Sunday, May 25, 2014

இறந்தவன் இருக்கிறான் இதயத்தில்......!

இறந்தவன் இருக்கிறான் இதயத்தில்......!




இது கவிஞர் சமு எழுதிய அழகான கவிதை....

சகோதரர் விஜயரங்கம் அகால மரணம் அடைந்த துயர நேரத்தில்...

அவருடைய உள்ளத்தில் எழுந்த கண்ணீர் துளிகள் இவை...

நட்பின் உண்மை வெளிப்பாடு

இந்த கவிதையில் தெரிகிறது...

கவிஞர் சமுவைப் பற்றி நான் நிறைய சொல்ல ஆசைப்பட்டாலும்...

இந்த நேரத்தில் அவருடைய புகழை பாட விரும்பவில்லை...

சகோதரர் விஜயரங்கம் குறித்து

கவிஞர் எழுதிய அழகான வரிகள் இதோ....

இறந்தவன் இருக்கிறான் இதயத்தில்....!
=====================================

இறந்தவன் பேசுவதில்லை...!
  இருப்பவன் பேசுகிறேன்....
இறந்தவன் புகழை பற்றி....

 வாழ்க்கையே மேடு பள்ளம்...
மேட்டில் நின்ற போது
  பள்ளத்தை நிரப்பியவன் நீ...
அதனால் இறந்த போதும் பேசுகிறோம்...
    உன்னை பற்றி...

விஜயரங்கம், பல கனவுகளை
  சுமந்தவன் நீ
இன்று களிமண்ணை சுமக்கின்றாய்..!
  குறைந்த வயதில்
நடந்த கொடுமை...!

குழந்தைகளுக்கு இல்லாத தகப்பனாய்...!
  மனைவிக்கு இல்லாத கணவனாய்...!
பூ உலகை விட்டு சென்றவன் நீ...
   நம்மிடையே புகழை மட்டுமே
 விட்டு சென்றாய்...!
அழிக்க முடியாத பதிவுகள்...!

நீ ஒலி ஒளி நாடாவில்
  இருந்தாலும்....!
நாங்கள் காணாத இடம் தேடி
  ஓடி ஒளிந்து கொண்டாய்...!

இறப்பை பொதுவாக்கிய
   இறைவன்...!
நாட்களை வித்தியாச
  படுத்தி விட்டதால்
நாங்களும் உனை வந்து
  சேருவோம்....
அங்கும் காண்போம்..
 அதிசய நட்பை...


நீங்கா நினைவில்
  விஜயரங்கனின் பதிவுகளுடன்...

                           கவி.சமு

=============================================

                                    

No comments: