Wednesday, June 8, 2016

இஸ்லாமிய வாக்கு வங்கி...!

இஸ்லாமிய வாக்கு வங்கியால் வென்ற கார்த்திகேயன்....!


வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 25 ஆயிரத்து 588 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

இந்த சாதனைக்கு முக்கிய காரணமே, இஸ்லாமியர்களின் வாக்குகள் என்பது நிதர்சன உண்மை.

வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் எப்போதும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்த தொகுதியில் யார் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிகமாக பெறுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி என்பது கடந்த கால வரலாறு.

காங்கிரஸ் சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஞானசேகரன், இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்றே தொடர்ந்து வெற்றியை ஈட்டி வந்தார்.

அதேபோன்று, கடந்த முறை அதிமுக சார்பில் நின்ற டாக்டர் விஜய்யும் வெற்றி பெற்றார்.

இந்த முறை, திமுக சார்பில் நின்ற கார்த்திகேயன், இஸ்லாமியர்களின் வாக்குகளை கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதன்மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேலூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில், ஹாரூன் ரஷீத் நின்றாலும், அவர் வெளியூர்காரர் என்பதால், அவருக்கு இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் தங்களது வாக்குகளை அளிக்கவில்லை.

குறிப்பாக, ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், சைதாபேட்டை, சத்துவாச்சாரி, உள்ளிட் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் எங்களை ஊரை சேராத, ஹாரூன் ரஷீத்திற்கு நாங்கள் வாக்கு அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், மண்ணின் மைந்தன் கார்த்திகேயனுக்கு இஸ்லாமிய மக்கள் கண்ணியம் வழங்கி, மதிப்பு அளித்து தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

இதனை திமுகவும், வேலூர் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலூர் நகரில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுவே நமது வேண்டுகோள். கோரிக்கை.

S.A.Abdul Azeez
Journalist.

No comments: