Saturday, August 22, 2015

சென்னையில் நான்....!

சென்னையில் நான்....!


சென்னை தினத்தையொட்டி இந்த பதிவு செய்யப்படுகிறது.

சென்னை குறித்து பல பதிவுகள் எழுதினாலும், இன்னும் எழுதிக் கொண்டே இருக்கும் வகையில் இங்கு பல தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் சென்னையில் இருக்கும் பல அழகான மால்கள் மக்களின் மனங்களை கவர்ந்து வருகின்றன எனலாம்.

இந்த மால்களுக்கு செல்லும்போது உண்மையிலேயே மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறது.


அதற்கு பல காரணங்கள் உண்டு.

நானும் சென்னையில் உள்ள மால்களுக்கு பலமுறை சென்று ரசித்து வருகிறேன்.

ஒவ்வொரு முறை செல்லும்போது ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது.

மால்களுக்கு செல்லும்போது, பாக்கெட் மணி தண்ணீர் போல செலவாவது வேறு விஷயம்.

ஆனால், மால்களின் அழகில் நிச்சயம் மனம் அமைதி கொள்கிறது.

அங்கு வரும் விதவிதமான மனிதர்களை காணும்போது, ஒருவித தேடுதல் பிறக்கிறது.

ஆக, சென்னைக்கு அழகு சேர்க்கும் மால்களை சென்னை தினத்தில் எப்படி நாம் மறக்க முடியும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: