Friday, March 6, 2015

சரவணன் - மீனாட்சி...!


சரவணன் - மீனாட்சி...!

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களில் சகோதரர் சங்கரபாண்டியனும் ஒருவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவர் செய்த மனித நேய உதவிகள் மறக்க முடியாதவை.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 

கலைத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர் சங்கரபாண்டியன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போது தனது இலட்சியத்தை அடைந்துள்ளார்.



ஆம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற சரவணன் - மீனாட்சி தொடரில் அவரும் நடிக்கிறார். 


சாரி வாழ்கிறார்.

இந்த தகவலை அவர் செல்பேசி மூலம் எனக்கு தெரிவித்தபோது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அப்போதே அவரை வாழ்த்தினேன்.

பின்னர் அவரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

கலைத்துறையில் சங்கரபாண்டியன் உச்சத்தை தொட்டு சாதனை புரிய வேண்டும்....வாழ்த்துக்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்


No comments: