Tuesday, August 4, 2015

இன்னுமா மதுவுக்கு ஆதரவு...!

இன்னுமா மதுவுக்கு ஆதரவு...!


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

மாணவர் சமுதாயம் போராட்டத்தில் குதித்துள்ளது.


இதற்கு பெண்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

ஏன் அனைத்து தரப்பு மக்களும் மதுவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் மதுவுக்கு ஆதரவாக மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டு தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த முடியாது என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருப்பது வேதனை அளிக்கிறது.


மக்களுக்காக இயங்கும் ஒரு அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இன்னும் மதுவுக்கு ஆதரவான நிலையில் இருப்பது நியாயம் இல்லை.

அதுவும் ஒரு பெண் முதலமைச்சரை கொண்ட தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி நடக்கும் நியாயமான போராட்டங்களை அலட்சியம் செய்வது சரியல்ல.

அரசியல் காரணங்கள் இலாபங்கள் ஆகியவற்றிற்காக இந்த போராட்டங்கள் நடந்தாலும் அவற்றில் சுயநலத்தை விட பொதுநலமே மக்கள் நலமே அதிகமாக உள்ளது.


எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து சுய கவுரவம் பார்க்காமல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நல்ல முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா உடனே அறிவிக்க வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம் என்பதை அதிமுக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: