Wednesday, December 9, 2015

நிஜ ஹீரோக்கள்....!

நிஜ ஹீரோக்கள்....! பலே பலே ஊடக சொந்தங்களே...!!


சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இன்னும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் மக்களின் துயரங்கள், துன்பங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது எனலாம்.


இந்த பேரழிவின் போது நமது ஊடக சொந்தங்களும் ஆற்றிய மிகப் பெரிய பணிகளை யாரும் மறக்க முடியாது.

மறைக்க முடியாது.


24 மணி நேர தொலைக்காட்சிகளுக்கு நிகராக முகநூலில் நிவாரணப் பணிகள் தொடர்பான தகவல்களை நமது சொந்தங்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார்கள்.


இன்னும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.


சென்னையில் எங்கேங்கே கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.


யாருக்கு நிவாரணப் பொருட்கள் தேவை.

எங்கே தங்கும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.


எந்த செல்பேசியில் தொடர்பு கொண்டால், உரிய நிவாரண உதவிகள் கிடைக்கும்.


எந்த செல்பேசியில் தொடர்பு கொண்டால், நிவாரணப் பொருட்கள் வழங்கலாம்.


என

இப்படி பல முக்கிய, அத்தியாவசி, அவசியமான தகவல்களை மற்றும் வானிலை தொடர்பான விவரங்களை நமது ஊடக சொந்தங்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார்கள்.


இன்னும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.


குறிப்பாக,


Elumalai Venaktesan
விஷ்வா விஸ்வநாத்
Aravind Akshan
Senthil vel
Shabbir Ahmed
Pal murukan A
J Sam Daniel Stalin
Manoj Savarimuthuraj
Mahalingam Ponnusamy
Parthiban Kumar
Peer Mohamed
Abdul Muthaleef
Shankar Ganesh
Thangamani Govindaraj
Tharai Ilamathi
Rafeeq Friend
Siraj Ul Hasan
Shanthi Subramani
Subash Prabhu
Nabil Ahamed
Abdul Kareem


என ஏராளமான ஊடக சொந்தங்கள் தொடர்ந்து அளித்து வந்த தகவல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்க நல்லவாய்ப்பு கிடைத்தது.


சிரமம் இல்லாமல் மக்கள் நிவாரண உதவிகளை பெற முடிந்தது.


நிவாரண உதவி செய்ய முன் வந்தவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைத்ததால் அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண உதவிகளை, பணிகளை முழு வீச்சில் செய்தார்கள்.


இங்கு ஊடக சொந்தங்கள் பலரின் பெயர்கள் விடுபட்டு இருக்கலாம்.

அவர்கள் கோபம் அடையக் கூடாது.


என்னுடைய கவனத்தில் வந்த நமது சொந்தங்களின் பெயர்களை மட்டும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.


இன்னும் நிறைய ஊடக சொந்தங்கள் நல்ல தகவல்களை அளித்து கனமழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை செய்தார்கள்.

செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.


இதை யாரும் மறுக்க முடியாது.

இப்படி நல்ல பணிகளை செய்த, செய்துக் கொண்டே இருக்கும் இவர்கள் அனைவரும் நிஜ ஹீரோக்கள்.


கடுமையான அலுவலக ஊடகப் பணிகளுக்கு இடையே, எந்த வித சலிப்பும் அடையாமல், சிரமம் கொள்ளாமல், சமூக நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, நமது ஊடக சொந்தங்கள் செய்த இன்னும் செய்துக் கொண்டு இருக்கும் இந்த மகத்தான பணிக்கு ஒரு பலே பலே பாராட்டுக்கள்.


வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: