Sunday, October 2, 2011

காற்றில்லாத இரவு !

விடுமுறை நாள்.

சென்னையில் இருந்து ஊருக்கு,  வேலூர் பாஸ்ட் தொடர்வண்டியில் புறப்பட்டேன்.

ஜன்னல் அருகே அமர்ந்துக் கொண்டிருந்ததால், காட்சிகள் வேகமாக மாறியதை கண்டு ரசிக்க முடிந்தது.

விதவிதமான மனிதர்களின் சிரிப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை கேட்டு உள்ளுக்குள் சிரிக்க முடிந்தது.

சிறிது நேரத்திற்குள் எல்லாமே, சலித்துப் போனது.

என்ன செய்வது என நினைத்தபோது, செல்போனை எடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை கேட்க உள்ளம் வலியுறுத்தியது.



அப்படியே செய்தேன்.

குரு படத்தின் பாடல் அது.

அருமையான இசை.

உள்ளம்  நீண்ட நேரம் அதிலேயே லயித்துப் போனது.

இசைப்புயலை இதயம் வாழ்த்தியது.

அருமையான வரிகளை எழுதிய கவிஞரையும்தான்.




ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
சகியே.


என்ற பல்லவியுடன் தொடங்கிய அந்த பாடலின், சரணத்தில்  அருமையான வரிகள் வந்து விழுந்தன.





நீ
இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத
இரவாய்
ஆகாதோ


என்ற வரிகள் அது. 



காதலி கோபித்துக் கொள்கிறாள்.

அவள் கோபத்தை தணிக்கச் செய்ய வேண்டும்.

அதேநேரம்,

காதலியையும் சமாதானப்படுத்த வேண்டும்.

இதனை உணர்ந்து கொள்ளும் காதலன்,
நீ இல்லாத ராத்திரி
ஒரு ராத்திரியா என கேட்கிறான்.



காற்று இல்லாமல் இருக்கும் இரவு எப்படி இருக்கும்.

அப்படிப்பட்ட இரவுதான், காதலி இல்லாத இரவு இருக்கும் என்று காதலியிடம் கூறுகின்றான்.

அவளை சமாதானப்படுத்துகிறான்.

இதேபாடலில், மற்றொரு இடத்தில்,


நீ
இல்லாமல்
கவிதையும்
இசையும்
சுவையே தராது.


ஐந்து புலன்களின் அழகியே.

ஆருயிரே
மன்னிப்பாயா
என் சகியே.




என்ற வரிகள் வருகின்றன.
கவிதை எப்போதும் அழகு.

அதனுடன் இசை சேர்ந்தால், மேலும் சுவை கூடும்.

கவிதையும், இசையும் சேர்ந்து இருந்தாலும்,
தன்னுடைய காதலி இருக்க வேண்டும்.


அவளின் அழகை ரசிக்க வேண்டும்.

இப்படி விரும்புகிறான். அந்த காதலன்.

அதனால் கோபம் அடைந்த காதலியிடம்,

என் ஆயிருரே
நீ
இருந்தால்தான்
கவிதையும்
இசையும் சுவைத் தரும் என்கிறான். 


 
நல்ல வரிகள் அல்லவா!

காதலில் கோபங்கள், சண்டைகள் ஏற்படுவது இயற்கை.

கணவன் மனைவியிடையே இதுபோன்று சம்பங்கள் நாள்தோறும் நடப்பது சகஜம்தான்.

அதற்காக கோபம் அடைந்து விட்டால், காதலனோ, காதலியோ மன்னிப்பு கேட்பதில் எந்த தவறு இல்லை.

அப்படிதான்,
தன்னுடைய செயலால் கோபம் அடைந்த காதலியிடம்
இந்த காதலன் மன்னிப்பு கேட்கிறான்.


ஆனால்

மிக அழகாக கேட்கிறேன்.

காதலியை புகழ்ந்து பாடுகிறான்.

உன்னால்தான் வாழ்க்கையே சுவைக்கும் என்கிறான்.

மன்னித்து விடு என்கிறான்.

இப்படி இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்.



சிடுமூஞ்சியாக எப்போதும் இருக்கக்கூடாது.

வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

அதன்மூலம், வாழ்க்கையை ரசிக்க வேண்டும்.

சுவைக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நல்ல கருத்தை சொல்லும் இந்த பாடலை நீங்களும் ஒருமுறை கேட்டு ரசியுங்களேன்.

S.A.ABDUL AZEEZ

No comments: