Tuesday, July 26, 2016

நிதிஷ்குமார் அதிரடி திட்டம்.....!

மது அருந்துபவர்களின் குடும்பத்தினருக்கு சிறை....!

நிதிஷ்குமார் அதிரடி திட்டம்.....!!


பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்,ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்த்ன் முதலமைச்சராக நிதீஷ்குமார் மிக சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.

இம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீறி மதுகுடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில் புதிய மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, மது அருந்தோர், வீட்டில் மது பாட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவரது குடும்பத்தையை சிறையிலடைக்கவும், மது அருந்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிடவும் சட்டதிருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மக்களின் நலனில் நிதிஷ்குமாருக்கு உள்ள உண்மையான அக்கறையை பாராட்டத்தான் வேண்டும்.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள், மதுவை ஒழிக்க அவசியம்.

அந்த வகையில் நிதிஷ்குமாரின், திட்டம் வெற்றி பெற வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்

No comments: