Friday, March 6, 2015

எச்சரிக்கை...!

எச்சரிக்கை...!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சுனாமி அலையில் பிஜேபிக்கு மரண அடி.

இப்படிதான் மக்களும் செய்தி ஊடகங்களும் கருத்தை வெளியிட்டு வருகின்றன.

உண்மையில் கெஜ்ரிவால் அலை எதுவும் டெல்லியில் வீசவில்லை.

பிரதமர் மோடிக்கு எதிராக வீசிய மிக பயங்கரமான சுனாமி அலையின் பலன் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது.

இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொய்யான வாக்குறுதிகளை வீசி பேசி பேசியே மக்களை ஏமாற்றலாம் என நினைக்கும் மோடி போன்ற விளம்பர பிரியர்களுக்கு மக்கள் கொடுத்த எச்சரிக்கை மணிதான் டெல்லி தேர்தல் முடிவுகள்.

=======================

கொண்டாட்டம்....!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை நாடே கொண்டாடுவது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்ககளில் வரும் கருத்துகள் செய்திகள் மூலம் நன்றாக அறிய முடிகிறது.

பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பிரதமர் மோடி கோட் சூட் அணிந்தால் மக்கள் கோபத்தை காண்பிக்காமல் என்ன செய்வார்கள் ?

மோடி ஜி உங்களுக்கு எட்டே மாத காலத்திற்குள் மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள்.

டெல்லி தேர்தல் மோடி அரசின் செயல்பாடுகளுக்கான வாக்கெடுப்பு இல்லை என்ற சப்பை காரணங்களை கூறமால் இனி சுய விளம்பரத்திற்காக அதிகம் பேசாமல் நாட்டு மக்களுக்கு உண்மையாகவே நல்லதை செய்ய ஆர்வம் செலுத்துங்கள்.

சர்வாதிகார போக்கை கைவிடாது பேசி பேசியே மக்களை வெறுப்பேத்தினால் டெல்லி மக்களை போன்று நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உங்களுக்கு பாடம் கற்பிக்க சிறிதும் தயங்க மாட்டார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: