Thursday, September 5, 2024

சமூக ஊடகங்களின் காட்டில்.....!

சமூக ஊடகங்களின் காட்டில்.....!

தற்போதைய வேகமான நவீன விஞ்ஞான உலகில், மனித வாழ்க்கையும் மிகமிக வேகமாக பயணித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பயணத்தில் மனிதன் தன்னை தொலைத்துவிட்டு, மன நிம்மதி இல்லாமல் அமைதியை தேடி அலைந்துக் கொண்டிருக்கின்றான். மனிதன் மன நிம்மதி இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் சமூக ஊடகங்கள் முக்கிய இடம் பிடித்து, மனித இனத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன. 

நாள்தோறும் பல மணி நேரம் சமூக ஊடகங்களில் தனது கவனத்தைத் திருப்பி, அதில் மூழ்கியே, வாழ்க்கையின் அனைத்துவிதமான பலன்களையும் மனிதன் இழந்து வருகின்றான். மேலும், ஏக இறைவன் வழங்கிய அற்புதமான வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ மறந்துவிடுகின்றான். தாம் மட்டுமல்லாமல் தம்முடைய குழந்தைகளையும் சமூக ஊடகங்களில் மூழ்கிவிடபெற்றோர்கள் முக்கிய காரணமாக இருந்து விடுகிறார்கள். இதனால், இளம் தளிர்களின் வாழ்க்கை தொலைந்து போகிறது. சமூக ஊடங்கங்கள் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும்  பல்வேறு தொல்லைகளுக்கும் பாதிப்புக்கும் ஆளாகும் நிலை தற்போது நிலவி வருகிறது. 

தனியாக விடாதீர்கள்:

இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க குழந்தைகளை எப்போதும் தனியாக இருக்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி தனியாக இருக்க அனுமதித்தால், அவர்கள் சமூக ஊடகங்களில் தொலைந்து போவார்கள் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் உருவாக்கும் சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழி தெரியாது. இதன் காரணமாக குழந்தைகள் மன மற்றும் உடல் ரீதியாக பாதிப்பு அடைக்கிறார்கள். இந்த பாதிப்பு பின்னாளில் அவர்களின் வாழ்க்கையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி விடுகிறது. எனவே, வீட்டில் இருக்கும் குழந்தைகள் தனியாக இருப்பதையும், சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பதையும் அனுமதிக்காமல், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

பாதுகாப்பான பயன்பாடு:

சமூக ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாட்டைப் பற்றி நீங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். அதற்கு நீங்கள் சில முக்கியமான குறிப்புகளை பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தை சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால், எந்தவித பிரச்சினையும் வரவில்லை என நீங்கள் நினைத்தால், அதை நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கூறுவதைக் கோபப்படாமல் மிகவும் அமைதியாகக் கேளுங்கள். யாராவது அவரை கிண்டல் செய்தால், அல்லது கேலி செய்தால், கிண்டல் செய்பவர் அவரது கருத்துகளால் கிண்டல் செய்தவதை தாழ்வாக உணருங்கள். குழந்தைகளுக்கு யாராவது மிரட்டல் செய்திகளை அனுப்பினால், அந்த அம்சத்தை உடனடியாக பரிசீலித்து, பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வு காண வேண்டும். 

வீட்டில் தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சில விதிகளை அமைக்க வேண்டும். ஒரு குழந்தை எந்த அளவிற்கு, எந்த நேரத்தில், யாருடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். உங்கள் குழந்தை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் போது இதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சில சமூக ஊடகங்களில் பயன்படுத்த வயது வரம்புகள் உள்ளன. உங்கள் பிள்ளை குறைந்த வயது உள்ளவராக இருந்தால், அவரை சட்டவிரோதமான வழியில் செல்ல அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை பயன்படுத்த விரும்பும் எந்தவொரு சமூக ஊடகத் தளத்தின் தனியுரிமைக் கொள்கை மற்றும் நடத்தை விதிகள் பற்றி முழுமையாக அறிந்திருங்கள். குழந்தைகளின் இடுகைகளை அந்தந்த இயங்குதளம் கண்காணிக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும். அதேசமயம், குழந்தையின் பக்கத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே தெரிந்த ஆன்லைன் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும். இது சம்பந்தமாக, நீங்கள் அவரை வழிநடத்தும் கடமையைச் செய்ய வேண்டும். உங்கள் குழந்தையை அந்நியர்களிடமிருந்து விலக்கி வைக்க உண்மையான நண்பர்களுடன் சந்திப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உங்கள் பிள்ளைக்கு அறிவுரை கூறுங்கள். அதில் அவருக்குப் பிடித்தமான கவிதைகளையும் கதைகளையும் பதிவிட வேண்டும். பயனுள்ள வீடியோக்களைப் பார்க்க வேண்டும். அவர் வயதாகும்போது, அவரது மூல கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவரை ஊக்குவிக்க வேண்டும். சமூக ஊடகங்களில், மக்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள், திருத்தங்களை செய்கிறார்கள். இந்தக் கருத்துக்களையும் கவனமாகப் படிக்க வேண்டும். குறைகளை திருத்துங்கள். ஆனால் உயர்ந்த பாராட்டுக்களால் திருப்தி அடையாதீர்கள். அதேநேரத்தில் அதை மேலும் செம்மைப்படுத்துங்கள்.

கவனம் மிகவும் அவசியம்:

சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் கலந்த கலவை என்பதை புரிந்துகொண்டு, அவற்றை நன்மையான விஷயத்திற்காக பயன்படுத்த வேண்டும். அதில் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், தங்களது குழந்தைகளும் கவனம் செலுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டதால், சமூக ஊடகங்களின் மத்தியில் வாழும் போது, கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகமிக அவசியம். இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, September 4, 2024

டாக்டர் யாஹ்யா......!

"நேர மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு பண்புகளை கற்பித்த ஆசிரியர்கள்"

- ஆசிரியர்களுக்கு புகழாரம் சூட்டும் டாக்டர் யாஹ்யா -

தமிழகத்தின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் ஜி.எம். யாஹ்யா, அண்மையில்  தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியின் தாய்வழி மாமாவான டாக்டர் யாஹ்யா, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருந்தியல் துறையில் பேராசிரியராக இருந்த இவர், இன்று புகழ்பெற்று விளங்கும் பல மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். மருத்துவத்துறையில் சாதனை புரிந்துவரும் பலர், யாஹ்யாவின் மாணவர்கள் என்று தங்களை பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள். 

சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் பணியாற்றிய அவர், ஆகஸ்ட் 1982 இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் டீனாக ஓய்வு பெற்றார். ஜி.எம்.யாஹ்யாவின் வாழ்க்கைப் பாதை பயணம், பல நல்ல அனுபவங்களை தந்த பயணமாக இருந்துள்ளது. சமீபத்தில் 100 வயதை எட்டிய யாஹ்யா, இளம் தலைமுறையினருக்கு ஒரு வளமான அனுபவமாக இருந்து வருகிறார். 

அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பு:

சென்னையில் கடந்த 1924, ஆகஸ்ட் 24ஆம் தேதி  பிறந்த யாஹ்யா, 5 ஆம் வகுப்பு வரை மாநகராட்சிப் பள்ளியில் படித்து, உயர்நிலைப் பள்ளியை மதரஸா-இ-ஆஜாமிலும், இடைநிலைப் படிப்பை முகமதியன் கல்லூரியிலும் முடித்தார். பின்னர், 1944ஆம் ஆண்டில் அவர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் கல்லூரியில் நுழைவதற்கு முன்பே யாஹ்யாவிற்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்,  அவர் காதல் என்ற வலையில் சிக்கி, தானே ஒரு பொருத்தத்தைக் கண்டுபிடித்துவிடுவார் என்று யாஹ்யாவின் கவலைப்பட்டனர். எனவே, கல்லூரியில் சேருவதற்கு முன்பே திருமணம் செய்துவிட்டு, தங்களுடைய மகனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஒளியையும் அவர்கள் ஏற்றி வைத்தனர்.  டாக்டர் யாஹ்யாவிற்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். 

வாழ்க்கை நெறிமுறை:

தன்னுடைய வாழ்க்கை பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள டாக்டர் யாஹ்யா, தாம் ஒரு சாதாரண மாணவன் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே மதிப்பெண்களை பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அப்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்ததால், தமக்கு சென்னை மருத்துவக் கல்லுரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தாக கூறும் அவர், தற்போது 99 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கூட, மருத்துவப் படிப்புகளில் சேருவது மிகவும் கடினமாக மாறிவிட்டது என வேதனை தெரிவிக்கிறார். 

நூறு வயதை எட்டியபோதிலும், மிகவும் உற்சாகமாக இருக்கும் யாஹ்யா, தினமும் நடைப்பயிற்சி செய்வதை நிறுத்தவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ததாக கூறும் அவர், தற்போது 15 நிமிடங்கள் மட்டுமே நடைப்பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறார். வாழ்க்கையில் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்க நடைப்பயிற்சி மிகவும் உதவுகிறது என்றும் யாஹ்யா பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார். 

ஆசிரியர்களுக்கு மரியாதை:

ஒரு நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் யாஹ்யா, தன்னுடைய ஆசிரியர்களை இப்போதும் பெருமையுடன் நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்.  தனது ஆசிரியர்கள் தமக்கு நேர மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு பண்புகளை மிக அழகான முறையில் கற்பித்தார்கள் என்று கூறி மகிழ்ச்சி அடையும் அவர், டாக்டர் சதாசிவம், டாக்டர் ஏ.வேணுகோபால், டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியம் போன்ற தன்னுடைய அருமையான ஆசிரியர்களை நினைவுக்கூர்ந்து, அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தாகவும், அதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையில் நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் கூறுகிறார். 

தன்னுடைய ஆசிரியர் டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியம் எழுதிய மருத்துவ நூல் ஒன்று, மருத்துவ மாணவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அதைப் படித்து தாம் பல மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டதாகவும் யாஹ்யா தெரிவிக்கிறார். பேராசிரியர் டாக்டர் ஈஸ்வரய்யா என்ற ஆசிரியரிடம் இருந்து மருந்தியல் குறித்து ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக அவர் பெருமை அடைகிறார். 

நல்ல ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கும்போது, தங்களிடம் எப்போதும் குறிப்புகளை வைத்துக் கொண்டு இருப்பது இல்லை. பாடம் நடத்துவதற்கு முன்பே அனைத்துக் குறிப்புகளை மனதில் எழுதி வைத்துக் கொண்டு, வகுப்புக்கு வந்து பாடம் நடத்துகிறார்கள் என்பதையும் தாம் தன்னுடைய ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மூலம் அறிந்துகொண்டதாக யாஹ்யா தெரிவிக்கிறார். 

தன்னுடைய ஆசிரியர் கே.ராமசந்திரன், அனைத்துப் பாடங்களையும் மறுசூழச்சி முறையில் கூறுவதை அறிந்து தாம் வியப்பு அடைந்தாகவும், இதேபோன்று டாக்டர் மோகன் ராவ், மிகச் சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 

மாணவர்களுக்கு கற்பித்தல்:

ஆசிரியர் என்ற முறையில், தம்முடைய மாணவர்கள் அனைவரும் நல்ல ஞானம் உள்ள மாணவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் திருப்தி அடையும் வகையில் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும் என தாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு அதன்படி, செயல்பட்டதாக கூறும் டாக்டர் யாஹ்யா,  ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை மாணவர்கள் கவனத்துடன் கேட்டால், அதன்மூலம் நல்ல அறிவு கிடைத்து, அதை செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கிறார். தம்முடைய ஆசிரியர்களை போன்று தாமும் வகுப்பிற்குள் செல்லும்போது, குறிப்புகளை எதையும் எடுத்துக் கொண்டு செல்வதில்லை என்கிறார் டாக்டர் யாஹ்யா. பென்சிலின் பயன்படுத்துவது குறித்து தன்னுடைய மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் யாஹ்யா, நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதிக்காமல், பென்சிலின் பயன்படுத்தக் கூடாது என்றும், இதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். 

மருத்துவத்துறையில் அனுபவம்:

டாக்டர் யாஹ்யா, தன்னுடைய மருத்துவ வாழ்க்கையை சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து தொடங்கியுள்ளார். மருத்துவ ஆசிரியர், உதவி பேராசிரியர் என தன்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடங்கிய அவர், பின்னர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார். பின்னர், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக தாம் நியமிக்கப்பட்டதாகவும், அங்கு தாம் முதல் நாள் வகுப்பிற்கு சென்றபோது, அந்த வகுப்பு மாணவர்களால் நிறைந்து இருந்தாகவும் அவர் நினைவுக் கூறி மகிழ்ச்சி அடைகிறார். 

தம்மை  ஒரு சிறந்த பேராசிரியராக மாணவர்கள் முன்னரே அறிந்து இருந்தாகவும் எனவே, தம்மை ஆவலுடன் காணவும், தம்முடைய பாடம் சொல்லும் முறையை அறிந்துகொள்ளவும், திரளாக வந்து இருந்தாக பின்னர் தாம் அறிந்தபோது, தமக்கு பெருமை ஏற்படதாகவும் யாஹ்யா கூறுகிறார். அப்போதைய மாணவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். ஆசிரியர் நல்ல முறையில் பாடம் நடத்தவில்லை எனில், அதுகுறித்து அமைச்சரிடம் புகார் அளித்து விடுவார்கள் என்றும் அவர் நினைவுக்கூறுகிறார். 

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக இருந்தபோது, சக பேராசிரியர் கிஜர் அஹ்மதுடன் இணைந்து சர்க்கரை நோயாளிகளை குணப்படுத்த தேவையான மருந்துகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில்  டாக்டர் யாஹ்யா ஈடுபட்டார். டாக்டர் யாஹ்யாவின் பணிகள் குறித்து  நினைவுக்கூறும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் முஹம்மது ரிலா, கடந்த 1977-78 ஆண்டில் யாஹ்யா மருந்தியல் குறித்து தமக்கு பாடம் நடத்திய ஒரு ஜென்டில்மேன் என்று புகழாரம் சூட்டுகிறார். மேலும், தாம் சந்தித்த பேராசிரியர்களில் டாக்டர் யாஹ்யா ஒரு சிறந்த பேராசிரியர் என்றும் நேர மேலாண்மையை தவறாமல் கடைப்பிடிக்கும் குணம் அற்புதமான மனிதர் என்றும் பெருமை அடைகிறார். இதுபோன்ற அருமையான குணம் கொண்ட பேராசிரியர்களை தற்போதை காண்பது அரிது என்றும், மருத்துவ மாணவர்களுக்கு மருந்துவியல் பாடம் நடத்துவது சுலபம் இல்லை என்றும், அந்த பாடத்தை மாணவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் டாக்டர் யாஹ்யா சொல்லி தந்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளார். அதன் காரணமாக டாக்டர் யாஹ்யாவின் பணிகளை அவரது மாணவர்கள் இன்னும் நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். 

டாக்டர் யாஹ்யா ஒரு கண்டிப்பான பேராசிரியர் என்றாலும், மாணவர்களுக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்துள்ளார். வகுப்பிற்கு குறைந்த நாட்கள் வந்ததால், சில மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் செய்தபோது, டாக்டர் யாஹ்யா, தம்முடைய அற்புதமான பணிகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு, மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு உருவாக்கினார். இந்த பணி, பல மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. இதை இன்று மருத்துவர்களாக உள்ள பலர் நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். 

- நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, September 2, 2024

சூஃபி அருங்காட்சியகம்....!

"சூஃபி கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகம்"

- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -

கலை ஆர்வலர்களே, உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி! உலகின் முதல் சூஃபி அருங்காட்சியகம் பாரிஸில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படபுள்ளது. சூஃபி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்கள் மற்றும் சமகால படைப்புகளின் தனித்துவமான கலவையை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. சூஃபி கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் எம்.டி.ஓ. (Musée d'Art et de Culture Soufis MTO) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், பாரிஸ் புறநகர் பகுதியான சாட்டௌவில் திறக்கப்பட உள்ளது.

சூஃபித்துவம் பொதுவாக இஸ்லாத்தின் ஆன்மிக அம்சமாக அல்லது பரிமாணமாக விளங்குகிறது. இது ஒரு ஆன்மீகப் பாதையாகும். இது இறைவனுடன் நெருக்கத்தை அடைவதை வலியுறுத்துகிறது. ஒரு குருவின் (பீர் அல்லது ஷேக்) வழிகாட்டுதலின் மூலம் எளிதாக்கப்படுகிறது. அத்துடன் பிரார்த்தனை, உச்சாடனம் போன்ற தியான செயல்கள், இசை, எழுத்து மற்றும் கலைப் படைப்புகள் அதன் வளர்ச்சிக்கு முக்கியமானவை. புகழ்பெற்ற பாரசீக கவிஞர் ரூமி முதல் ஈரானின் மிகவும் பிரபலமான வாழும் சிற்பி பர்விஸ் தனவோலி வரை, கலைஞர்கள் சூஃபித்துவத்தின் போதனைகளை பல நூற்றாண்டுகளாக வரைந்துள்ளனர். 

மக்தாப் தாரிகாத் ஓவேஸ்ஸி:

ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான மக்தாப் தாரிகாத் ஓவேஸ்ஸி (MTO) என்ற அமைப்பு, சூஃபி கலை மற்றும் கலாச்சாரத்திற்காக உலகின் முதல் அருங்காட்சியகத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. ஷாமக்சௌதி ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிய சூஃபிசத்தின் சேகரிப்பில் இருந்து நூற்றுக்கணக்கான பொருட்களை இது ஒன்றாகக் கொண்டுவருகிறது. அமெரிக்க நண்பர்கள் மற்றும் சூஃபி கலை, கலாச்சாரம் மற்றும் அறிவுக்கான கனடிய நண்பர்கள் ஆகிய இரண்டு இணைந்த நிறுவனங்கள் அருங்காட்சியகத்தின் முதன்மை தொடக்க நிதியை வழங்கின. அருங்காட்சியகத்தின் இயக்குனர், அலெக்ஸாண்ட்ரா பாட்லோட், "பொது மற்றும் தனியார் நிதியுதவியின் அடிப்படையில் ஒரு பொருளாதார மாதிரியை உருவாக்குவது" நீண்டகால திட்டம் என்று கூறுகிறார்.

சூஃபி கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகத்தின் தாயகமாக பாரிஸின் சாட்டௌவ் (Chatou) புறநகர் விரைவில் இருக்கும். இது கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த அருங்காட்சியகம் சூஃபி கலை, கலாச்சார கலைப்பொருட்கள் மற்றும் சூஃபி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சமகால படைப்புகளின் தனித்துவமான கலவையைக் காண்பிக்கும்.

சூஃபி அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம், சீன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 19ஆம் நூற்றாண்டு மாளிகையாகும். ஒரு அருங்காட்சியகம் மற்றும் பொது ஸ்தாபனமாக அதன் புதிய செயல்பாடுகளுக்கு ஏற்ப கட்டிடம் பெரிய வேலைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

சூஃபி அருங்காட்சியகம் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சூஃபிசத்தின் வளமான பங்களிப்பை வரலாற்று லென்ஸின் கீழ் ஆராய்வதற்குப் பதிலாக, சமகால கலை மற்றும் கலாச்சாரத்தின் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதை அருங்காட்சியகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால்தான் சூஃபி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பல்வேறு சமகால படைப்புகளை இங்கே காணலாம். இந்த அருங்காட்சியகம் சூஃபித்துவத்தின் "உலகளாவிய தன்மை" மற்றும் அவர்களின் கலைப்படைப்புகளுடன் இன்றைய பிரச்சினைகளுக்கு அதன் பொருத்தத்தை காண்பிக்கும்.

இந்த அருங்காட்சியகம் மூன்று தளங்களில் 600 சதுர மீட்டர் கண்காட்சி இடம், ஒரு சூஃபி தோட்டம் மற்றும் ஒரு காப்பக ஆராய்ச்சி நூலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அடிப்படையில், இது சூஃபித்துவத்தில் ஆர்வமுள்ள மக்களுக்கு ஒரு சரணாலயமாக இருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் சூஃபி கலை மற்றும் கலாச்சார பொருட்களின் நிரந்தர சேகரிப்பு இருக்கும். சமகால கண்காட்சிகள், விரிவுரைகள், நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் ஆகியவற்றின் இரு ஆண்டு நிகழ்ச்சிகளையும் அவர்கள் கொண்டிருக்கும். உலகெங்கிலும் உள்ள கலை மற்றும் கலாச்சாரத்திற்கு சூஃபித்துவத்தின் செழுமையான பங்களிப்புகளை மக்கள் ஆராய இது உதவும்.

அருங்காட்சியகம் சேகரிப்புடன் உரையாடலில் சமகால கலைகளை வைக்கும் திட்டத்தை இயக்கும். ஏழு சமகால கலைஞர்களின் படைப்புகளைக் கொண்ட கண்காட்சிகளையும் நடத்துவார்கள். இக்கண்காட்சிகள் திறப்பு விழாவிற்குப் பிறகு நடைபெறும். யூனஸ் ரஹ்மூன் மற்றும் பினாரி சன்பிடக் போன்ற கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறும்.

அருங்காட்சியகத்தின் வலைத்தளத்தின்படி, அருங்காட்சியகத்தில் நிரந்தர சேகரிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சேகரிப்பில் காஷ்குல்ஸ் (அட்சயப் பாத்திரத்திற்கான பாரசீக சொல்), 20 ஆம் நூற்றாண்டின் கிர்கா (தங்க எம்பிராய்டரி கொண்ட ஊதா மற்றும் மஞ்சள் வெல்வெட் ஆடை), சூஃபி தொப்பிகள், இசைக்கருவிகள் மற்றும் சூஃபி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பல்வேறு கலைப்பொருட்கள் ஆகியவை அடங்கும்.

இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள சிறப்பம்சங்கள், காஷ்குல்களின் தேர்வு, செழுமையாக அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள், "பொருள் உறவுகளைத் துறத்தல் மற்றும் தெய்வீக அறிவைப் பெறுவதற்கான தயார்நிலை" ஆகியவற்றைக் குறிக்கும். 20 ஆம் நூற்றாண்டின் கிர்காவும், ஒரு விழாவில் வழங்கப்பட்ட தங்க எம்பிராய்டரியுடன் கூடிய ஊதா மற்றும் மஞ்சள் நிற வெல்வெட் ஆடையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தளத்தில் ஒரு காப்பக ஆராய்ச்சி நூலகம் மற்றும் பாரசீக தோட்டம் உள்ளது. தாவரங்கள் சூஃபித்துவத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. சூஃபி கவிதைகள், இலக்கியம் மற்றும் மருத்துவக் கட்டுரைகளும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குறைந்துவரும் ஆராய்ச்சி அறிஞர்கள்....!

"இந்திய பல்கலைக்கழகங்களில் குறைந்துவரும் ஆராய்ச்சி அறிஞர்கள்"

- ஒரு பரபரப்பு ரிப்போர்ட் -

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி அறிஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து  சரிவைக் கண்டு வருகின்றன என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில், அதுதான் உண்மை நிலவரமாகும். இதற்கு முக்கிய காரணமாக நுழைவுத் தேர்வு என்று பல கல்வியாளர்கள் குறை கூறுகின்றனர். 

பிஎச்டி சேர்க்கைக்கான மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படாமல் இருப்பது சேர்க்கை அட்டவணையை பாதிக்கிறது என்று டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) கணினி அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராஜீவ் குமார் வேதனை தெரிவித்துள்ளார். 

நுழைவுத் தேர்வால் பாதிப்பு:

நாட்டிலுள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் சேரும் ஆராய்ச்சி அறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரே மாதிரியான சேர்க்கை விதிகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் காரணமாக, கல்வி நாட்காட்டியில் இடையூறு ஏற்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தரவரிசை முறையான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பிற்கு (NIRF) பல்கலைக்கழகங்கள் வழங்கிய தரவுகளின்படி, முழுநேர பிஎச்டி படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2016-17 மற்றும் 2022-23க்கு இடையில் முதல்முறையாக குறைந்துள்ளது. முழுநேர பிஎச்டி படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் பட்டியலில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (JU) என்ற தரவரிசையில் உள்ளன. 

பல்கலைக்கழக மானியக் குழு UGC (எம்ஃபில்., பிஎச்டி பட்டங்கள் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலை) ஒழுங்குமுறைகளை கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. புதிய விதிகளின்படி, ஒரு பேராசிரியர் மூன்று எம்ஃபில் மாணவர்களுக்கும், எட்டு பிஎச்டி மாணவர்களுக்கும், ஒரு இணைப் பேராசிரியர் இரண்டு எம்ஃபில் மற்றும் ஆறு பிஎச்டி மாணவர்களுக்கும், உதவிப் பேராசிரியர் ஒரு எம்ஃபில் மற்றும் நான்கு பிஎச்டி மாணவர்களுக்கும் வழிகாட்ட முடியாது. பி.எச்.டி. (PhD) பட்டங்கள் இல்லாத ஆசிரிய உறுப்பினர்கள் பி.எச்.டி மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

2021 ஜூலை முதல் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவதற்கு விண்ணப்பதாரர்கள் பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று 2018இல் UGC அறிவித்தது. 2021ஆம் ஆண்டில், யுஜிசி (UGC) இரண்டு ஆண்டுகளுக்கு கொள்கையை செயல்படுத்துவதை ஒத்திவைத்தது. அத்துடன், 2023ஆம் ஆண்டு ஜூலையில் அதன் முடிவை மாற்றியது. இதன் பொருள் தேசிய தகுதித் தேர்வு (NET) மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (SLET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவிப் பேராசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு வழிகாட்ட முடியாது.

பல்கலைக்கழகத்தின் நிலை:

JNU ஆசிரியர் சங்கம் (JNUTA) அண்மையில் வெளியிட்டுள்ள "பல்கலைக்கழகத்தின் நிலை" என்ற அறிக்கையின்படி, 2016-17இல் மொத்த மாணவர்களில் ஆராய்ச்சி அறிஞர்கள் 62 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23இல் 43 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்துள்ளது. யுஜிசி விதிமுறைகளை புத்திசாலித்தனமாக செயல்படுத்தியதன் மூலமும் இந்த சரிவு ஏற்பட்டது. இவை முதலில் எம்ஃபில் மற்றும் பிஎச்டி மாணவர்களின் எண்ணிக்கையில் ஒரே மாதிரியான வரம்பை விதித்தன. பின்னர், பிஎச்டியின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யாமல் எம்ஃபில் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள், இணையான எம்ஃபில் மேற்பார்வை அகற்றப்பட்டதால், பிஎச்டி மாணவர்களுக்கு மட்டுமே கண்காணிப்பு வரம்பிடப்பட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பிப்ரவரி 2022 வரை, எம்.ஜெகதேஷ் குமார் துணைவேந்தராக இருந்தபோது, ஜேஎன்யுவில் பிஎச்டி பட்டம் இல்லாத பல உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு தற்போது பேராசிரியர்களாக உள்ளவர்கள், அறிஞர்களாக இல்லாமல் அறிவு குறைப்பாடு என்று கூறும் வகையில் ஊனமுற்றவர்களாக உள்ளனர். ஒரு பேராசிரியருக்கு எட்டு மாணவர்கள் இருந்தால், அவர் படிப்பை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். புதிய மாணவர்களை சேர்க்க முடியும். ஆனால் கூடுதலாக, பல புதிய ஆசிரியர்களால் வழிகாட்ட முடியாது. ஒவ்வொரு இடத்துக்கும், குறைந்தபட்சம் 10 மாணவர்கள் விண்ணப்பித்தால், ஆராய்ச்சி அறிஞர்கள் குறைவதால், பல்கலைகழகத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

சேர்க்கை தாமதம்:

மாணவர்கள் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட பல பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கு முயற்சி செய்கிறார்கள். தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்படும் நுழைவு முடிவுகளுக்காக மத்தியப் பல்கலைக்கழகங்கள் காத்திருக்கும் போது மாணவர் சேர்க்கை தொடர்ந்து தாமதமாகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் பொதுவான கவுன்சிலிங்கைப் பின்பற்றுவதில்லை. சில ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது தனியார் பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகின்றனர், மேலும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடங்களைத் தடுத்து, இறுதியாக பின்னவர் அவற்றைச் சரண் செய்துவிடுகிறார்கள். இது காலியிடத்திற்கு வழிவகுக்கிறது. 

ஆராய்ச்சி அறிஞர்கள் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம், 'பல அறிஞர்கள் ஆராய்ச்சி செய்வதற்குப் பதிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்' என்று பாட்னாவில் உள்ள ஏஎன் சின்ஹா ​​இன்ஸ்டிடியூட் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சுனில் ரே கருத்து கூறுகிறார். 

புகழ்பெற்ற இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி அறிஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதால், ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. அல்லது, நல்ல ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகும் நிலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி அறிஞர்கள் குறைந்து வருவது பல்வேறு துறைகளின் ஆராய்ச்சியும் தடைப்படுகிறது என்று கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

பயணம்....!

 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேருந்து பயணம்:



Sunday, September 1, 2024

முதல் முறை....!

For the first time in India (at least as far as anyone can remember!).

Kerala’s outgoing ChiefSecretary, Dr V, Venu, handed over the CS’s post to his wife, Sarada Murlidharan, at a formal handover ceremony at the secretariat in Thiruvananthapuram. Both are IAS officers of the 1990 batch but Venu is several months older than his wife, who is next in seniority in the service. 

A clip of the ceremony: the government was able to economise on the bouquet!



முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அழைப்பு....!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரம்:

நாட்டு மக்கள் அனைவரும் கருத்துகளை அனுப்பி வைக்க 

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அழைப்பு....! 

டெல்லி, செப்.2- வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள், சமூக அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், முஸ்லிம்கள் அனைவரும் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மூலம் அனுப்ப வேண்டும் என அந்த வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 

வேண்டுகோள்:

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் 15 நாட்களுக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மௌலானா ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதி அறிவிப்பு (31.08.2024) ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு தெரிவித்து இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த நேரத்தில், நாட்டின் குடிமகன் என்ற வகையில் தங்கள் கருத்துகள் ஜே.பி.சி.க்கு (நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு) அனுப்பி வைப்பது அனைவரின் பொறுப்பு என்று கூறியுள்ள மௌலானா ஃபஸ்லுர் ரஹீம், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் மூலம் இந்த விஷயத்தில் வலுவான, தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த கருத்தை தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முஸ்லிம்கள் அனைவரும் தமது சமய மற்றும் நம்பிக்கைப் பொறுப்பை விழித்துக்கொண்டு அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துகள் அனுப்ப வேண்டிய முறை:

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு (JPCக்கு) கருத்தை அனுப்ப https://tinyurl.com/is-no-waqf-amendment என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், அதை Google Chrome-இல் நகலெடுத்து ஒட்ட வேண்டும். இணைப்பு திறந்த பிறகு ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ஓபன் ஜிமெயில் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். ஜிமெயிலைத் திறந்து அனுப்பு பொத்தானைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கருத்துகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை (JPC-ஐ) அடையும் என்று கருத்துகள் அனுப்பும் முறை குறித்து மிகத் தெளிவாக மௌலானா ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதி விளக்கியுள்ளார். 

கருத்துகளை உடனே அனுப்ப வேண்டும்:

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து 15 நாட்களுக்குள் கருத்துகளை அனுப்ப வேண்டும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு அழைப்பு விடுத்து இருப்பதால், முஸ்லிம்கள் அனைவரும் தங்களது கருத்துகளை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மூலம் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இதன்முலம் வக்பு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆட்சியாள்ர்கள் மூலம் செய்யப்படும் முயற்சிகளை தடுத்தி நிறுத்த வேண்டும். 

===============================