Wednesday, June 8, 2016

அந்த உத்தமர் எங்கே....?


என்னை அரைவேக்காடு என விமர்சனம் செய்த அந்த உத்தமர் எங்கே....?


கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நான் பதிவு செய்த கருத்து ஒன்றில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளும் மிகவும் பலவீனமானவை என பலரும் பேசிக் கொள்கிறார்களே, உண்மையா...!

வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும், கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே, அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஊடக நண்பர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அதுவும், கடையநல்லூரில் அதிமுக அணியில், ஷேக் தாவூத் போட்டியிடுவதால்தான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்த வெற்றியும் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

என ஊடக நண்பர்கள் சொன்ன கருத்து மற்றும் அனுபவ அடிப்படையில் ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தேன்.

மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மீது இயற்கையாகவே எனக்கு இருந்த பற்று காரணமாக, வலுவான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கட்சி தலைமை பெற்று இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தேன்.

இதற்கு உடனே Iuml Central Chennai என்ற ஒரு உத்தமர், யாரோ ஒரு பைத்தியம் சொன்னதை வைத்து நீங்கள் உண்மயா உண்மையா என கேட்கிறிர்களே நீங்கள் ஒரு அரைவேக்காடு பத்திரிகையாளர் என சொல்கிறார்களே உண்மையா என என்னை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்போது, நான் கணித்தப்படி, கடையநல்லூர் தொகுதியில் மட்டும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சகோதரர் முகமது அபுபக்கர் வெற்றி பெற்று இருக்கிறார்.

மற்ற நான்கு தொகுதிகளில், அதாவது, வாணியம்பாடி, பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்து இருக்கிறது.

உண்மையை சொன்னதற்காக என்னை அரைவேக்காடு, அரை லூஸ் என கடுமையாக விமர்சனம் செய்த அந்த Iuml Central Chennai என்ற அந்த உத்தமர் இப்போது என்ன சொல்ல போகிறார்.

மீண்டும் ஏதாவது பாணியில் திட்ட போகிறாரா...இல்லை, பத்திரிகையாளர்களின் கணிப்பில் ஒரளவுக்கு உண்மை இருக்கும் என ஒப்புக் கொள்ள போகிறாரா...!

இதுதான் எனது கேள்வி...!

S.A.Abdul Azeez
Journalist.

No comments: