Thursday, July 21, 2016

உயர்ந்த உள்ளம்....!

உயர்ந்த உள்ளம்....!



தமிழக காட்சி ஊடகத்துறையில் மிக மிக முக்கிய புள்ளி நிஜந்தன்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை அவர், கொண்டு செல்லும் பாணி ஒரு தனி ரகம்.

இதேபோன்று, செய்தி வாசிப்பில், அவரது தமிழ் உச்சரிப்பு நேயர்களை கவர்ந்து இழுக்கும்.

சிறந்த ஊடகவியலாளராக இருக்கும் நிஜந்தன், நல்ல எழுத்தாளரும் கூட.

பேரலை

பாபுஜியின் மரணம்

என் பெயர்

புதிய வெயிலும் நீலக் கடலும்

சுவை மணம் நிறம்

என பல நாவல்களையும் நிஜந்தன் எழுதியுள்ளார்.

ஊடகவியலாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் விளங்கும் நிஜந்தன், சமூக அக்கறை கொண்ட, ஒரு நல்ல மனிதர்.

அனைவரிடமும் அன்புடன் பழகும் சிறந்த பண்பாளர்.

அண்மையில் நிஜந்தனை சந்தித்து பேசியது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்த சந்திப்பின் நினைவாக நிஜந்தனுக்கு நல்ல நூல் வழங்கிய மகிழ்ச்சி அடைந்தேன்.

சில சந்திப்புகள் வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் அமைவது உண்டு.

அந்த வகையில் இந்த சந்திப்பு அமைந்து இருந்தது.

S.A. Abdul Azeez 
Journalist.

No comments: