Friday, March 6, 2015

மதங்களை கடந்து மனிதம்...!

மதங்களை கடந்து மனிதம்...!

நீண்ட நாட்களுக்குப் பிறகு மாம்பலத்தில் இருக்கும் எஸ்.ஆர்.கே. (செந்தில் ராஜ்குமார் - சன் டிவி) வீட்டிற்கு சென்றேன்.

அவரது துணைவியார் அன்புடன் வரவேற்றார். 

நலம் விசாரித்தார்.

டிபன்..தேனீர் அளித்து விருந்தோம்பல் செய்து தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தினார்.

விடை பெற்று திரும்பும் நேரம் என்னங்க பொங்கலுக்கு ஊருக்கு போனபோது சாருக்காக தொப்பி வாங்கினோமே எங்கே வெச்சிங்க என எஸ்.ஆர்.கே.விடம் அவரது துணைவியார் கேட்க ஆமாம் மறந்தே போச்சில்லே என எஸ்.ஆர்.கே. தன்னையே கோபித்துக் கொண்டார்.

பிறகு இருவரும் தேடி சிறிது நேரத்திற்குள் அழகான இரண்டு வெள்ளை நிற தொப்பியை என்னிடம் வழங்கினார்கள்.



ஒரு நிமிடம் நான் ஆடி போனேன்.

கோட்பாடு கொள்கை ரீதியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்பு வெளிப்படுத்துவதில் தமிழர்கள் மனிதர்களாக இன்னும் மனித நேயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியானது.

எஸ்.ஆர்.கே. தம்பதியினருக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: