Sunday, August 9, 2015

தங்க மனசு.....!

பெண்ணுக்கு தங்க மனசு.....!


உலக மகள்கள் தின வாரத்தையொட்டி இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில்,

பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் இருப்பது பெருமையான விஷயம்.

மகள்களை நாம் மகன் போல ‘வாடா... போடா...’ என்று கூப்பிடுகிறோம்.

அதேநேரம், மகன்களை மகள்கள் போல அழைப்பது இல்லை.

இதுதான் மகள்களுக்கு இருக்கிற முக்கியத்துவம்.

பெற்றோருக்கு மகள்கள் பதற்றத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.

இன்றைய உலகில் ஒரு மகள் இருப்பது 10 மகன்களுக்கு சமம்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.


ஐக்கிய நாடுகளின் சபையில் பெண் குழந்தைகள் நல அமைப்பின் தூதுவராக அமிதாப்பச்சன் இருக்கிறார்.

இதன்மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் அமிதாப் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments: