Wednesday, June 8, 2016

நம்ம எம்.எல்.ஏ.....!

நம்ம எம்.எல்.ஏ.....!


1996ஆம் ஆண்டு சென்னை வாலஸ் கார்டன் பகுதியில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில்தான் நான் முதல்முதலாக முகமது அபூபக்கரை சந்தித்தேன்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக இருந்து மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் அழைப்பின் பேரில், வேலூரில் இருந்து சென்னைக்கு வந்து, மணிச்சுடர் நாளிதழில் பணியில் சேர்ந்த நேரம் அது.

அப்போது, ஒருமுறை மணிச்சுடர் அலுவலகத்திற்கு வந்த அபூபக்கரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியது.

நல்ல இளைஞர்.

எப்போதும் பாசத்துடன் பழகும் பண்பாளர்.

என்ன அஜீஸ் பாய் என உரிமையுடன் அவர் அழைக்கும்போது அதில் ஒரு அன்பு இருக்கும். நேசம் இருக்கும்.

இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அபூபக்கருடன் நல்ல நட்பு தொடர்கிறது.

தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கடையநல்லூர் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வாக முகமது அபூபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உண்மையிலேயே இது எனக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்திற்கே மகிழச்சி அளிக்கும் ஒரு அருமையான நிகழ்வு ஆகும்.

அதற்காக ஏக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினராக அடியெடுத்து வைக்கும் அபூபக்கருக்கு எமது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் நிச்சயம் குரல் கொடுப்பார் என உறுதியாக நம்புகிறோம்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, முஸ்லிம் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமாக தீர்வு காண அபூபக்கர் நிச்சயம் முயற்சி செய்வார்.

அதற்காக அவரை மீண்டும் வாழ்த்துகிறோம்.

அவரது பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட கடையநல்லூர் தொகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களின் நலனுக்காகவும் அபூபக்கர் உழைக்க வேண்டும்.

இதுவே எமது வேண்டுகோள்.

S.A.Abdul Azeez
Journalist.

No comments: