Sunday, July 3, 2016

அதிசயம்....!!

அற்புதம்....! அதிசயம்....!!


கடந்த ஜனவரி மாதம் முதல் உடல்நலம் சரி இல்லாமல் 5 மாதங்களாக நான் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தேன்.

எனவே,

இந்தாண்டு ரமலான் மாத நோன்பை எப்படி கடைப்பிடிக்க போகிறேன் என்ற அச்சம் எனக்குள் இருந்து வந்தது.

ஏன இறைவன்தான் கருணை காட்ட வேண்டும், இரக்கம் காட்ட வேண்டும் என மனம் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தது.

என்ன அதிசயம்...!

என்ன ஓர் அற்புதம்....!!

ரமலான் நோன்பு தொடங்குவதற்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில், திடீரென எனக்கு உடல்நலம் தேறியதை  நான் உணர்ந்தேன்.


தொடர்ந்து உடல் வலியால் 5 மாதங்களாக தவித்து வந்த எனக்கு, உடல் வலியெல்லாம் பறந்து போனது.

காணாமல் போனது.

எனினும்,

முதல் நோன்பு வைக்கும்போதும், மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்தது.

ஆனால்,

ஏக இறைவனின் அற்புத கருணையால், இன்று வரை (28வது நோன்பு) அனைத்து நோன்புகளும் மிக சிறப்பாக கடைப்பிடிக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

இன்னும் மீதம் இருக்கும் நோன்புகளும் இன்ஷா அல்லாஹ் (இறைவன் விரும்பினால்) நன்றாகவே நிறைவேறும் என உறுதியாக நம்புகிறேன்.

அத்துடன், இந்தாண்டு, திருக்குர்ஆனின் அழகிய தமிழாக்கத்தை முழுவதுமாக படித்து முடிக்கக் கூடிய வாய்ப்பையும் இறைவன் எனக்கு வழங்கினான்.

இந்த ஒரு மாதம் முழுவதும் எனக்கு நல்ல ஒரு ஆன்மிக பயணமாக இருந்தது.

இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

இந்த அற்புதத்தை செய்துக் காட்டிய ஏக இறைவனுக்கு என்னுடைய நன்றிகள் கோடி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

No comments: