Friday, December 4, 2015

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஓர் அழகிய பிரார்த்தனை....!


திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்கு பிறகு, இறைவனிடம் மனம் உருகி மவுலவி கேட்க ஓர் அழகி துஆ (பிரார்த்தனை).

இறைவா

மக்களுக்கு பாதிப்பு இல்லாத மழையை கொடு.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு கொடு.

தமிழக மக்களின் துன்பங்கள், துயரங்கள் விரைவில் நீங்க வேண்டும்.

அதற்கு சக்தியை கொடு.

மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யும் மக்களுக்கு உதவி கரம் நீட்டு.

அனைத்து தரப்பு மக்களும் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து விரைவில் மீள வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம், மருந்து ஆகிய நிவாரணப் பொருட்கள் உடனே கிடைக்க வேண்டும்.

மழை, வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்கும் நல்ல உள்ளங்களின் பணிகளை ஏற்றுக் கொள்.

சென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள், மதராசாக்களில் அனைத்து தரப்பு மக்களும் தங்கியிருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் எந்தவித சிரமமும் இல்லாமல் நல்ல வசதியுடன் இங்கு தங்க ஏற்பாடுகளை செய்த நல்ல இதயங்களின் பணிகளை ஏற்றுக் கொள்.

இறைவா


எங்களுக்கு அதிக மழை கொடுக்காமல், பாதிப்பு இல்லாத மழையை கொடு.

சென்னை வாழ் மக்கள் கனமழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள்.

எனவே, இன்னும் அதிக மழையை பொழிந்து அவர்களின் சிரமங்களை மேலும் அதிகமாக்காதே.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்திடு.

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் கனமழையால் பாதிப்பு அடைந்து இருக்கும் மக்களின் துயரங்களை விரைந்து நீக்கி விடு.

அதை மேலும் அதிகப்படுத்தாதே.

எங்கள் பிராத்தனையை ஏற்றுக் கொள்.

மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் காப்பாற்று.

அழகிய உருது மொழியில் மவுலவி மனம் உருகி துஆ (பிரார்த்தனை) கேட்டபோது, ஜும்மா தொழுகைக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்ணீர் விட்டு ஆமீன் என்று முழக்கமிட்டனர்.

இறைவன் எங்கள் பிராத்தனையை நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.

சென்னையில் இனி படிப்படியாக மழை குறையும்.

மக்களின் துன்பங்கள், துயரங்கள் படிப்படியாக நிச்சயம் நீங்கும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: