Tuesday, October 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (99)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

நாள்- 99

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம்.....!

இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம்....!!

டாஸ்மாக் கடைகளால் நாள்தோறும் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 14.10.14 அன்று போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விருதுநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் முன்புறம் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஸ்நிலையம், நீதிமன்றம் எதிரில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை விற்பனை செய்வதை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பூட்டும் போராட்டம்  நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மதுவிற்கு ஏதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நியாயமான அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு விரைவில் அமலுக்கு வர வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: