Thursday, June 23, 2016

பூரண மதுவிலக்கு....!

உ.பி.யில் பூரண மதுவிலக்கு....!


உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்ஸாபூரை அடுத்த சிவஷங்கரி தாம் பகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,

மதுவிலக்கு என்பது நாட்டிற்கும், சமுதாயத்திற்கு தேவையானது என்றார் அவர்.

உத்தரப்பிரதேச மக்கள் தங்கள் கைகளை வலுப்படுத்தினால், இங்கும் (உ.பி.) மது விலக்கை கொண்டு வருவோம் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

பீகார் மக்கள் மது பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுமாறு கேட்டுக் கொண்ட போது, தங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் செய்கிறோம் என்று சொன்னோம் என்று கூறிய அவர், அந்த வாக்குறுதியை தாங்கள் நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. என்று குற்றம்சாட்டிய நிதிஷ்குமார், தான் அளித்த வாக்குறுதிகளை அவர் (பிரதமர் மோடி) நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: