Friday, March 6, 2015

புருஷனுக்கு மரியாதை..?

புருஷனுக்கு மரியாதை..?

திருவல்லிக்கேணி பெரிய தெரு சந்திப்பில் நண்பர் எஸ்.ஆர்.கே. வருகைக்காக காத்திருந்த போது என் அருகில் இருந்த பெண் ஒருவர் எதிர் முனையில் இருந்த தன்னுடைய கணவரை என்னங்க...என்னங்க..என கத்தி கத்தி அழைத்து கொண்டே இருந்தார்.

ஆனால் அந்த நபரோ கவனித்தப்பாடு தெரியவில்லை. பொறுமை இழந்த அந்த பெண் முண்டம் திரும்பி பார்க்குதா பார் என திட்ட ஆரம்பித்தார்.

பின்னர் எதிரில் சென்ற மற்றொரு நபர் மூலம் தனது கணவரை அழைத்த அந்த பெண் அவர் திரும்பி பார்த்ததும் கன்னா பின்னா என திட்ட ஆரம்பித்தார்.

நான் ஆடி போயிட்டேன்.

கணவனே கண் கண்ட தெய்வம் என மதிக்கும்; மரியாதை கொடுக்கும் நம்ப தமிழகத்தில் தற்கால பெண்கள் தங்களது புருஷனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான்.

No comments: