Friday, December 11, 2015

மருந்துகள் இலவசமாக அளிப்பு...!

பூவிருந்தவல்லி மருத்துவ முகாமிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இலவசமாக அளிப்பு...!

சென்னை அண்ணாசாலை மெக்கா பள்ளிவாசல் இமாம் தாராளம்....!!


சென்னை பூவிருந்தவல்லியில் வரும் சனிக்கிழமை (12.12.15) வெள்ளத்தால் பாதிக்கப்ப்டட மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட இருக்கிறது.

ஆனால், மருத்துவ முகாமிற்கு தேவையான போதிய மருந்துகள் இல்லை.

இதனால் முகாமை ஏற்பாடு செய்து இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு கவலை தொற்றிக் கொண்டது.

உடனே, தம்பி ஜீவா சகாப்தனை (என்னுடன் இணைந்து பணிபுரிந்தவர். அவரை தம்பி என்றுதான் நான் அழைப்பது வழக்கம்) முகாம் ஏற்பாட்டாளர்கள் செல்பேசி மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

தம்பி ஜீவா சகாப்தனும் உடனே முயற்சி செய்கிறார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ் பெற்ற மெக்கா பள்ளிவாசல் இமாம் மவுலானா சம்சுதீன் காஸிமியை செல்பேசியில் தொடர்பு கொள்கிறார்.

என்ன ஆச்சரியம்.

மறுமுனையில் பேசிய மவுலானா சம்சுதீன் காஸிமி


தம்மிடம் இருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதாக கூறி எநத வித தயக்கமும் காட்டாமல் அதை உடனே அனுப்பி வைத்தார்.

இந்த பதிலை, உதவியை கேட்ட தம்பி ஜீவா சகாப்தன் மகிழ்ச்சியில் உறைந்து போனார்.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தன்னலம் பார்க்காமல் உதவி செய்தும், நிவாரணப் பணிகளை ஆற்றியும் வரும் நிலையில், மருத்துவ முகாமிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக அளித்தது மேலும் ஒரு மைல்கல் எனலாம்.

இதன்மூலம் தம்முடைய ஈகை குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் மெக்கா பள்ளிவாசல் மவுலானா இமாம் சம்சுதீன் காஸிமி.

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிய சென்னை அண்ணாசாலை மெக்கா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும், அதன் தலைமை இமாம் மவுலானா சம்சுதீன் காஸிமிக்கும் எனது பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்.

பேரழிவு காலங்களில் மதம், இனம், மொழி, சாதி, என எதையும் எதிர்பார்க்காமல், உதவ வேண்டும் என்ற இஸ்லாமிய நெறிகளுக்கு ஏற்ப உதவி கரம் நீட்டி மவுலானா இமாம் சம்சுதீன் காஸிமி, உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியவர்.

அவரது பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மருத்துவ முகாமிற்கு மருந்துகள் கிடைக்க உதவியாக இருந்த தம்பி ஜீவா சகாப்தனுக்கு, சக ஊடகவியலாளர் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: