Thursday, February 20, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (62)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  

நாள் -  62




 மது போதையில் சொந்த வீட்டை கொளுத்திய ஆசாமி.....!

மதுவால் மனிதன் சுயநினைவு இழந்து செய்யும் காரியங்கள் ஏராளம்...

இதனால், தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் தீமைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த சம்பவத்தை கொஞ்சம் படியுங்கள்....

மனிதன் மது போதையில் தன்னுடைய சொந்த வீட்டையே கொளுத்தியுள்ளார்.

ஆம்.

சாத்தான்குளம் அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவர் மது போதையில் வீட்டை கொளுத்தினார்.

சாத்தான்குளம் அருகே அரசூர் புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன்.

இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணியன் மது போதையில் வீட்டில் தினசரி தகராறு செய்து வருவார்.


இந்நிலையில், வழக்கம் போல் மது போதையில் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியனுக்கும், மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டையும், அருகில் போடப்பட்டிருந்த செட்டையும் தீவைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடினார்.

ஜெயலட்சுமி புகாரின் பேரில் தட்டார் மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தற்போது ஜெயலட்சுமி நான்கு குழந்தைகளுடன் வாழ வீடு இன்றி தவித்து வருகிறார்.

பார்த்தீர்களா நண்பர்களே.... மது போதையில் அந்த மனிதர் செய்த காரியத்தால், நான்கு குழந்தைகளுடன் வாழ வீடு இல்லாமல் தவித்து நிற்கிறார் ஒரு பெண்....

இப்படிப்பட்ட மது தமிழகத்திற்கு ஏன் நாட்டிற்கு தேவையா....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=========================

No comments: