Sunday, February 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (59)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!!"

நாள்  -  59

மது அருத்த வேண்டாம் என கெஞ்சிய காந்திய மக்கள் இயக்க நிர்வாகி....!

டாஸ்மாக் கடை முன் காந்திய மக்கள் இயக்க நிர்வாகி கருப்பையா, மது அருந்த வந்தவர்களிடம், மது அருந்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் மது ஒழிப்புப் பிரிவின் மாநில துணை செயலாளரான  பாண்டிச்சேரி கருப்பையா, கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், திருப்பூருக்கு வந்த அவர் பி.என்.சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன் அமர்ந்து, அங்கு வந்தவர்களிடம் மது அருந்த வேண்டாம் என கருப்பையா கெஞ்சிக்கேட்டார்.

கால்களை பிடித்து கெஞ்சுகிறோம், மதுவை குடித்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நாசமாக்கிகொள்ளதீர்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டையை கருப்பையா தன் கழுத்தில் மாட்டியிருந்தார்.

கருப்பையா கூறியதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காமல், அவரை வேடிக்கை பார்த்தவாறு பலரும் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.


தகவல் கிடைத்து அங்கு சென்ற திருப்பூர் வடக்குப் போலீஸார், கருப்பையாவை காவல் நிலைத்திற்கு அழைத்து சென்றனர்.

உரிய அனுமதியின்றி டாஸ்மாக் கடை முன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது, வேண்டுமானால், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்துகொள்ளுமாறு கருப்பையாவிடம் போலீஸார் அறிவுறுத்தி, அவரை அனுப்பி வைத்தனர்.

மதுவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் காந்திய மக்கள் இயக்க நிர்வாகி கருப்பையாவை நாம் பாராட்டுகிறோம்.

அவரது பணி தொடர வாழ்த்துகிறோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

No comments: