Thursday, September 11, 2014

வாழ்க்கையில் ஓர் இனிய நாள்.....!

வாழ்க்கையில் ஓர் இனிய நாள்.....!


எஸ்.ஆர்.கே.

செந்தில் ராஜ்குமாரை, இப்படிதான் நாங்கள் செல்லமாக அழைப்பது வழக்கம்.

கலகலப்பான இளைஞர்.

துடிப்பான வாலிபர்...

ஊடகத்துறையின் நல்முத்து...

இப்படி, அவரைப் பற்றி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம்...

சரி...

விஷயத்திற்கு வருகிறேன்.

எஸ்.ஆர்.கே. மற்றும் அவரது குடும்பத்தின் அன்பான அழைப்பின் பேரில், அண்மையில் சமயபுரம் சென்று இருந்தேன்.

என்னுடன் சகோதரர்கள் முருகேசன், தஷ்ணாமூர்த்தி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

எஸ்.ஆர்.கே.வின் வாழ்க்கையில் அது ஒரு இனிய தருணம்..

ஆம்...

அவரது வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் பங்கேற்க எஸ்.ஆர்.கே.வுடன், மற்றொரு ஜீவன் இணைந்த நாள் அது.

எஸ்.ஆர்.கே.வின் இனிய திருமணம் நடந்த நாள் அது.



07.09.2014 அன்று சமயபுரத்தில் எளிமையாக நடந்த எஸ்.ஆர்.கேவின் திருமணத்தில் நான் பங்கேற்று மணமக்கள் இருவரையும் வாழ்த்தியது எனக்கும் வாழ்க்கையில் ஓர் இனிய நாளாகவே இருந்தது.

என் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

மனம் ஆனந்தம் கொண்டது.



திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்தி திருமண அன்பளிப்பு வழங்குவது நமது மரபு.

தமிழ் கலாச்சாரம்.

இந்திய பண்பாடு...

அதன்மூலம், குடும்பங்களில், நண்பர்கள் வட்டத்தில் அன்பு மேலும் வளரும்...

பாசம் பிணைக்கும்..

அதன்படி,


நானும் மணமக்களை வாழ்த்தினேன்.

எஸ்.ஆர்.கே.விற்கு அழகிய பொன்னாடையை போர்த்தி, அவரை வாழ்த்தி, மகிழ்ச்சி அடைந்தேன்.

அத்துடன்,

மணமக்கள் இருவருக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த அழகிய (நூலை) புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தேன்.


அந்த இனிய தருணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்தான் இவை.

இந்த அழகிய புகைப்படங்களை நீங்களும் பார்த்து, மணமக்கள் இருவரையும் உங்கள் இருப்பிடத்தில் இருந்தே மனதார வாழ்த்துக்கள்.


அதன்மூலம் எஸ்.ஆர்.கே.வின் மண வாழ்க்கை இனிக்கட்டும்.



அவர் குடும்பத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்.



எஸ்.ஆர்.கே. மற்றும் அவரது துணைவியாருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: