Friday, March 6, 2015

சூடான பார்ட்டி....!

சூடான பார்ட்டி....!

இஸ்லாமியர்கள் மத்தியில் அண்மை காலமாக பொறுமை குணம் குறைந்து வருவது காண முடிகிறது.

என்னையும் சேர்த்துதான். (ஊடகத்துறையில் இருப்பதால் என்னவோ கொஞ்சம் வேகமாக செயல்பட்டு பொறுமை இழக்கிறேன்)

சமூக வலைத்தளம் தொலைக்காட்சி என பலவற்றில் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனித்தால் இது உண்மை என தெரிகிறது.

பொறுமை குணத்தை மிக உயர்வாக போதிக்கும் மார்க்கத்தில் இருந்து வந்த மக்கள் ஏன் இப்படி பொறுமையை இழந்து ஒற்றுமையை சீர்குலைத்து தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் என புரியவில்லை.

அதனால்தான் என்னவோ தமிழகத்தில் இ.யூ.மு.லீ. த.மா.மு.லீ. த.மு.மு.க. ம.ம.க. இந்திய தேசிய லீக் த.மா.தே.லீக். தேசிய லீக். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இந்திய தவ்ஹீத் ஜமாஅத். ஜமாஅத் இ இஸ்லாமி. வெல்ஃபர் பார்ட்டி என 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தோன்றி தாங்கள்தான் உண்மையான முஸ்லிம் அமைப்புகள் என கூறிக் கொள்கின்றன.

நாள்தோறும் இன்னும் பல அமைப்புகள் தோன்றி கொண்டே இருக்கின்றன.

ஆனால் பொறுமை ஒற்றுமை ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற நல்ல பண்புகள் இஸ்லாமிய அமைப்புகளிடம் காண்பது அரிதாக இருக்கிறது.

முஸ்லிம் மக்களுக்கு தாங்கள்தான் உண்மையாக உழைப்பதாக இந்த அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. பிற இஸ்லாமிய அமைப்புகளை தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றன.

அதனால்தான் என்னமோ
எல்லோருமே சூடான பார்ட்டியாக இருக்கிறார்கள்.

வேண்டுமானால் பாருங்கள் இந்த கருத்தை பதிவு செய்த என்னை அர்த்தமற்ற மொழிகளால் வசைப்பாட பலர் லைன் கட்டி நிற்க போகிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: