Sunday, August 23, 2015

0.01 நொடியில் வாழ்க்கை மாறலாம்....!

0.01 நொடியில் கூட வாழ்க்கை மாறலாம்....! வெற்றி கிடைக்கலாம்....!!


சீனாவின் பீஜிங் நகரில் நடக்கும் 15வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உலகின் அதிக வேக மனிதன் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இதில் நடப்பு சாம்யினும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஜமைக்கா புயல் உசேன் போல்ட் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

குறிப்பிட்ட இலக்கை 9.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த உசேன் போல்ட் உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதேநேரத்தில் இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லின் 9.80 வினாடிகளில் குறிப்பிட்ட இலக்கை அடைந்தார்.

உசேன் போல்ட்க்கும், ஜஸ்டின் கேத்லினுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 0.01 வினாடிதான்.

அதாவது 0.01 வினாடியில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் உசேன் போல்ட்.

ஆக மனிதனின் வாழ்க்கை எந்த நேரத்திலும் மாறலாம்.

எப்போது வேணுமானாலும் வாழ்க்கையில் அதிசயம் நிகழலாம்.

வெற்றி என்பது யாரும் எதிர்பார்க்காத வேளையில் எப்போதும் கிடைக்கலாம்.

இதுதான் உசேன் போல்ட்டின் தற்போதையை சாதனை வெற்றி மனித சமுதாயத்திற்கு தரும் படிப்பினை.

எனவே, தோல்வி, வெற்றிகளை பற்றி கவலைப்படாமல், குறிக்கோளை மட்டுமே இலக்காக வைத்து இளைஞர்கள் உழைக்க வேண்டும்.

அதன்மூலம் வெற்றிகளை குவிக்க வேண்டும்.

அதிசய புயல் மனித உசேன் போல்ட் தமது வெற்றியின் மூலம் இதைத்தான் சொல்லி இருக்கிறார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: