Monday, May 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (83)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"  

நாள்  -  83


உலகத்தில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

மது அருந்திவிட்டு டிரைவர்கள், ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகள் ஒருபக்கம் இருக்கட்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் எவ்வளவு...!

விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் ஒரேஒரு பழக்கத்தால்,  மது பழக்கதால் பலியாகின்றன.

இதே சாலை விபத்துக்கு நல்ல ஒரு உதாரணம்...

இந்தி நடிகர் சல்மான் கான், இதுபோன்றுதான், மது அருந்திவிட்டு காரை ஓட்டினார். நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றினார். அதில் ஒருவர் பலியானார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு முன்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில்,  நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கு: சல்மான் கான் மது அருந்தியிருந்ததாக வெயிட்டர் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உறங்கிக் கொண்டிருந்த நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கில் நடிகர் சல்மான் கானிற்கு எதிராக 5 நட்சத்திர விடுதி வெயிட்டர் மும்பை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.


மோலே பாக் என்ற இந்த வெயிட்டர், நீதிபதி தேஷ்பாண்டே முன்பு சாட்சியம் அளிக்கையில், காக்டெயில் மற்றும் ரம் ஆகியவற்றை சல்மான் கான் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு தான் சப்ளை செய்ததாக தெரிவித்தார்.

ஆனால் சல்மான் குடித்தாரா என்பது தனக்குச் சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அரசுத் தரப்பு வக்கீல் ஜகன்னாத் கெஞ்ச்ரால்கர், அவரை குடைந்து எடுத்து சல்மான் கான் அன்று குடித்திருந்தார் என்பதை நிரூபித்தார்.

விடுதியில் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் யார் யார் குடித்தார்கள் என்பதை என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றார் வெயிட்டர்.

மற்றொரு சாட்சியான போலீஸ் காவலர் லஷ்மண் மோர் கூறுகையில், சல்மான் கானும் அவரது சகோதரர் சோகைலும் ரைன் பாருக்குச் சென்றனர்.

சகோதரர் சோகைல் நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால் காலை 3 மணியாகியும் சல்மான் திரும்பவில்லை, அப்போது ஒருவர் வந்து எங்களிடம் சல்மான் காரை நடைபாதைவாசிகள் மீது ஏற்றிய சம்பவத்தைக் கூறினார் என்றார்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாக 4 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சல்மான் கான் மது அருந்திவிட்டு  வாகனம் ஓட்டியதால், நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார்.

சல்மான் கான் மட்டுமல்ல, பலர் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் பகலில் மட்டுமல்ல, இரவு நேரங்களிலும் விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகின்றன.

இதுபோன்ற இழப்புகள் நமக்கு தேவையா....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

No comments: