாக இருந்து வருகிறது" என்று கூறுகிறார். இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கூட்டணி தர்மம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனித சகோதரத்துவத்திற்கான தேவையும் உள்ளது என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.

"தமிழ்நாட்டில், நாங்கள் திமுகவுடன் இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அப்படியே இருப்போம். இந்த கூட்டணி தேர்தலுக்காக மட்டுமல்ல. 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' (ஒரு சமூகம், ஒரு கடவுள்), 'பிறப்போக்கும் எல்லா உயிருக்கும்' (அனைவரும் சமமாகப் பிறக்கிறார்கள்)' என்ற திமுகவின் முழக்கங்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம்" என்று இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தொடர்ந்து கூறி வருகிறார்.  பாஜகவை "முஸ்லிம் விரோதக் கட்சி" என்று கட்சிகள் அழைப்பதை இது தடுக்கவில்லை. தங்கள் கூட்டங்களில் பேச்சாளர்கள் மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாதது பற்றிப் பேசுகிறார்கள். மேலும் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்றுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

வகுப்புவாத நல்லிணக்கத்தை வலியுறுத்தல் :

கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட திருப்பூர் மற்றும் காயல்பட்டினத்தில் சமீபத்தில் நடைபெற்ற மண்டல மாநாடுகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வகுப்புவாத நல்லிணக்கத்தை வலியுறுத்தியது. "டச்சுக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோயில் சிலைகளை மீட்டெடுப்பதில் வரலாற்றுப் பங்காற்றியதற்காக காயல்பட்டினத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். முஸ்லிம் வணிகர்களின் பங்களிப்புகளை நினைவுகூரும் கோயில் கல்வெட்டுகள் அங்கு உள்ளன" என்று இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மதுஅபூபக்கர் மத நல்லிணக்கம் தொடர்பாக அழகிய முறையில் கருத்துகளை கூறியுள்ளார்.

தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் மற்றும் விழிப்புணர்வு அளவுகள் அதிகமாக இருப்பதால், வலதுசாரி குழுக்களின் துருவமுனைப்பு முயற்சிகள் பலனளிக்காது என்று முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளனர். "ஆனால் முருகனை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும்போது, மாநிலத்தில் பதற்றமும் பயமும் நிலவுகிறது" என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி அச்சம் தெரிவிக்கிறார். சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் அதிமுக பலவீனமாக இருந்ததால் முஸ்லிம் கட்சிகள் "பாதுகாப்பான இடங்களில்"  அதாவது திமுக அணியில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவிக்கிறார்.

இதேபோன்று, அதிமுகவின் முன்னாள் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கூட மிதவாதத்தைப் பேசுகிறது. எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், தமிழ்நாட்டை ஒருபோதும் வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முடியாது என்று கூறுகிறார். "தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது," என்று அவர் தெரிவிக்கிறார்.

முக்கிய அம்சங்கள் :

சகோதரத்துவம் மற்றும் வகுப்புவாத நட்புறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உலமாக்களை சந்திக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதோடு, சமூகங்களின் அமைதியான சகவாழ்வின் அவசியத்தை வலியுறுத்தவும் மனிதநேய மக்கள் கட்சி ஆகஸ்ட் முதல் ஆயிரம் தெரு முனை கூட்டங்களை நடத்தும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் சமூகத்திற்கு விகிதாசார பங்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் குழுக்கள் எழுப்புகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள 776 எம்.பி.க்களில் 39 பேர் மட்டுமே முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். . பதினைந்து பேர் மாநிலங்களவையில் உள்ளனர்; 24 பேர் மக்களவையில் உள்ளனர். 28 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் 12 இடங்களிலிருந்து மட்டுமே எம்.பி.க்கள் வருகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில், 24 முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது அவையின் 4 புள்ளி 4 சதவீதமாகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4 ஆயிரத்து 123 எம்.எல்.ஏ.க்களில், 296 பேர் மட்டுமே முஸ்லிம்கள். 234 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஏழு பேர் மட்டுமே முஸ்லிம்கள். தமிழகத்தின் தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சியில், முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 9 சதவீதம் உள்ளனர். இருப்பினும், 200 கவுன்சிலர்களில் நான்கு பேர் மட்டுமே முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருப்பது நல்லிணக்கத்தை உருவாக்க உதவும் என்று தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புகள் உறுதியாக நம்புகின்றன. அதற்காக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.

முஸ்லிம் கட்சிகளின் சரியான அணுகுமுறை :

தமிழகத்தில் மாநிலத்தின் வகுப்புவாத சமநிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், வட மாநிலங்களில் பயன்படுத்திய உத்திகளை இப்போது தமிழகத்தில் செய்ய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் ஆனால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மாநில அமைச்சருமான அன்வர் ராஜா உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் இயக்கங்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தற்போது சரியான அணுகுமுறையில் தங்களது பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் மத நல்லிணக்கம் எப்போதும் போல் தழைக்க வேண்டும். மக்கள் அமைதியுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், மாநிலத்தின் வளர்ச்சி உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் இயக்கங்களின் உயர்ந்த இலட்சியமாக இருந்து வருகிறது.

எனவே தான், தமிழகத்தில் வகுப்புவாத சமநிலையை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்தாலும், தாங்களும் மத ரீதியாக செயல்பட வேண்டும் என்று சிறிதும் நினைக்காமல், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் போன்ற உயர்ந்த நிலைப்பாட்டுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியை ஆதரிக்கும் பிற முஸ்லிம் இயக்கங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றன. அதன்மூலம் மாநிலத்தில் பதற்றம் உருவாகாமல் பார்த்துக் கொள்கின்றன. மக்களிடைய சமூக நல்லிணக்கத்தை விதைக்கின்றன. மத நல்லிணக்கத்தை தழைக்க பாடுபடுகின்றன. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் இயக்கங்களில் அணுகுமுறை சரியான திசையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பதை அறியும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

========================

பிரெஞ்சு அதிபர் மக்ரோன் அறிவிப்பு - சவுதி வரவேற்பு.....!

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவிப்பு.....! 

சவுதி அரேபியா வரவேற்பு.....!!

பாரிஸ், ஜுலை.26- காசாவில் பட்டினியால் வாடும் மக்கள் மீது உலகளாவிய கோபம் அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமையன்று (24.07.2025) அறிவித்துள்ளார். 

செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த முடிவை முறைப்படுத்துவதாக மக்ரோன் தனது எக்ஸ் வலைத்தளப்பதில் கூறியுள்ளார். மேலும், "இன்றைய அவசர விஷயம் என்னவென்றால், காசாவில் போர் நின்று பொதுமக்கள் காப்பாற்றப்பபட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் முடிவு :

காசா பகுதியில் போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பாலும் குறியீட்டு நடவடிக்கை இஸ்ரேல் மீது கூடுதல் இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மேற்கத்திய சக்தியாக பிரான்ஸ் இப்போது உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளும் இதைச் செய்ய வழி வகுக்கும். ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனியர்கள் நாடுகின்றனர்,. கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசாவையும் இணைத்து, 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களையும் இணைக்கின்றனர். . இந்த முடிவை பாலஸ்தீன அதிகாரசபை வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையை அறிவிக்கும் கடிதம் வியாழக்கிழமை ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் வழங்கப்பட்டது. மக்ரோனுக்கு ‘‘எங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று அப்பாஸின் கீழ் இயங்கும் அமைப்பின்  பி.எல்.ஓ.வின்  துணைத் தலைவர் ஹுசைன் அல் ஷேக் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாடு சர்வதேச சட்டத்திற்கான பிரான்சின் அர்ப்பணிப்பையும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான அதன் ஆதரவையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சவுதி அரேபியா வரவேற்பு :

இந்நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான பிரான்சின் நோக்கத்தை பிரெஞ்சு அதிபர்  இம்மானுவேல் மக்ரோன் அறிவித்ததை சவுதி அரேபியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையை பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச ஆதரவை வலுப்படுத்தும் ஒரு வரலாற்று முடிவு என்றும் சவுதி அரேபியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.  வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு, 1967 எல்லைகளில் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவது குறித்த உலகளாவிய ஒருமித்த கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரான்சின் நிலைப்பாட்டை சவுதி வெளியுறவு அமைச்சகம் பாராட்டியது.

பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் கோரும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சர்வதேச தீர்மானங்களை செயல்படுத்தவும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தவும் அரசுகள் தொடர்ந்து முயற்சிப்பதன் முக்கியத்துவத்தை சவுதி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், பாலஸ்தீன அரசை இன்னும் அங்கீகரிக்காத நாடுகளுக்கான தனது நீண்டகால அழைப்பை சவுதி அரேபியா மீண்டும் புதுப்பித்துள்ளது. சர்வதேச சமூகம் அமைதியை முன்னேற்றுவதற்கும் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை ஆதரிப்பதற்கும் தீவிரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

============================


Thursday, July 24, 2025

English....!

 What is the single biggest factor that determines success for an individual in India? 

It is education in English—the single biggest determinant of success and progress in India. Meaning, an English education is much more powerful in India today.

If you ask all the BJP people who say English must be eliminated, which school do your children study in? Which college do their children study at? Do they study in an English-medium school? Yes or no? And the answer will always be that they study in an English-medium school. 

My question is, why should that opportunity not be given to the poorest person in India? To Dalit, Adivasi, or OBC? Why not? 

: LoP Shri RahulGandhi



குவைத் மக்கள் தொகை....!

 50 லட்சத்தை எட்டிய குவைத் மக்கள் தொகை....!

குவைத் நாட்டின்  மக்கள் தொகை தற்போது 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது, ஜூன் 30, 2025 நிலவரப்படி 50 லட்சத்து 98 ஆயிரத்து 539 பேர் குவைத்தில் இருப்பதாக பதிவாகியுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. தற்போது குவைத் குடிமக்கள் ஒரு சதவீத புள்ளி குறைந்து, மக்கள் தொகையில் 30 புள்ளி 4 சதவீதமாக உள்ளனர் என்று .குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம் (பி.ஏ.சி.ஐ.) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் பத்து லட்சத்து 57 ஆயிரமாக இருந்த குவைத் மக்களின் எண்ணிக்கை ஜூன் 30, 2025 அன்று 15 லட்சத்து 50 ஆயிரத்து 547 ஆக இருக்கிறது என்று சிவில் தகவல் பொது ஆணையம் (பி.ஏ.சி.ஐ.) மக்கள் தொகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மொத்த மக்கள் தொகையில் குவைத் மக்கள் தொகை 31 புள்ளி 4 சதவீதமாக இருந்தது.

குவைத் குறித்த சுவையான தகவல்கள் :

குவைத் நாடு என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 18 மற்றும் 19ஆம்  நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது. பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது. 1919-20 இல் நடைபெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது. 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.

குவைத் வரலாறு :

1899 முதல் 1961ல் சுதந்திரம் அடைந்த வரை குவைத்தை ஆளும் அல்சபா வம்சத்திற்காக வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பிரிட்டன் மேற்கொண்டது. 2ஆகஸ்ட் 1990 அன்று குவைத் ஈராக்கால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. பல வாரங்கள் நடந்த வான்வழி குண்டுவீச்சைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கூட்டணி 1991ஆம் ஆண்டு பிப்ரவரி 23அன்று தரையில் தாக்குதலை தொடங்கியதால் நான்கு நாட்களில் குவைத் விடுவிக்கப்பட்டது. 1990-91போது சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் 5பில்லியன் அமெரிக்க டாலருக்கும்  மேற்பட்ட தொகையை செலவு செய்தது.

அல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. அண்மைய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர். 2010-11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீகம் அற்றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் மீண்டும் அணி திரண்டனர். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 2011ன் இறுதியில் பிரதமரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். தேர்தல் சட்டம் அமீரின் மாற்றங்கள் மூலம் ஒரு நபருக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்ட்தால், 2012அக்டோபர் முதல் டிசம்பர் வரை குவைத் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புக்களை கண்டது.

சன்னி இஸ்லாமியர்கள், பழங்குடியினர், சில தாராளவாதிகள், மற்றும் எண்ணற்ற இளைஞர்கள் குழுக்களின் கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி டிசம்பர் 2012சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக ஷியா வேட்பாளர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர். 2006ல் இருந்து, ஐந்து சந்தர்ப்பங்களில் தேசிய சட்டமன்றம் அமீரால் கலைக்கப்பட்டு (ஜூன் 2012ல் ஒரு முறை அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமன்றத்தை இரத்து செய்த்து) மற்றும் அமைச்சரவை 12முறை மாற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக இது சட்டமன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான அரசியல் தேக்கம் மற்றும் இடையூறுகளின் காரணமாக இருக்கும்.

குவைத் மக்கள் தொகை :

குவைத் நாட்டின் மக்கள் தொகை 50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், சொந்த குடிமக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குவைத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். வீட்டு வேலை செய்பவர்கள், பிற  பணியாளர்கள் குவைத்தில் அதிகமாக இருந்து வருகிறார்கள். முதல் முறையாக, குவைத்தில் ஆண் மக்கள் தொகை, பெண்களை விட அதிகமாக உள்ளது. ஜூன் 30, 2025 அன்று, குவைத்தில் ஆண்கள் 7 லட்சத்து 76 ஆயிரத்து 656 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 73 ஆயிரத்து 891 ஆகவும் உள்ளது. முந்தைய புள்ளிவிவரங்களில், குவைத் மக்கள்தொகையில் 51 சதவீதமாக பெண்கள் இருந்தனர். ஆண்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் இறுதியில் 2 புள்ளி 16 சதவீதமாக சரிவு இருந்தபோதிலும், தற்போது 3 புள்ளி 5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

குவைத் அல்லாத மக்கள்தொகை :

குவைத் அல்லாத மக்கள்தொகை 35 லட்சத்து 47 ஆயிரத்து 992 குடியிருப்பாளர்களாக அல்லது நாட்டின் மக்கள்தொகையில் 69 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து 3 புள்ளி 8 சதவீதமாக வலுவாக அதிகரித்து,  ஒரு லட்சத்து 30 ஆயிரம் புதியவர்களைச் சேர்த்துள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 21 லட்சம் அல்லது மொத்த மக்கள்தொகையில் 40 புள்ளி 7 சதவீதமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது மொத்த வெளிநாட்டினரில் 58 புள்ளி 4 சதவீதமாகும். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்  3 புள்ளி 65 சதவீதம் உயர்ந்துள்ளனர். அரேபியர்கள் பத்து லட்சத்து 37 ஆயிரம் குடியிருப்பாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் சுமார் 26 சதவீதமாகும்.  ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பிறர் மீதமுள்ளவர்கள் ஆவர்கள்.  

இந்தியர்கள் அதிகம் :

குவைத்தில் இந்தியர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுடன் முன்னணி வெளிநாட்டினர் சமூகமாகத் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து எகிப்தியர்கள் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளனர். வீட்டு வேலையாட்கள், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜூன் 30, 2025 அன்று 8 லட்சத்து 23 ஆயிரமாக உயர்ந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 7 லட்சத்து 81 ஆயிரமாக இருந்தது. தற்போது இது 5 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பி.ஏ.சி.ஐ. அறிக்கை தெரிவிக்கிறது. ஜூன் 30, 2025 அன்று, குவைத்தில் மொத்த பணியாளர்கள் 31 லட்சத்தை  எட்டியுள்ளனர். இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 30 லட்சத்து 65 ஆயிரமாக இருந்தது. இருப்பினும், குவைத் பணியாளர்களின் எண்ணிக்கை ஆறு மாதங்களுக்கு முன்பு 5 லட்சத்து 5 ஆயிரமாக ஆக இருந்தது. தற்போது ஜூன் 30 அன்று 4 லட்சத்து 91 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

குவைத்தில் 3 லட்சத்து 93 ஆயிரம் அல்லது 80 சதவீத பணியாளர்களில் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள் ஆவார்கள். 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனியார் துறை வேலைகளிலும், 30 ஆயிரத்து 600 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 30 ஆம் தேதி கணக்கின்படி, வெளிநாட்டினரின் எண்ணிக்கை 20 லட்சத்து 65 ஆயிரமாக எட்டியுள்ளது. இதன் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 20 லட்சத்து 56 ஆயிரமாக இருந்தது. அரசுத் துறையில்  ஒரு லட்சத்து 27 ஆயிரம் வெளிநாட்டினர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதேநேரத்தில் தனியார் துறையில் சுமார் பத்து லட்சத்து 69 ஆயிரத்து 600 பேர் பணிபுரிகின்றனர். மீதமுள்ள 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் வீட்டு வேலை செய்பவர்கள் என்று குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம் (பி.ஏ.சி.ஐ.) தெரிவித்துள்ளது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Wednesday, July 23, 2025

Press Meet....!

 Rahul Gandhi Ji says that even during Loksabha election BJP rigged election. He says that Congress team has done a deep research in Karnataka and proofs will be shown to entire country very soon.

That means BJP won way below than 150 seats in Loksabha…



ஆய்வு....!

 மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!



ஹக்கீம் அப்துல் ஹமீத்....!

 "யுனானி மருத்துவ முன்னோடி ஹக்கீம் அப்துல் ஹமீத்" 

உலக புகழ்பெற்ற  யுனானி மருத்துவ நிபுணர் ஹக்கீம் அப்துல் ஹமீத் சாஹிப் அவர்கள், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஆவார். யுனானி மருத்துவத்தை மேம்படுத்துவதில் ஹக்கீம் அப்துல் ஹமீத் சாஹிப் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார். யுனானி மருத்துவம் என்பது கிரேக்க, அராபிய மருத்துவ முறையாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கை வைத்தியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பயன்படுத்துகிறது. 

ஹக்கீம் அப்துல் ஹமீத் :

ஹக்கீம் அப்துல் ஹமீத் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி பிறந்தார். அவரது மூதாதையர்கள் முகலாய பேரரசர் ஷா ஆலம் ஆட்சிக் காலத்தில், காஷ்கரில் (இப்போது காசி, ஜின்ஜியாங், சீனா) இருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு வந்தனர். இவரது இளைய சகோதரர் ஹக்கீம் முகமது சயீத் கூட, ஒரு சிறந்த யுனானி மருத்துவ நிபுணர் ஆவார்.  யுனானி பாரம்பரிய மருத்துவ முறையின் இந்திய மருத்துவராக திகழ்ந்த ஹக்கீம் அப்துல் ஹமீது சாஹிப்,  ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தராக இருந்தது மட்டுமல்லாமல், உலக புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் சிறப்பான முறையில் பணியாற்றி, கடந்த 1999ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி காலமானார்.

ஹக்கீம் அப்துல் ஹமீத், யுனானி மருத்துவத்தின் மீது ஒரு பெரிய செல்வாக்கு செலுத்தியது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் சமூக சேவையிலும் பங்களித்தார். ஒரு கொடையாளர் மற்றும் கல்வியாளர் மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் கலாச்சார மற்றும் மருத்துவ பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாகவும் அவர் இருந்தார். அவரது வாழ்க்கையின் நோக்கம், நேர்மை, இரக்கம் மற்றும் மனிதநேய நோக்கத்துடன் தேசத்திற்கு சேவை செய்வது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. அவரது காலத்தால் அழியாத மதிப்புகளையும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் இந்தியர்கள் அனைவரும் பெரிதும் மதித்து வருகிறார்கள். .  

தாம் வாழ்ந்த காலத்தில் அவர் ஹம்தார்த் ஆய்வகங்களின் நிறுவனர் மற்றும் தலைமை அறங்காவலராக இருந்தார்.  1965 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் 1992 ஆம் ஆண்டில், அரசாங்கம் அவருக்கு மூன்றாவது உயர்ந்த இந்திய கௌரவமான பத்ம பூஷண் விருதை வழங்கியது. 

முக்கிய பங்களிப்புகள் :

1993 ஆம் ஆண்டு புது தில்லியில் ஹம்தார்த் பொதுப் பள்ளியை நிறுவிய ஹக்கீம் அப்துல் ஹமீத் சாஹிப்,  ஜாமியா ஹம்தார்த், ஹம்தார்த் தேசிய அறக்கட்டளை, ஹம்தார்த் கல்வி சங்கம், ஹம்தார்த் படிப்பு வட்டம், ஹம்தார்த் பொதுப் பள்ளி, ஹம்தார்த் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், காலிப் அகாடமி, தெற்காசிய ஆய்வுகள் மையம் மற்றும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு பணியகம் போன்ற பல கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.  தனது மனிதநேயப் பணிகளைத் தொடர அவர் 1948 இல் ஹம்தார்த் அறக்கட்டளை என்ற அறக்கட்டளையையும் 1964 இல் ஹம்தார்த் தேசிய அறக்கட்டளையையும் நிறுவினார். மஜீடியா மருத்துவமனையை நிறுவிய யுனானி மருத்துவரான இவரின் பங்களிப்பு காரணமாக தற்போது நூற்றாண்டு மருத்துவமனை (நவீன மருத்துவம்) மற்றும் மஜீடியா மருத்துவமனை (யுனானி) என்று அழைக்கப்படுகிறது. 

விருதுகள் :


ஹக்கீம் அப்துல் ஹமீத்துக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டு அவருக்கு அவிசென்னா விருது வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள இஸ்லாமிய வரலாறு, கலை மற்றும் கலாச்சார ஆராய்ச்சி மையத்தால் (IRCICA) கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் உதவித்தொகையை மேம்படுத்துவதில் ஆதரவளித்ததற்காக IRCICA விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் மருத்துவ அறிவியல் அகாடமியின் கௌரவ உறுப்பினராகவும் இருந்தார். 

ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகம் :

யுனானி மருத்துவத்தின் மீதான தனது ஆர்வத்திற்காக நன்கு அறியப்பட்ட ஹக்கீம் அப்துல் ஹமீத்,  இந்த மருத்துவ முறையை இந்தியாவில் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.  அவர்  1989 ஆம் ஆண்டு டெல்லியில் ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இது யுனானி மருத்துவம் மற்றும் பிற மருத்துவத் துறைகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு முக்கிய நிறுவனமாக புகழ்பெற்று விளங்கி வருகிறது. ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். மேலும் இந்த பல்கலைக்கழகம், மருத்துவ, மருந்தக, பொறியியல் மற்றும் சுகாதார அறிவியல் துறைகளில் சிறந்து விளங்குகிறது. மேலும், இது ஹக்கீம் அப்துல் ஹமீத் அவர்களால் நிறுவப்பட்ட ஹம்தார்த் திப்பி கல்லூரியின் விரிவாக்கமாகும். 

ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகம், மருந்தகத் துறையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் உட்பட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழி படிப்புகளை வழங்குவதற்காக 2004-ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வி மையம் நிறுவப்பட்டது. இது மாணவர்களுக்கு நெகிழ்வான கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது. ஜாமிஆ ஹம்தார்த், தரமான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் மாணவர்களின் தொழில்முறை இலக்குகளை அடைய உதவுகிறது.  ஜாமிஆ ஹம்தார்த் சர்வதேச தரத்தில் உயர்கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகம், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது.

சுவையான வரலாற்று குறிப்புகள் :

ஹக்கீம் அப்துல் ஹமீத் அவர்களால் 1963 ஆம் ஆண்டு ஹம்தார்த் திப்பி கல்லூரி நிறுவப்பட்டது. பின்னர் இதற்கு 1989 ஆம் ஆண்டு ஜாமிஆ ஹம்தார்த்  நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் தோற்றம், 1906 ஆம் ஆண்டு டெல்லியில் ஹக்கீம் ஹபீஸ் அப்துல் மஜீத் அவர்களால் நிறுவப்பட்ட யுனானி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவமனையிலிருந்து தொடங்குகிறது. 2019 ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இதற்கு சிறப்பு நிறுவனம் அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஹக்கீம் அப்துல் ஹமீதின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின் கீழ் சையித் அவுசஃப் அலியின் (முன்னோடி இயக்குநர்) சிறந்த முயற்சியாலும், அதன் முதல் மக்கள் தொடர்பு இயக்குநர்  முஹ்சின் அகமது தாதர்கரின் சிறந்த முயற்சியாலும், பல்கலைக்கழகம் முதலில் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. கல்வி அமைச்சகத்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான பின்தொடர்தல் தேவைப்பட்டது. இதன் மூலம் ஹம்தார்த் நிறுவனம் ஜாமிஆ ஹம்தார்த் பதாகையின் கீழ் ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.

சிறப்பு அம்சங்கள் :

ஜாமிஆ ஹம்தார்த் பல்கலைக்கழகத்தின் நூலக அமைப்பு ஒரு மைய நூலகம் மற்றும் ஆறு ஆசிரிய நூலகங்களைக் கொண்டுள்ளது. அறிவியல், மருத்துவம், மருந்தகம், நர்சிங், இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் மேலாண்மை ஆய்வுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடங்கள். மைய நூலகத்திற்கு நிறுவனரின் தம்பியின் பெயரால் 'ஹக்கீம் முகமது சையத் மத்திய நூலகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நூலகத்தில் ஒரு கையெழுத்துப் பிரதிப் பிரிவு உள்ளது. அதில் புனித குர்ஆனின் அரிய நகல் உட்பட பல அசல் அரபு ஆவணங்கள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறைக்கான ஆய்வகமாகச் செயல்படும் ஒரு கணினி மையம் உள்ளது. இதில் கணினி வசதிகள், அமைப்பு பகுப்பாய்வு அலகுகள் மற்றும் தேவையான அனைத்து புறச்சாதனங்கள் மற்றும் தேவையான மென்பொருள்கள் உள்ளன. கணினி மையத்தில் ஐந்து ஆய்வகங்கள் உள்ளன. அவை அந்தந்த மேம்பாட்டுத் துறைகளுக்கான வசதிகளுடன் உள்ளன.

மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பள்ளி (முன்னர் மருந்தியல் பீடம்) இந்தியாவின் பழமையான மருந்தியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 2017, 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அதன் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் மூலம் இந்தியாவில் முதலிடத்தைப் பெற்றது. இந்தப் பள்ளி மருந்தியல் மற்றும் மருந்து அறிவியலில் டிப்ளமோ, இளங்கலை, பட்டதாரி மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் ஆராய்ச்சியில் தீவிரமானது மற்றும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மருந்துத் துறையில் குறிப்பிடத்தக்க பல முன்னாள் மாணவர்களைக் கொண்டுள்ளது.

ஹம்தார்த் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (HIMSR) மற்றும் அசோசியேட்டட் ஹக்கீம் அப்துல் ஹமீத் நூற்றாண்டு மருத்துவமனை என்பது இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவப் பள்ளி மற்றும் ஒரு கற்பித்தல் மருத்துவமனையாகும். 2012 இல் நிறுவப்பட்ட இது ஜாமிஆ ஹம்தார்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. அத்துடன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மருத்துவப் பள்ளிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்