Sunday, August 2, 2015

பேமானி....!

பேமானி....! கஸ்மாலம்...!! பண்ணாடே...!!!

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தேன்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இரண்டு பேர் ஏறினார்கள்.

இருக்கையில் அமர்ந்தும் அவர்களில் ஒருவர் கலாமின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்குது என்றார்.

என்னாது கலாம் செத்திட்டாரா. உடல்நலம் சரியில்லாமல் இருந்தாரா. வெளிநாட்டு பயணத்தின்போது காலமாறிட்டாரா என ஆச்சரியத்துடன் அந்த இரண்டாம் நபர் பல கேள்விகளைக் கேட்டார் பாருங்கள்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அத்துடன் கலாமின் சொந்த ஊர் ராமேஸ்வரமா என்றும் அந்த நபர் வினா எழுப்பினார்.

பார்த்தால் படித்த நபராகவே தெரிந்தது.

உலகம் போற்றும் ஒரு உத்தம தலைவர் திடீரென மறைந்ததால் இரண்டு நாட்களாக நாடே சோகத்தில் முழ்கியிருக்கிறது.

இந்த பண்ணாடே கஸ்மாலம் பேமானிக்கு அதுபற்றி ஒன்றுமே தெரியவில்லை.

ஏபிஜெ அவர்களின் பெருமையை அறியாத இவர்களைப் போன்றவர்களை இப்படி அழைக்காமல் பின்னே எப்படி அழைப்பது ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: